Thursday, January 2, 2020

அதிமுக அரசு

தமிழக அரசு விகடன் நிருபர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை  வழங்கவேண்டுமென செய்தி சேகரித்து வெளியிட்டதற்காக வழக்கு பதிவு செய்ததை கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் செய்திருக்கிறார்கள்
தமிழ் நாடு முழுவதும் அசாதாரணமான சூழல் காணப்படுகிறது மத்திய பா ஜ க அரசு என்ன செய்ய விரும்புகிறதோ அதை செய்து விட எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசை பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது  
CAA NRC சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடக்கு முறை சட்டத்தை ஏவி ஜாமீனில் வெளியே வர வாய்ப்பே இல்லாத அளவுக்கு மீக மோசமான சட்டபிரிவுகளில் வழக்கை பதிவு செய்கின்றது தமிழக அரசு..
தங்கள் மீதுள்ள வழக்குகளில் இருந்து விடுபட விசாரணையின்றி தப்பித்துக்கொள்ளலாம்  என மிரட்டி பணிய வைத்து .. மறுத்தால் கலைத்து விடுவோம் என மிரட்டி 
தனது கொள்கை சார்ந்த விடயங்கள் தமிழ் நாட்டில்  அமல்படுத்தி வருகிறது மத்திய அரசு.. வன்முறையாக பேசிய நயினார் மீதோ வெளிப்படைாக மிரட்டல்விடுக்கிற எச்.ராசா மீதோ
எந்த வழக்கும் பதிவதில்லை மாறாக நெல்லை கண்ணன் பேசினால் விரைந்து வழக்கு பதிவு செய்கிறது அதிமுகவையோ பாஜகவையோ  எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடினாலோ  விமர்சித்து பேசினாலோ உடனே கைது வழக்கு என்று அடக்குமுறையை நடைமுறைபடுத்துகிறது 
கோலம் போட்ட பெண்களை கூட கைது செய்கிற அவலம் .. அவர்களை குடும்ப பெண்கள் அல்ல என்று அமைச்சராக இருக்கிறவரே பேசுகிறார் .. பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக பொறுப்புள்ள காவல்துறை கதைக்கிறது ..
ஆர்எஸ்எஸை சேர்ந்தவர்களை அதிமுகவில் உட்புகுத்தியதின் விளைவை இன்று அந்த கட்சி சந்திக்கிறது 
அதிமுகவின் இறுதி காலம் எழுதபட்டுவருவதை 
அக்கட்சி தொண்டர்களே உணர தொடங்கியிருக்கிறார்கள்
..
கொள்கை தெளிவின்றி எரிச்சலும் வெறுப்பும் தான் புறக்கணிக்கபடுகிறோமென்ற எண்ணத்திலும் 
காழ்ப்புணர்ச்சியில் எம்ஜிஆரால் 
தொடங்கபட்ட அதிமுக இன்றும் கொள்கையற்ற சுயநலமிக்க அடிமைகளால் தன் கடைசிநிலையை அடைய போகிறது பாஜகவிற்கு பயந்து
தனது சுய நலம் சார்ந்த ஊழல் வழக்குகளில் இருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்து வருகின்ற எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசும் அமைச்சர்களையும்  மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள் .. வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றிபெற வக்கற்ற எச்.ராசா போன்றவர்கள் மிரட்டுகிற நிலையில் இந்த அரசு நீடித்தால் 
அதிமுகவின் எதிர்காலம் பாமகவைவிட மோசமான நிலைக்கு வந்துவிடும் ..
.. 
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment