Tuesday, January 28, 2020

பெரியார்

ஏன் பதறுகிறார்கள் 
பெரியாரின் பெயரை சொன்னாலே பதட்டம் வருகிறதே ஏன் பெரியாரை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது அந்த மனிதரின் தொண்டின்  முன் எதுவும் நிற்காது.. பாசிசத்தின் கரங்கள் எவ்வளவு உயர்ந்தாலும் கிழவன் தடிகொண்டு தட்டிவிட்டுவிடுவார்கள் அதிகாரத்தை மையபடுத்தி அரசியல் செய்பவர்கள் ஒருசிலரை தவிர பெரும்பாலானோர் கரைந்தே போவார்கள் ஆனால் சமுகப்பணியை செய்பவர்கள் அதிலும் நாற்றமெடுத்த சமுதாயத்தை சுத்த செய்து 
பார்பனர்கள் கையில் சிக்கி சின்னபின்னமாய் கிடந்த தமிழை தமிழ்க்கலை பண்பாட்டை ,தமிழனை நிமிர்த்தி நெஞ்சுரத்தோடு நடமாடவிட்ட பெருங்கிழவனை தமிழகம் கொண்டாடிக் கொண்டேதானிருக்கும் ..
..
கிழவன் பெரும் நெருப்பு  துர்நாற்றம் வீசும் மூடத்தை பொய்களால் ஆன சடங்குகளை மனிதனின் அறிவை மழுங்க செய்யும் மதத்தை.. இல்லாத கடவுளை சொல்லி ஏமாற்றும் கயமையை 
மனிதனை பிரித்து வர்ணம் பூசும் கொடுமையை
எரிக்கும் பெரும் நெருப்பு .. அறிவை கொண்டு வாழவும், அறிவுக்கொவ்வாதவற்றை பிரித்தறிந்து 
தவிர்க்கவும் உழைக்கிறவனின் உரிமையை பறிப்பதை எதிர்க்கவும் அனைவருக்கும்,சமமான கல்வியை தர மறுக்கும் கொடுமையை கண்டு சிலிர்த்தெழுந்து போராடவும் சனாதன தர்மம் என்ற பெயரில் வேறுபாட்டை ஏற்படுத்தும் கயமையை எதிர்க்கவும் தான் கிழவன் எங்களை, இந்த தமிழ் சமூகத்தை கட்டமைத்திருக்கிறார் .. இங்கே யாரை தவிர்த்துவிட்டு அரசியலை பேசிட முடியும் ஆனால் பெரியாரை தவிர்த்தால் சாமி கும்பிடுகிறவன் கூட சாட்டை எடுப்பான் .. தவத்திரு குன்றக்குடி அடிகளார் 
ஆத்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம் 
நாத்திகம் என்பது பெருவாரியான தமிழுக்கான நலம் காப்பதென்றார்.. ஆம் திராவிடம் எப்போதுமே தமிழர் நலனுக்காகவே சிந்திக்கிறது ..ஆனால் பாஜகவோ ஆர்எஸ்எஸோ பார்பன நலன் ஒன்றே குறிக்கோளாய் செயல்படுகிறது .. இந்துக்கள் ஒற்றுமை எனச் சொல்லும் பாஜக தமிழில் குடமுழுக்கென்றால் சனாதனம் பேசும் பார்பனீயம் பேசும் .. 
..
பெரியார் கடவுள் மறுப்பை மட்டுமே சொல்லவில்லை அவர் பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தார் விதவை திருமணம், சொத்தில் பெண்களுக்கு பங்கு, பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் சொந்தகாலில் யாரின் தயவின்றி நிற்க கல்வியே உதவுமென போராடினார் .. குலக்கல்வி என வந்தவனை செவிட்டில் அறைந்தாற்போல இனி எக்காலத்திலும் எழ முடியாதவாறு அடித்தவிரட்டினார் .. பார்பன மேலாதிக்கத்தை தகர்த்து இடைசாதி கடைசாதிகாரனையும் அரசாங்க வேலையில் அமர்த்த காரணமாய் இருந்தார் .. பெரியார் சிந்தித்ததை செயலில் சட்டமாக்கி சமூகநீதியை நிலைநாட்டியவர் கலைஞர் ..
..
திராவிட தந்த அடி பலமானது அதனால் தான் தமிழகத்தில் எழவே முடியாதவாறு மக்கள் காலால் மிதிக்கிறார்கள் .. எத்தனையோ வடிவங்களில் செயல்படுத்த முயன்றும் இங்கே "பெரியாரின் ஒலி"
அனைத்தையும் தடுத்துநிறுத்தி காக்கிறது .. இன்று அரைகுறையாய் பாசிசத்திற்கு வால்பிடிக்கும் கூட்டம் பெரியாரை படித்தால் புரிந்து படித்தால் 
பார்பனர்கள் நடமாடவே  முடியாமல் போகும் 
..
பெரியார் பெரும் நெருப்பு 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment