மோடி, அமித்ஷா விரும்பினார்கள்... மாணவர்கள் தாக்கப் பட்டார்கள் உத்தவ் தாக்ரே..
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் என்ன விரும்பினார்களோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது.. கூடவே பழகியவர்களுக்கு தானே உண்மை முகம் தெரியும்
எங்கு சென்றுக்கொண்டிருக்கிறோமென தெரியவில்லை ரௌடிகளை கட்சி சேர்த்துக்கொள்கிறது அதையும் பெருமையாக சொல்கிறது ஆள்கடத்தல் கட்டபஞ்சாயத்து அடிதடி மிரட்டல் கற்பழிப்பு என "அதிமுக்கியஸ்தகர்கள்" உடனே பாஜகவில் சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள் .. நாக்கை அறுப்பேன், என்பவர் இரண்டாம்கட்ட தலைவராகலாம் பொதுவெளியில் காவல்துறையை மிரட்டி நீதிமன்றத்தை மயிறென்றால் ஒருபடி மேலே கவனம் பெறலாம் .. அறிவிற்கே சம்பந்தமில்லாமல் கதைக்கும் கூச்சலிடும் நாராயணன்களும் ராகவன்களும் மேதையாகலாம் இதுதான் நவீன இந்தியாவில் பாஜகவில் சேர பங்காற்ற அடிப்படை தகுதி..
வெட்கபடுங்கள் .. இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தால் இரண்டாம் விடுதலைபோரை சந்திக்கவேண்டுமென மேற்கு வங்கத்திற்கே சென்று உரக்க சொன்னார் தளபதி.ஸ்டாலின்..
ராகுலை பிரதமராக முன்னிறுத்தியபோது கிண்டல் செய்த ஊடகங்களும் நடுநிலைநக்கிகளும்,,இவரென்ன கலைஞரா என எகத்தாளம் பேசியவர்களும் இன்று வாய்மூடி மௌனம் காக்கிறார்கள் ..
..
மோடி இன்று நாட்டின் தொழிலதிபர்களை சந்தித்தார் தன் சகாக்களோடு .. நாட்டின் நிதியமைச்சர் பங்கேற்கவில்லை .. நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் தினம் தினம் அறிக்கை தருகிறார்கள் இந்நிலையில் லாபகரமான பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கலாமா என யோசிக்கிறார்கள் .. நிர்மலா நிதியமைச்சராக இருக்க தகுதியை இழந்து நிற்கிறார் நிதியமைச்சரை தவிர்த்துவிட்டு தொழிலதிபர்களோடான உரையாடல் அவரை இழிவு செய்வதற்கு சமம். பேசாமல் ராஜினாமாவை கேட்டு பெறலாம் .. மோடி அரசு எப்போதுமே தகுதியானவர்கள் கையில் தருவதில்லை .. பட்டபடிப்பு சான்றிதழே இல்லாத ஸ்மிதா இராணி மனிதவள மேம்பாட்டை உயர்கல்வித்துறையை கவனித்தார் என்பதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் மூத்திரத்தை பானமாக அறிவிக்கும் முட்டாள் தேசமாக மாறிவரும் சூழலில் அறிவாளிகள் சிறந்த ஆளுமைகள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் .. சிறந்தவரை வேண்டாமென வைத்ததின் விளைவை இன்று நாடு சந்திக்கிறது ..சந்தி சிரிக்கிறது ..
..
திடீரென ஒரு இரவில் பணமதிப்பிழப்பு செய்தபோது இந்தியாவை காக்கவந்த தெய்வம் ரேஞ்சுக்கு புகழ்ந்தவர்கள்.. அன்று மோடியின் உடல்மொழியை கண்டிருப்பார்கள் இன்று மோடியின் முகத்தை காணவேண்டும் .. கையேறு நிலையில் இந்தியாவை நிறுத்திவிட்டு மத கலவரத்தை மதவெறியை ஊட்டினால் எல்லாம் மறந்து போவார்களென எண்ணியது வீண்போனது .. பொதுத்துறை ஒவ்வொன்றாக விற்க தொடங்கியிருக்கிறார்.. அறுபதாண்டுகள் காங்கிரஸ் என்ன செய்தது என கேட்டு வீரவசனம் பேசியவர் காங்கிரஸ் கொண்டுவந்த நாட்டின் பெருமைமிகு பொதுநிறுவனங்களை கூறுபோடுகிறார் .. பாஜக அரசால் ஒரு பெருந்திட்டமோ பெரிய பொது நிறுவனமோ மக்களுக்காக செய்திருக்கவில்லை.. இருப்பதையும் தாரை வார்க்கிறார் .. கிழக்கிந்திய கம்பெனியை விரட்ட கடைசியில் விடுதலைப் போரை சந்திக்கவேண்டியிருந்தது இப்போது இரண்டாம் விடுதலைப்போருக்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது..
..
"நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்"
என்றான் வள்ளுவன்
ஆம்..
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்..
..
நாடுகெடும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment