Sunday, January 5, 2020

காட்டிமிராண்டிகள்

உண்மையில் யார் பயங்கரவாதிகள் கலவரகாரர்கள் தீவிரவாதிகள் .. குலைநடுங்குகிறது பல்கலைகழக வளாகத்தில் புகுந்து முகமூடியோடு பேராசிரியரை மாணவர்களை தாக்குதல் நடத்துகிறார்கள் கிரிமினல்கள் அரசின் கடைக்கண் பார்வை இருப்பதால் எதை செய்தாலும் யாரும் கேட்கபடமாட்டோம் சுதந்திரமாய் திரியலாம் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்  ABVP மாணவர் அமைப்பு தான் இதை செய்திருப்பதாக இந்து நாளிதழ் கூட எழுதுகிறது .. மாற்று கருத்தோ சிந்தனையோ கூடாது என்ற சிந்தனை மிக ஆபத்தானது வன்முறை என்ற ஆயுதம் இருபுறமும் கூர்மிக்க கத்தியை போன்றது.. இதை உணராவிட்டால் தூண்டிவிட்டவர்கள் இருக்குமிடமே தெரியாமல் போவார்கள் சாபமல்ல வரலாறு அப்படிதான் நிகழ்த்திகாட்டியிருக்கிறது 
..
என்ன செய்துக்கொண்டிருக்கிறது காவல்துறை 
எங்கும் அடாவடி ரகளை .. பொய்பிரச்சாரம் அறிவுநிறையாளர்களை கொலை செய்தல் நீதிபதிகளை மிரட்டுதல் ..பணிந்தால் பதவி இல்லையெனில் பிணம் .. ஊடகங்களை மிரட்டி சார்பு செய்திகளை மட்டுமே வெளியிட நிர்பந்தம் இளைஞர்களை மூளைச்சலை செய்து மதவெறியையூட்டி கைகளில் ஆயுதங்களோடு அலைய விட்டு குளிர்காய்கிற பாசிச கூட்டம் 
இந்தியாவையே ஒருவித பதட்டத்தோடு ..நாளை என்ன நடக்குமென தெரியாமல் ரோட்டில் நடக்க கூட அஞ்சுகிற சூழலை உருவாக்கி புதிய இந்தியா என பெயரிட்டிருக்கிறார்கள் ..  மிசா போன்ற அவசரகாலகட்டத்தில் கூட இப்படி மக்கள் அஞ்சியதில்லை கல்விநிலையங்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இல்லை ஆனால் இன்று மக்கள் இந்த ஆட்சியாளர்களை கண்டு
 அஞ்சமடைகிறார்கள் .. கொடூரமான செயல்களை தூண்டி வேடிக்கை பார்க்கிறது ..நாங்கள் 87% விழுக்காடு எதைவேண்டுமானாலும் செய்வோமென அமைச்சரே பேசுகிறார் அவரை பதவியில் நீடிக்க அருகதையில்லை என சொல்லமுடியவில்லை செய்துகொண்ட பதவிபிரமாண உறுதிமொழியை மீறியிருக்கிறாரென நீக்க ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறது ஆனால் ஆளுநரே பெண்பித்தனாய் பதவி மோகத்தில் திரிபவராய்
மாட்டிமூளையாய் இருப்பதுதான் உச்சகட்ட கொடுமை ..
காட்டுமிராண்டிகள் கையில் நாடு ..
..
மூகமூடி குண்டர்கள் எப்படி வந்தார்கள் யார் அவர்கள் என அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் ஆனால் மௌனமாய் கடந்து போவார்கள் வலதுசாரி சிந்தனையாளர்கள் என்ற போர்வையில் நடமாடும் சங்கிகள் வாய்திறக்கமாட்டார்கள் .. "குஜராத் மாடல் " என்று சொன்னதன் முழு பொருள் இப்போது புரிய தொடங்கியிருக்கிறது இன்று டெல்லியில் தானே என்று அசட்டை செய்தால் நாளை நாடுமுழுவதும் பரவும் ..
அபாயம் எச்சரிக்கை .. மதவெறி கொண்டு அலைபவர்களிடம் மனிதத்தை எதிர்பார்க்க முடியாது .. விசசெடியை மருத்திட்டு அழிக்க முடியாது வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் 
ஒன்றுபடு 
ஒற்றுமையாய் பாசிசத்தை வேரரு ..
பாசிச பாஜகவை அதிகாரத்திலிருந்து இறக்கும் வரை போராடு ..இடைவிடாது போராடு ..
#BAN_ABVP_BAN_RSS
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment