போகி...
தமிழனுக்கு ஏது போகி...
எரிக்கவேண்டுமென்பதற்காகவா
எரி...
நெஞ்சில்..
கயமையை எரி..
எரி..
பொறாமையை,
பகைமையை,
தீண்டாமையை,
எரி..
மார்கழி கழிந்து..
தை..தை..குதித்து.
தை மகள்
வருகிறாள் ..
கூத்தாடு ..
கொண்டாடு ..
புதிதாய் கொண்டாடு ..
புத்தாண்டாய்..
தமிழ்ப்
புத்தாண்டாய்..
கொண்டாடு..
..
கூத்தாடு,
கொண்டாடு,
தமிழா, கொண்டாடு
பொங்கல்நாளை,
#தமிழ்ப்புத்தாண்டாய்..
..
ஆரியர்கள் ஆம் பார்பனர்கள் பொங்கலை கொண்டாடுவதில்லை .. சங்கராந்தி எனச் சொல்லி நம்மில் இருந்து பிரிந்து நிற்பான் .. ஆரிய கலப்பில்லாத தமிழருக்கான ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றார் #பெரியார் ..
மதம் சாராத
தமிழனுக்கான பண்டிகை .. அறுவடை திருநாள்.. புது அரிசியில் பொங்கலிட்டு கொண்டாடும் திருநாள் .. உழவுக்கு உறுதுணையாய் இருந்த மாட்டிற்கும் நன்றிச் சொல்லும் பெருநாள்
சாதிமத பேதமற்ற திருவிழா .. அதனால் தான் இதை பார்பனர்கள் கொண்டாடுவதில்லை இதில் மதத்தையோ புராணத்தையோ கலைச்சாரமென்ற பெயரில் மூடவழக்கத்தையோ திணிக்க முடியாதென்பதால் பார்பனர்கள் கொண்டாடுவதில்லை என்றார்..
..
ஆம்
அவர்கள் கலாச்சாரம் வேறு.. அதனால் தான் அவர்கள் தமிழர்கள் மீதான பகையோடே திரிகிறார்கள் .. பொங்கல் விடுமுறையை கூட கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கி நமது பண்பாட்டின் மீதான தாக்குதலை தொடுக்கிறது ஆரியம் .. ஆனால் நாம் மௌனமாய் கடந்து போகிறோம் .. தொடர்ந்து தமிழ் இனத்தின் மீதான பகையை தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் இந்த நிலை மாறவேண்டும் .. மாறும் நிச்சயம் மாறும் .. இந்த அடிமைகளையும் பாசிசவாதிகளையும் விரட்டுநாளில் நிச்சயம் மாற்றம் வரும்..
..
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டென்று அறிவித்து சட்டமன்றத்தில் பேசும் போது கலைஞர் பெருமகன் ஆங்கில புத்தாண்டை எப்படி வரவேற்று கொண்டாடுகிறீர்களோ அதை போல கொண்டாடுங்கள் .. உங்கள் இல்லங்களில் அலுவலங்களில் வண்ணவிளக்குகளால் அலங்கரித்து புது ஆண்டை வரவேற்று கொண்டுங்கள் என்றார் ..
பேரறிஞர் அண்ணா பொங்கல் பண்டிகை என்றழைக்காதீர்கள் விழா என அழைக்க சொன்னார் விழா என்றால் தான் கொண்டாடுவதாக பொருள் ..பண்டிகை என்றால் சடங்காகி போகும்
..
பொங்கல்விழாவை கொண்டாடுவோம்
..
என் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும்
பொங்கல் விழா
வாழ்த்துகள் .
ஆலஞ்சி.மு.மன்சூர் ..
No comments:
Post a Comment