Tuesday, August 29, 2023

வரலாறு, வல்லமை, வளமை இல்லாத நாட்டவரிடம், வரலாறு, வல்லமை, வளமை உள்ள நாட்டவர் ஏன் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டும்? அதற்கு வழி சொல்ல முடியவில்லை. நம்மைத் தூற்றுகிறார்கள். தூற்றல் பாணம் நம் நம்பிக்கையைத் துளைத்து விட முடியாது. நாங்கள் தூற்றலிலே முளைத்தவர்கள்.

#பேரறிஞர்_அண்ணா

Sunday, August 20, 2023

அதிமுக மாநாட்டை கண்டு களித்தீர்களா  என்றார் நண்பர் ..
களைப்பை போக்க பொழுதுபோக்க கேளிக்கைகளில் ஈடுபடுவோரை அரசியல் சாணக்கியன் என்றெல்லாம் விளித்து 'புரட்சி' பட்டம் தரும் கட்சியில் வேறென்ன எதிர்பார்த்தீர்கள் என்றேன்..
..
அரிதாரம் பூசி,எம்ஜிஆர் போல் வேடமணிந்து இசைத்தட்டு நடனம் (ரிக்கார்ட் டான்ஸ்) கண்டு மகிழும் தொண்டனைக் கொண்ட கட்சியில் கொள்கை முழக்கத்தையா கேட்க முடியும்.. எடப்பாடியோடு எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் ஒப்பிடும் போதே முன்னவர்களின் 'மகிமை' புரியும்..  வேசம்கட்டி நிழல் தந்த மயக்கத்தில் நிஜமறியா லோகத்தில் சஞ்சரிக்கும் தொண்டர்கள்.. வரும் இழப்பையோ, கேடையோ அதனால் வரும் தலைமுறை படும் கஷ்டங்களையோ பற்றி கவலையில்லாமல் கூத்தாடும் இவர்கள் தமிழ்நாட்டின் கேடுகள்..
..
கொள்ளையடித்ததை காக்கவும்,தங்களை விசாரணையிலிருந்து காத்துக்கொள்ளவும்,  தமிழ்நாட்டின் நலன்களை, பலிகொடுக்கும் இவர்கள் அரசியல் கேடுகள்.. நீட் தேர்வு ,சி ஏ ஏ சட்டம்,மாநில அதிகாரங்களை பறிக்கும் மசோதா என தொடர்ந்து பாஜக இடும்  கட்டளைகளை கண்மூடி ஆதரித்து ,மண்ணிற்கு ,மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இவர்கள் நாட்டின் சாபகேடுகள்..
..
திமுக மாநாடல்ல இது.. கொள்கைப் பேசவும், சமூகநீதி,சமயசார்பற்ற கொள்கை பிரகடனம் நடத்தவும், மொழிக் கொள்கை, இயக்கத்தின் வரலாறு திராவிடத் தீரர்களின் இனப்பற்று இவற்றையெல்லாம் பேச நினைவுபடுத்த இதுவொன்றும் கொள்கைமறவர்கள் இயக்கமல்ல.. அரிதாரத்தில் மயங்கி மாலைநேர மகிழ்விற்காக தொடங்கபட்ட கட்சி.. அதில் கொள்ளைக்கூட்டம் கையகப்படுத்த அதை வைத்து மிரட்டி பாசிசம் வளர வழிவகுக்கிறது .. 
..
அதிமுக அரசியல் என்பது பணம்,சாதி,சினிமா ,கேளிக்கை கொண்டது.. அவர்களிடத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு கையெழுத்திட ஒருபோதும்  மாட்டேன் ஆளுநர்..
இதைதானே எப்போதும் சொல்லிக்கொண்டிருந்தீர்கள் ..
படிப்பே வராது என்றீர் தரமுடியாது என்றீர்.. தோளில் துண்டை கூட போட கூடாதென்றீர்.. இதையெல்லாம் கடந்து தான் இங்கு வந்து கம்பீரமாய் நிற்கிறோம்.. பொறுக்கமுடியவில்லை.. எதேனும் செய்து தடை போட நினைக்கிறீர்.. இதையும் கடப்போம்.. ஆட்டம் முடியும் நேரம் பதறுவதும் கூறுவதும் கண்ணீர் வடிப்பதும் உங்கள் தொடை நடுங்குவது தெரிகிறது..
..
அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் சாதனைகளை செல்வாராம் அப்போ இதுவரை எதையும் செய்யவில்லை.. மக்களை பிழிந்து ஆட்சி நடத்தும் லட்சணம் தெரிகிறது.. ஒரு சில முதலாளிகளுக்காக நாட்டை ஏறக்குறைய விற்றாகிவிட்டது.. எளியவர்கள் நடுத்தர குடும்பங்கள் சொல்லண்ணா துயரத்தில் .. கேஸ் விலையை இவ்வளவு உயர்த்தி யாரை குளிர வைக்கிறீர் ..
..
ஊழலுக்கெதிராக ஆட்சி நடத்துகிறாராம்.. யார் மீதெல்லாம் குற்றசாட்டு உண்டோ அவர்களை பாஜகவில் சேர்த்து புனிதராக்கும் இவர் பேசுகிறார்.. PMCARE எவ்வளவு வசூலானது எதற்கெல்லாம் செலவு செய்யப்பட்டது என கேட்கக்கூடாது என்பவர் உத்தமராம்..
கடைசியில் வாரிசு அரசியலாம் அதெல்லாம் பழைய புளித்தமாவு வேறெதாவது வடை சுடவும்
..
இந்திய ஒன்றியமே மூச்சுதிணறலில்.. வாழ வழிதெரியாது முழிக்கிறார்கள் மக்கள்.. ஏழைகள் வயிற்றில் அடித்து ஆட்சி செய்யும் இவர் மான்கிபாத் என்பதுதான் கொடுமை.. நீதிமன்றங்கள் தனித்தன்மையை இழக்க செய்து நீதியரசர்கள் மிரட்டபடுவதும்..  
எதிர்க்கட்சிகள் மீது விசாரணை என்ற பெயரில் பரபரப்பை உண்டாக்கி ஒருவித பதட்டத்தோடு 
தேசத்தை வைத்திருப்பதும், பத்திரிக்கையாளர்களை சந்திக்க மறுப்பதும் ஊடகங்கள் விலைபேசபடுவதும் ஜனநாயகத்தின் நரம்புகள் வெட்டப்படுவதும் அனைத்து மரபுகளையும் குழித்தோண்டி புதைத்து சர்வாதிகார தோற்றத்தை உருவாக்கி இந்தியாவின் மாண்பை குலைத்துதான் இவர்கள் ஓன்பதாணடுகளில் செய்தது..
..
இந்த சுதந்திர தினத்தில் ஒரு உறுதிமொழி எடுப்போம்.. 
இந்த பாசிச அரசை வீழ்த்தி ஜனநாயகத்தின் தூயகாற்றை சுவாசிப்போம்.. கார்ப்பரேட்டுகளின் விசுவாச ஆட்சியை அகற்றுவோம்..
இந்த சாதி,மதவெறியவர்களின் கையிலிருக்கும் செங்கோலை பிடுங்குவோம்.. மீண்டும் ஒரு சுதந்திரப் போர்.. 
அன்பை விதைக்கும், நல்லிணக்கத்தை பேணும் நல்லவர்கள் கையில் நாட்டை தருவோம்..
..
,ஆலஞ்சியார் 




Monday, August 14, 2023

கையில் ஆயுதம் ஏந்தியவர்கள் வரலாறு முழுவதும் வீழ்த்தும் அழிந்தும் போயிருக்கிறார்கள் ..
சாதியும் மதமும் உன்னை மடையனாக்கும்..
படிக்கிற வயதில் அரிவாளை தூக்குகிறாய் 
உன்னால் வெட்டபட்டவன் கல்வியால் உயர்ந்து நிற்பான்.. 
நீ
அவனுக்கு கும்பிடு போடும் காலம் வரும்.. 
சாதி மயிர் கூட வராது..
உன் அப்பனும் தாத்தனும் ஊட்டிய சாதிவெறி படுகுழியில் தள்ளும்..
உன்னை தூண்டிவிட்ட சாதி தலைவனோ 
தன் பிள்ளையை நாட்டின் உயர்தர கல்விநிறுவனத்தில் படிக்கவைக்கிறான்..
உன்னை,
அரிவாளை தூக்கவும் 
குடிகளை கொளுத்தவும் 
உயிரைக் கொல்லவும் ..
மீசையை முறுக்கி 


Friday, August 11, 2023

கலைஞர் கருணாநிதி
பெயரை கேட்டாலே பதறுவதும் 
அவரை நினைத்தாலே எதிரிகள் குலைநடுங்குவதுமாக மறைந்து ஐந்தாண்டாகியும் பகைவர்களை கதறவைக்கிறார் எம் தலைவர் ..
..
தலைமைக்கு இலக்கணமாய், அரசியல்வாதிக்கு பொது பாடமாய், எதிரியை வீழ்த்த எங்கனம் எப்படி எதைக்கொண்டு வீழ்த்த வேண்டுமென வழிகாட்டிய ஆசானாய், எளியவரை கண்டு இரக்கம் கொள்,அவருக்காக ஆளும் காலமெல்லாம் வழி செய் என அரச இலக்கியம் சொன்ன மன்னனாய், வீழும் போதெல்லாம் வீறுக்கொண்டு எழு.. நீ கலங்குவதை கூட பகைவர் கொண்டாடுவர் ஆதலால் தோல்வியின் போதும் "புன்னகை" என வாழ்ந்துகாட்டி புதியபாதை சொன்ன பெருந்தலைவன் ..
..
கலைஞர் ..
தமிழக அரசியலில் தன்னைச் சுற்றியே சுழலவைத்த பேரதிசியம்.. இத்தனை திறமையாளன் இதுவரை கண்டதில்லையென
இந்திய ஒன்றியம் வியப்போடு பார்த்தது .. 
..
உண்மையில் ஒரு நல்ல ஜனநாயகவாதியாய் .. இடர்வரும் போதெல்லாம் வீறுகொண்டெழுந்து ஜனநாயகத்தை காத்த பெருந்தலைவன் .. பேருக்கு அரசியல் செய்யாமல் பேரெடுப்பதற்கும் செய்யாமல் 
பலபேர் பயனடைய வேண்டும், பட்டினிகிடப்போர் வயிறு நிறையவேண்டும் ..ஏழ்மையால் அறிவு தடைபடகூடாது .. காலங்காலமாய் அழுத்தபட்ட சமூகமக்கள் ஏறிவர வேண்டும் என பொதுவுடைமை பேசிய தோழனவன் ..
..
சமூகநீதி சமநீதியாக வேண்டுமென பாடுபட்டு .. அதற்கெதிராய் மநுநீதி இருப்பதையும் பூணூல் தடுப்பதையும் உணர்ந்து மிக சிரத்தையோடு காய் நகர்த்தி கதறவிட்டவன் .. எப்பாடுபட்டாகினும் படி .. அதற்கு அரசு துணைநிற்கும் .. தடைபோடுவர், தடுப்பமைத்து தகராறு செய்வர்.. அஞ்சாதே .. எவன் ஸ்வாமி என அழைக்க சொன்னானோ அவனையே கையெடுத்து கும்பிட வைக்க உனக்கு கல்வி அவசியமென சொல்லி அதற்கான  கட்டமைப்பை செய்து இன்று இன்ஜினியர் இல்லாத தெரு இல்லை மருத்துவர் இல்லாத ஊரில்லை என தமிழனை உயரத்தில் நிறுத்தி அழகுபார்த்தவன் ..
..
இதோ, ஒழிந்தது திராவிடம்.. இல்லாதாக்கிவிட்டோம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம், முடிந்தது பார் திமுக வரலாறு என்றவனெல்லாம் காணாமல் போய்விட்டான் .. ஆனால் கருத்தாளன் கருணாநிதி அரணாய் நின்று .. விழுந்தபோதெல்லாம் வீறுக்கொண்டு எழுந்து எப்போதுமில்லாத திமிரோடு ஓடி எதிரிகளை கலங்கடித்தார்..
கருணாநிதியோடு முடிந்தது திமுக என்றவன் கதறுவதை கேட்கதான் கலைஞரில்லை .. நான்காம் தலைமுறையை மிக அருமையாக செதுக்கி பண்படுத்தி செல்லும்பாதை எது எப்படி எங்கனம் கையாளவேண்டும் .. எதை சொன்னால் பகைவன் அலறுவான் .. எங்கே அடித்தால் வலிக்கும் என கற்றுதந்து சரியானவரை அடையாளபடுத்திவிட்டுதான் சென்றிருக்கிறார்.. அவரும்(தளபதியார்) "திராவிடமாடல்" கையிலெடுத்து இதுதான் முன்னேற்றத்திற்கானதென வகுப்பெடுப்பதை பார்க்க என் ஆசான் இல்லை .. பெரியாரின் வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்
வார்த்தையை கடன் வாங்கி சொல்கிறேன்.. என் தமிழ் சமூகமே தலைவர் தளபதி கரத்தை வலுவாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் ..
வாழ்க்கை தரம் உயரும், சரியான கல்வி வேலைவாய்ப்பு பொருளாதாரமென இந்திய ஒன்றியத்தில் தமிழகம் தனித்து மிளிரும்
..
நான் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்த தலைவன் .. அறத்தோடும் அன்போடும் அறியணையேறிய போதெல்லாம் தமிழ் நிலத்தை வளமாக்கிய பெரும்மழையாய் ..
பகைவரை அறிந்து அவர்தம் சூழ்ச்சியை உன் விவேகத்தால் வீழ்த்தி கடைசிவரை கதறவிட்ட போராளி ..
உன் ஒவ்வொரு சொல்லும் எதிரியை சுட்டது 
எதிர்க்க நிற்க அஞ்சி தலைமறைவானவர்கள் .. 
இப்போது கண்விழிக்க தொடங்கியதும் .. நீ வார்த்து வைத்த "திராவிட மாடல் " சூரியன் சுட்டெரிக்கிறது தலைவா!..
காலமெல்லாம் தமிழர் நெஞ்சில் நீ வாழ்வாய் ..
இனம் மொழி பண்பாடு காத்த 
பெருவீரனே!..
ஆரியத்தை அலறவிட்டு 
பேரரசனே!!..
நீ..
பெருஞ்சுவர் 
உனை மீறி எதுவும் அண்டாது 
காலமானதாக சொல்கிறார்கள் 
ஆம் 
"காலமாய்" காத்துநின்ற எம்மான்!
என்றும் உன் புகழ் நிலைத்திருக்கும் 
..
கலைஞர் என்பதாண்டுகாலம் செப்பனிட்டபாதை தான் இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டுகிறது .. தமிழ் சமூகத்திற்கு தன் எழுத்தால்,பேச்சால்,செயலால் 
"பெருஞ்சுவராய் " காத்துநின்ற எல்லைசாமி.. எதிர்ப்போரும் எதோவொருவகையில் இவரால் பலனடைந்திருப்பர்.. இன்றைய வளர்ச்சியில், தமிழர் வாழ்வில் இவரின் பங்கு இல்லாமல் இல்லை .. 
காலம் கொண்டு சென்றிருக்கலாம் .. ஆனால் "காலமாய் " நம்மோடு நம் நினைவோடு என்றும் நிலைத்திருப்பார் ..
..
வாழ்க! கலைஞர் பெருமகன் புகழ்!!
..
ஆலஞ்சியார்  ..
(ஆலஞ்சி மு மன்சூர் )

ஆலஞ்சி.ம.தமீம் 
Thameemul Ansari M

Tuesday, August 8, 2023

கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் உயரத்திற்கு வா.. 
உலகம் அன்னாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
..
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  .

..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார்


Thursday, August 3, 2023

முத்தலாக்..
குர்ஆன் இறைவன் அருளியது ஷரியத் சட்டம் மனிதன் இயற்றியது என்ற சென்னை பல்கலைகழக துணைவேந்தர் திரு.சாதிக் அவர்களின் கருத்தை மேற்கோள்காட்டி தான் துவக்கி வைத்தேன் ..பல்வேறு கருத்தாளர்கள் கலந்துக் கொண்டு இஸ்லாமிய குடும்ப பின்னணிகளையும் யாரும் தலாக்கை விரும்புவதில்லை என்றும் பேசினர் .. கிராம ஜமாத் பஞ்சாயத்துகளில் தீர்த்துவைக்கபடுகிற சாதாரண விடயம் போல சிலர் பேசினார் மொத்தத்தில் பேசியவர்கள் அனைவருமே இந்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை கடுமையாக சாடினர் ..
..
முத்தலாக் 
இஸ்லாமிய நான்கு கருத்தியலில் (மத்ஹப்)
(ஷாஃபியீ, ஹனஃபீ, மாலிகீ, ஹம்பலீ ) ஹனபியில் மட்டுமே முத்தலாக் சொல்லபடுகிறது மற்ற மத்ஹப்களில் அது ஒருமுறை மட்டுமே சொல்லபட்டதாக கருதபடும் .. தலாக் விடயத்தில் பெண்கள் மட்டுமே பாதிக்கபடுகிற சூழலும் வாழ்வு பாதுகாப்பின்மையும் குழந்தைகளின் எதிர்கால நலனும் வெகுவாக பாதிக்கபடுவதை உச்சநீதி மன்றம் கருத்தில் கொண்டு விரைந்து ஒரு சட்டவரைவை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.. அதை தொடர்ந்து  மோடி அரசு அசுரவேகத்தில் முத்தலாக்கை கடுமையான எதிர்ப்பிக்கிடையில் நிறைவேற்றியிருக்கிறது .. சாதக பாதங்கள் நிறைய இருந்தாலும் இதை இஸ்லாமியர்கள் எதிர்ப்பதற்கு காரணம் ஷரியா சட்டத்தை இவர்கள் யார் திருத்தம் செய்ய என்பது தான் .. ஆனால் உண்மையில் ஷரியா சட்டம் கலிபா உமர் காலத்தில் தான் அதிகளவு வரையறை செய்யபட்டிருந்தாலும் பின் வந்த இஸ்லாமிய அரசுகள் நிறைய இடைசொருகலை செய்திருப்பதாகவும் .வரையறை செய்யபட்டபோது கூட கலிபா உமர் அவர்கள் கூட இன்னமும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என துணைவேந்தர் சாதிக் அவர்கள் கூறுகிறார்கள்.. இதிலிருந்தே மாற்றத்திற்குட்பட்டது அல்லது மிக கவனமாக கையாளவேண்டியதென்ற உண்மையை விளங்க முடியும் ..
..
சரியான காரணமின்றி தலாக் சொல்பவருக்கு மூன்றாண்டு சிறை என்பது இஸ்லாமியர்கள் மீதான அரசின் அலட்சியம்/கோபம்/வெறுப்பு  காரணமாக இருக்கலாம்.. விவாகரத்து செய்தவர் மீண்டும் இணைய விரும்பினால் .. அந்த பெண் வேறொருவரை மணந்து அவரிடமிருந்து விவாககரத்து (தலாக்) பெற்ற பிறகே மணமுடிக்கலாம் என்ற ஷரியத் சரத்'தும் மீறப்பட்டிருக்கிறது .. இந்த முத்தலாக் சட்டம் அவசரகதியில் இயற்றபட்டிருக்கிறது .. திருந்தங்கள் செய்யபடவேண்டுமே தவிர .. முழுவதுமாக நிராகரிக்கபட வேண்டிய சட்டமில்லை .. 
இஸ்லாமிய நாடுகளில் பாகிஸ்தான் பங்களாதேஷ் சவுதி அரேபியா நாடுகளில் கூட தடை விதிக்கபட்டது முத்தலாக் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்..
..
"மாங்குனி கித்தாப்" என்ற புத்தகத்தை உருவாக்கி 
ஷரியத் சட்சத்திற்கு விளக்கமளிக்க சிலர் மார்க்கஅறிஞர்கள் முன் வந்தார்கள், ஏனோ அந்த முயற்சி வெற்றி பெறாமல் போய்விட்டது.. அது போல மிக சரியான விளக்கங்களோடு இன்றைய காலத்திற்கேற்ப அடிப்படை கோட்பாட்டிலிருந்து மாறாக விளக்கம் தரும் நூலை இயற்றிட வேண்டும் 
மதரஸாக்கள் மார்க்க அறிஞர்கள் தரும் "பத்வா"க்கள் நிறைய குறைபாடுடையதாக இருப்பது தெளிவின்மையை காட்டுகிறது ..
இஸ்லாமிய நான்கு கருத்தியலையும் தவறென்று சிலரும் சரியென்று பலரும் பிரிந்து நிற்கும் போது 
ஷரியத்தின் விளக்கங்கள் கூட வெவ்வேறாக 
ஆளுக்கொரு பதிலை தருகிறார்கள் இஸ்லாமிய சமூகம் தன்னை புனர் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய காலகட்டமிது
.. 
மனிதர்கள் வகுத்ததில் உள்ள சிரமங்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாறுதலை சந்திக்காவிடில் முற்றிலுமாக இழப்பை தரும் அல்லது யாரும் பொருட்படுத்தாமல்/கண்டுக்கொள்ளாமல் போக நேரிடும் .. முத்தலாக் என்பது குர்ஆனின் அடிப்படைக்கு எதிரானது என்ற உச்சநீதிமன்ற ஐந்துபேர் கொண்ட அமர்வின் தீர்ப்பை சாதாரணமாக கடந்து போக இயலாது ..  சட்டவிதிகளில் மாற்றம் தேவை என்பதில் எப்படி மாற்று கருத்தில்லையோ அதைபோல இது பெண்களுக்கு சிறியளவில் பாதுகாப்பை தரும் என்பதிலும் வேறு கருத்து இல்லை ..கொண்டுவந்த பாசிச ஆரிய அரசின் நோக்கம் புரிந்தாலும் இஸ்லாமிய நெறிமுறைகளில் இருந்து முஸ்லிம் வெகுதூரம் பின்னிட்டு நிற்கிறார்கள் என்பதை உணரவேண்டும் ..
..
முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் கணவருக்கு மூன்றாண்டு சிறைதண்டனை விதிக்கப்படும்.

முத்தலாக் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்.

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி நீதிபதியின் முடிவே இறுதியானது.

முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யப்படும் பெண்ணிடமே, மைனர் குழந்தைகளின் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.
..
இவை முத்தலாக் சட்ட வரைவுகள் இதில் பெண்களுக்கு சுமையும் அநீதியும் இருப்பதை சில பெண்கள் அமைப்பு குறை கூறுகின்றன சிறையில் இருப்பவர் எப்படி அந்த பெண்ணின் செலவிற்கு பணம் தரமுடியுமென்ற கேள்வியும் எழாமல் இல்லை 
மோடி அரசு அவசரகதியில் இயற்றிய சட்டத்தால் இஸ்லாமிய ஆண் மட்டுமல்ல பெண்ணும் பாதிக்கபடுவார்கள் என்பதே உண்மை அது தான் இந்த பாசிச அரசுக்கு தேவையாக இருந்தது 
..
இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் தெளிவான விளக்கங்களை தங்கள் சமூக மக்களிடம் எத்திவைக்க வேண்டும் .. விவாகரத்து என்றில்லை 
இஸ்லாமிய சிவல் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை களையவும் முன் வரவேண்டும்..
"ஷரியத் சட்டம் குர்ஆன்  அடிப்படையில் பிறரால் விளக்கமளிக்கபட்டு கொண்டுவரபட்டதுதான் இதில் உட்பிரிவுகளை புகுத்தி தெளிவுபடுத்த சமூகம் முன்வரவேண்டும் " என்ற துணைவேந்தரின் கூற்றில் நானும் உடன்படுகிறேன் ..
..
சட்டங்கள் மக்களுக்கானது ஆள்வோருக்கானதல்ல
..
ஆலஞ்சியார்

Wednesday, August 2, 2023

இஸ்லாமியர்களும் கிருஸ்துவர்களும் சாத்தானின் குழந்தையாகி வெகுநாளாகிவிட்டது சீமான் .. இதற்காக அவர் மீது வழக்கு தொடரலாம் .. நாம் அவரின் கருத்து குறித்து பேசுவோம்..
..
ஒருவனை, ஒரு சமுகத்தை சட்டென்று உணர்ச்சிப்பட வைக்க வேண்டுமெனில் சாதி,மதத்தை கையில் எடுத்தால் போதும் .. அதைதான் சீமானின் முதலாளிகள் விரும்புகிறார்கள்.. இவரை போன்றவர்களை முன்னிலைபடுத்தியதும் திரும்ப திரும்ப அவரை இனத்தின் அடையாளம் போல் காட்டி திசை திருப்ப செய்ததலிலும் குறிப்பிட்டளவு வெற்றியைப் பெற்றிருக்கிறது பாசிசம்..
ஈழம் தமிழர் என நகர்த்தி கடைசியில் யாருமே கண்டுக்கொள்ளாமல் அடுத்த நாட்டு பிரச்சனை என நகர தொடங்கிய போது சாதியை கையிலெடுக்க அதன் நீட்டினான் மதம் வந்து நிற்கறது ..
..
அவர் தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்கிறார் தினம் தினம் பேசுபொருளாக வேண்டும் ஆனால் கடைசியில் கோமாளியாய் நின்றாலும் கல்லா நிறைந்துவிடும் 
தினம் தினம் மாறி பேசுகிறாரே என யாரும் கவலைக் கொள்வதில்லை.. பைத்தியகாரனின் உளறல் என கடந்து போனதால் இன்று நேரடியாக பிற மதத்தினரை குறைச் சொல்கிறார் .. 
..
மதங்களை விமர்சிப்பதிலோ கோட்பாடுகளை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்வதில் எதிர்கருத்தை வைப்பதில் தவறில்லை ஆனால் இவர் அந்த சமுதாய மக்களை ஓடடுமொத்தமாக "சாத்தான்கள்" என்கிறார்.. புரிதலற்றோ தவறியோ பேசவில்லை மாறாக இந்துத்துவாவின் வேசம் கட்டி வருகிறார் ஆனால் நேரமையோடு பாஜகவில் இணைந்து சொன்னால் அதை கூட அவர்கள் அப்படியன என கடந்து போகலாம் ஆனால் இவர் தன்னை இனத்தின் மொழியின் காவலர் போல எண்ணிக்கொண்டு ஒவ்வொரு சாதியாக பேசி கடைசியில் சரியான இடத்தில் வந்து நிற்கிறார்
..
எதிரிகள்,பகைவர்கள் இவனை விட மேலானவர்கள் ஆனால் இவனைப் போன்ற அயோக்கியரகள் பெரும் ஆபததானவரகள் ..  இவரிடம் உள்ள சிறுவர்களை வழிகெடுப்பதோடு அறிவிற்கு விளங்கிடுவார்கள்.. வளரும் இளங்குருத்தில் விசம் பாய்ச்சும் கேட்டுக் கெட்டவர்கள்.. ஒரு தலைமுறையை இனம் மொழி சாதி மதம் எனச் சொல்லி பிற இன,மொழி,சாதி மதத்தவரை வெறுப்போடு பார்க்கும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.. இந்த நாக்பூரின் செல்ல நாய்கள் நம்மை வெறிபிடித்து கடிப்பதற்கு முன் கூண்டில் அடைக்க வேண்டும்.. கருத்துசுதந்திரம் என்றபெயரில் கழிவை கக்குகிற இவர்களை புறக்கணிக்கபட வேண்டியவர்கள் மடடுமல்ல விரட்டப்,ஒதுக்கப் வேண்டியவர்கள்
..
முழு வீடியோவை பார் என சிலதுகள்.. உண்மையில் உள்மனதின் வன்மமும் அரசியல் புரிதலின்மையும் பிழைப்புக்காக ஈழப் பொய்களை கட்டுகதைகள் சொல்லி திரைக்கதை எழுதிய இவர் உண்மையில் இனத்திற்காகவோ மொழிக்காகவோ எதையும் பிடுங்கியதில்லை.. தமிழ்நாட்டு அரசியலின் ஆக சிறந்த கழிவு இவர் .. இவர் கிள்ளியெறியபடவேண்டிய நச்சு ..
வழிகேடன், 
இளைஞர்களே! எச்சரிக்கை
..
ஆலஞ்சியார்