Tuesday, February 7, 2023

அறியாதபுரம் ..
தம்பி ஜா.முஹையத்தீன் பாட்சா(ராஜாமுகமது) எழுதிய கவிதை தொகுப்பு..
..
தம்பியை நான் சிறுவயதிலிருந்தே அறிவேன்.. பொதுவாழ்வு ஆன்மீகம் என நாட்டம் கொண்டவர் நிறைய படிப்பவர் .. நல்ல இஸ்லாமிய கவிதைகளை தந்திருக்கிறார். பலதரபட்ட விடயங்களிலும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அதை சரியான உணரும் திறமையும் கொண்டவர்.. நல்ல பேச்சாளரும் கூட.. அவரின் அறியாபுரத்தை தந்திருக்கிறார் ..
..
கவிதை நூல்..
எந்தவொரு புத்தகமாயினும் படிக்கும் போதே உம்மோடு அதுபேசும் .. மெய் மொழிகிறதா இல்லை புனைவா என்று .. தம்பியின் கவிதை யதார்த்தத்தை போகிற போக்கில் சொல்விடுகிறது 
வாழ்தல் பற்றி 
எல்லோரும் அதிகம் வாழ ஆசைபடுகிறார்கள் .....
 என்றுமே "வாழாதது தான்"
 வாழ்தல் என்பது நிகழ்வே இல்லை என்கிறார் .. 
எல்லோரும் எதோவொன்றுக்காக வாழ்கிறோமே தவிர  "வாழ்வை " சரியாக வாழ்தே இல்லை.. 
..
எல்லா தண்ணீரும் புனிதம் தான் என போட்டு உடைக்கிறார் .. ஞானியின் சட்டையில் 
கடைசிவரை இறைவனைப் பற்றி மட்டும் சொல்வே இல்லை ..
ஞானியின் கண்ணாடியை கூட தொட முடியவில்லை என அஞ்சாமல் உண்மையை சொல்கிறார்..
Fear is the beginning of wisdom..
அஞ்சுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பார்கள் உண்மையில்  தேடுதலே ஞானத்தை நோக்கிய நகர்வென்பேன் 
தேடுதலே ஞானத்திற்கு வழிவகுக்கும்.. 
..
தம்பியின் முதல் கவிதை தொகுப்பு 
பலதரப்பட்ட கவிதைகள்  தஞ்சாவூர் கதம்பம் போல இருக்கிறது .. எளிய நடையில் நல்ல மலர்களால் பூங்கொத்து செய்திருக்கிறார் .. 

 இன்னும் நிறைய எழுத வேண்டும் .. எழுத்தாளர் சுஜாதா கூறியதைப்போல "புதுக்கவிதை " இஸ்லாமியர்களின் கைவசம் என்றார் ..
கவிதைகளில் இஸ்லாமியர்களுக்கு தனி இடமுண்டு .. பெரும் பட்டியல் .. அந்த பட்டியலில் தம்பி "ராஜாமுகமது " இடம் பெறுவார் ..
..
ஆலஞ்சியார்



No comments:

Post a Comment