கலைஞர் தொலைநோக்காளர்..
பெரியாருக்கு பிறகு எந்தவொரு செயல்பாட்டிலும் தொலைநோக்கை கொண்டிருந்தவர் திராவிடத்தலைவன் கலைஞர் மட்டுமே.. .கை ரிக்சா ஒழிப்பு தொடங்கி எந்த திட்டமானாலும் அது காலம்கடந்தும் பயன்தரும்..
பேசபடும்.. இன்றைக்கு இந்தியாவிற்கே திட்டம் தீட்டுவதாக சொல்வோர் .. கலைஞரை கண்டு படித்ததின் விளைவு .. மூன்றுமாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரியாம்...பத்தாண்டுகளுக்கு முன்பே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரி என்று செயல்படுத்திகாட்டினார்.. பத்தாண்டுகளுக்கு முன்பே விளைவித்தவனே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்கும் உழவர்சந்தை .. இப்போதுதான் மோடி வகையறாக்களுக்கு புத்திக்குள் வருகிறது.. முப்பது வருடங்களுக்கு முன்பே கைரிக்சாவை ஒழித்தவர் கலைஞர் .. வரணாசியில் இப்போதுதான் கைரிக்சாவை வழங்கி .. இன்னும் நாங்கள் வளரவே இல்லையென்கிறார்கள்..
..
எப்படி கலைஞரால் மட்டும் சாத்தியமானது.. விடை இதுதான்.. கலைஞர் பெரியாரின் நேரடி சீடர். அதனால்தான் கலைஞர் கொண்டுவந்த அனைத்து திட்டங்களிலும் பெரியாரின் சிந்தனை இருக்கும்.. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்று இந்தியாவிற்கே வழிகாட்டியவர் .. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உள்ளாட்சிகளில் 50% விழுக்காடென்று அறிவித்தவர்..
மோடி வகையறாக்களே நீங்கள் இன்னும் கலைஞரை கண்டு படிக்கவேண்டியிருக்கிறது..
ஒரு ஆட்சியாளன் எப்படி இருக்கவேண்டும் எப்படி சிந்திக்கவேண்டும் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கான "பாடத்திட்டம்" syllabus கலைஞர் தான்.. அரசியல் தலைவன் எப்படி சிந்தித்து செயல்படவேண்டுமென்பதற்கும் அவரே தலைசிறந்த உதாரணம்.. இந்திய துணைக்கண்டம் கண்ட தலைவர்களில் ஆக சிறந்த தலைவர்.. கொஞ்சம் மிகைப்படுத்துவதைப் போன்று தோன்றும்..உண்மையில் அவரது சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கானதாகவே இருந்தது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் என்பது இயலாமல் போகுமென்பதால் தான் சிலவற்றை இலவசமாக தந்தார்.. இலவச மின்சாரம்.. உயர்கல்வியில் முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லை.. இப்படி நிறைய.. அடிதட்டுமக்களின் கனவுகளை மெய்பிக்க அவர்தம் வாழ்வாதாரங்களை உயர்த்த அவர் தந்த திட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் பேசபடுகிறது..
..
ஒரு அரசன்/ஆட்சியாளன் குடிமக்களின் எண்ணங்கள் உள்கொண்டே ஆட்சி செய்யவேண்டும்.. அவர்களின் அன்றாட பிரச்சனைகள் .. எதை செய்தால் காலம்கடந்தும் அவனால் துணிந்து நிற்கமுடியுமென்ற சிந்தனை வேண்டும் கல்வி மேம்பாடு அதை எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென்பதற்காகதான்.. ஒரு சிலரே கல்வியில் மேம்படுவதை தவிர்த்து சாமானிய ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கும் கிடைக்கவேண்டுமென்பதற்காகதான் .. நுழைவுதேர்வை ரத்து செய்தார் இன்றைக்கு எதிர்க்கிற கூட்டம் பெருபான்மை மக்களின் விரோதத்திற்கு ஆளாகி தானாகவே நடைமுறைபடுத்தும் காலம் வரும்.. ஏனெனில் நேற்றுவரை அவர்களது சிந்தனைக்கு வராமல் அல்லது எதிராக இருந்த திட்டங்கள்/ செயல்கள் இன்று அவர்களே அறிவிக்கிறார்களெனில்.. கலைஞர் பெருமகன் செயல்படுத்தியவையே .. இந்தியா முழுக்க தேவைபடுகிற நிலை உருவாகும்..
கலைஞரின் இந்தியாவிற்கே வழிகாட்டி..
..
கடைசியாக சுயமாக சிந்திக்க தெரியாதவர்களே.. நீங்கள் தவறியேனும் ஆட்சிக்குவந்தால் உடனே கலைஞரின் "நெஞ்சுக்குநீதி" யை படியுங்கள்.. ஒர் அரசியல்வாதியின் பயணம் எல்லா படிதளங்களும் எப்படி பயணிக்கவேண்டுமென்பதற்கான பாடதிட்டங்கள் syllabus அங்கே கிடைக்கும்..
அறிவுசார் சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் மக்கள் நலன் எனும் மேம்பாடும்..
அதோடு மக்களுக்கான அரசிற்கான செயல்திட்டங்களும் எதை எப்படி கையாள்வது என்ற சூத்திரமும் எதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என புரியம்படியாக வாழ்ந்தும் ஆட்சிசெய்தும் காட்டியவர்..ஒரு அரசியல்வாதியின் வெளிப்படைதன்மை எல்லோரிடமும் இருப்பதில்லை கலைஞர் தெளிந்த நீரோடையைப்போல எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக்கிய அறிவு கருவூலம்.. கலைஞரே அரசியல் தத்துவம்..
Political philosophy
..
yes
Kalaignar is a syllabus of Indian's political theory..
..
#கலைஞர்_இந்தியஅரசியலின்_ஞானி .. அவருக்கு நினைவு சின்னம் அமைப்பது நமது கடமை ..
வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளை வேறுபாடின்றி நடத்திகாட்டிய பெருமகனுக்கு
பேனா சின்னம் அமைப்போம்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment