அண்ணா..
தமிழர்களின் இதயநாளத்தில் வீற்றிருந்தவன்..
சொல்லாலும் செயலாலும் தமிழை அறியணையேற்றிய மன்னன் .. தெளிவான சொல்லெடுத்து திகட்டாத தேனடைப்போல் சிங்கார நடையழகில் செவிக்கு விருந்தாய் தமிழை தந்தவன் ..
ஆற்றல் மிகு பேரரசன் .. அன்பில் குழந்தையை போல அழகாய் மிளிர்ந்தவன் ..எம் அண்ணா..
..
அதுவரை வந்தவர்களை சாமி,ஐயா என்றழைந்து கைகட்டி அகலம் பார்த்து வந்த தமிழர் கூட்டம் அண்ணா என ஆரத்தழுவி இறுகணைத்துநின்றது ..
தமிழர்கள் தங்கள் குடும்பத்தின் மூத்தவரைபோல கண்டார்கள் .. தமிழர் வாழ்வு நலம் பெற இனம் மொழி கலாச்சாரம் பண்பாடு காத்துநின்று பெருவீரன் எம் அண்ணா .. அரசியல் இலக்கியம் இவ்விரண்டிலும் யாரும் நெருங்கமுடியாத ஆளுமையாய் தெளிவான வரையறையோடு கூடிய பாடமாய் திகழ்ந்தார் .. அரசியலில் எப்போது யாரை வீழ்த்துவதென்ற அறிவும் தேர்தல் அரசியல் தான் நம் தேவைகளை உரிமைகளை பெற்று தரும் என்று உணர்ந்து திராவிட ஆட்சிக்கு துவக்கம் குறித்த மேதை .. உச்சநீதி மன்றம் சுயமரியாதை திருமணத்தை தகாத உறவென்று தீர்ப்பு தந்தபோது (சட்டத்தை சுட்டிகாட்டி) சட்டத்தை உருவாக்கும் இடத்தில் நாம் அமரவேண்டும் என முடிவெடுத்து தேர்தல் அரசியலை கையிலெடுத்த ஆளுமை மிகு எம் அண்ணா.. முதல்வராய் ஆனவுடன் சுயமரியாதை திருமணச்சட்டத்தை நிறைவேற்றினார்
மெட்ராஸ் மகாணம் என்றிருந்ததை தமிழ்நாடென திருத்தம் செய்தார் .. அப்போது ராஜாஜி நாட்டிற்குள் நாடு கேட்கிறாரென மத்தியில் உள்ளோருக்கு எச்சரித்த போது மன்னிக்கவும் இந்தியா என்பது நாடே அல்ல அது பன்முகதன்மைகளை உள்ளடக்கிய ஒன்றியமென சொன்னவர் ..
..
இருமொழிக் கொள்கை சுயமரியாதை திருமணச் சட்டம் தமிழகம் என பெயர் மாற்றம் .. மூன்றையும் செய்துவிட்டேன் இதில் எதை மாற்ற நினைத்தாலும் தமிழகம் வெகுண்டெழும் அதுவரை இந்த அண்ணாதுரைதான் தமிழகத்தை ஆள்வதாக பொருள் என்றார் ..ஆம் இம்மூன்றையும் யாராலும் தொடமுடியாது ..தமிழகம் பொங்கியெழும் .. மாற்று கருத்தாளர்களையும் மதிக்கும் அரசியல் மாண்பு கருத்தை கருத்தால் வென்று அய்யாவின் மூதன்மை சீடராய் பகுத்தறிவோடு ஆட்சி செய்த முதலாமவர் ..பண்பின் உறைவிடம். சொக்கவைக்கும் சொல்லாடல் தேனினும் சுவைக்கூட்டும் உரையாடல்
சொல்லி புரியவைக்கும் பேராற்றல் ..
அண்ணா என்பது ஒற்றை சொல் அல்ல அது
தமிழகம் .. தமிழை சுவாசிப்போர்க்கும் தமிழ் மண்ணை நேசிப்போர்க்கும் சுவாச காற்று எம் அண்ணா.. யாரை எங்கே நிறுத்துவதென்று ராஜாஜியை வெளியேற வைத்து யார் இந்த அரசின் சூத்தரதாரி என பெரியாரிடம் சரணடைந்தும் தான் சிறந்த "அரசியல்வாதி " என உணர்த்தியவர் ..
..
அதுவரை காங்கிரஸ் ஆட்சி அது கூட பிராமண ஆதிக்கம் நிறைந்ததாக ஆரியவாடையோடு கூடியதாய் இருந்ததை மாற்றி "திராவிடம் " மலர வைத்தவர் அண்ணா .. திராவிட ஆட்சியின் தொடக்கம் அண்ணா ..
திமுக எனும் சுயமரியாதை இயக்க அரசியலை ஆட்சியில் அமர மூலகாரணமானவர் ..இன்றும் தமிழர் வாழ்வில் அணையா விளக்காய் விளங்கும் பேரறிஞர் ..உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை கற்றுணர்ந்த ஞானி..
அண்ணா என்றால் வாசிப்பு என்றே பொருள் .. தனக்கு அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்து மருத்துவர்கள் சொன்னபோது புதன் கிழமை வைத்துக்கொள்ளலாமே என்றார் நல்லநாள் பார்க்கிறீர்களா என்ற போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை அதற்குள் முடித்துவிடுவேன் அதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அறுவைசிகிச்சை செய்துக்கொள்ளுங்கள் என்றார் .. அண்ணா என்றாலே வாசிப்பு என்று பொருள் ..
..
சொல்லி தீர்வதல்ல அண்ணாவின் புகழ்..
நம் வாழ்வோடு இரண்டற கலந்த ஜீவன்..
மகத்தான மனிதம் போற்றும்
மா மன்னன்
எம் அண்ணன்..
பேரறிஞர் அண்ணா
54ம் நினைவு நாள் 03.02.23
வாழ்க! அண்ணா ..
வாழ்க!! பேரறிஞர் ..
வாழ்க!!! அண்ணாவின் புகழ் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment