பொள்ளாச்சி ஜெயராமன்
நல்லது .. அவரின் நம்பிக்கையின் மீது நமக்கு எதுவுமில்லை ஆனால் அண்ணாவை அவமதித்த போது வராத கோபம் இப்போது வந்திருக்கிறதே என்ற கேள்வி நமக்கு எழுகிறது .. அண்ணாவின் பெயரில் கட்சி ஆரம்பித்த மகோராவிற்கே (எம்ஜிஆர்) அண்ணாவின் கொள்கைகளே யாரை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தார் என்று தெரியாது அண்ணாவின் ஆரியமாயை படித்திருப்பாரா என்றும் தெரியாது.. இவர்களெல்லாம் ஜெயலலிதாவின் வார்ப்புகள் .. கொள்ளையடிக்கவும் அதற்காக யார் காலிலும் விழவும் மட்டுமே தெரியும்.. ராமன் என்று ஒருவர் இருந்ததாகவோ அவர் இன்ஜினியர் காலேஜில் படித்ததாகவோ தரவுகள் இல்லையென பேசமுடியுமா என்ன..
..
இவர்களெல்லாம் திராவிடக் கொள்கைகளை படித்தோ திராவிடர்களின் வரலாற்றை அறிந்தோ அரசியலுக்கு வரவில்லை.. சினிமா மோகமும், அரசியலில் பதவி வந்தால் கொள்ளையடிக்கலாம் வளமான சுகமான வாழ்வு வாழலாமென வந்தவர்கள் இவர்கள் இப்படிதான் பேசுவார்கள் ..காரணம் தலைக்குமேலே தொங்கும் கத்தியைப்போல ஊழல் வழக்குகளும்,.. தன் மகனின் சேட்டையால் பொள்ளாச்சி பெண்குழந்தைகளின் அழுகுரல் களி திங்க வைத்துவிடும் என்பதால் பாசிசத்தின் துணை தேடி இப்படி பேசுகிறார்
..
ஒருமுறை
ராஜாஜி பேசும் போது ''எனக்கு பரம்பரை எதிரி ராமசாமி நாயக்கர் தான்'' என்று சொல்ல
அதற்கு #தந்தைபெரியார், அவர் பெற்றோரை எனக்கோ எனது பெற்றோரை அவருக்கோ தெரியாது
பிறகு எப்படி பரம்பரைஎதிரி என சொன்னார் என்றால்,
என்னை #ராவணன், #சூரபத்மன், #இரணியன் சந்ததியாகவும்,
தன்னை ராமன்,கிருஷ்ணன் சந்ததியாகவும் கருதி தான் சொன்னார் என்றார்
#சூரபத்மன் பார்ப்பானை மீன் பிடிக்க சொன்னான், ஏற்றம் இறைக்கச் சொன்னான், விறகு உடைக்கச் சொன்னான்,
#ராவணனும் பார்ப்பானை அடிமைப்படுத்தியே வைத்திருந்தான்,
#இரணியன் பார்ப்பன சேரிக்கு நெருப்பு வைக்க சொன்னான்..
கடவுளையும், இதிகாசங்களையும் ஒழிக்கச் சொன்னான், என்றார் ..
அதனால் தான் நம்மை எதிரியென்கிறார்கள் அவர்கள் தெளிவாகதான் இருக்கிறார்கள்
நம்மவர்கள் தான் புரிந்துக்கொள்ளாமல் பெண்ணுக்கும், பொருளுக்கும், பதவிக்கும் மயங்கி பார்ப்பனியரின் அடிமைகளாக இருக்கிறார்கள் .. இல்லாத ஒன்றை கூட நம்பிக்கையென்ற பெயரில் நம் மூளையில் அடித்தமர்த்தி அறிவுடை சமூகத்தை மழுங்க செய்வதில் அவர்கள் வெற்றிகண்டிருக்கிறார்கள்..
தமிழனுக்கு மதமும் சாதியும் பின்ஏற்பாடு என்பதை உணர்ந்தாலே மானமும் அறிவும் மனிதர்க்கு அழகென்று புரியும்
..
ஆம் இதையெல்லாம் படித்தறிந்திருந்தாலும் அறிந்திருந்தாலும் பொள்ளாச்சி
ஜெயராமன் தன் தலைக்குமேல் தொங்கும் கயிற்றை எண்ணி குலைநடுங்கி
"சாஷ்டாங்கமாய்" விழுந்துவிட்டார்
அடிமைகள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment