Sunday, February 12, 2023

நாட்டின் பிரதமர் பொய் சொல்கிறார் .. இவரை தேர்ந்தெடுத்த மக்களின் நிலை ..
..
வங்கத்து 
தமிழ்நாட்டின் கனிமொழி 
ராகுல் ...
இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அல்லது மறுத்து விளக்கமளிக்காமல் நாட்டின் பிரதமரை அவமதிப்பது நாட்டுமக்களை அவமதிப்பதாகும் என்கிறார் ..  உண்மையில் நாட்டுமக்கள் இப்படியொரு பொய்யரை, வாய்சொல்வீரரை தேர்ந்தெடுத்ததற்கு வெட்கபடுகிறோம்
..
கேள்விக்கென்ன பதில் .. 
ஒவ்வொரு முறை வெளிநாடுபயணம் செய்தவுடன் அங்கிருந்து அதானிக்கு மட்டும் டெண்டர் கிடைப்பதும், உடனே வங்கிகள் கடனளிப்பதும் எப்படி நடக்கிறது .. நாட்டின் பொது சொத்துக்களை ஏன் அதானிக்கு மட்டும் தரவேண்டும் அதுவும் கடன் வழங்கி உடனே தள்ளுபடி செய்யவேண்டும் ..  டோல்கேட் வசூல் என்ற பெயரில் சாலை மேம்பாட்டிற்காக பட்டகடனை எத்தனை காலம் அடைப்போம் அதற்கெல்லாம் தள்ளுபடி கிடையாதா ..  கல்வி பெறுவதற்காக வாங்கி கடனுக்கு காலரை பிடித்து கேட்கிறீர் .. விவசாயி பட்ட கடனுக்கு  மிரட்டுகிறீர் .. அவன் அவமானம் தாங்காமல் தொங்குகிறான் அப்போதெல்லாம் அரசு தள்ளுபடி செய்வதில்லை ஆனால் அதானிக்கு மட்டும்  எப்படி .. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் 
மறு சுழற்சி முறையில் தயாரிக்கபட்ட நெகிழி (பிளாஸ்டிக்) சட்டை போட்டுக்கொண்டுவந்தாரென ஊடகங்கள் பெருமை பேசுகின்றன  ..  வாழ்க தாய்திருநாடு
..
மினிமம் பேலன்ஸ் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லையென்று ஏழைகளின் வயிற்றில் அடிப்பது அதானிக்கு தருவதற்கா .. மக்கள் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்க ஏதற்கு அரசாங்கம் .. 
தனியார் சொத்துகள் நாட்டுடமையாக்கியது காங்கிரஸ் ஆனால் அதை நிர்வகிக்க தெரியாமல் சுமையென்று சொல்லி
தனியாருக்கு கொடுக்கிறார் நிதியமைச்சர் .. முட்டாளுக்கு மூளை கூட சுமைதான் ..
..
காங்கிரஸால் எதிர்க்கட்சி ஆட்சி கவிழ்க்கபட்டன என்கிறார் .. திரு.பொம்மை வழக்கிற்கு பிறகு தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சியை கலைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிற்கு இல்லை என்ற தீர்ப்பு வந்தது அதனால் தான் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிமாற்றம் செய்கிறீர்கள் மாண்பிமை மோடி அவர்களே ..
அதானி குறித்தும் BBCஆவணம் படம் குறித்து பதிலளிக்க முடியாமல் நேரு பெயரை ஏன் வைத்துக்கொள்ளவில்லை என கேட்கிறீர் .. ராகுல் பிரோஸ்காந்தியின் குடும்பம் என்பது தெரியாதா ..  நம்மவொன்னு கேட்டா அவன் ஒரு பதில் சொல்வான் பாரு என்ற கவுண்டமணி காமெடி தான் ஞாபகம் வருகிறது ..
..
கனிமொழி கருணாநிதியின் சொல்லெடுத்தே சொல்கிறேன் .. பாஜக தலைவர்களே இப்போது ஒரு முறையாவது உண்மையை சொல்ல சொல்லுங்கள் தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் ..  இந்த தேசம் நமக்கானது எவன் அப்பன் வீட்டு சொத்து அல்ல..
..
கேள்வி கேட்போம் பதில் சொல்லியே ஆகவேண்டும் மாண்பமை பிரதமர் அவர்களே ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment