Tuesday, February 7, 2023

தர்மயுத்தம் ..
End of the panneer ERA ..
..
பன்னீர் எனும் பரம அயோக்கியரின் அரசியல் முடிவிற்கு வருகிறது .. சசிகலாவை காட்டி கொடுக்க அவர் நடத்திய நாடகம் அதற்கு காரணமானவர்கள் கைகழுவி விட்டார்கள் .. துரோகம் ஒன்று வீழ்ந்தது ..
..
பன்னீரின் அரசியல் பெட்டி தூக்கியாக வலம் வந்து அப்போதே கூர்பார்த்து .. தினகரனின் நிழலில் நின்று அதை தன் விசுவாசத்தின் திறவுகோலாக கணக்கிட்டு ஜெயலலிதா சசிகலாவின் பார்வையில் 'சொன்னால் கேட்பான்' என்ற நம்பிக்கை முதல்வராக வாய்ப்புவந்தும் .. எடப்பாடி பழனி போல கூர்பார்க்க தெரியாததால் 
இன்று விட்டுகொடுத்து கடைசியில் வீழ்ந்து கிடக்கிறார்,..
..
முதலில் எடப்பாடியோடு இணைந்து செயல்பட பாஜக ஆணையிட்ட போதே முதல்வராக அவர் இருக்கட்டும் தனக்கு கட்சி பதவி (செயலாளர்) வேண்டும்  என செக் வைத்திருந்தால் இன்றைய வீழ்ச்சி நடந்திருக்காது .. எதை எந்த நேரத்தில் செய்யவேண்டுமென அறியாத பிள்ளை தோற்று போகும் என்பதை உணராமல் போனார் 
தொடர்ந்து விட்டுகொடுத்து பழநி ஒருகட்டத்தில் சகல அதிகாரமும் தனக்கென்ற நிலையை அடைய இவரது பலவீனம் பயன்பட்டது 
..
பாஜக அதிமுகவை முழுமையாக சிதைக்க விரும்பவில்லை தனித்தோ தலைமையேற்றோ மக்களிடம் செல்லமுடியாதென அறிந்து .. அதிமுக முகமூடி தேவை என்பதால் எடப்பாடியின்  பிடி எப்போதும் தங்கள் கையில் என உறுதியாய் செயல்படுகிறது ..
ஆனால் நய்ந்துபோனது அறியாமல் .. இன்றைய நிலவரப்படி இனி எடப்பாடியை மட்டுமே பாஜக கணக்கில் கொண்டிருக்கிறது நேரம் வரும் போது இல்லாமல் செய்யலாம் அது 2024 வரை காத்திருக்கிறது 
..
தனியாக நின்றால் பிய்த்தெறியபடுமென்ற உண்மை உணர்ந்ததால் அதிமுகவை ஒருங்கிணைப்பது ஒரளவு வாக்கு வங்கியை உருவாக்கி மெச்சபட்ட தோல்வியை அடைந்தாலும் பரவாயில்லை இல்லையெனில் முழுவதுமாக எல்லோரும் சேர்ந்து கட்டிவச்ச காசை(டெபாசிட்) இழக்க நேரிடும் என்ற அச்சம்  தரகு வேலை பார்த்தாவது இணைக்க வேண்டியிருந்தது .. அறுந்த வீணையில் இசைக்க முடியாது..
..
அரவணைத்து கொல் என்பது தான் 
பார்ப்பனீயத்தின் தந்திரம் அதை சரியாக குருமூர்த்தி செய்தார்.. நம்பிக்கை துரோகம் செய்தவன் பார்ப்பனனை நம்பி படுகுழியில் வீழ்ந்த வரலாறு .. இனி .. அடுத்து எடப்பாடி முறை .. காத்திருந்து கொல்லும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment