எஸ்.என்.எம். உபயதுல்லா
தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக நான்குமுறையும் வணகவரித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் .. தஞ்சை மக்களின் நன்மதிப்பை பெற்றவர் ..
தஞ்சை வணிகர் சங்கத்தில் பொறுப்பிலிருந்த போது ஆற்றிய பணிகளை கண்டு கலைஞர் இவரை 1989 ல் தஞ்சையில் நிறுத்துகிறார் .. தஞ்சை தொடர்ந்து எஸ்.நடராஜன் அவர்கள் தக்கவைத்திருந்தார் அவர் மறைவிற்கு பிறகு காங்கிரஸ் கிருஷ்ணமூர்த்தி சிவாஜி ரசிகர்மன்றத்தை சேர்ந்தவர் சிவாஜி தனியாக நிற்பதாக சொல்லி கடைசியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கபட்டு வெற்றி பெற்றார் .. அதற்கு பிறகு உபயதுல்லா நிறுத்தபட்டு மீண்டும் கழக கோட்டையானது தொடர்ந்து ஐந்துமுறை நின்று இரண்டாவது முறை எஸ்டிஎஸிடம் சொற்ப எண்ணிக்கையில் தோற்றார் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர் .. வணிகவரித்துறை அமைச்சர் என பெரும் புகழோடு வலம்வந்தவர் .. நல்லமனிதரென பல்வேறு தரப்பினரும் பாராட்டிய தாராள ஈகைகுணம் கொண்டவர்
..
முதல்முறை தஞ்சையிலே நின்ற போது கலைஞருக்கு 60 அடியில் கட்அவுட் தஞ்சை பேருந்துநிலையம் எதிரில் வைத்தார் அது அப்போது பேசுபொருளானது .. கட்அவுட் கலாச்சாரத்தின் தொடக்கபுள்ளியாக இருந்தது மக்கள் நின்று பார்த்து சென்றனர் ..
வெற்றி பெற்றதும் மக்களிடம் எப்போதும்போல் இயல்பாக அணுகமுடிகிறவராக தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார்
..
வழுத்தூர் பள்ளி தாளாளர் இல்ல திருமணத்திற்கு வந்தவர் கையைப் பற்றிக்கொண்டு அளவளாவினார் .. எப்போதும் போல் அதே நெருக்கம் கரிசனத்தோடு விசாரிப்பு .. உபயதுல்லா அவர்களோடான முதல் சந்திப்பே கலைஞரை சந்திப்பதற்காக ஓய்வறையில் அருகில் காத்திருந்த போது தோளில் கைவைத்து பார்த்திடலாம் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் .. அதன் பிறகு எப்போது பார்த்தாலும் எஸ்.பி என்று இன்ஷியலை சொல்லிதான் அழைப்பார் .. கனிவும் பரிவும் கொள்கை உறுதியும் கொண்ட கலைஞரின் தம்பி இன்று நம்மோடு இல்லை ..
போய்வாருங்கள் உடன்பிறப்பே
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment