Thursday, February 23, 2023

நவீன இஸ்லாமிய இயக்கங்களும் திமுக எதிர்ப்பும் ..
மிக பரிதாபமாகதான் எண்ணுகிறேன் .. உண்மையில் சமுதாய மேம்பாடெல்லாம் இவர்கள் லட்சியம் இல்லை .. பேசுபொருளாக வேண்டும் என்பதே இவர்களின் ஆசை எண்ணம்,.. ஆனால் எதற்கெடுத்தாலும் திமுக எதிர்ப்பை காட்டி சொரிந்துக்கொள்கிறார்கள் .. 
திமுக ஏமாற்றிவிட்டதாம் ..
..
இன்றைக்கு தமிழகத்தில் முஸ்லிம் சமுதாய மக்கள் கல்வி வேலைவாய்ப்பில் அதிகரிக்க காரணமாக இருந்தது உள்ஒதுக்கீடு அதை கடுமையாக எதிர்த்தவர்தான் ஜெயலலிதா .. ஆனால் ஜெயலலிதா நல்லவர் .. இவர்கள் கலைஞர் மீது சொல்லும் காரணம்  கோவை குண்டுவெடிப்பும் அதனால் பாதிக்கபட்டவர்கள் விடுதலையிலும் பாராமுகமாக திமுக இருக்கிறது விடுதலையை எதிர்க்கிறது என்கிறார்கள் .. 
முறையாக நீதிமன்றத்தை அணுகி நிறைய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தொடர்ந்து வாதிட்டிருக்கலாம் .. பேரறிவாளன் வழக்கு ஒன்றே போதும் எப்படி தொடர்ந்து நீதிமன்ற படிகட்டுகளில்  ஏறிஇறங்கினர் .. ஆனால் இங்கே அரசை குறைச் சொல்லிக்கொண்டு "சொகுசு" வாழ்க்கை வாழ்கிறார்கள் ..
ஆரம்பகாலங்களில் பல இடங்களில் வெளிநாடுகளில் கூட வசூல் செய்தார்கள் அவையெல்லாம் என்னானது வழக்கிற்காக செலவிடப்டதா என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகள் .. 
..
சரி விடயத்திற்கு வருவோம் ..  கர்நாடகாவில் "இஷாப் " பிரச்சனைக்கு திமுக குரல் கொடுக்கவில்லையாம் .. இங்கே இஷாப் கட்ட தடை போட்டதா என்ன..  இவர்கள் வைக்கும் குற்றசாட்டுகள் ஒன்று கூட லாஜிக் இல்லாதது .. காலங்காலமாக திமுகவை ஆதரித்தோம் என்கிற பழைய பல்லவி .. அதில் கூட உண்மையில்லை மாறி மாறி சவாரி செய்த வரலாறும் உண்டு முஸ்லிம்லீக்கை உடைத்தார் .. உங்கள் சகோதர யுத்தம் இன்னும் பச்சையாக சொல்லபோனால் அவரும் நானும் சமமா என்கிற மனப்பான்மை பிரிவு வரை வந்தது இன்றைய இயக்கங்களின் எண்ணிக்கை 50 ஐ தொடும் இதெல்லாம் திமுகவால் அல்ல உங்கள் ஈகோ அதைவிட பதவி ஆசை சமுதாய நலன் எல்லாம் இல்லை தங்களின் நலன் பதவி புகழ் இவைதானே தவிர வேறு காரணம் தேடுவது அறியாமையை காட்டுகிறது 
..
இஸ்லாமிய சமுதாய இளைஞர்களை உணர்ச்சி மேலிடும் பேச்சால் "கலவரத்தில்" நிறுத்தியதில் பெரும்பங்கு இன்றைய  நவீன இஸ்லாமிய இயக்கங்களுக்கு உண்டு .. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய சமூகத்தை இத்தனை இயங்கங்கள் இருந்தும் உயரத்தில் ஏற்றிட என்ன செய்தது என்ற கேள்விக்கான விடை ..? 
..
நவீன இஸ்லாமிய இயக்கவாதிகள் திமுகவை எதிர்ப்பு என்ற நோய் சீழ் பிடித்திருக்கிறது .. இந்து முன்னணியை வர காரணமான எம்ஜிஆர் முஸ்லிம்களுக்கு ஒரு "லீக்" இருக்கும்போது இந்துகளுக்கு இருக்க கூடாத என கேட்வர் 
இடஒதுக்கீட்டை எதிரித்தவர் ஜெயலலிதா இவர்களுக்கு தேன்மிட்டாய் ..  இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்தை வெளிநடப்பு செய்து வர காரணமாக இருந்த அடிமைகள் இவர்களை மௌனமாக கடந்து செல்வார்கள் .. ஆனால் கர்நாடகவிலே  ஹிஜாப் தடைக்கு திமுக ஏன் கேள்வி எழுப்பவில்லையென கத்துவார்கள் 
..
ஒரு உண்மையை இவர்கள் உணர்வதே இல்லை .. இறுக பற்றிபிடித்தாலே விழமாட்டோம் என்கிற சிறிய புரிதல் கூட இல்லை .. பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வால் பிடிப்போம் என்கிற புத்தி சமூகத்தின் சாபகேடு .. எதற்கித்தனை பிரிவுகள் /இயக்கங்கள் .. ஏன் ஒற்றுமையாக இல்லை .. நூற்றாண்டு காணும் முஸ்லிம்லீக் அதன் பின்னால் அணிவகுக்க என்ன தயக்கம் 
கருத்துவேறுபாடுகள் கலைந்து பதவிபுகழ் ஆசையை துறந்து  சமுதாய மேம்பாடு ஓன்றே லட்சியமாய் ஏன் ஒருங்கிணைய கூடாது .. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என படித்தது ஞாபகம் வரவில்லையா .. சமுதாய சீரழிவிற்கு காரணமாய் இருப்பது நாம் தான் என உரைக்கவில்லையா .. 
..
நீங்கள் ஒருங்கிணைந்து நின்றால் பெரும் கட்சிகள் வந்து வாசல் நிற்குமே .. உங்கள் கோரிக்கைகளை உடன் செயலாகுமே .. கல்வி வேலைவாய்ப்பு உரிமைகள் யார் தயவுமின்றி கிடைக்குமே ஆனால் இஸ்லாமியர்கள் பிரிந்து கிடப்பதுதான் பாசிச இந்துத்துவாவாதிகளுக்கு தேவை அடித்தமர்த்த  இலகுவாகும் .. 
அதை செய்ய பெருந்திட்டதோடு காய் நகர்த்துகிறாக்கள் .. அதில் "பலியாய் " இயக்க முன்னோடிகள் விழுகிறார்கள் .. உங்களை பிரிக்க வேறாரும் தேவையில்லை .. அறிவில் சிறந்த சமூகம் இன்று அடிமாடாய் நிற்பதற்கு சிலரின் "சுயம்" மேம்பாடே என்ற ஒற்றை காரணம் தவிர வேறில்லை 
..
இன்றைய காலகட்டத்தில் திமுக ஒன்றே பாதுகாவலாக நிற்கிறது.. சாதிய இயக்கங்களோ அல்லது உதிரிகட்சிகளோ பலமற்று போன பொதுவுடமைவாதிகளாலோ பயனில்லை .. உணர்ச்சி வயப்படும் இளைஞர்களை கூர்தீட்டவே உதவுமே தவிர உன்னத பாதையை உயர்வுக்கான பாதையை அது தராது .. திமுக எதிர்ப்பென்பது பிழைப்புவாதிகளின் அரிப்பிற்கு சொரிதல் மாத்திரமே ..
உண்மையில் பெருபான்மையில் சமூகநீதியில் சிறுபான்மையினர் நலனில் பகுத்தாய்ந்து நலம்பயக்கும் அரசை தந்துக்கொண்டிருக்கிற திமுக வீழ்ந்த நினைக்கும் பாஜகவின் கரங்களை வலுப்படுத்த உதவுமே தவிர  வேறெந்த பயனுமில்லை பலனுமில்லை 
..
ஆலஞ்சியார்

Saturday, February 18, 2023

எஸ்.என்.எம். உபயதுல்லா 
தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக நான்குமுறையும் வணகவரித்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் .. தஞ்சை மக்களின் நன்மதிப்பை பெற்றவர் ..
தஞ்சை வணிகர் சங்கத்தில் பொறுப்பிலிருந்த போது ஆற்றிய பணிகளை கண்டு கலைஞர் இவரை 1989 ல் தஞ்சையில் நிறுத்துகிறார் .. தஞ்சை தொடர்ந்து எஸ்.நடராஜன் அவர்கள் தக்கவைத்திருந்தார் அவர் மறைவிற்கு பிறகு காங்கிரஸ் கிருஷ்ணமூர்த்தி சிவாஜி ரசிகர்மன்றத்தை சேர்ந்தவர் சிவாஜி தனியாக நிற்பதாக சொல்லி கடைசியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கபட்டு வெற்றி பெற்றார் .. அதற்கு பிறகு உபயதுல்லா நிறுத்தபட்டு மீண்டும் கழக கோட்டையானது தொடர்ந்து ஐந்துமுறை நின்று இரண்டாவது முறை எஸ்டிஎஸிடம் சொற்ப எண்ணிக்கையில் தோற்றார் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினர் .. வணிகவரித்துறை அமைச்சர்  என பெரும் புகழோடு வலம்வந்தவர் .. நல்லமனிதரென பல்வேறு தரப்பினரும் பாராட்டிய தாராள ஈகைகுணம் கொண்டவர் 
..
முதல்முறை தஞ்சையிலே நின்ற போது கலைஞருக்கு 60 அடியில் கட்அவுட் தஞ்சை பேருந்துநிலையம் எதிரில் வைத்தார் அது அப்போது பேசுபொருளானது .. கட்அவுட் கலாச்சாரத்தின் தொடக்கபுள்ளியாக இருந்தது மக்கள் நின்று பார்த்து சென்றனர் ..
வெற்றி பெற்றதும் மக்களிடம் எப்போதும்போல் இயல்பாக அணுகமுடிகிறவராக தன்னை மாற்றிக்கொள்ளாமல் இருந்தார் 
..
வழுத்தூர் பள்ளி தாளாளர் இல்ல திருமணத்திற்கு வந்தவர் கையைப் பற்றிக்கொண்டு அளவளாவினார் .. எப்போதும் போல் அதே நெருக்கம் கரிசனத்தோடு விசாரிப்பு ..  உபயதுல்லா அவர்களோடான முதல் சந்திப்பே கலைஞரை சந்திப்பதற்காக ஓய்வறையில் அருகில் காத்திருந்த போது தோளில் கைவைத்து பார்த்திடலாம் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் .. அதன் பிறகு எப்போது பார்த்தாலும் எஸ்.பி என்று இன்ஷியலை சொல்லிதான் அழைப்பார் .. கனிவும் பரிவும் கொள்கை உறுதியும் கொண்ட கலைஞரின் தம்பி இன்று நம்மோடு இல்லை ..
போய்வாருங்கள் உடன்பிறப்பே
..
ஆலஞ்சியார்
எது ஆணத்துவம் ..
வீரம்,மீசை வேட்டி அகங்காரம் ஆணவம் எல்லாம் தன்னால் என்கின்ற அகந்தை .. அனைவரும் கட்டுபடவேண்டும் என்கிற நினைப்பு, எகத்தாளம், .....
இவையாவும் அடித்து நொறுக்கபட்டு வெகுநாட்களாகிறது  சேக்கிழார் புகழ் எடப்பாடி பழனிசாமி அவர்களே..
..
ஆண்மை என்பது தைரியத்தில் உடல்உறுதியில் இல்லை .. ஏனெனில் உளஉறுதியில் ஆண்களை விட பெண்களே பலசாலிகள் .. எல்லா நிலையிலும் தடுமாறாமல் தனித்து வெற்றி காண்பதிலும் "வெகு ஆண்"வர்க்கத்தை முன்னிலையில்
 நிறுத்தியதிலும் பெண்களே காரணிகளாய் திகழ்கிறார்கள் ..
..
மாண்பமை ஸ்டாலின் அவர்களின் நிழலில் கூட நிற்க தகுதியற்றவன் நீ .. உம்மைப்போல் துரோகத்தாலே காலில் விழுந்து வாரிவிட்டு முன்னுக்கு வரவில்லை .. உழைப்பு தொடர்ந்து ஓயாத உழைப்பு .. வாய்ப்பிருந்தும் குறுக்குவழியில் வர முடிந்தும் மக்கள் ஆதரவோடே அறியணை ஏறுவேன் என உறுதியோடு நின்றாரே அது வீரம் ..
இதெல்லாம்  அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு கூட இல்லை வராது ..
மிசாவை காட்டி மிரட்டினால் தமிழ்நாட்டிற்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்ற துணிவு .. எம்ஜிஆரைப்போல ஓடியொளிந்துக்கொள்ளவில்லை .. 
பத்திரிக்கை அலுவலகம் பூட்டபட்டபோதும் துண்டுசீட்டி அடித்து மவுண்ட்ரோட்டில்(அண்ணாசாலை) மக்களுக்கு விநியோகித்த மரபில் வந்தவர்களை பார்த்து வேட்டிகட்டியிருக்கியா என கேட்கும் அடிமை பழனிசாமி தவழ்ந்து ஊர்ந்த போது "கண்ணன்குல"பெருமை எங்கே போனது 
..
துணிவென்றால் எது தெரியுமா ..
மாங்காடு பகவதி அம்மன் கோவில் வடம் பிடித்து இழுக்க கூடாதென
அமைச்சர் மாண்பமை மனோ.தங்கராஜை அவர்களுக்கு
எதிர்ப்பு தெரிவித்தார்களே ..   அவரை தான் குடியரசு தலைவர் தமிழ்நாட்டு வருகையில் மீனாட்சி கோவில் தரிசனம் கோவை ஈசா மைய சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டு வழியனுப்பும் வரை தமிழ்நாடு அரசின் பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்  தமிழ்நாடு முதலமைச்சர் மாண்பமை #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
.. யாரை வடம் பிடிக்க கூடாதென்றாரோ அவரே குடியரசு தலைவரின் தமிழக வருகையின் பொறுப்பாளர் இப்படியெல்லாம் செய்ய துணிவு வேண்டும்..
..
மோடியிடம் குலைந்து உடல் குறுகி கைகூப்பி சரணடைந்து நிற்கும் நீயெல்லாம் வீரம் ஆண்மை பற்றியெல்லாம் பேசகூடாது .. சசிகலாவின் தவறில் வந்தவன் நீ .. நன்றி எனும் சொல்லின் பொருள் உணராதவன் .. அன்றைய கொலைவழக்கிலிருந்து விடுவிக்க "அம்மிணியை" வழங்கியவன்.. வந்த பாதை அருவறுப்பானது .. நிறைய பேசவேண்டிவரும் ..
..
தளபதி ஸ்டாலின் பாசிசவாதிகள் அஞ்சும் மாவீரன் .. அவர்களே ஒப்பு கொண்டதுதான் "more dangerous" ..
தளபதியின் ஒவ்வொரு அசைவும் 
எதிரிகளை கலங்கடிக்கிறது 
அவர் தலைவர் .. தகுதியானவர் 
கொள்கையாளர்,  இரக்கம் கொண்ட நேர்மையான ஆட்சியாளர் .. வீரம் துணிவு கொள்கை உறுதி, தாய்மை , கனிவு கொண்டு தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான தலைவர்கள் வரிசையில் இடம் பெறுகிறார் ..
ஆனால் நீயோ.. 
கைகட்டி ஆரியத்திடம் அடிமைபட்டு 
வடவன் முன்னால் முதலமைச்சர் நாற்காலியில் இருந்து எழுந்து நின்று சிறந்த அடிமையாய் வாழும் நீயெல்லாம்...
உன் பாஷையில் சொல்லவேண்டுமென்றால் நீ ஆம்பளையே அல்ல ..
ஈனப்பிறவி 
..
ஆலஞ்சியார்

Sunday, February 12, 2023

நாட்டின் பிரதமர் பொய் சொல்கிறார் .. இவரை தேர்ந்தெடுத்த மக்களின் நிலை ..
..
வங்கத்து 
தமிழ்நாட்டின் கனிமொழி 
ராகுல் ...
இவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அல்லது மறுத்து விளக்கமளிக்காமல் நாட்டின் பிரதமரை அவமதிப்பது நாட்டுமக்களை அவமதிப்பதாகும் என்கிறார் ..  உண்மையில் நாட்டுமக்கள் இப்படியொரு பொய்யரை, வாய்சொல்வீரரை தேர்ந்தெடுத்ததற்கு வெட்கபடுகிறோம்
..
கேள்விக்கென்ன பதில் .. 
ஒவ்வொரு முறை வெளிநாடுபயணம் செய்தவுடன் அங்கிருந்து அதானிக்கு மட்டும் டெண்டர் கிடைப்பதும், உடனே வங்கிகள் கடனளிப்பதும் எப்படி நடக்கிறது .. நாட்டின் பொது சொத்துக்களை ஏன் அதானிக்கு மட்டும் தரவேண்டும் அதுவும் கடன் வழங்கி உடனே தள்ளுபடி செய்யவேண்டும் ..  டோல்கேட் வசூல் என்ற பெயரில் சாலை மேம்பாட்டிற்காக பட்டகடனை எத்தனை காலம் அடைப்போம் அதற்கெல்லாம் தள்ளுபடி கிடையாதா ..  கல்வி பெறுவதற்காக வாங்கி கடனுக்கு காலரை பிடித்து கேட்கிறீர் .. விவசாயி பட்ட கடனுக்கு  மிரட்டுகிறீர் .. அவன் அவமானம் தாங்காமல் தொங்குகிறான் அப்போதெல்லாம் அரசு தள்ளுபடி செய்வதில்லை ஆனால் அதானிக்கு மட்டும்  எப்படி .. இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் 
மறு சுழற்சி முறையில் தயாரிக்கபட்ட நெகிழி (பிளாஸ்டிக்) சட்டை போட்டுக்கொண்டுவந்தாரென ஊடகங்கள் பெருமை பேசுகின்றன  ..  வாழ்க தாய்திருநாடு
..
மினிமம் பேலன்ஸ் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லையென்று ஏழைகளின் வயிற்றில் அடிப்பது அதானிக்கு தருவதற்கா .. மக்கள் சொத்தை தனியாருக்கு தாரைவார்க்க ஏதற்கு அரசாங்கம் .. 
தனியார் சொத்துகள் நாட்டுடமையாக்கியது காங்கிரஸ் ஆனால் அதை நிர்வகிக்க தெரியாமல் சுமையென்று சொல்லி
தனியாருக்கு கொடுக்கிறார் நிதியமைச்சர் .. முட்டாளுக்கு மூளை கூட சுமைதான் ..
..
காங்கிரஸால் எதிர்க்கட்சி ஆட்சி கவிழ்க்கபட்டன என்கிறார் .. திரு.பொம்மை வழக்கிற்கு பிறகு தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சியை கலைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிற்கு இல்லை என்ற தீர்ப்பு வந்தது அதனால் தான் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிமாற்றம் செய்கிறீர்கள் மாண்பிமை மோடி அவர்களே ..
அதானி குறித்தும் BBCஆவணம் படம் குறித்து பதிலளிக்க முடியாமல் நேரு பெயரை ஏன் வைத்துக்கொள்ளவில்லை என கேட்கிறீர் .. ராகுல் பிரோஸ்காந்தியின் குடும்பம் என்பது தெரியாதா ..  நம்மவொன்னு கேட்டா அவன் ஒரு பதில் சொல்வான் பாரு என்ற கவுண்டமணி காமெடி தான் ஞாபகம் வருகிறது ..
..
கனிமொழி கருணாநிதியின் சொல்லெடுத்தே சொல்கிறேன் .. பாஜக தலைவர்களே இப்போது ஒரு முறையாவது உண்மையை சொல்ல சொல்லுங்கள் தேசத்திற்கு முன்னுரிமை கொடுங்கள் ..  இந்த தேசம் நமக்கானது எவன் அப்பன் வீட்டு சொத்து அல்ல..
..
கேள்வி கேட்போம் பதில் சொல்லியே ஆகவேண்டும் மாண்பமை பிரதமர் அவர்களே ..
..
ஆலஞ்சியார்

Tuesday, February 7, 2023

தர்மயுத்தம் ..
End of the panneer ERA ..
..
பன்னீர் எனும் பரம அயோக்கியரின் அரசியல் முடிவிற்கு வருகிறது .. சசிகலாவை காட்டி கொடுக்க அவர் நடத்திய நாடகம் அதற்கு காரணமானவர்கள் கைகழுவி விட்டார்கள் .. துரோகம் ஒன்று வீழ்ந்தது ..
..
பன்னீரின் அரசியல் பெட்டி தூக்கியாக வலம் வந்து அப்போதே கூர்பார்த்து .. தினகரனின் நிழலில் நின்று அதை தன் விசுவாசத்தின் திறவுகோலாக கணக்கிட்டு ஜெயலலிதா சசிகலாவின் பார்வையில் 'சொன்னால் கேட்பான்' என்ற நம்பிக்கை முதல்வராக வாய்ப்புவந்தும் .. எடப்பாடி பழனி போல கூர்பார்க்க தெரியாததால் 
இன்று விட்டுகொடுத்து கடைசியில் வீழ்ந்து கிடக்கிறார்,..
..
முதலில் எடப்பாடியோடு இணைந்து செயல்பட பாஜக ஆணையிட்ட போதே முதல்வராக அவர் இருக்கட்டும் தனக்கு கட்சி பதவி (செயலாளர்) வேண்டும்  என செக் வைத்திருந்தால் இன்றைய வீழ்ச்சி நடந்திருக்காது .. எதை எந்த நேரத்தில் செய்யவேண்டுமென அறியாத பிள்ளை தோற்று போகும் என்பதை உணராமல் போனார் 
தொடர்ந்து விட்டுகொடுத்து பழநி ஒருகட்டத்தில் சகல அதிகாரமும் தனக்கென்ற நிலையை அடைய இவரது பலவீனம் பயன்பட்டது 
..
பாஜக அதிமுகவை முழுமையாக சிதைக்க விரும்பவில்லை தனித்தோ தலைமையேற்றோ மக்களிடம் செல்லமுடியாதென அறிந்து .. அதிமுக முகமூடி தேவை என்பதால் எடப்பாடியின்  பிடி எப்போதும் தங்கள் கையில் என உறுதியாய் செயல்படுகிறது ..
ஆனால் நய்ந்துபோனது அறியாமல் .. இன்றைய நிலவரப்படி இனி எடப்பாடியை மட்டுமே பாஜக கணக்கில் கொண்டிருக்கிறது நேரம் வரும் போது இல்லாமல் செய்யலாம் அது 2024 வரை காத்திருக்கிறது 
..
தனியாக நின்றால் பிய்த்தெறியபடுமென்ற உண்மை உணர்ந்ததால் அதிமுகவை ஒருங்கிணைப்பது ஒரளவு வாக்கு வங்கியை உருவாக்கி மெச்சபட்ட தோல்வியை அடைந்தாலும் பரவாயில்லை இல்லையெனில் முழுவதுமாக எல்லோரும் சேர்ந்து கட்டிவச்ச காசை(டெபாசிட்) இழக்க நேரிடும் என்ற அச்சம்  தரகு வேலை பார்த்தாவது இணைக்க வேண்டியிருந்தது .. அறுந்த வீணையில் இசைக்க முடியாது..
..
அரவணைத்து கொல் என்பது தான் 
பார்ப்பனீயத்தின் தந்திரம் அதை சரியாக குருமூர்த்தி செய்தார்.. நம்பிக்கை துரோகம் செய்தவன் பார்ப்பனனை நம்பி படுகுழியில் வீழ்ந்த வரலாறு .. இனி .. அடுத்து எடப்பாடி முறை .. காத்திருந்து கொல்லும் 
..
ஆலஞ்சியார்
அறியாதபுரம் ..
தம்பி ஜா.முஹையத்தீன் பாட்சா(ராஜாமுகமது) எழுதிய கவிதை தொகுப்பு..
..
தம்பியை நான் சிறுவயதிலிருந்தே அறிவேன்.. பொதுவாழ்வு ஆன்மீகம் என நாட்டம் கொண்டவர் நிறைய படிப்பவர் .. நல்ல இஸ்லாமிய கவிதைகளை தந்திருக்கிறார். பலதரபட்ட விடயங்களிலும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அதை சரியான உணரும் திறமையும் கொண்டவர்.. நல்ல பேச்சாளரும் கூட.. அவரின் அறியாபுரத்தை தந்திருக்கிறார் ..
..
கவிதை நூல்..
எந்தவொரு புத்தகமாயினும் படிக்கும் போதே உம்மோடு அதுபேசும் .. மெய் மொழிகிறதா இல்லை புனைவா என்று .. தம்பியின் கவிதை யதார்த்தத்தை போகிற போக்கில் சொல்விடுகிறது 
வாழ்தல் பற்றி 
எல்லோரும் அதிகம் வாழ ஆசைபடுகிறார்கள் .....
 என்றுமே "வாழாதது தான்"
 வாழ்தல் என்பது நிகழ்வே இல்லை என்கிறார் .. 
எல்லோரும் எதோவொன்றுக்காக வாழ்கிறோமே தவிர  "வாழ்வை " சரியாக வாழ்தே இல்லை.. 
..
எல்லா தண்ணீரும் புனிதம் தான் என போட்டு உடைக்கிறார் .. ஞானியின் சட்டையில் 
கடைசிவரை இறைவனைப் பற்றி மட்டும் சொல்வே இல்லை ..
ஞானியின் கண்ணாடியை கூட தொட முடியவில்லை என அஞ்சாமல் உண்மையை சொல்கிறார்..
Fear is the beginning of wisdom..
அஞ்சுதலே ஞானத்தின் ஆரம்பம் என்பார்கள் உண்மையில்  தேடுதலே ஞானத்தை நோக்கிய நகர்வென்பேன் 
தேடுதலே ஞானத்திற்கு வழிவகுக்கும்.. 
..
தம்பியின் முதல் கவிதை தொகுப்பு 
பலதரப்பட்ட கவிதைகள்  தஞ்சாவூர் கதம்பம் போல இருக்கிறது .. எளிய நடையில் நல்ல மலர்களால் பூங்கொத்து செய்திருக்கிறார் .. 

 இன்னும் நிறைய எழுத வேண்டும் .. எழுத்தாளர் சுஜாதா கூறியதைப்போல "புதுக்கவிதை " இஸ்லாமியர்களின் கைவசம் என்றார் ..
கவிதைகளில் இஸ்லாமியர்களுக்கு தனி இடமுண்டு .. பெரும் பட்டியல் .. அந்த பட்டியலில் தம்பி "ராஜாமுகமது " இடம் பெறுவார் ..
..
ஆலஞ்சியார்



Thursday, February 2, 2023

கலைஞர் தொலைநோக்காளர்..
பெரியாருக்கு பிறகு எந்தவொரு செயல்பாட்டிலும் தொலைநோக்கை கொண்டிருந்தவர் திராவிடத்தலைவன் கலைஞர் மட்டுமே.. .கை ரிக்சா ஒழிப்பு தொடங்கி எந்த திட்டமானாலும் அது காலம்கடந்தும் பயன்தரும்..
பேசபடும்..  இன்றைக்கு இந்தியாவிற்கே திட்டம் தீட்டுவதாக சொல்வோர் .. கலைஞரை கண்டு படித்ததின் விளைவு ..  மூன்றுமாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரியாம்...பத்தாண்டுகளுக்கு முன்பே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரி என்று செயல்படுத்திகாட்டினார்..  பத்தாண்டுகளுக்கு முன்பே விளைவித்தவனே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்கும் உழவர்சந்தை .. இப்போதுதான் மோடி வகையறாக்களுக்கு புத்திக்குள் வருகிறது.. முப்பது வருடங்களுக்கு முன்பே கைரிக்சாவை ஒழித்தவர் கலைஞர் .. வரணாசியில் இப்போதுதான் கைரிக்சாவை வழங்கி .. இன்னும் நாங்கள் வளரவே இல்லையென்கிறார்கள்..
..
எப்படி கலைஞரால் மட்டும் சாத்தியமானது.. விடை இதுதான்.. கலைஞர் பெரியாரின் நேரடி சீடர்.  அதனால்தான் கலைஞர் கொண்டுவந்த அனைத்து திட்டங்களிலும் பெரியாரின் சிந்தனை இருக்கும்.. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்று இந்தியாவிற்கே வழிகாட்டியவர் .. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உள்ளாட்சிகளில் 50% விழுக்காடென்று அறிவித்தவர்.. 
மோடி வகையறாக்களே நீங்கள் இன்னும் கலைஞரை கண்டு படிக்கவேண்டியிருக்கிறது..
ஒரு ஆட்சியாளன் எப்படி இருக்கவேண்டும் எப்படி சிந்திக்கவேண்டும் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கான "பாடத்திட்டம்" syllabus கலைஞர் தான்.. அரசியல் தலைவன் எப்படி சிந்தித்து செயல்படவேண்டுமென்பதற்கும் அவரே தலைசிறந்த உதாரணம்.. இந்திய துணைக்கண்டம் கண்ட தலைவர்களில் ஆக சிறந்த தலைவர்.. கொஞ்சம் மிகைப்படுத்துவதைப் போன்று தோன்றும்..உண்மையில் அவரது சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கானதாகவே இருந்தது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் என்பது இயலாமல் போகுமென்பதால் தான் சிலவற்றை இலவசமாக தந்தார்.. இலவச மின்சாரம்.. உயர்கல்வியில் முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லை.. இப்படி நிறைய.. அடிதட்டுமக்களின் கனவுகளை மெய்பிக்க அவர்தம் வாழ்வாதாரங்களை உயர்த்த அவர் தந்த திட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் பேசபடுகிறது.. 
..
ஒரு அரசன்/ஆட்சியாளன் குடிமக்களின் எண்ணங்கள் உள்கொண்டே ஆட்சி செய்யவேண்டும்.. அவர்களின் அன்றாட பிரச்சனைகள் .. எதை செய்தால்  காலம்கடந்தும் அவனால் துணிந்து நிற்கமுடியுமென்ற சிந்தனை வேண்டும் கல்வி மேம்பாடு அதை எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென்பதற்காகதான்.. ஒரு சிலரே கல்வியில் மேம்படுவதை தவிர்த்து சாமானிய ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கும் கிடைக்கவேண்டுமென்பதற்காகதான் .. நுழைவுதேர்வை ரத்து செய்தார் இன்றைக்கு எதிர்க்கிற கூட்டம் பெருபான்மை மக்களின் விரோதத்திற்கு ஆளாகி தானாகவே நடைமுறைபடுத்தும் காலம் வரும்.. ஏனெனில் நேற்றுவரை அவர்களது சிந்தனைக்கு வராமல் அல்லது எதிராக இருந்த திட்டங்கள்/ செயல்கள் இன்று அவர்களே அறிவிக்கிறார்களெனில்.. கலைஞர் பெருமகன் செயல்படுத்தியவையே .. இந்தியா முழுக்க தேவைபடுகிற நிலை உருவாகும்.. 
கலைஞரின் இந்தியாவிற்கே வழிகாட்டி..
..
கடைசியாக சுயமாக சிந்திக்க தெரியாதவர்களே.. நீங்கள் தவறியேனும்  ஆட்சிக்குவந்தால் உடனே கலைஞரின் "நெஞ்சுக்குநீதி" யை படியுங்கள்.. ஒர் அரசியல்வாதியின் பயணம் எல்லா படிதளங்களும் எப்படி பயணிக்கவேண்டுமென்பதற்கான பாடதிட்டங்கள் syllabus அங்கே கிடைக்கும்..
அறிவுசார் சிந்தனையும்  தொலைநோக்கு பார்வையும் மக்கள் நலன் எனும் மேம்பாடும்..
அதோடு மக்களுக்கான அரசிற்கான செயல்திட்டங்களும் எதை எப்படி கையாள்வது என்ற சூத்திரமும் எதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என புரியம்படியாக வாழ்ந்தும் ஆட்சிசெய்தும் காட்டியவர்..ஒரு அரசியல்வாதியின் வெளிப்படைதன்மை எல்லோரிடமும் இருப்பதில்லை கலைஞர் தெளிந்த நீரோடையைப்போல எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக்கிய அறிவு கருவூலம்.. கலைஞரே அரசியல் தத்துவம்..
Political philosophy
..
yes 
Kalaignar is a syllabus of Indian's political theory..
..
#கலைஞர்_இந்தியஅரசியலின்_ஞானி .. அவருக்கு நினைவு சின்னம் அமைப்பது நமது கடமை ..
வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளை வேறுபாடின்றி நடத்திகாட்டிய பெருமகனுக்கு 
பேனா சின்னம் அமைப்போம்..
..
ஆலஞ்சியார்
கேவலம் ..
30 ஆண்டுகள் ஆண்ட கட்சி ,தனித்து வார்டு உறுப்பினராக கூட வரமுடியாத ஒரு கட்சி ஆபீஸின் வாசலில் நிற்க வைக்கபட்டது .. சொரணை உள்ள அதிமுககாரர்கள் இனியும் இந்த ஈனபிறவிகளை தூக்கிபிடிக்காமல் வெளியேறவேண்டும் .. சுயமிழந்து மானமிழந்து கைகட்டி நிற்கும் அவலம் அதிமுகவிற்கு வந்திருக்கவேண்டாம் .. ஜெயலலிதாவின் இருந்தவரை போயஸ்கார்டனின் வாசல் கதவு திறக்காதா என நின்றிருந்த கூட்டத்திடம் கையேந்துகிற நிலை..
..
அதிமுக எனும் அரசியல்கட்சி இனி தமிழகதிதிற்கு தேவையில்லை அந்த இடத்தை பிற கட்சிகள் முயற்சிக்கலாம்.. மிக கேவலமாக பாஜக கேட்டால் தொகுதியை தருவதாக விசுவாச அடிமை பன்னீர் சொல்கிறார் .. அதைதான் பாஜக எதிர்பார்க்கிறது ‍.. இரு கோஷ்டிகளும் அடித்துக்கொண்டு பழம் நம் கையில் என்று எதிர்பார்த்து காத்துநிற்கிறது .. இந்த அடிமை கூட்டம் சூடுசொரணையற்று நிலைமை புரியாமல் வசனம் பேசி திரிகிறது 
..
இரண்டாம் இடம் யாருக்கு என்பதில் தான் போட்டியே .. இனி இவர்களே நினைத்தாலும் பாஜக உத்தரவில்லாமல் இவர்களால்  கட்சியை நடத்த முடியாது .. ஜெயலலிதா மரணம் அதன் முடிச்சுகள் அவிழும் போது அதன் காரணிகள் வெளிவரும் போது பாஜகவின் சதி விளங்கும் .. 
அழிவின் விளிம்பில் அதிமுக இனி தமிழகத்தில் அது செல்லாகாசு ..
பன்னீர் எனும் பரம அயோக்கியரும்,  எட்ப்பாடி பழநிசாமி எனும் துரோகமும் தமிழினத்திற்கு தமிழ்நாட்டிற்கு செய்த துரோகங்கள் .. வேலைவாய்ப்பில், கல்வியில் உரிமையில் என செய்தவை எல்லாம் சரிசெய்ய சிலகாலம் பிடிக்கும் .. மக்கள் மன்னிக்கவே கூடாத வஞ்சகர்கள் இவர்கள்.. சுயநலத்திற்கு அதிகாரத்திற்கு காட்டிகொடுக்க தயங்காதவர்கள்..காட்டி கொடுத்தவர்கள் நிறைய கருத்து வேறுபாடு இருந்த போதும் அதிமுக கட்சி தமிழ்நாட்டு வரலாற்று மெல்ல அப்புறபடுத்து செயல் வருத்தமளிக்கிறது ..
..
ஒரு இயக்கத்தின் தலைவன் 
எப்படி இருக்கவேண்டும் வரும் தலைமுறைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும் சரியான தலைவனை இனம்காட்டி முறைபடுத்த வேண்டும் ..அதை திமுக செய்தது.. அதிமுக தலைமை அதை செய்ய தவறியது அடிமைத்தனத்தையும் காலில் விழுந்தால் பதவி என்ற நிலையையும் உருவாக்கி நல்ல தலைவர்களை உருவாக்க தவறிவிட்டது.. 
கொள்கைக்காக இயங்கும் கட்சிக்கும், கேளிக்கை, சுயநலத்திற்கு நடத்தபடும் கட்சிக்கும் இதுதான் வேறுபாடு ..
நல்ல தலைவனை அடையாளம் காட்டினார் தலைவர் கலைஞர் .. ஆனால் அதிமுக தலைமையோ அடிமைகளை தயாரித்தது ..
விதைத்ததே விளையும் ..
..
ஆலஞ்சியார்
ராமர் எங்கள் அவதார புருஷன் ..
பொள்ளாச்சி ஜெயராமன் 
நல்லது .. அவரின் நம்பிக்கையின் மீது நமக்கு எதுவுமில்லை ஆனால் அண்ணாவை அவமதித்த போது வராத கோபம் இப்போது வந்திருக்கிறதே என்ற கேள்வி நமக்கு எழுகிறது .. அண்ணாவின் பெயரில் கட்சி  ஆரம்பித்த மகோராவிற்கே (எம்ஜிஆர்) அண்ணாவின் கொள்கைகளே யாரை வாழ்நாள் முழுவதும் எதிர்த்தார் என்று தெரியாது அண்ணாவின் ஆரியமாயை படித்திருப்பாரா என்றும் தெரியாது.. இவர்களெல்லாம் ஜெயலலிதாவின் வார்ப்புகள் .. கொள்ளையடிக்கவும் அதற்காக யார் காலிலும் விழவும் மட்டுமே தெரியும்..  ராமன் என்று ஒருவர் இருந்ததாகவோ அவர் இன்ஜினியர் காலேஜில் படித்ததாகவோ தரவுகள் இல்லையென பேசமுடியுமா என்ன.. 
..
இவர்களெல்லாம் திராவிடக் கொள்கைகளை படித்தோ திராவிடர்களின் வரலாற்றை அறிந்தோ அரசியலுக்கு வரவில்லை.. சினிமா மோகமும், அரசியலில் பதவி வந்தால் கொள்ளையடிக்கலாம் வளமான சுகமான வாழ்வு வாழலாமென வந்தவர்கள் இவர்கள் இப்படிதான் பேசுவார்கள் ..காரணம் தலைக்குமேலே தொங்கும் கத்தியைப்போல ஊழல் வழக்குகளும்,.. தன் மகனின் சேட்டையால் பொள்ளாச்சி பெண்குழந்தைகளின் அழுகுரல் களி திங்க வைத்துவிடும் என்பதால் பாசிசத்தின் துணை தேடி இப்படி பேசுகிறார்
..
ஒருமுறை 
ராஜாஜி பேசும் போது ''எனக்கு பரம்பரை எதிரி ராமசாமி நாயக்கர் தான்'' என்று சொல்ல

அதற்கு  #தந்தைபெரியார், அவர் பெற்றோரை எனக்கோ எனது பெற்றோரை அவருக்கோ தெரியாது 

பிறகு எப்படி பரம்பரைஎதிரி என சொன்னார் என்றால்,
என்னை #ராவணன், #சூரபத்மன், #இரணியன் சந்ததியாகவும்,
 தன்னை ராமன்,கிருஷ்ணன் சந்ததியாகவும் கருதி தான் சொன்னார் என்றார் 

#சூரபத்மன் பார்ப்பானை மீன் பிடிக்க சொன்னான், ஏற்றம் இறைக்கச் சொன்னான், விறகு உடைக்கச் சொன்னான்,

#ராவணனும் பார்ப்பானை அடிமைப்படுத்தியே வைத்திருந்தான், 
#இரணியன் பார்ப்பன சேரிக்கு நெருப்பு வைக்க சொன்னான்..
கடவுளையும், இதிகாசங்களையும் ஒழிக்கச் சொன்னான், என்றார் ..
அதனால் தான் நம்மை எதிரியென்கிறார்கள் அவர்கள் தெளிவாகதான் இருக்கிறார்கள் 
நம்மவர்கள் தான் புரிந்துக்கொள்ளாமல் பெண்ணுக்கும், பொருளுக்கும், பதவிக்கும் மயங்கி பார்ப்பனியரின் அடிமைகளாக இருக்கிறார்கள் ..  இல்லாத ஒன்றை கூட நம்பிக்கையென்ற பெயரில் நம் மூளையில் அடித்தமர்த்தி அறிவுடை சமூகத்தை மழுங்க செய்வதில் அவர்கள் வெற்றிகண்டிருக்கிறார்கள்..
தமிழனுக்கு  மதமும் சாதியும் பின்ஏற்பாடு என்பதை உணர்ந்தாலே மானமும் அறிவும் மனிதர்க்கு அழகென்று புரியும்
..
ஆம் இதையெல்லாம் படித்தறிந்திருந்தாலும் அறிந்திருந்தாலும் பொள்ளாச்சி 
ஜெயராமன் தன் தலைக்குமேல் தொங்கும் கயிற்றை எண்ணி குலைநடுங்கி 
"சாஷ்டாங்கமாய்" விழுந்துவிட்டார்
அடிமைகள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்
..
ஆலஞ்சியார்
அண்ணா..
தமிழர்களின் இதயநாளத்தில் வீற்றிருந்தவன்..
சொல்லாலும் செயலாலும் தமிழை அறியணையேற்றிய மன்னன் .. தெளிவான சொல்லெடுத்து திகட்டாத தேனடைப்போல் சிங்கார நடையழகில் செவிக்கு விருந்தாய் தமிழை தந்தவன் ..
ஆற்றல் மிகு பேரரசன் .. அன்பில் குழந்தையை போல அழகாய் மிளிர்ந்தவன் ..எம் அண்ணா..
..
அதுவரை வந்தவர்களை சாமி,ஐயா என்றழைந்து கைகட்டி அகலம் பார்த்து வந்த தமிழர் கூட்டம் அண்ணா என ஆரத்தழுவி இறுகணைத்துநின்றது ..
தமிழர்கள் தங்கள் குடும்பத்தின் மூத்தவரைபோல கண்டார்கள் .. தமிழர் வாழ்வு நலம் பெற இனம் மொழி கலாச்சாரம் பண்பாடு காத்துநின்று பெருவீரன் எம் அண்ணா .. அரசியல் இலக்கியம் இவ்விரண்டிலும் யாரும் நெருங்கமுடியாத ஆளுமையாய் தெளிவான வரையறையோடு கூடிய பாடமாய் திகழ்ந்தார் .. அரசியலில் எப்போது யாரை வீழ்த்துவதென்ற அறிவும் தேர்தல் அரசியல் தான் நம் தேவைகளை உரிமைகளை பெற்று தரும் என்று உணர்ந்து திராவிட ஆட்சிக்கு துவக்கம் குறித்த மேதை .. உச்சநீதி மன்றம் சுயமரியாதை திருமணத்தை தகாத உறவென்று தீர்ப்பு தந்தபோது (சட்டத்தை சுட்டிகாட்டி) சட்டத்தை உருவாக்கும் இடத்தில் நாம் அமரவேண்டும் என முடிவெடுத்து தேர்தல் அரசியலை கையிலெடுத்த ஆளுமை மிகு எம் அண்ணா.. முதல்வராய் ஆனவுடன் சுயமரியாதை திருமணச்சட்டத்தை நிறைவேற்றினார் 
மெட்ராஸ் மகாணம் என்றிருந்ததை தமிழ்நாடென திருத்தம் செய்தார் .. அப்போது ராஜாஜி நாட்டிற்குள் நாடு கேட்கிறாரென மத்தியில் உள்ளோருக்கு எச்சரித்த போது மன்னிக்கவும் இந்தியா என்பது நாடே அல்ல அது பன்முகதன்மைகளை உள்ளடக்கிய ஒன்றியமென சொன்னவர் .. 
..
இருமொழிக் கொள்கை சுயமரியாதை திருமணச் சட்டம் தமிழகம் என பெயர் மாற்றம் .. மூன்றையும் செய்துவிட்டேன் இதில் எதை மாற்ற நினைத்தாலும் தமிழகம் வெகுண்டெழும் அதுவரை இந்த அண்ணாதுரைதான் தமிழகத்தை ஆள்வதாக பொருள் என்றார் ..ஆம் இம்மூன்றையும் யாராலும் தொடமுடியாது ..தமிழகம் பொங்கியெழும் .. மாற்று கருத்தாளர்களையும் மதிக்கும் அரசியல் மாண்பு கருத்தை கருத்தால் வென்று அய்யாவின் மூதன்மை சீடராய் பகுத்தறிவோடு ஆட்சி செய்த முதலாமவர் ..பண்பின் உறைவிடம்.   சொக்கவைக்கும் சொல்லாடல் தேனினும் சுவைக்கூட்டும் உரையாடல் 
சொல்லி புரியவைக்கும் பேராற்றல் .. 
அண்ணா என்பது ஒற்றை சொல் அல்ல அது
தமிழகம் .. தமிழை சுவாசிப்போர்க்கும் தமிழ் மண்ணை நேசிப்போர்க்கும் சுவாச காற்று எம் அண்ணா.. யாரை எங்கே நிறுத்துவதென்று ராஜாஜியை வெளியேற வைத்து யார் இந்த அரசின் சூத்தரதாரி என பெரியாரிடம் சரணடைந்தும் தான் சிறந்த "அரசியல்வாதி " என உணர்த்தியவர் ..
..
அதுவரை காங்கிரஸ் ஆட்சி அது கூட பிராமண ஆதிக்கம் நிறைந்ததாக ஆரியவாடையோடு கூடியதாய் இருந்ததை மாற்றி "திராவிடம் " மலர வைத்தவர் அண்ணா .. திராவிட ஆட்சியின் தொடக்கம்  அண்ணா ..
திமுக எனும் சுயமரியாதை இயக்க அரசியலை ஆட்சியில் அமர மூலகாரணமானவர் ..இன்றும் தமிழர் வாழ்வில் அணையா விளக்காய் விளங்கும் பேரறிஞர் ..உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை கற்றுணர்ந்த ஞானி.. 
அண்ணா என்றால் வாசிப்பு என்றே பொருள் .. தனக்கு அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்து  மருத்துவர்கள் சொன்னபோது புதன் கிழமை வைத்துக்கொள்ளலாமே என்றார் நல்லநாள் பார்க்கிறீர்களா என்ற போது படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தை அதற்குள் முடித்துவிடுவேன் அதற்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் அறுவைசிகிச்சை செய்துக்கொள்ளுங்கள் என்றார் .. அண்ணா என்றாலே வாசிப்பு என்று பொருள் ..
..
சொல்லி தீர்வதல்ல அண்ணாவின் புகழ்..
நம் வாழ்வோடு இரண்டற கலந்த ஜீவன்..
மகத்தான மனிதம் போற்றும் 
மா மன்னன் 
எம் அண்ணன்..
பேரறிஞர் அண்ணா 
54ம் நினைவு நாள்  03.02.23
வாழ்க!  அண்ணா ..
வாழ்க!! பேரறிஞர் ..
வாழ்க!!! அண்ணாவின் புகழ் ..
..
ஆலஞ்சியார்