Tuesday, January 3, 2023

அரசியல் ..
பொதுவாழ்வில் எதிர் கருத்தை விமர்சிப்பதும் தன் நிலைபாட்டை சரியென சொல்வதும், சரியோ தவறோ எதுவாகினும் எதிர்ப்பதும் ஆதரிப்பதும், மாறி மாறி கடுமையாக விமர்சித்தபோதும் எல்லை மீறாமல் நடந்ததெல்லாம் அதுவொரு காலம் என  சொல்லவேண்டியிருக்கிறது ..
..
மிக மோசமான பேசுவதும் தனிநபரை கேவலபடுத்துவதும், அவர்கள் குடும்பத்தை, உறவுகளை கொச்சைபடுத்துவதும் முன்பே இருந்தாலும் அது அதிகமாக திராவிட இயக்கத்தலைவர்களை குறிவைத்து பேசபட்டதும்,  வயதான கிழவன் திருமணம் செய்தான் என்றும், அறிவுக்கொண்டு வாதிடமுடியாத போது வேசிமகன் என நஞ்சை கக்கியதும் பார்த்தது தான் .. அந்த காலத்திலேயே ஓடுமேய்ந்த வீட்டில் 
பேங்கில் பங்கு வைத்திருந்த, 21 வயதில் சில ஆயிரங்களை சம்பாதித்தவர்,  திருட்டு ரயில் வந்ததாக குடிபோதையில் உளறியதை இன்று வரை சில அரைவேக்காடுகள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதையெல்லாம் புறங்கையில் தள்ளிவிட்டு நாம் மக்கள் நலனுக்காக தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக அனைவரும் சமமாக நடத்தபடவேண்டுமென பெருங்கிழவன் வகுத்த தந்த பாதையில் செல்கிறோம் 
..
நம் எதிரிகள் "கௌரவ"மானவர்களாக இல்லை என்பது "கடினமாக" தான் இருக்கிறது .. அதிமுக எனும் சாயபூச்சு மெல்ல பொழிவிழப்பதும் அந்த இடத்தை பாசிசம் விழுங்க பார்ப்பதும் கண்கூடாக தெரிகிறது.. மறைமுகமாக காங்கிரஸில் இருந்த மதவாதிகள் தங்களின் நிஜத்தில் களமிறங்கியதும் "முனகல்" அதிகமாகிவிட்டது ..  முன்பு  கொஞ்சம் மறைமுகமாக நளினம் பாடியவர்கள் இன்று பட்டவர்த்தமாய் கொஞ்சி திரிகிறார்கள் ..
..
பெண்களை முன்னிலைபடுத்தவோ, தங்களைவிட ,உயரத்தில் கொண்டுவரவோ, மதத்தின் பெயரில் இழிவு சாபம் லோகம் கெட்டுவிடும் என பம்மாத்து பேசியவர்கள் இன்று புரியும் லீலைகள் பார்க்கவும் கேட்கவும் செய்வதுதான் பாசிச பாஜகவின் வளர்ச்சி.. தொடர்ந்து பெண்களை போதைக்கு பயன்படுத்தும் பழைய சனாதன லீலைகளை இன்று படபிடிப்போடு நடத்தி "பேருவகை" கொள்கிறார்கள் .. கட்சியிலிருந்து வெளியேறிய "நடனமங்கை " என்னிடமுள்ள ஒளிப்பதிவு ஒலிப்பதிவுகளை காவலிடம் கொடுக்க போவதாக சொல்கிறார் ..
தனிநபரின் உல்லாசங்கள் பொதுவெளியில் பேசுபொருளாக வேண்டுமா.. அவர்களின் லீலைகளை வைத்து மிரட்டுவது கண்டிக்கபடவேண்டுமே தவிர அனைவரின் பார்வைக்கு அல்ல..
தனித்தனியே இங்கு யாரும் யோக்கியன் இல்லை என்ற சொல் நினைவிற்கு வருகிறது ..
..
இதுவல்ல அரசியல் .. பேசுங்கள் உங்கள் சித்தாந்தத்தை, கருத்தியலை கொள்கைகளை, நம்பிக்கைகளை .. அதை எதிர்க்கவும் மறு கருத்தை சொல்லவும் அறிவுபூர்வமாக வாதிடவும் தயார் .. அதற்குமுன் ஒழுக்கமான அரசியலை பயிலுங்கள்  கழிசடைகளோடு களமிறங்குவது எமக்கு அழுக்கு ..
பிரம்மனாய் நின்று மகளுக்கு தாலிகட்டும்  மனநலபிறழ்களோடு என்ன இருக்கிறது கதைப்பதற்கு 
..
அறிவோடு   பகுத்தறிவோடு, கடும் உழைப்பும்  நேர்மையும் நெறியோடும் மக்கள் செல்வாக்கோடு சரியானதை அறிவேற்பதை சொல்லி 
கழகம் கண்டவர்கள்/காண்பவர்கள் நாங்கள்,..  ஆனால் நீங்களோ
மதம், சாதி, புராணம்,பொய் புரட்டு, மூடவழக்கம், அறிவிற்கொவ்வா பழங்கதைகள் என பேசிதிரிபவர்கள்
 முட்டாள்களே கொஞ்சமேனும் சிந்தியுங்கள் ..
உங்கள் ஆசாபாசலீலைகள் தமிழகத்தின் பெயரை கெடுக்கிறது .. தனிநபரின் விருப்புவெறுப்புகளை பட்டியலிட்டு உங்கள் தரத்தை சொல்லிவிட்டீர்கள் .. மக்கள் முகம் சுளிக்கிறார்கள் ..
மதம் மனிதனை மடையனாக்கும், பொய்யும் புரட்டும் ஆசையும் மலிவான செயல்களும் நீங்கள் யாரென்பதை உணர்த்தும் .. 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment