Wednesday, January 4, 2023

வழுத்தூரின் இன்னொரு முகம் 
இன்று மறைந்தது ..
கா.இ.ப. முகம்மது அலி ..
"பங்களா" வீட்டில் பிறந்து ஊர் ஜமாத் தலைவராக 40 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிவாசல் நிர்வாகத்தை தன் வசம் வைத்திருந்தவர் ..  (பாலிய முஸ்லிம் சங்கம்) சௌகத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியின் நீண்டநாள் தாளாளராக இருந்தவர் 
இவ்விரண்டும்  சாதாரண விடயமாக கடந்து போய்விட முடியாது..
..
நிறை குறைகளோடுதான் மனிதனின் வாழ்வு .. அதிலும் பொதுவாழ்வு என வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.. நாலாபுறமும் "நல்லவர்களின்" வசவுகள் கேட்கவேண்டும் .. அதையெல்லாம் மீறி தொடர்ந்து தலைவராக நீடித்தவர் .. அவர் விலகியதற்கு பின் என்ற கேள்வி 
ஆயிரம் "பொருள்" பொருந்தியது 
தனக்கு பிறகு எவரும்  வரகூடாதென்ற நினைப்பே இன்றைய வழுத்தூர் நிர்வாக அவலத்திற்கு சாட்சி 
..
தாளாளராக ஏறக்குறைய 50 ஆண்டுகள் .. பெரும் பயணம் .. நீண்டநாள் பா.மு.ச தலைவர்  பள்ளிதாளாளர் ..
பள்ளியில் பவளவிழாவில் G.K. மூப்பனார் அழைத்த போது ஏன் திமுக கல்வி அமைச்சரை அழைத்திருக்கலாமே என வாதம் செய்திருக்கிறேன் .. அப்போதைய பா.மு.ச செயலாளர் G.S. என்றழைக்கபட்ட சேக்அலாவுதீன் அவர்கள் என்னை அழைத்து நீண்டநேரம் பேசியது நினைவிருக்கிறது .. பவளவிழா அன்று நல்ல "காய்ச்சல்" ஆனால்  விழாவிற்கு வந்திருந்தவனை அழைத்து  அன்பு தலைவருக்கு (G.K.M)  என்  அன்புதம்பி மாலையிடுவார் என என்னை  (எங்களால்  மாமா என அன்போடு அழைக்கபடும் ஜாபர்சாதிக் அவர்கள்)அழைத்து  கௌரவம் செய்த நிகழ்வும் மறக்க முடியாதது 
இப்போதும் தாளாளராக தான் தொடர்ந்தார் .. உடல்நலியுற்றிருந்தபோது
வெள்ளம்ஜி ஹஜாமைதீன் அண்ணன் பொறுப்பேற்றிருந்தார் என அறிந்தேன் அவரும் மறைந்துவிட்டார்..
இனி வரும் காலங்களில் யார் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது .. 
..
வழுத்தூர் நல்ல கல்விமான்களை, அறிஞர்களை, புத்திஜீவிகளை தந்திருக்கிறது .. நல்ல சிந்தனை கொண்டவர்கள், நல்லதை விரும்பும் ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் சிகாமணிகள் வரவேண்டும் ..
பார்ப்போம் காலம் என்ன பதிலை தருகிறதென்று ..
..
தாளாளர் KEP முகம்மது அலி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன் ..
இளைப்பாருங்கள் எங்கள் தாளாளரே..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment