ஆளுநர் ..
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கவும் குடியரசு தலைவரின் பிரதிநிதியாக பணிபுரியவும் நியமிக்கபட்டவர் .. அவர் அரசியல் செய்வதும் அவர் சார்ந்த கொள்கைகளைையோ, சித்தாந்தத்தையோ அரசின் மீது திணப்பதற்கோ கருத்துச் சொல்வதற்கோ உரிமை இல்லாதவர் .. மக்களின் பெரும் நம்பிக்கையோடு அரசமைக்கும் தலைவரை அவர் எதைச்சொல்லி வாக்கு கேட்டாரோ அதை செயல்படுத்தவிடாமல் தடுப்பதும் ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை வெளிபடுத்துவதும், அரசியற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலங்தாழ்த்துவதும் அவரின் பதவிக்கு அழகல்ல..
..
ஆட்டுக்கு தாடி எதற்கு என்பதிலே உறுதியாக இருந்தாலும் ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கபட்டவர் அந்த பதவி தேவையில்லை என்ற எமது கருத்தில் முழுமையாக உறுதியாக நின்றாலும் அந்த பதவி இருக்கும் வரை அதற்கான மரியாதையை தருவதில் இம்மியளவும் குறையாமல் செயல்படும் தளபதி தலைமையிலான அரசு .. தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடுகள் பாசிச சித்தாந்தத்தை கொண்டதாகவும் திராவிடம் என்ற சொல்லே அவருக்கு எரிச்சல் தருவதாகவும் இருப்பது கண்டுகூடாக அவரின் உடல்மொழி மற்றும் செயலில் தெரிகிறது ..
..
இன்று அவர் நடந்துக்கொண்ட விதம் அரசியல் அமைப்புக்கு களங்கம் விளைப்பதோடு, மரபுகளை மீறியதாகவும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது .. அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ கொள்கை, கோட்பாடே இந்த திராவிட அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்வது அநாகரீக செயல் ..
..
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை கொண்டு தொடர்ந்து அழுத்தம்,தருவதும் அரசிற்கு இடையூறு செய்வதும், ஏதேனும் காரணம் கிடைக்காதா என ஏங்குவதும் ஆட்சி பொறுப்பிற்கு வர புறவழி ஏற்படாதா என ஏங்குவதும் தொடர்ந்து ஜனநாயக மரபுகளை தகர்த்து வருவதும் இந்திய ஒன்றியத்தின் மாண்பை குலைப்பதாக உள்ளது .. பன்முகத்தன்மையை மாற்ற ஒரே சித்தாந்ததம்,செயல்திட்டமென தங்களின் எண்ணங்கள் ஈடேற முடியாமல் தடையாக இருக்கும் "திராவிடம்" என்ற சொல் அவர்களை தூங்கவிடாமல் செய்கிறது ..
..
பாசிசவாதிகளே பிற்போக்குதனமாக ஏதேனும் செய்யலாமென நினைக்கும் போதெல்லாம் அறிவுக்கொண்டு ஒரு சமூகம் அதை சுக்குநூறாக்குவதை கண்டு புலம்புகிறீர்கள்..இந்த மண் பெரியாரை முழுவதுமாக உள்வாங்கிய மண் .. பெருந்தலைவர், பேரறிஞர் பேரருளாளன் கலைஞர் இவர்களால் பண்படுத்தபட்ட மண், இவர்கள் பெயரை கேட்டாலே பதறுகிறீர்கள் .. என்னதான் மனப்பால் குடித்தாலும் உங்கள் எண்ணம் இந்த திராவிட மண்ணில் ஈடேறாது ..
..
தேர்ந்தெடுக்கபட்ட அரசிற்கு குடைச்சல் கொடுக்கும் ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும் .. ஆளுநர் மாளிகைக்கு அருகில் தான் விமானநிலையம் உள்ளது ..
இந்திய ஒன்றிய அரசே
தேசிய கீதத்தை கூட மதிக்காத ஆளுநரை திரும்ப பெறு!..
..
தமிழ்நாடு மாபெரும் தலைவன் கையில் பாதுகாப்பாய் இருக்கிறது
"திராவிட மாடல் " எமது கொள்கை பயணத்தின் செயல்திட்டம் .. இங்கே சமூகநீதியும், சமூக நல்லிணக்கமும், சுயமரியாதையும்,எல்லோருக்கும் எல்லாம் என்பதும், அடுக்குள் இல்லாத சமநிலையோடு அனைவரையும் மதித்து, அரவணைத்து சமமாக நடத்தி செல்வதே எமது சித்தாம்தத்தின் அடிநாளம் ..
புரிகிறதா ஆளுநர் ரவி அவர்களே
..
ஆளுநர் உரையை அவை குறிப்பிலிருந்து நீக்கி "புதியவரலாறு" படைத்தார் முதலமைச்சர் தளபதியார்
M. K. Stalin
Chief Minister of Tamil Nadu
..
தளபதி படையே.. இனி..
தமிழ்நாட்டை ஆளும் ..
Stalin is More Dangerous than Karunanithi
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment