திராவிடத் தென்றல் கனிமொழி..
உச்சத்தில் குரலில்லை எனினும் உயர்ந்துநிற்கும் கருத்து.. அநீதி கண்டு கூட்டணி தர்மம் பாராமல் நாடாளுமன்றத்தில் குரல் உயர்த்தி "என்னபண்ணுறீங்க" என கேட்கும் துணிவு அதே நபர் (ரங்கராஜன் மா.கம்யூ)சென்னை வந்திறங்கியவுடன் அரணாக நின்று அனுப்பிவைத்த தெளிவு .. கொண்ட கொள்கையில் உறுதி தான் நாத்திகர் தானென தந்தையின் இறுதி சடங்கில் கூட கடைசி வரை உறுதியாய் நின்ற பேரழகு .. நாடாளுமன்றத்தின் மேலவையில் இவர் ஆற்றிய அரிய பணிக்காக சிறந்த "நாடாளுமன்றவாதி" யாக தேர்வாகியும்.. மக்களின் துணையோடு நின்று களம் கண்டு வென்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் அதுதான் மக்களின் நன்மதிப்பை பெற்ற ஜனநாயக பாதை என தேர்வாகி சென்று இன்றும் அறச்சீற்றத்தோடு ஆரியபகையின் "சிம்மசொப்பனமாய்" திகழும்
மானமிகு.கனிமொழி கருணாநிதிக்கு
#அகவை_தின வாழ்த்துகள் ..
..
பாசிசம் தன் கொடூரபற்களால் கனிமொழி அரசியல் வாழ்வை சிதைக்க எண்ணி 2ஜி வழக்கில் சிக்கவைத்து அதன் மூலம் பெற்ற தந்தையை மடக்கலாமென மனப்பால் குடித்து .. திராவிட இயக்கத்தின் முடிவுரையை எழுதிவிடலாமென கங்கணம் கட்டி செயல்பட்ட ஆர்எஸ்எஸ் கும்பல் அதற்கு துணையாய் ஊடகங்கள் வாயில் வராத பெருந்தொகையை கற்பனையாய் சொல்லி உச்சநீதியும் தன்னை கேட்காமல் பிணை வழங்க கூடாதென தன் குடுமியை ஆட்ட சுற்றி பெருஞ்சுவர் எழுப்பியதை போல தனிமையில் வருத்தி பணிய வைக்காலாமென்ற சிறையிட்டும் .. அறம் வெல்லும் என்ற "அப்பனின்" சொல் காதுகளில் ரீங்காரமிட
நேர்மை உண்மை என்று தோற்காது என்ற நம்பிக்கையில் துணிவோடு வழக்கை சந்தித்து
வென்று தன் தந்தை முன் நாம "ஜெயிட்டோம்பா "
என குழந்தையின் குதூகலத்தோடு நின்றவர் ..
..
மிக தெளிவாக தன் பலமறிந்து தன் தலைவரோடு கரம்கோர்த்து நின்று பகைவெல்லும் ஆளுமை
மகளிர் அணியில் புதியதொரு தொடக்கத்தை பெருமளவில் பங்கேற்க செய்து பெண்களின் பங்கை உறுதி செய்தவர் "திராவிட இயக்க வரலாற்றில் பெண்கள் " பங்கு அளப்பரியது இன்றும் மிளிர காரணியாய் இருப்பவர் .. கழகத்தின் துணைப் பொது செயலாளராக உயர்ந்து நிற்கிறார்.
..
தன்னை சந்திப்பவர்களிடம் கனிவோடு கலந்துரையாடும் "தன்மை ".. வருபவர்கள் கருத்தை அமைதியாக கேட்டு ஆவண செய்யும் மக்கள்பணி .. கட்சிகளை கடந்து யார் வேண்டுமானாலும் சந்திக்க கோரிக்கைகளை வைக்க அதன் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து கேட்டு அறிந்து ஆலோசனை வழங்கும் நேர்மை மிகு அரசியல் பயணம் ..
..
கவிஞர் கதாசிரியர் இலக்கியவாதி பேச்சாளர் சிறந்த நாடாளுமன்ற செயல்வீரர் .. மகளிர்படையின் தலைவர், துணைப் பொதுச் செயலாளர்,
பெரியாரின் பெயர்த்தி என பன்முக ஆளுமையாய் திகழும் பேரன்பு கனிமொழிக்கு
என் வாழ்த்துகள் ..
நீண்டு சிறந்து மகிழ்ந்து வாழ்க!..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment