Wednesday, January 4, 2023

வெள்ளம்ஜி ஹாஜாமைதீன் அண்ணன் ..
பழகுவதற்கு இனியவர் 
பாசமிகு அண்ணன் ..
என் ஆசான் ..
போய்விட்டீர்களா ..
..
என் பள்ளிகாலங்களில் 
கட்டுரைப் போட்டி,பேச்சு போட்டி என்றால் அண்ணனிடம் தான் போய் நிற்பேன் .. மிக அழகாக சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் விதமாய் எழுதி தருவார் .. அதை படித்து மனபாடம் செய்து பேசியும், எழுதியும் பரிசுகள் பல பெற்றிருக்கிறேன் .. எழுத்தின் மீது ஈர்ப்பு வர காரணமாக இருந்தவர் .. எந்த தலைப்பை தந்தாலும் ருசிகரமாய் நமக்கு தருவார் ..
போய்விட்டீர்களா ..
..
அண்ணன் அரசியலில் என் நேரெதிர் .. சிலநேரம் கடும் வாக்குவாதம் செய்திருக்கிறேன் .. எம்ஜிஆரை தொடர்ந்து ஜெயலலிதாவின் அதிமுகவில் இருந்தவர் .. நிறைய உயரங்களுக்கு வர தகுதியானவர் ஏனோ வாய்ப்புகள் வரவில்லை.. சிலநேரம் நீங்கள் இருக்கவேண்டிய இடம் இதுவல்ல என பேசியிருக்கிறேன் .. நேரெதிர் அரசியலில் இருந்தாலும் எப்போதும் அன்போடு மன்சூர் என அழைக்கும் வாஞ்சை அழுக்கற்ற மனம் .. ஒருமுறை அமைச்சர் துரைகண்ணு அவர்களோடு  இல்லம் வந்து "நோன்பு திறக்கும் நிகழ்ச்சி"க்காக அழைக்க வந்தார் ..  திருமாவேலன் எழுதிய "பெரியார்" புத்தகத்தை அமைச்சருக்கு தந்தது நினைவில் இனிக்கிறது 
..
பள்ளிகூடம் , பள்ளிவாசல் நிர்வாகம், விவசாயம், அரசியல்,
என பன்முகத்தன்மை கொண்ட முழுமனிதர் .. கடுஞ்சொல் சொல்லாத இனிமையாக கதைப்பது எப்படியென இவரிடம் கற்றுக்கொள்ளலாம் .. பல்வேறு திறமைகள் இருந்தும் பகட்டுகாட்டாத பெரியமனிதர் .. 
என் மீது பாசம் கொண்ட அண்ணன் வெள்ளம்ஜி ஹாஜாமைதீன் மறைந்துவிட்டார் என செய்தி அறிந்து அதிர்ந்துபோனேன் ..
..
இளைப்பாருங்கள் ஆசானே 
..
ஆலஞ்சியார்


..

No comments:

Post a Comment