ராகுல்..
இந்திய ஒற்றுமை பயணம் வெற்றியா ..? ஆனால் அழுத்தமான செய்தியை சொன்னது .. மக்கள் தங்களை இப்பயணத்தில் இணைத்துக்கொண்டார்கள் .. கன்னியாகுமரியில் தொடங்கி கஷ்மீர் வரை இந்த நடைபயணம் நல்லதொரு வழிகாட்டியை இனங்காட்டியது ..
..
பாஜக தலைவர் அத்வானியின் ரத யாத்திரை அங்கங்கே மத வெறுப்பையும் கலவரத்தையும் தீப்பொறியையும் கொடூரக் கொலைகளையும் தந்து இளைஞர்களை மதத்தின்பால் வெறிக்கொண்டு சக மனிதனை கொன்றும் விரட்டியடித்தும் இந்த தேசத்தை படுகுழியில் தள்ளியது ஆனால் ராகுலில் பயணம் அன்பை தந்து அனைவரையும் அரவணைக்கும் பல்வேறு இனம் மொழிகளின் பண்பைப் பறைச்சாற்றி இம் மண்ணில் இன்னமும் மனிதம் மரித்துவிடவில்லையென நம்பிக்கையின் வேர்களில் ஈரத்தை தந்தது
..
இந்த பயணத்தின் வெற்றி என்பது மக்களின் கைகளில் இருக்கிறது ..
சாதியை மதத்தை பணத்தை பார்த்து வாக்களிக்காமல் இந்த நாட்டின் மீண்டுமொரு விடுதலை போராக எண்ணி தன்னலம்பாராமல் ராகுல் கரங்களை இறுக பற்றிக்கொள்ளவேண்டும்.. சின்ன சின்ன கசப்புகள் கடந்தகால தவறுகள் காங்கிரஸில் ஊடுறுவியிருக்கும் பாசிச சக்திகள் இவையெல்லாம் கடந்து இன்றைய தேவையை அதிலும் அவசரத்தின் நிலைகருதி பின்துணைக்கவேண்டும்,..
..
காங்கிரஸ் தோற்பதென்பது இந்தியாவின் சாமானியனின் தோல்வி .. இதோ எட்டாண்டில் இந்திய மக்கள் சொல்லண்ணாதுயரம் அடைகிறார்கள் .. தங்களின் இருப்பே கேள்விகுறியாகியிருக்கிறது .. மூளை கூட சுமையாக கருதும் முட்டாள்களால் நாடு வெந்துகிடக்கிறது .. மனிதநேயம் இழந்து, தனிநபர் வெறுப்பும் .. நாட்டின் சொத்துகள் சூறையாடுவதும், குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக விரல்விட்டு எண்ணும் சிலரின் பெருவளர்ச்சிக்காக மக்கள் வரிப்பணத்தையும்,,சொத்தைையும் தாரைவார்ப்பதும் பாஜக ஆட்சிக்கு வந்ததலிருந்து நடக்கிறது .. இனியும் மிச்சமிருப்பதை இழக்காமலும் இந்தியாவின் கனிமவளம் கொள்ளையடிக்கபடாமல் காக்கவும் மதநல்லிணக்கமும்,சமூக முன்னேற்றமும், கல்வியில் கசடுகளை புகுத்தாமல், புராணபுரட்டுகளை திணித்து மூளை மழுங்கடிக்காமல் அறிவியல் துணைக்கொண்டு நாட்டின் வளர்ச்சியை எட்டவும் காங்கிரஸ் பேரியக்கம் தேவை .. ராகுல் இன்றைய மிக முக்கியதேவைகளில் ஒருவராகிறார் ..
..
மரண வியாபாரிகளின் கைகளிலிருந்து நாட்டை மீட்க இந்த பயணம் உதவும், உதவ வேண்டும் .. இரக்கமற்ற கொடுங்கோலர்கள், எதை உண்ணவேண்டும் உடுத்தவேண்டும் என மக்களை கொல்லும் மகாபாதகர்கள் தோற்க வேண்டியது காலத்தின் அவசியம் ..
இந்திய இறையாண்மைக்கெதிராக கயவர்கள் தேசபக்தி எனும் பெருங்கூச்சலிடுகிறார்கள் .. கொள்ளையடிப்பதும் , அதை நியாயபடுத்த மதத்தின் பின்னால் ஒளிந்துக்கொள்வதும், எதிர்ப்பு வரும் போது அண்டை நாட்டால் ஆபத்தென திரிப்பதும் இந்து இஸ்லாமிய மக்களிடையே விரோதத்தை வளர்ப்பதும் எட்டாண்டுகளாய் கண்டு அலுத்துவிட்டது .. இனிய நல்லகாற்றை சுவாசிப்போம்
நல்லவர்கள் கையில் நாடு சென்றாலே வரும் தலைமுறையேனும் சாதிமதவெறியெனும் சாக்கடையில் உருளாமல் அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடாமல் இணைந்து வாழ்ந்து இந்திய ஒன்றியத்தின் இயல்பை காப்போம்
பன்முகதன்மையே நமது நாடு ..
நல்ல தலைவன் வருகிறான் பற்றிக்கொள்ளுங்கள்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment