Saturday, July 24, 2021

சார்பட்டா..
கதைகளம் 1975ஐ கண்முன் காட்டியது கொள்கைபிடிப்புள்ள தன்மானமிக்க தொண்டர்கள் நிறைந்த திமுகவை இன்றைய தவைமுறை அறிய தந்தமைக்கு ஒரு சபாஷ்.. எழுபதுகளில் ராயபேட்டை ஏரியாக்களில் பாக்ஸர்கள் வலம் அதிகம் காணலாம் தெருவிற்கு ஐந்தாறு பேராவது பாக்ஸராக இருப்பார்கள் பொழுதுபோக்காக அல்ல விளையாட்டாகவோ அல்ல உயிர்கலந்த உணர்வாக திரிவார்கள்..அப்படியொரு கதையை தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர் ..
..
அவசரகாலநிலை அதில் திமுகவினர் எப்படி துன்பதற்குள்ளானர்கள் எம்ஜிஆர் எப்படி சரணாகதியானார் என்பதை சிலகாட்சிகள் இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொன்னவிதம் விமர்சனங்களை தாண்டி பாராட்டுக்குரியது .. யார் எம்ஜிஆர் என்ற கேள்வி நீண்டநாட்களாகவே எழுப்பபடாமல் ஒருவித போதையேறிய பிம்பத்தால் மறைக்கபட்டது வசூல் பாதிப்பு வரகூடாதென்ற ஒற்றை நோக்கில் தமிழகத்தின் வரலாறுகள் மறைக்கபட்டன .. "கள்ளசாராயம் " கல்வியாளர்களை உருவாக்கியதெல்லாம் எம்ஜிஆரென்ற போலி தலைவனால் என பேசுவதற்கும் தமிழ் சினிமா தயாராகியிருப்பது நல்ல முன்னேற்றம்/ தொடக்கம்..
என் தாய் சத்யா மீது சத்தியமிட்டு சொல்கிறேன் கள்ளு சாராயக்கடைகளை திறக்கமாட்டேன் என 1977 ல் எம்ஜிஆர் சொல்லி ஆட்சி பொறுப்பேற்குவந்து 
1981 ல் கள்ளுக்கடையையும் பின் 1983ல் சாராயக்கடையையும்..
பிறகு ஒட்டுமொத்த பாரின் சரக்கை விற்க டாஸ்மாக் கை நிறுவியதும்
இந்த பொன்மனச்செம்மல்..?
எம்.ஜி.ராமசந்திரன் தான்..
ராமசாமி உடையார் ஜேப்பியார் வளர்மதியை வளர்த்து கள்ளசாராயம் வழிந்தோட செய்தது யாரால்.. அரசு நிலங்கள் அடிமாட்டுவிலைக்கு கொடுத்து ராசாய அதிபர்களை கல்வியாளர் ஆக்கியது யார் மாநகராட்சி பள்ளிகள் சாராய கொடோனாக்கியது எம்ஜிஆர் ஆட்சியில் தானே இதெல்லாம் இன்றைய தலைமுறை தெரிந்துக்கொள்ளவேண்டும்..
..
படம் ஆங்காங்கே மக்கள் அரசியல் பேசியிருக்கிறது .."பெருமாள் சாமி கடையில மாட்டுக்கறி பிரியாணி வாங்கி வந்திருக்கேன்" இயல்பாக மாட்டுக்கறி  அரசியலுக்கு டேய் நாங்க மாட்டுக்கறி தின்பவர்கள் என சொல்லியிருப்பது .. கழககாரன் எதற்கும் பயபடமாட்டான்.. ஆட்சி கலைக்கபட்டது எமர்ஜென்ஸியில் இந்திராவை எதிர்த்ததால் தான் என மறைக்கபட்ட வரலாற்றை (ஊழலுக்காக கலைக்கபட்டதாக பார்பன ஊடகங்கள் பரப்பிய பொய்யை) சொன்னது என படம் முழுக்க சின்ன சின்ன செய்திகளால் வரலாற்றை பதிவு செய்திருக்கிறது ..
..
எம்ஜிஆரை தவறாக சித்தரித்திருப்பதாக பழைய பாக்ஸர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சொல்கிறார்.. எமர்ஜென்ஸிக்கு பயந்து பெயரையே அகில இந்திய அதிமுக என மாற்றியவர் என்பதும் இந்திய ஒன்றிய அரசியல் தலைவர்கள் கட்சிகள் அவசரநிலைக்கெதிராக தங்கள் ஜனநாயக கடமையை செய்தபோது "பாதயாத்திரை " என்று இந்திராவை ஆதரித்த அடிமை எம்ஜிஆர் என்பதுதான் உண்மை .. ஜனநாயகவாதியோ அல்லது திறமையோடு ஆட்சி செய்தவரோ அல்ல சினிமா மோகமும்,காங்கிரஸை கைவிடாமல் பற்றிக்கொண்டு சேவகம் செய்ததும் கரைசேர்த்ததே தவிர வேறெதுமில்லை .. தமிழக வரலாற்றில் பிழையான முடிவுகளும் தவறான முன்னுதாரணமும், பின்னோக்கி செல்ல காரணியும்,  மத சாதிய சிந்தனைகள் தலைதூக்க காரணமும் #மகோரா  எனும் எம்ஜிஆர்தான் .. வருமானவரி சோதனைக்கு பயந்து கட்சி ஆரம்பித்து திமுக உடைக்கவேண்டுமென்ற இந்திராவின் ஆசையை நிறைவேற்றி அடிமை எம்ஜிஆர் ..
திரு.ஜெயகுமார் அவர்களே எம்ஜிஆர் ஒரு கோழை கைதுக்கு பயந்து அடிமை வாழ்வை தொடங்கியவர்.. ஆனால் கலைஞர் அவர்கள் எழுத தடைவிதித்த போதும் #விளக்கெண்ணெய்சூட்டைதணிக்கும் என எழுதி ஒன்றிய அரசை எரியவிட்டவர்.. பயம் திமுககாரனுக்கு எப்போதும் இருந்ததில்லை பழைய திமுககாரனான உமது தந்தையிடம் அதை பார்த்திருப்பீர்.. 
..
தமிழ் சினிமா திராவிட இயக்கத்தை அதன் வலிமையை அது செய்த வரலாற்று பெருமைகளை பெற்று தந்த உரிமைகளை பெருமைகளை பதிவு செய்யாமலேயே இருக்கிறது சினிமா எனும் மாஸ் மீடியா இனியேனும் உண்மைகளை பதிவு செய்யவேண்டும் ..திமுககாரர்கள் சினிமா என இல்லாமல் உண்மையை பேசினாலே போதும் தமிழகம் கலைஞரால் திமுகவால் திராவிட இயக்கத்தால் பெற்றவை அதுதான் இதுவரை காத்துநிற்கிறதென்ற உண்மை விளங்கும்.
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment