ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் தமிழகத்திலிருந்து எல்.முருகன் அமைச்சராகிறார் வாழ்த்துகள்.. மிக மிக ஒடுக்கபட்ட /வர்ணாசிரமத்தால் தாழ்த்தவராக கருதபட்ட சமூக பின்னணியில் இருந்து வந்தவர்.. ஒடுக்கபட்டமக்களை அரசியல்படுத்தபடவேண்டும் என்றுதான் பெரியார் விரும்பினார்
இன்றைக்கு அமைச்சரவை பட்டியலில் பெயருக்கு பின் சாதியை போட முடியவில்லையே அது திராவிடம் சாதித்தது ..
தமிழகத்திற்கு ஒருவர் கிடைத்திருக்கிறாரென மகிழ முடியவில்லையென கமல்ஹாசன் சொல்கிறார்.. பாசிசம் இப்படிதான் தன் கையாளை கொண்டு பேசவைக்கும்..
..
அமைச்சரவை ரேஸில் அன்புமணி ரவீந்தரநாத் என சிலர் வரிசை கட்டிநின்றனர் .. காலில் விழுந்து கதறிபார்த்தும் ஒன்றிய அரசென அழைக்கமாட்டோமென ஜால்ரா அடித்தும் பார்த்தாகிவிட்டது .. அதிமுக தோல்விக்கு பாஜக காரணமென சி.வி.சண்முகம் சொல்ல உடனே விரைந்து வந்து பாஜகவோடான உறவு உணர்வுபூர்வமானது நாட்டு நலனுக்கானதென பன்னீர் பதறியதும் ..சம்பந்தமே இல்லாமல் அன்புமணி அதிமுக வெற்றிபெற்றதே பாஜக கூட்டணி இருந்ததால் தான் என கூசாமல் சப்பை கட்டியதும் ரசிக்க முடிந்தது பாவம் காரியம்தான் கைகூடவில்லை ..
..
அன்புமணி அவர்களே நீங்கள் அமைச்சரானது உங்கள் திறமையாலோ அல்லது கட்சி பலத்தாலோ அல்ல .. அன்று கலைஞர் பெருமகன் தந்த பிச்சை
அவரின் கருணை உமக்கு வாழ்வு தந்தது ..
நன்றிகெட்ட அப்பனும் மகனும் சொந்த சமூகத்தையே காவுகொடுத்தேனும் பதவி புகழ் பணம் என சுகவாழ்வு வாழ்பவர்கள்..
ஜனநாயக மாண்பை கடைபிடிக்காத, சாதிவெறியை தூண்டி இளைஞர்களை வழிகெடுக்கும் உம்மை போன்றோர் பொறுப்பிற்கு வராதது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது ..
..
பன்னீரும் மகனும் அரசியலில் அழுக்கானவர்கள் .. அன்றைக்கு ஒன்றிய செயலாளருக்கு "பெட்டிதூக்கி" யாக செயல்பட்டு விசுவாசமானவன் என சசிகலாவிடம் சொல்ல அரசியல் வாழ்க்கையை தொடங்கி, பிணக்கம் வந்த போது மதவெறி கூட்டத்தோடு கைகுலுக்கி கூர்பார்த்த போதே உமது அரசியல் சறுக்குபாதையானது.. இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக கூட முடியவில்லை கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கைபிடி நழுவுவதை அறிந்து எப்படியேனும் பாசிச கூட்டத்தின் கடைக்கண் பார்வைக்காக காத்திருந்ததெல்லாம் வீணானது ..
..
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விலகல் அரசின் தோல்வியை காட்டுவதை எந்த ஊடகமும் பேசவே இல்லை கொரோனா தொற்றை கையாள்வதில் அரசின் தோல்வியை அரசே ஒப்புகொள்வதாகதான் பொருள் ..
தமிழகத்தில் நீண்டநாட்களாக காத்தநிற்கும் விசுவாசமான அடிமைகள் அன்புமணி பன்னீர் மகன் இவர்களை இடதுகையால் புறந்தள்ளிய மோடியை ஒப்புகொள்ளதான் வேண்டும் .. மிக ஆபத்தானவர்கள் என அறிந்துவைத்திருக்கிறார்..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment