என்னதான் பிரச்சனை யார் பெரியவன் என்பதிலா .. யாருமே பெரியவனில்லை என்ற இறை கோட்பாட்டை இவர்கள் நம்புவதில்லையோ.. தமிழக முஸ்லிம்கள் ஒற்றுமை என்பது எப்போதும் சாத்தியபடாத அறுந்து விழகூடிய நூலிழையில் இருப்பதைதான் காணமுடிகிறது .. விடுதலை இந்தியாவில் ஒன்றியத்தின் தலைமையை சுட்டிகாட்டுகிற இடத்தில் இருந்த சமூகம் இன்று 48 பிரிவுகளாய் .. எல்லோருமே தன்னை முன்னிலைபடுத்த நினைப்பதால் சரிநிகரானவரை ஏற்பதோ அல்லது வரும் தலைமுறை தனக்குள் தலைவனை கண்டெத்த நினைப்பதையோ விரும்புவதில்லை.. இந்திய ஒன்றிய அரசியலை உற்றுநோக்கவைத்த மாபெரும் தலைவர்களை உருவாக்கிய சமுதாயம் "ஒன்றுபடல்" என்பதை மறந்து தனித்தனி ஆவர்த்தனம் செய்து கூக்குரலாய் செவியடைக்க செய்கிறார்கள்..
..
சொத்து தகராறு என இதை சமுதாயம் கண்டுக்கொள்ளாமல் விட்டால் வரும்காலங்களில் நிறைய விலை கொடுக்கவேண்டிவரும்..
எங்கே விழுந்தது சமுதாயம் என ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய காலம் வந்துவிட்டது .. வீணாய் அரசியல்கட்சிகள் மீது பழிசுமத்தி அரசியல் செய்வதும், தங்களுக்குள் அடித்துக்கொள்வதும் சமுக பிரச்சனைக்களுக்கு தீர்வாகாது .. இஸ்லாமிய அமைப்புகளில் இளைஞர்கள் பெருமளவில் இருக்கிறார்கள் .. ஏதோ சமுதாயத்திற்கு நல்லது செய்வதாக எண்ணி "வழிகேடர்களாக" மாறிவரும் துயரம் தொடர்கதையாகிறது . சட்டென்று உணர்ச்சிவயபடுதலும் பிற சமூகத்தை குறைவாக எடைபோடுவதும் உள்ளில் தீ வளர்த்து பகைஉணர்வை வெளிகாட்டுவதும் ஏதோ இவர்கள் தான் இஸ்லாத்தை காக்கவந்தவர்கள் முஸ்லீம்களின் காவலர்கள் என நம்பி வீணாவதும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்..
சமுதாயம் பிரிந்து கிடப்பதும் தாங்களே பூரண இஸ்லாத்தை கடைபிடிப்பவர்கள் என கதைவிடுவதும் ..ஏதோ இவர்களால் தான் இஸ்லாம் நமக்கெல்லாம் புரிந்ததுபோலவும் மண்சார்ந்த கலாச்சாரத்தை புறக்கணித்து அரேபிய கலாச்சாரத்தை திணித்துக்கொண்டதும் தொடர்ந்து சம்பூர்ண இஸ்லாம் என சொல்லி கடைசியில் ஒழுக்ககேட்டில் நின்று ஊர்சிரித்ததும் நாம் கண்டதுதான்
..
உண்மையில் தமிழக முஸ்லிம்கள் அரசியல்படுத்தபடவில்லை .. மிகப்பெரிய நாட்டில் தங்களுக்கான அரசியல் எதுவென்ற புரிதல் கூட இல்லை.. பிரதான பகையை அறிந்திருந்தவர்கள் யாரை துணைக்கழைத்து சண்டைபோடவேண்டும் என்ற அறிவில்லை .. தாய்சபையை இன்று வலுவிழக்க இந்திய முஸ்லிம்களே காரணம்..இதே அதிகார போட்டிதான் முன்பும் நடந்தது .. (இபுறாகிம் சுலைமான் சேட் / பனாத்வாலா என்ற மௌன போர்
சமுதாயம் கண்டதுதான் .. தமிழகத்தில் அப்துல்சமது /அப்துல் லத்தீப்)
..
இஸ்லாமியர்கள்
கல்வி வேலைவாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை .. அரசுதுறையில் விரல்விட்டு எண்ணிவிடலாம் .. ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு கூட நிரப்ப ஆளிலில்லை.. இத்தனை அமைப்புகள் இருந்தும் ஒன்றிய மற்றும் மாநில அரசின் உதவிகள்
மானியங்கள் மாணவர்களுக்கு கிடைத்ததா என்றால் பதில் இல்லை.. இவர்கள் சமுதாயத்திற்கு
பலன் தருபவர்கள் அல்ல.. சமுதாயத்தை வைத்து புகழில் தேட நினைப்பவர்கள் ..
..
முஸ்லிம்களே இனியேனும் இவர்கள் புறக்கணியுங்கள் .. காங்கிரஸ் திமுக ,பொதுவுடமை இயக்கம் போன்ற கட்சிகள் இணைந்து செயலாற்றுங்கள் உங்களுக்குரிய பிரதித்துவம் கிடைக்கும் .. முதலில் அரசியல் வேறு, வழிபாடு_கோட்பாடு வேறு என்பதை உணருங்கள் .. இங்கே பெருபான்மையோடு இணைந்தே சாதிக்க முடியும் என்ற உண்மை புரிந்தால் நமக்கானதை நாமே தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கலாம் .. பொது அரசியலில் மதம் சாதி வேறுபாடு இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கைகொடுக்கும் பிறகு மெல்ல காவு வாங்கும்..
..
உங்களுக்கு யார் பகைவரென தெளிவாக தெரிகிறது உங்கள் சித்தாத்தத்தின் எதிரி யார்.. உங்கள் மீது வெறியோடு கலகம் செய்ய துடிப்பவர் யார் என்ற புரிதல் இருக்கிறது .. ஆனால் யாரோடு இணைந்து செயல்படவேண்டும் யார் நமக்கானவர் .. நம் தேவைகளை உரிமையோடு யாரிடம் கேட்டு பெறலாம் நமக்கான உரிமைகளை யாரோடு இணைந்து போராடி பெறுவது என்ற தெளிவும் அறிவும் இல்லை .. இனியேனும் தெருவில் அடித்துக்கொண்டோ, கத்தி கூச்சலிட்டோ, சற்றென்று உணர்ச்சிவயபட்டு பிறசமூகத்தை மீது வன்மத்தை கக்கியோ வாழ்வை இழக்காமல், நல்லதொரு விடியலுக்காக அரசியலை தேர்வு செய்யுங்கள் .. 48 அமைப்புகளாக இருப்பதில் ஒரு பலனுமில்லை என்ற உண்மை விளங்கினால்
சமுதாயம் விடியல் பெறும்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment