கருணாநிதியை புகழ்ந்து எம்ஜிஆரை அவமதிக்கிறதா.?
என கேள்வி எழுப்பி விவாதமாகியிருக்கிறது .. உண்மையில் கருணாநிதியோடு இணைத்து பேச தகுதியில்லாதவர் எம்ஜிஆர்.. வெற்றி மட்டுமே தீர்மானிக்காது ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்றதாழ்வுகள் அவனின் சமூகத்திற்கான பங்களிப்பு இந்த மண்ணிற்கு மக்களுக்காற்றிய கடமைகள் பொதுவாழ்வில் கொண்ட கொள்கையில் சமசரமற்ற செயல்பாடுகள் தொலைநோக்கு பார்வை தனிமனிதன் உயர்விற்கான சிந்தனை இவையாவுமே காலங்கடந்தும் பேசும் ..
..
எம்ஜிஆர் அரசியல்வாதியா என கேட்டால் இல்லையென முகத்தில் அடித்தாற்போல் சொல்லமுடியும் கொள்கைவாதியா என்றால் சிரிப்பே வரும்.. கவர்ச்சி அரசியலை மூலதனமாக கொண்டவர் மக்களின் சினிமா மோகத்தை சரியாக பயன்படுத்திய புத்திசாலி .. அவரை ஆரியம் சரியாக பயன்படுத்திக்கொண்டது.. சினிமா மோகம் மெல்ல கரைய தொடங்கிய போது திமுக வரகூடாதென்ற ஆரியத்தின் ஒற்றை கொள்கை கைகொடுத்தது ஏறக்குறைய இதே சினிமா மோகம் ஆந்திராவிலும் என்டிஆரை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தாலும் மக்கள் தெளிந்தபோது தூக்கியெறியபட்டார் அங்கே ஊடகங்களோ பாசிச சித்தாந்தமோ அவருக்கு பின் துணைக்கவில்லை காரணம் அவர் ஆரியத்தின் பிரதான எதிரி அல்ல என்பதால் அங்கே யார் வந்தாலும் கவலையில்லை ஆனால் தமிழகத்தில் திமுக வரகூடாதென்பதில் உறுதியோடு இருந்தது ..
..
எம்ஜிஆர் கல்வியை வியாபாரமாக்கவும் தெளிவற்ற சிந்தனையால் மக்களை மதிமயங்கவைத்ததும் தவிர வேறெதும் செய்தாரா.. சமூகநீதியை முன்னெடுத்தாரா .. திராவிட சித்தாந்தம் நீர்த்துபோக தன்னாலானதை செய்தாரே தவிர கொள்கை உறுதியோடு செயல்பட்டாரா.. இந்துத்துவா இயக்கம் காலூன்ற அனுமதித்தவர் இந்துமுன்னணியை ஏன் தொடங்க கூடாதென எதிர்கேள்வி கேட்டு ஆரியத்தின் செல்லபிள்ளையானார் .. அவரை சுற்றி பிராமண சமூகம் சூழ்கொண்டிருந்தது தன்னை நோக்கிவரும் ஆபத்துகளிலிருந்து தப்பிக்க ஐந்து பைங்கிளியை வைத்து கேவலமான அரசியல் செய்தவர் .. இன்னும் நிறைய .. சொன்னால் இவ்வளவு கேவலமானவரா என நினைக்க தோன்றும்..
..
கலைஞர் கருணாநிதி
தன் அரசியல் பயணத்தில் சறுக்கல்கள் வந்தபோதும், தடுமாற்றமில்லாத படகுகாரனை போல செலுத்தினார்.. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலுவாக தான் ஏற்ற கொள்கையிலிருந்து பிறழாமல் விளிம்புநிலை மக்களை ஏற்றிவிடும் ஏணியாகவே செயல்பட்டார் தொலைநோக்கு சிந்தனைகள்/திட்டங்கள் இன்றைய வளர்ச்சிக்கு அவைகளே காரணம்..
இந்திய ஒன்றியம் இன்னும் எண்ணிப்பார்க்காத விடயங்களை எல்லாம் திட்டமாய் தீட்டி 30 ஆண்டுகள் முன்பே தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தி முன்னூதாரணமாக திகழ்ந்தவர் ..
உணவுபொருட்கள் பொதுவிநியோகம் ஒன்றே போதும் வழிகாட்டியாக கலைஞர் திகழ்ந்தார் என்பதற்கு.. கல்வி கட்டமைப்பு அரை கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்பபாடசாலை என அடித்தளம் மிக சரியாக அமைத்தவர் எளியவர்கள் உயர்கல்வி கனவு நிறைவேற முதல்பட்டதாரிக்கு கட்டணமில்லா கல்வி என சொல்லிக்கொண்டே போகலாம் கலைஞர் மருத்துவகாப்பீடு எத்தனை லட்சம்பேரின் உயிர்காத்தது ..
அரசு இயலில் கலைஞர் ஒரு களஞ்சியம்
encyclopedia .. எம்ஜிஆரோடு ஒப்பிட்டு தயை கூர்ந்து சிறுமைபடுத்தாதீர்கள்..
..
கலைஞர் தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாத யாராலும் வெல்லமுடியாத ,சிறுமைபடுத்திட இயலாத, ஒப்பிடமுடியாத ஆளுமை.. அவரின் அரசியல்
வரும் தலைமுறைக்கு பாடமாக அமையும் .. பொதுவாழ்வில் போராளியாய் சமூக அக்கறைகொண்ட தலைவனாய் தன்னை சார்ந்து நிற்போரின் நம்பிக்கையை குலைத்திடாமல்
அரவணைத்து நான் அனைவருக்குமானவன் என்ற உறுதியோடு செயல்பட்ட தலைவர்..
மாற்று கருத்துடையோரையும் மதிக்கும் மாண்பு..
விமர்சனமே இல்லையா என கேள்வி எழும்.. சில விடயங்களில் இப்படி செய்திருக்கலாமே என தோன்றும், நீண்டகால தலைமை பிறர் வளரமுடியாமல் போனதற்கு காரணமாய் தோன்றும் குடும்ப அரசியல் சில நிர்பந்தங்கள் என சறுக்கல் வந்துபோகும் இவையாவும் தனிமனித வாழ்வில்/பொதுவாழ்வில் வந்து போகும் இடறுகள் .. அவையாவையும் கடந்து தன் வழியில் நின்று விமர்சனங்கள் ஏற்று சரிசெய்து வெற்றிகொடிகட்டுவதென்பது சிலரால் மட்டுமே முடியும்..
இடறி விழும்போதெல்லாம் எழுந்து துணிந்து நிற்கிற அழகு.. என்னை யாரும் அடிக்கமுடியாது நான் அடிச்சா தாங்கமாட்டே என உரக்க சொல்ல இவரால் மட்டுமே முடிந்தது .. தலைசிறந்த ஜனநாயகவாதியாய் இந்திய துணைகண்டமே கொண்டாடியதெனில் அதில் அவர் உறுதியும் உழைப்பும் நேர்மையுமே சாட்சியங்கள்..
கலைஞர்
தமிழக மக்களின் தலைவர்
நவீன தமிழ்நாட்டின் தந்தை..
தமிழகத்தின் கிழக்கு..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment