எங்கள் தொழில் கொள்கையை பின்பற்றுங்கள் எடப்பாடி
வெட்கமாக இல்லையா பழனிசாமி
உங்கள் கொள்கை என்ன ..? எவ்வளவு கமிஷன் என பேச தொடங்கி தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு எத்தனை தொழிலதிபர்கள் ஓட்டம் பிடித்தனர்
என்பதாவது தெரியுமா பழனிசாமி
எதாவது ஒரு தொழிற்சாலையை கொண்டுவந்திருக்கிறதா அதிமுக அரசு .. வெளிநாட்டு முதலீடு என தம்பட்டம் அடித்து கடைசிவரை இரண்டுலட்சம் கோடி என சொன்னதில் ₹2000 கோடி கூட தொழில் தொடங்க முதலீடு வரவில்லையே நீரெல்லாம் ஆலோசனை சொல்லவருகிறீர் சொந்தபுத்தியில்லாத தலையாட்டிகள் கருத்து கூற கூடாது..
..
அடிமைகள் முதலாளிகளின் குரலை பிரதிபலிக்கிறார்கள்
பன்னீர் ஒன்றியமென அழைக்க கூடாதென கருத்துச் சொல்லி கடைசியில் வாங்கிகட்டிக்கொண்டார் .. மகனுக்கெல்லாம் மந்திரி கிடையாதென கைவிரித்துவிட்டார்களாம்
சுகாதாரத்துறை ஊழலில் சிக்கிய அன்புமணி ஒன்றியம் என்பது தவறென சத்தமில்லாமல் பேசி நழுவிகொண்டார் .. பிடி இறுகும்போது தளர்ந்துவிழவேண்டிவரும் ..
..
தமிழகத்தின் வளர்ச்சி திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தெரிகிறது .. முதலீட்டார்கள் அரசோடு பேச தொடங்கியிருக்கிறார்கள் .. ஒவ்வொரு திட்டமும் நன்கு அறிந்தோரின் ஆலோசனையோடு பொருளாதார நிபுணர் வழிகாட்ட எப்படி தமிழகத்தின் வருவாயை உயர்த்த முடியுமென கவனத்தோடு செயல்படும் அரசிற்கு அரைகுறைகள் ஆலோசனை சொல்லகூடாது ..எதையாவது பேசவேண்டும் என்பதற்காக தங்களை மேதாவிகளாக காட்ட நினைத்தால் மக்களே காரி உமிழ்வார்கள் .. எதிலும் கொள்ளையடிக்கும் கும்பல் வெளிப்படையான அரசை விமர்சிக்க கூட தகுதியல்லை
இன்னும் சில தினங்களில் கொள்ளையடித்தற்கான வழக்குகள் வரும் .. அப்போது முகமூடி கிழியும் .. விரைந்து விசாரிக்கபடும் புழல் வரவேற்கும் பழனி .. அதுவரை வாய்மூடி இருக்கவும்
..
வீடுகட்டுவதற்குரிய இடம் சேறாக இருந்தால் கட்டிடம் கட்ட முடியாது பாலவனமாக இருந்தால் பயிர்செய்ய முடியாது.. அதைப்போல சரியாக திட்டமிடல் எனும் அறிவு இல்லையென்றால் சாதிக்க முடியாது என்றார் அண்ணா ..
திமுக அறிவின் நிழலில் ஆட்சி செய்பவர்கள் கஜானா காலியான போதே எங்கள் மூளை காலி இல்லையென்றார் கலைஞர் ..
ஆலோசனை சொல்லவும் தகுதி வேண்டும் அது அதிமுகவில் எவருக்கும் இல்லை
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment