Sunday, July 11, 2021

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு..
இனி ரசிகர் மன்றமாக செயல்படும்,
ரஜினிகாந்த்..
..
நடிகர் ரஜினி நல்ல நடிகரா என்பதைவிட நல்ல வியாபாரி தன்னை நம்பி படமெடுப்பவர்கள் கைகாசை இழந்துவிட கூடாதென்பதில் கவனமாக இருப்பார் .. தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் தனக்கான பாத்திரத்தில் தன் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை தர கடுமையாக முயற்சிப்பார் .. இயக்குனரின் வேலையில் தலையிடுவதில்லை தன் மேதாவித்தனத்தை காட்ட நினைத்து தயாரிப்பாளரை தெருவில் நிறுத்துவதில்லை தனக்கான புகழ் தன் நடிப்பால் திறமையால் மக்கள் விரும்பத்தால் தன் செய்கையால் கிடைத்திட்டதாக இருக்கவேண்டுமென எண்ணுபவர்.. கமலை போல தயாரிப்பாளரை நடுதெருவில் நிறுத்துபவர் அல்ல .. போட்டகாசு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர்.. தொடர்ந்து வெற்றிபடங்களை தந்து 70 வயதில் வியாபார ரீதியாக உச்சத்தில் இருப்பவர் ..தன் படம் வரும் போதெல்லாம் பரபரப்பாக எதையாவது செய்து படம்பற்றி பேசவைப்பவர் ..
..
அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என நீண்ட நாட்களாக தமிழகத்தின் பேசுபொருளாக தன்னை நிறுத்தி 
தன்னை தன்னை நம்பி பணம்போட்டவரை மகிழ்வில் ஆழ்த்தியவர் .. ரஜினி நல்ல நடிகரா என்றால் தெரியாது ஆனால் மக்களை "மகிழ்விக்கும் கலைஞன்"  சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை அவரின் சேட்டைகளை ரசிப்பார்கள் ..ஒரு கலைஞன் தன்னை விட மக்களை மகிழ்விப்பவனாக இருத்தல் வேண்டும் மிகப்பெரியளவில் அவரால் மகிழ்விக்க முடியவில்லையென்றாலும் இன்றைக்கும் அவரால் வெற்றிபெற முடிகிறதென்றால் மக்கள் விரும்புகிற கலைஞனாக இருக்கிறார் என்பதில் மாற்று கருத்தே இல்லை..
..
அரசியல் அவ்வப்போது ஆசை வரும்.. கூட இருப்பவர்களின் பேராசையும் கூட வரும் .. இவரை புகழ்ந்து இரையும் ஒரு கூட்டம் உச்சத்தில் நிறுத்துவதாக நம்பவைக்க முயற்சிக்கும்.. கூடவே தன் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பரபரப்பாக எதையாவது செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலைகைதியாய் நிற்க வேண்டிவரும் இதோ வந்துவிட்டார் என ஊடக வெளிச்சம் மதிமயங்க வைக்கும் சற்றென்று அறிவு விழித்துக்கொண்டு இருப்பதை இழக்காதே என எச்சரிக்கும் இதற்கிடையில் அடுத்தபட தயாரிப்பு வரும் இப்படியாக பொதுவாழ்வு காமெடிகள் வந்துக்கொண்டே இருக்கும் அதற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார் .. நன்று ரஜினி அவர்களே .. சிலர் பேச்சை கேட்டு 
அரசியலுக்கு வந்திருந்தால் இதுவரை கட்டிகாத்த பிம்பம் சிதைந்துபோயிருக்கும் கைகாசும் போய் பெயரும் புகழும் கெட்டுவிடும் ..  வேறெங்கும் செல்லதேவையில்லை தொடர்ந்து உங்களோடு திரையில் நேரெதிராய் போட்டி போடும் கமல் அரசியலில் கால்பதித்து தோல்வியும்
கொஞ்சம் கொஞ்சமாய் கட்சியும்  கரைந்து யாருக்கும் வேண்டாதவராய் நிற்கிறார் ஆனால் ரஜினி அவர்களே உங்களின் தெளிவு கமலுக்கில்லாமல் போய்விட்டது .. சினிமாகாரனை நம்பிய காலம் அந்த மோகமெல்லாம் போய் வெகுகாலமாகிவிட்டது ..தொடர்ந்து உழைக்க வேண்டும் எப்படியெனில் உதயநிதியை போல .. மக்களோடு பயணிக்கவேண்டும் அவர்கள் குறைகளை கேட்டு அவருக்கு நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை விதைக்கவேண்டும் இவை சரியான வயதில் தொடங்கியிருக்கவேண்டும் காலம்போன காலத்தில் கல்யாணம் கட்டி  என்னபயன்..? 
..
ரஜினியின் முடிவு அவருக்கு நல்லது அரசியல் வந்து மானங்கெட்டு போகாமல் நல்ல கலைஞனாக நம்மை மகிழ்விப்பதென முடிவெடுத்திருக்கிறார்..
25 வருடங்களாக வருவாரா மாட்டாரா என்ற ஆருடத்திற்கு முற்றுபுள்ளி வர ஒருவகையில் காரணம் தளபதியார்..
இனி 25 ஆண்டுகளுக்கு  யாரும்  முதல்வர் கனவில் அரசியலுக்கு வர இயலாதவாறு உழைக்கிறார் .. தமிழகத்தை கிறுக்கர்களிடமிருந்து மீட்டு புதிய பாதையில் தமிழகத்தை வழிநடத்துகிறார் 
அதை அறிந்து மௌனமாய் வெளியேறுவது நல்லதென அரசியலுக்கு வருவதில்லையென ரஜினி முடிவெடுத்திருக்கிறார் நன்று..
மகிழ்ச்சி..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment