துக்ளக் பதறுகிறான்..
தமிழரின் நாகரீகம் வெளிவருகிறதே எங்கே நாம் இதுவரை கட்டிசமைத்ததெல்லாம் பாழாகிவிடுமோ என அஞ்சுகிறான் தனக்கென வரலாறு இல்லாத வந்தேறிகள் நம் இனத்தின் பெருமைகள் தோண்ட தோண்ட வருகிறதே பலநூற்றாண்டுக்கு முன்பு நகரவாழ்வு வாழ்ந்திருக்கிறானே என்ற எரிச்சல் துக்ளக் கட்டுரையில் அப்பட்டமாக தெரிகிறது.. ஈராயிரமாண்டாய் மறைத்தவைகளெல்லாம் பழந்தமிழர் பாட்டாய் சுவைக்கிறதே.. உலகின் மூத்தக்குடி தமிழன் என வரலாறு சொல்வதை ஏற்கமுடியாத மானிடபதருகள் பாரத நாகரீகமென ஒப்பாரிவைத்தும் கடைசியில் பீறிட்டுவரும் வெள்ளத்தை கைகொண்டு தடுத்திடவா முடியும் என்பதால் வீண் வேலையென கதறுகிறார்கள் ..
..
வீண் செலவாம் மோடிக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து வீடு கட்டியதை விமர்சிக்கவில்லை
படேலுக்கு ₹3000 கோடியில் எதற்கு சிலையென கேட்கவில்லை
இல்லாத ராமனை தலையில் தூக்கி லட்சவருடமென
புரளிகதை பேசியவர்கள் .. கங்கையை தூய்மைபடுத்துவதாக கோடிகணக்கில் செலவுகாட்டி கொள்ளையடித்த கும்பல் தமிழர்வாழ்வியல் ஆதாரங்கள் கி.மு.ஆறாம் நூற்றாண்டுமுன் வாழ்ந்த வரலாறை கண்டு மகிழாமல் வெம்பி சாகிறார்கள்..
ஆரிய நாகரீகத்தை நம் மீது திணித்து அதுதான் பழைமையென சாதிக்க முயன்று தோற்றவர்கள் திராவிட நாகரீகத்தின் தொன்மை சான்று அவர்களின் உறக்கம் கெடுக்கிறது .. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீர் மேலாண்மையை வகுத்தவன் என்ற உண்மை அவர்களுக்கு பொறுத்துக்கொள்ளமுடியாமல் வீண்செலவென சலவை செய்ய பார்க்கிறார்கள்.. முன்பிருந்த அடிமைகள் பாரதநாகரீகமென ஆர்எஸ்எஸ்காரனை கொண்டு சொல்லவைத்து வாங்கிகட்டிகொண்டது நாம் அறிவோம் .. இப்போது Thangam Thenarasu
தங்கம் தென்னரசு போன்ற தமிழ் மீது பற்றும் தொல்லியல் அறிவும் கொண்டவர்கள் அமைச்சரானதும் தொடர்ந்து தோண்ட தோண்ட தமிழர் நாகரீகம் வாழ்வியல் புதையலாய் வருவது கண்டு மயிலாப்பூர் மாமாக்களின் அலறல் சத்தம் அதிகம் கேட்கிறது ..
..
தமிழின வரலாற்றை இத்தனை ஆண்டுகளாய் இருட்டடிப்பு செய்த கும்பல், உலகின் மூத்த சமவெளி நாகரீகத்தை அதிகாரம் ஆட்சி புறவழிக்கொண்டு மூடி மறைத்தது இன்று வெளிவருவது கண்டு புலம்புகிறார்கள் .. இல்லாத புராணகதைகளைச் சொல்லி இது தான் இம்மண்ணின் வரலாறு வாழ்வியல் என கதைகட்டி நம்பவைத்து திரிபுகளை செய்தவர்கள் தங்கள் இருப்பே தகர்ந்துவிடுமென அஞ்சுவது புரிகிறது .. இதையே பாரதபண்பாடு எனச் சொல்லியிருந்தால் செய்திகளால் முழ்க செய்திருப்பர் அவர்கள் மகிழ்வை தமிழர் பண்பாடு இல்லாமல் செய்திருக்கிறது..
..
இத்தகைய அகழாய்வுகள் அவர்களுக்கு எரிகிறதென்றாலே நமது தொன்மை உலகறிகிறதென்று பொருள் ..
இதுவரை அவர்கள் சொன்ன புரட்டுகள் புராணகதைகள் அறிவியலால் ஆழபுதைக்கபடுகிறதென்று பொருள்..
பாரத பண்பாடின் ஒரு பகுதிதானே தமிழர் பண்பாடு என சிலர் "வியாக்கியானம்" தருகிறார்கள்.. பாரத பண்பாடென்பது புராணங்களில் வந்தது தமிழர் பண்பாடோ வாழ்ந்த வரலாற்றில் தெரிகிறது..
அகழ்வைதொடர்வோம்
அண்ணா சொன்னதைப்போல தமிழர் நாகரீக பண்பாடு தீ🔥 உலகமெல்லாம் பரவட்டும்..
..
ஆலஞ்சியார்