Wednesday, January 29, 2020

நொண்டி குதிரை ரஜினி

வரிஏய்ப்பு ரஜினி..
சினிமாவில் தான் சேர்த்த சொத்துக்கெல்லாம் சரியான வரியை  செலுத்தியதில்லை இவரென்றில்லை நிறைய பேர் பிரபலங்களாய் இருப்பவர்கள் வெள்ளையில் கொஞ்சமும் கறுப்பில் நிறையவும் வாங்குவதைதான் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.. வியாபார சந்தையில் கிராக்கி இருப்பதை காசாக்க நினைக்கும் எண்ணம் அதை சரியாக பயன்படுத்தி நாலுகாசு பார்த்த கூட்டம் பெரிய பிம்பத்தை கட்டமைத்து கொண்டாடும் .. சில தோல்விகள் போதும் இருந்த இடம்தெரியாமல் போக .. நிழலை நம்பும் மிகப்பெரிய சந்தையில் இது போன்ற வரிஏய்ப்புகள் புதிதல்ல .. ஆனால் தன்னை "பரமயோக்கியன்" எனச் சொல்லி திரிபவர்கள் மற்றவர்களுக்கு ஒழுக்கத்தை நேர்மையை போதிப்பதும் கேலிக்கூத்து .. 
..
சினிமாவை கேளிக்கையாக பார்த்து ரசித்து கடந்து போகவேண்டுமே தவிர தூக்கிவைத்து கொண்டாடுவதால் நாடு "கழிசடைகளை" முன்னிறுத்தி அரசியல் செய்து வந்திருக்கிறது .. "மகாயோக்கியன் " என்ற "வேசம்"கட்டல் நிழலை நிஜமென்று நம்பவைத்தல் 
மூடத்தை விட ஆபத்தானது .. சினிமாவை அரசியலுக்கு பயன்படுத்தி சமூக அவலங்களை படம்பிடித்துகாட்டி விழிப்புணர்வை தரலாமே தவிர 
அதை,அதில் நடித்தவர்களை பின்பற்றுவது பேராபத்தை தருமென காலம் நமக்கு உணர்த்தியிருக்கிறது .. சினிமா நாடகம் கூத்து இவையெல்லாம் கலைவடிவங்களாக காணவேண்டுமே தவிர அதில் சொல்லபடும் சேதியை கேட்டு புரிந்து தெளிவுபெற வேண்டுமே கொண்டாடலாமே தவிர.. அரசியலில் பொதுவாழ்விற்கான தகுதியாக கருதிடகூடாது ..
பொதுவாழ்விற்கு வருவதற்கு சினிமாவில் நடித்தால் மக்கள் அதிகம் ரசிக்கிற கலைஞனாக இருந்தால் போதும் என்பது அறிவிலித்தனம் .. 
சினிமா பொழுதுபோக்கு அவ்வளவுதான் .. அரிதாரம் கலைத்துவிட்டால் மவுசு போய்விடும் .. யாருக்கும் அரசியல் பார்வை இருக்கலாம் யார் வரவேண்டும் வரகூடாதென்ற அறிவும் விமர்சனமும் கூட அவசியம் தேவை .. பொதுவாழ்விற்கு  வர தொண்டாற்றும் மனபான்மை வேண்டும் மக்களோடு இரண்டறகலந்து அவரது விருப்புவெறுப்புகளை உணர்ந்து ..நீண்டகாலம் பயிற்சியும் உடன் எப்போதுமிருப்பேன் என்ற உணர்வை மக்களுக்கு தரவேண்டும் ..கட்சியே தொடங்காமல் நேரடியாக முதல்வர் கனவோடு வருகிறவர்கள் அவர்களை மிகப்பெரிய இயக்கத்தோடு ஒப்பிடுவது (ஒப்பீடே தவறு) அவரால் தனித்தன்மையோடு நல்லாட்சி தரமுடியுமென பேசி திரிவதெல்லாம் வாக்குவங்கியே இல்லாத சில அலப்பரைகளின் "குமாரசாமி கூட்டல்" கணக்கை போல தப்பாகி போகும் ..
..
வாடகை பாக்கி தரமாட்டேன் வரிபாக்கியை செலுத்தமாட்டேன் கட்சி தொடங்கமாட்டேன் ஆனால்
அரசியல் பேசுவேன் அதிலும் யாரோ எழுதிக்கொடுத்ததை அது சரிதானா என யோசிக்காமல் பேசி "அறிவாளி"யாக நடித்து கைத்தட்டல் பெறுவேன் .. சுயசிந்தனையற்ற ஜடமாய் சிலர் பின்னின்று இயக்கவதற்கு "தலையாட்டி" பொம்மையாய் ஏற்கனவே பதிவேற்றபட்டதற்கிணங்க செயல்படும் ரோபோவாய் இருந்தால் மக்கள் மன்றம் மௌனமாய் அடி தரும்..எழ முடியாதவாறு .. இதுவரை சேர்த்து வைத்த எல்லாம் போகும் புகழ் பணம்  பெயர் எல்லாம் போகும் ..
..
அரசியல்/மக்கள் சேவை என்பது சமூகநலன், வாழும் நிலம் குறித்த அக்கறை, ஏற்றதாழ்வற்ற எல்லாருக்குமான சரிநிகர் உரிமை, தன்னலமற்ற சேவை,கடும் உழைப்பு .. விருப்புவெறுப்பிலும் தொடர்பணி,தொலைநோக்கு சிந்தனை விளிம்புநிலை மக்களின் உரிமை உயர்வு .. போகும் பாதை குறித்த அறிவு இவையாவும் வேண்டும் இன்னும் பல.. ஆனால் எதுவுமற்ற போதை தரும் புகழ் ஒன்றே போதுமென கருதினால் காகிதகப்பலை போல முழ்க நேரிடும் ..
..
நொண்டிகுதிரை..
..
ஆலஞ்சியார்

Tuesday, January 28, 2020

குஜராத்

குஜராத் மாநிலத்தில் 2002 ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 33 முஸ்லிம்களை  உயிரோடு எரித்து கொன்ற 17 குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது ..
 2002-ம் ஆண்டு, பிப்ரவரி 27-ம் தேதி, கோத்ராவில் நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கலவரம் நடந்தது சர்தார்புராவில் சிறுபான்மை சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் ஒரு கும்பல் கலவரத்தில் ஈடுபட்டபோது  உயிருக்கு பயந்தோடி இப்ராஹிம் ஷேக் என்பவர் வீட்டில் பதுங்கியிருந்த நேரத்தில்..கலவரக் கும்பல் அந்த வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில்  மொத்தம் 33 பேர் ( 22 பெணகள்) உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.. இந்த வழக்கில் தான் 
இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி மத்திய பிரதேசத்தில் தங்கி #ஆன்மீக மற்றும் சமூக பணிகள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது ..
..
பெரியாரை அவமரியாதையாக பேசியதற்கு பரிசாக #ரஜினிகாந்த் மீது தொடரபட்ட வருமான வரிஏய்ப்பு வழக்கை வருமானவரித்துறை திரும்பபெற்றிருக்கிறது .. சிலைக்கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் பெற்ற டிவிஎஸ் வேணு சீனிவாச அய்யங்காருக்கு பத்மவுபூஷன் பட்டம் வழங்கி மத்திய அரசு மகிழ்கிறது ..  இதெல்லாம் சமீபத்திய நிகழ்வுகள் அரசின் லட்சணத்தை ‍.. நீதிமன்றங்களின் மீது அரசின் பாசபிணைப்பை நமக்கு உணர்த்தும் .. பாதகமாக தீர்ப்பு சொன்னால் மர்மமாக சாகவேண்டி வருமென முந்தைய நிகழ்வுகள் கண்முன் வந்து போகிறது .. சுயசார்புடைய அரசு நிறுவனங்களில் அரசின் ஆதிக்கம்  ஜனநாயக விரோதம் என பேசினாலும் புரியாது சொந்தபகையில் கொலையுண்டாலும் மதவெறியை தூண்டுவார்கள் கேட்டால் அரசை மிரட்டுவார்கள் ..இந்த நாடு சீரழிவை நோக்கி வேகமாக விரட்டபடுகிறது .. 
எல்லாதுறைகளிலும் பாசிசத்தின் கோரபற்களால் பிராண்டி  வருகிறது தாங்கள் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற நிலை ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல..
..
சட்டமன்ற உறுப்பினர் பதவி நீக்க வழக்கு இன்னும் எத்தனை காலம் கடக்கவேண்டும் .. அப்பாவு வழக்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை முடிந்தும் முடிவை அறிவிக்க தடை .. காலதாமதமான நீதியால் ஜெயலலிதாவை புனிதராக்கி அரசின் செலவில் மக்கள் வரிப்பணத்தில் "கொள்ளையடித்தவருக்கு" மண்டபம் கட்டுகிற அவலம்.. சரியான நேரத்தில் நீதி வழங்கியிருந்தால் இன்று தமிழ்நாடு சுடுகாடாய் ஆகியிருக்காது .. நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க தொடங்கியிருக்கிறார்கள் .. எத்தனை வழக்குகளை  வேண்டுமென்றே தாமதப்படுத்தி அநீதி இழைக்கிறது உச்சபட்ச நீதிபரிபாலன அமைப்பு ..
மக்களின் கோபம் இயலாமை விரக்தி  வேறொரு பரிணாமத்தை அடைந்தால் அது கட்டுக்கடங்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது ..நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கை வற்றுகிறபோது 
மக்கள் புரட்சியாக வடிவம் பெறும் என்பதை உணர வேண்டும் ..
..
நீதி வல்லவனுக்கானதாய் மாறிபோனது ..
..
ஆலஞ்சியார்

நேரு

உழைப்பவரை தேடிபிடித்து பதவியை தராவிட்டால் இயக்கம் வளராது என்றார் பேரறிஞர் அண்ணா..
..
திமுகழகத்தின் முதன்மை செயலாளராக 
நேரு தேர்வாகியிருக்கிறார் ..மகிழ்ச்சி வாழ்த்துகள்
பொறுப்பு  கூடியிருக்கிறது .. சரியான தேர்வும் கூட எளிய தொண்டனிடமும் தலைகனத்தோடு கதைக்கிறவர் இல்லை மாறாக அரவணைத்து செல்லும் ஆற்றல் உண்டு ..சிலர் பொறுப்பு வந்தவுடனே தான்தான் எல்லாம் என்பவர்களுக்கு மத்தியில் தான் இயக்கத்தின் வளர்ச்சியை மட்டுமே கொண்டாடுபவனென தெளிவோடு இருக்கிறவர்களை தேடி பதவிகள் செல்ல வேண்டும் ..ஒருவித மிதப்போடு "ராஜா வேசம் கட்டுகிறவன்" தேவையில்லை..  சிலருக்கு மட்டுமே "நலனாய் "இருப்பவர்கள் தங்களின் புகழ் ஒன்றே குறியோடு செயல்படுபவர்கள்.. தானென்ற அகந்தை கொண்டவர்கள் வெளியேற்றபடவேண்டும் 
சுயநலம், பதவிமோகம் செயல்பாடுகளில் சுணக்கம் இவையெல்லாம் தவிர்த்து அல்லது களையபடவேண்டும்,..
..
நேரு.. 
புள்ளம்பாடி ஒன்றிய தலைவராக தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் என படிபடியாக உயர்ந்தவர் .. கழகத்தின் இக்கட்டான காலகட்டத்தில் மாவட்ட செயலாளர் பொறுப்பை ஏற்று திருச்சியை மீண்டும் திமுக கோட்டையாக்கியதில் பெரும்பங்கு உண்டு ..அயராத உழைப்பு சாமானியனும் சந்திப்பதற்கு தடையேதுமில்லாத எளிமை திமுக மாவட்ட செயலர் என்றாலே தனி "ராஜபார்ட்டை" வகுத்து செயல்படுவோர் மத்தியில் கழகம் தொண்டர்களின் பலத்தில் இருக்கிறதென்று உண்மையை அறிந்து செயல்பட்டவர் ..தலைமையின் கட்டளையை ஏற்று சுழன்று உழைக்கும்,செயல்வீரர் .. இவரின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் கோ.சி.மணியை போல அடித்தளத்தின் மீது இருக்கும் எல்லோரையும் அரவணைத்து ஒரு மாவட்ட செயலாளர் எப்படி செயல்படவேண்டுமென்று கோ.சி.மணியை பார்தேது தெரிந்துக்கொள்ளுங்கள் என்பார் கலைஞர் .. அதைபோல் நேருவை பார்த்து தெரிந்து செயல்படுங்களென தளபதி கூறலாம் நேருவிற்கு அவ்வளவு தகுதி உண்டு ..
..
திமுக கட்சியல்ல அதொரு இயக்கம் தொடர்ந்து 
உழைப்பவர்களை கண்டறிந்து வாய்ப்புகளை வழங்கிக்கொண்டே இருக்கும், எத்தனை உயரத்தில் இருந்தால் இறுமாப்போடு இருந்தால் சரிவு தானே வருமென்பதை காலம் உணர்த்திக்கொண்டே இருக்கும் ..கலைஞரை போல அல்ல தளபதி என முன்பொருமுறை எழுதியிருந்தேன் ..களைவதும் சிறந்தவரை முன்னிருத்துவதிலும் முகம் பார்ப்பதில்லை.. உழைப்பவரை கண்டு இயக்கத்தை வழிநடத்த ..மக்களோடு கலந்தவரை உயர்த்திபிடிக்க தயக்கமில்லையென தளபதி தன் செயல்மூலம் செய்துகாட்டியிருக்கிறார்.. திமுகவிற்கு இன்றைய தேவை #நேருக்களே..
..
புரிந்தவன் புத்திசாலி..
வாழ்த்துகள் நேரு 
..
ஆலஞ்சியார்

பெரியார்

ஏன் பதறுகிறார்கள் 
பெரியாரின் பெயரை சொன்னாலே பதட்டம் வருகிறதே ஏன் பெரியாரை ஒரு வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது அந்த மனிதரின் தொண்டின்  முன் எதுவும் நிற்காது.. பாசிசத்தின் கரங்கள் எவ்வளவு உயர்ந்தாலும் கிழவன் தடிகொண்டு தட்டிவிட்டுவிடுவார்கள் அதிகாரத்தை மையபடுத்தி அரசியல் செய்பவர்கள் ஒருசிலரை தவிர பெரும்பாலானோர் கரைந்தே போவார்கள் ஆனால் சமுகப்பணியை செய்பவர்கள் அதிலும் நாற்றமெடுத்த சமுதாயத்தை சுத்த செய்து 
பார்பனர்கள் கையில் சிக்கி சின்னபின்னமாய் கிடந்த தமிழை தமிழ்க்கலை பண்பாட்டை ,தமிழனை நிமிர்த்தி நெஞ்சுரத்தோடு நடமாடவிட்ட பெருங்கிழவனை தமிழகம் கொண்டாடிக் கொண்டேதானிருக்கும் ..
..
கிழவன் பெரும் நெருப்பு  துர்நாற்றம் வீசும் மூடத்தை பொய்களால் ஆன சடங்குகளை மனிதனின் அறிவை மழுங்க செய்யும் மதத்தை.. இல்லாத கடவுளை சொல்லி ஏமாற்றும் கயமையை 
மனிதனை பிரித்து வர்ணம் பூசும் கொடுமையை
எரிக்கும் பெரும் நெருப்பு .. அறிவை கொண்டு வாழவும், அறிவுக்கொவ்வாதவற்றை பிரித்தறிந்து 
தவிர்க்கவும் உழைக்கிறவனின் உரிமையை பறிப்பதை எதிர்க்கவும் அனைவருக்கும்,சமமான கல்வியை தர மறுக்கும் கொடுமையை கண்டு சிலிர்த்தெழுந்து போராடவும் சனாதன தர்மம் என்ற பெயரில் வேறுபாட்டை ஏற்படுத்தும் கயமையை எதிர்க்கவும் தான் கிழவன் எங்களை, இந்த தமிழ் சமூகத்தை கட்டமைத்திருக்கிறார் .. இங்கே யாரை தவிர்த்துவிட்டு அரசியலை பேசிட முடியும் ஆனால் பெரியாரை தவிர்த்தால் சாமி கும்பிடுகிறவன் கூட சாட்டை எடுப்பான் .. தவத்திரு குன்றக்குடி அடிகளார் 
ஆத்திகம் என்பது உயர்ஜாதியினரின் நலம் 
நாத்திகம் என்பது பெருவாரியான தமிழுக்கான நலம் காப்பதென்றார்.. ஆம் திராவிடம் எப்போதுமே தமிழர் நலனுக்காகவே சிந்திக்கிறது ..ஆனால் பாஜகவோ ஆர்எஸ்எஸோ பார்பன நலன் ஒன்றே குறிக்கோளாய் செயல்படுகிறது .. இந்துக்கள் ஒற்றுமை எனச் சொல்லும் பாஜக தமிழில் குடமுழுக்கென்றால் சனாதனம் பேசும் பார்பனீயம் பேசும் .. 
..
பெரியார் கடவுள் மறுப்பை மட்டுமே சொல்லவில்லை அவர் பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தார் விதவை திருமணம், சொத்தில் பெண்களுக்கு பங்கு, பெண் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் சொந்தகாலில் யாரின் தயவின்றி நிற்க கல்வியே உதவுமென போராடினார் .. குலக்கல்வி என வந்தவனை செவிட்டில் அறைந்தாற்போல இனி எக்காலத்திலும் எழ முடியாதவாறு அடித்தவிரட்டினார் .. பார்பன மேலாதிக்கத்தை தகர்த்து இடைசாதி கடைசாதிகாரனையும் அரசாங்க வேலையில் அமர்த்த காரணமாய் இருந்தார் .. பெரியார் சிந்தித்ததை செயலில் சட்டமாக்கி சமூகநீதியை நிலைநாட்டியவர் கலைஞர் ..
..
திராவிட தந்த அடி பலமானது அதனால் தான் தமிழகத்தில் எழவே முடியாதவாறு மக்கள் காலால் மிதிக்கிறார்கள் .. எத்தனையோ வடிவங்களில் செயல்படுத்த முயன்றும் இங்கே "பெரியாரின் ஒலி"
அனைத்தையும் தடுத்துநிறுத்தி காக்கிறது .. இன்று அரைகுறையாய் பாசிசத்திற்கு வால்பிடிக்கும் கூட்டம் பெரியாரை படித்தால் புரிந்து படித்தால் 
பார்பனர்கள் நடமாடவே  முடியாமல் போகும் 
..
பெரியார் பெரும் நெருப்பு 
..
ஆலஞ்சியார்

Tuesday, January 21, 2020

என்ன வக்கிரம்  .
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுதேர்வெழுத வேறுபள்ளிக்கு செல்லவேண்டுமாம். பத்துவயது குழந்தை மீது திணிக்கபடும் பொதுதேர்வே சகிக்கமுடியாத பெரும்குற்றம் ..வெகுவாக குழந்தைகளை மனதளவில் பாதிக்கும் கொடுஞ்செயல் இதில் படித்த பள்ளியில் எழுத கூடாதென்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் 
ஆட்சியாளர்கள் அடிமைத்தனத்தில் ஊறுப்போனதால் சிந்திக்கும் ஆற்றலை இழந்தார்கள் இப்போது சைக்கோவாகவே மாறியிருப்பதை தான் இது காட்டுகிறது ..
..
சாதாரணமானவனுக்கு மிகவும் விளிம்புநிலை மக்களுக்கு,ஏழைகளுக்கு கல்வி மறுக்கபடுவதற்கு சமம் தொடர்ந்து மனதளவில் தளர்த்தி அக்குழந்தையை உயர்கல்விக்கு தகுதியில்லாதவனாக மாற்றி ..அப்பன் தொழிலை செய் அடிமையைபோல கூலிப்பணிக்கு செல் கல் உடை என சொல்லாமல் சொல்கிறது .. கல்வி எல்லோருக்கும் எளிமையாக கிடைக்கவேண்டுமென்பதற்காக உலகில் எல்லா நாடுகளும் எளிமையான முறையில் பயிற்றுவிக்க நினைக்கிறது ஆனால் இந்தியாவில் தலைகீழ் .. filter வடிகட்டுவதாக சொல்லி தகுதியுள்ளவர்கள் மேலே வரட்டுமென திசை திருப்பி ஒரு குறிப்பிட்ட வர்க்கம் பணமுள்ளவன் மட்டுமே கல்விகற்கும் நிலைக்கு கொண்டுவருவதே அரசின் நோக்கமென்கில் இந்த அரசை வீழ்த்தியே ஆகவேண்டும் .. 
..
நன்னூல் சொல்கிறதே என் மகன் என் ஆசானின் மகன் மண் மகன் (மன்னரின்மகன்) பொருள் தருவோரின் மகன் அதைபோல தர நினைக்கிறதை
 ஏழைகளுக்கு கல்வி இனி  இல்லையென அரசே சொல்லாமல் சொல்கிறதா .. பெரியாரும் அண்ணாவும் பேரருளானன் கலைஞரும் பாடுபட்ட படித்த சமூகத்தை உருவாக்க வேண்டுமென நினைத்தார்களே அதில் மண் அள்ளி போட அண்ணாவின் பெயரில் கட்சி நடத்துபவர்கள் எண்ணலாமா ..  ஒரு கிலோமீட்டர் இடைவெளியில் துவக்க பள்ளி துவங்கி குழந்தை அருகிலேயே கல்வி கற்க செய்தாரே பெருந்தகையாளர் கலைஞர் அவரின் கனவை சிதைக்க நினைக்கிறார்களா. எட்டாயிரம் பள்ளிகளை ராஜகோபாலச்சாரி மூடிவிட்டார் அதை திறக்க ஏற்பாடு செய்யுங்களென பெரியார் கேட்டுக்கொண்டதறிகிணங்க துவக்கபள்ளிகளை துவங்கினாரே காமராஜர் .. 
பள்ளிக்கு குழந்தை அனுப்ப மறுக்கிறார்கள் என்ற போது மதிய ஒருவேளை உணவை போடுங்கள் தகப்பன்கள் குழந்தைகளை அனுப்புவார்களென பெரியாரின் பேச்சை கேட்டு துவங்கி.. அதற்கான நிதிஆதாரம் இல்லாதபோது தனவந்தர்களிடம் பெற்று அதுவும் போதாது என வந்த போது 
விவசாயிகளிடத்தில்  முதல் மரைக்காய் நெல்லை சாமிக்கும் இரண்டாவது மரைக்காய் நெல்லை ஊர் கோவிலுக்கும்,கொடுக்கிறீர்களி மூன்றாவது மரைக்காய் நெல்லை எனக்கு தாருங்கள் நான் குழந்தைகளுக்கு சோறுபோடுகிறேன் என காமராஜர் கேட்டாரே இப்பேர்பட்ட பெருமகன்களின கனவை நசுக்கபார்க்கிறதா பாசிசம் ..
..
இவர்களின் நோக்கம் இதுதான் வடிகட்டல் என்ற பெயரில் நம் குழந்தை படிப்பதை ஏழைகள் வக்கற்றவனின் குழந்தைகள் உயர்கல்வி நோக்கி வருவதை ஆரம்பத்திலேயே தடுத்த நிறுத்த உங்கள் தொழிலை நீங்கள் செய்யுங்கள் உங்களுக்கு கல்வி எதற்கு என அடிமைகளின் எஜமானர்கள் கட்டளையிட்டிருக்கிறார்கள் .. 
இனியும் நீங்கள் அமைதி காத்தால் குலத்தொழிலை தான் செய்யவேண்டிவரும் இந்த அரசை ஒரு நொடிபொழுதுமே தாமதியாமல் கவிழ்க்க வோண்டும்  நேர்மையாக செய்வோமென இனியும் காலங்கடத்துவது சமுகத்திற்கு செய்கிற கேடு ..
தீமையை கண்டு எழுவது கூட அறம் தான் 
இந்த அடிமை அதிமுக அரசு வீழ்த்த வேண்டியது நமது கடமை ..
..
ஆலஞ்சியார்

ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும்

ரஜினி அவர்கள்
95 ஆண்டு காலம் தமிழ் மக்களுக்காக வாழ்ந்த தந்தை பெரியாரைப்பற்றி பேசும்போது யோசித்து சிந்தித்து பேசவேண்டும் - திமுக தலைவர் தளபதி ஸ்டாலின்..
பெரியாரை பற்றி பேசுகிற அளவிற்கெல்லாம் ரசினிக்கு அறிவு கிடையாது.. 
1995 ல் தான் Out look இதழ் வந்தது அதுகூட பரவாயில்லை இந்து குழுமத்திலிருந்து வரும் அவுட் லுக் என்றாரே பாருங்கள்..  2017 ல் கார்ட்டூன் பாலா கைதின் போது வந்த கட்டுரையை படித்துவிட்டு சொல்கிறார் அதில் துக்ளக் 1971 ல் எழுதிய செய்தியை குறிப்பிட்டிருந்தது  ஆனால் தவறி இந்து குழுமம் என சொல்லிவிட்டார் ஒருவித பதட்டத்தில் மனிதர் இருப்பது புரிகிறது .. ரஜினி முழுமையாக அரசியல் அறிந்தவராகவோ அல்லது பெரியாரை படித்ததவராகவோ இல்லை என்பதே உண்மை 
தெரியாத விடயங்கள் பற்றி மௌனமாய் கடந்து போயிருக்கவேண்டும் (மகோரா )எம்ஜிஆரைபோல அதுதான் அவருக்கு நல்லது ..
..
ஏற்கனவே இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் ராமன் நிர்வாணமாக எடுத்து செல்லபட்டதாகவும் செருப்புமாலை அணிவித்ததாகவும் செய்தி வெளியிட்டதற்கு தி.க வழக்கு தொடர்ந்தது  நீதிமன்றத்தில் நேர்நின்று ரங்கராஜன் அய்யங்காரும் ராமசாமி அய்யரும் மன்னிப்பு கேட்ட வரலாறெல்லாம் ரஜினி இன்னமும் படிக்கவில்லை அல்லது இவரை இயக்குகிறவர்கள் சொல்லி தரவில்லை சினிமாவை கண்டு விசிலடிக்கிறான் கைதட்டுகிறான் என்பதற்காக தமிழனை கூமுட்டையென  நினைத்துவிட்டார் ரசிகன் நடிப்பிற்குதானே தவிர உன் கருத்திற்கில்லை ..
..
"யார் சொன்னாலும் ஏன் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே" என பேராசான் சொல்லி சென்றிருக்கிறார் .. எல்லாவற்றையும் கேட்டு கைதட்டி தலையசைக்க இது வடமாநிலம் இல்லை சினிமாவையும்   அரசியலையும் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறான் இன்று ஊடகங்கள் பொய்யை பரப்பினாலும் பதிலடி தர அவனிடம் வலைதளங்கள் உண்டு எம்ஜிஆர் காலமல்ல மறுநாள் செய்தி அதற்கு மறுநாள் மறுப்போ எதிர்ப்போ வெளியிட இப்போதெல்லாம் உடனுக்குடன் தலையில் கொட்டுவார்கள்..
..
பாபா படத்தில் "பெரியார் தான் ஆனதென்ன ராஜாஜி" வரிகள் ஒரு
பாடலில் இடம்பெற்றது ..ஆசிரியர் வீரமணி ரஜினி தொடர்புக்கொண்டு பேசினார் .. ஆடியோ வெளியாகிவிட்டது படத்தில் வராமல் பார்த்துக்கொள்கிறேன் என்ற ரஜினி மன்னிப்பு கேட்ட வரலாறு உண்டு .. இப்போது மன்னிப்பு கேட்க முடியாதென்கிறார் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை நீதிமன்றத்தில் நேர்நின்று உலகறிய மன்னிப்பு கேட்பார்.. ஆம் உதயநிதி ட்விட் போல
"பெரியார் விடயத்தில் ரஜினி உண்மை தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார் ..காவிரி விடயத்தில் மன்னிப்பு கேட்டதை போல.. நெருப்பின் மீது கை வைத்தால் சுடும் பாஜகவோடு கூட்டு இல்லை எனச் சொல்லிக்கொண்டே திரிந்தவரை தமிழக மக்களுக்கு எதிரானவராக நிறுத்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ்..
பெரியார் நீங்கள் நினைக்கிற அளவில் வீழ்த்திவிட முடியாது .. அவரின் கொள்கை வழி பயணிப்போர் 
அவரை உள்வாங்கியோர் அவரை புகழ்ந்து கொண்டு நன்றியோடு தமிழர்கள் இருக்கும்வரை உங்கள் எண்ணம் ஈடேறாது ..
வேறு வழியில்லை வழக்கை சந்திக்க நேரிடும் 
மன்னிப்பு கேட்க வேண்டுவரும்..
..
ஆலஞ்சியார்

Monday, January 13, 2020

தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விீ

போகி...
தமிழனுக்கு ஏது போகி...
எரிக்கவேண்டுமென்பதற்காகவா
எரி...
நெஞ்சில்..
கயமையை எரி..

எரி..
பொறாமையை,
பகைமையை,
தீண்டாமையை,
எரி..

மார்கழி கழிந்து..
தை..தை..குதித்து.
தை மகள்
வருகிறாள் ..
கூத்தாடு ..
கொண்டாடு ..
புதிதாய் கொண்டாடு ..
புத்தாண்டாய்..
தமிழ்ப் 
புத்தாண்டாய்..
கொண்டாடு..
..
கூத்தாடு,  
கொண்டாடு,
தமிழா, கொண்டாடு
பொங்கல்நாளை,
#தமிழ்ப்புத்தாண்டாய்..
..
ஆரியர்கள் ஆம் பார்பனர்கள் பொங்கலை கொண்டாடுவதில்லை .. சங்கராந்தி எனச் சொல்லி நம்மில் இருந்து பிரிந்து நிற்பான் .. ஆரிய கலப்பில்லாத தமிழருக்கான ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றார் #பெரியார் .. 
மதம் சாராத 
தமிழனுக்கான பண்டிகை .. அறுவடை திருநாள்.. புது அரிசியில் பொங்கலிட்டு கொண்டாடும் திருநாள் .. உழவுக்கு உறுதுணையாய் இருந்த மாட்டிற்கும் நன்றிச் சொல்லும் பெருநாள் 
சாதிமத பேதமற்ற திருவிழா ‍.. அதனால் தான் இதை பார்பனர்கள் கொண்டாடுவதில்லை இதில் மதத்தையோ புராணத்தையோ கலைச்சாரமென்ற பெயரில் மூடவழக்கத்தையோ திணிக்க முடியாதென்பதால் பார்பனர்கள் கொண்டாடுவதில்லை என்றார்..
..
ஆம்
அவர்கள் கலாச்சாரம் வேறு.. அதனால் தான் அவர்கள் தமிழர்கள் மீதான பகையோடே திரிகிறார்கள் ..  பொங்கல் விடுமுறையை கூட கட்டாய விடுமுறையிலிருந்து நீக்கி நமது பண்பாட்டின் மீதான தாக்குதலை தொடுக்கிறது ஆரியம் .. ஆனால் நாம் மௌனமாய் கடந்து போகிறோம் .. தொடர்ந்து தமிழ் இனத்தின் மீதான பகையை தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் இந்த நிலை மாறவேண்டும் .. மாறும் நிச்சயம் மாறும் .. இந்த அடிமைகளையும் பாசிசவாதிகளையும் விரட்டுநாளில் நிச்சயம் மாற்றம் வரும்.. 
..
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டென்று அறிவித்து சட்டமன்றத்தில் பேசும் போது கலைஞர் பெருமகன் ஆங்கில புத்தாண்டை எப்படி வரவேற்று கொண்டாடுகிறீர்களோ அதை போல கொண்டாடுங்கள் .. உங்கள் இல்லங்களில் அலுவலங்களில் வண்ணவிளக்குகளால் அலங்கரித்து புது ஆண்டை வரவேற்று கொண்டுங்கள் என்றார் ..
பேரறிஞர் அண்ணா பொங்கல் பண்டிகை என்றழைக்காதீர்கள் விழா என அழைக்க சொன்னார் விழா என்றால் தான் கொண்டாடுவதாக பொருள் ..பண்டிகை என்றால் சடங்காகி போகும் 
..
பொங்கல்விழாவை கொண்டாடுவோம்
..
என் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 
பொங்கல் விழா
வாழ்த்துகள் .
ஆலஞ்சி.மு.மன்சூர் ..

Thursday, January 9, 2020

நாடு கெடும்

மோடி, அமித்ஷா விரும்பினார்கள்... மாணவர்கள் தாக்கப் பட்டார்கள் உத்தவ் தாக்ரே..

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் விவகாரத்தில் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் என்ன விரும்பினார்களோ அதுதான்  நடந்து கொண்டிருக்கிறது என சிவசேனா அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது.. கூடவே பழகியவர்களுக்கு தானே உண்மை முகம் தெரியும் 
எங்கு சென்றுக்கொண்டிருக்கிறோமென தெரியவில்லை ரௌடிகளை கட்சி சேர்த்துக்கொள்கிறது அதையும் பெருமையாக சொல்கிறது ஆள்கடத்தல் கட்டபஞ்சாயத்து அடிதடி மிரட்டல் கற்பழிப்பு என "அதிமுக்கியஸ்தகர்கள்" உடனே பாஜகவில் சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள் .. நாக்கை அறுப்பேன், என்பவர் இரண்டாம்கட்ட தலைவராகலாம் பொதுவெளியில் காவல்துறையை மிரட்டி நீதிமன்றத்தை மயிறென்றால் ஒருபடி மேலே கவனம் பெறலாம் .. அறிவிற்கே சம்பந்தமில்லாமல் கதைக்கும் கூச்சலிடும் நாராயணன்களும் ராகவன்களும் மேதையாகலாம் இதுதான் நவீன இந்தியாவில் பாஜகவில் சேர பங்காற்ற அடிப்படை தகுதி..
வெட்கபடுங்கள் .. இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தால் இரண்டாம் விடுதலைபோரை  சந்திக்கவேண்டுமென மேற்கு வங்கத்திற்கே சென்று உரக்க சொன்னார் தளபதி.ஸ்டாலின்.. 
ராகுலை பிரதமராக  முன்னிறுத்தியபோது கிண்டல் செய்த ஊடகங்களும் நடுநிலைநக்கிகளும்,,இவரென்ன கலைஞரா என எகத்தாளம் பேசியவர்களும் இன்று வாய்மூடி மௌனம் காக்கிறார்கள் ..
..
மோடி இன்று நாட்டின் தொழிலதிபர்களை சந்தித்தார் தன் சகாக்களோடு .. நாட்டின் நிதியமைச்சர் பங்கேற்கவில்லை .. நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் தினம் தினம் அறிக்கை தருகிறார்கள் இந்நிலையில் லாபகரமான பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கலாமா என யோசிக்கிறார்கள் .. நிர்மலா  நிதியமைச்சராக இருக்க தகுதியை இழந்து நிற்கிறார் நிதியமைச்சரை தவிர்த்துவிட்டு தொழிலதிபர்களோடான உரையாடல் அவரை இழிவு செய்வதற்கு சமம்.  பேசாமல் ராஜினாமாவை கேட்டு பெறலாம் .. மோடி அரசு எப்போதுமே தகுதியானவர்கள் கையில் தருவதில்லை .. பட்டபடிப்பு சான்றிதழே இல்லாத ஸ்மிதா இராணி மனிதவள மேம்பாட்டை உயர்கல்வித்துறையை கவனித்தார் என்பதையெல்லாம் கடந்து வந்திருக்கிறோம் மூத்திரத்தை பானமாக அறிவிக்கும் முட்டாள் தேசமாக மாறிவரும் சூழலில் அறிவாளிகள் சிறந்த ஆளுமைகள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் .. சிறந்தவரை வேண்டாமென வைத்ததின் விளைவை இன்று நாடு சந்திக்கிறது ..சந்தி சிரிக்கிறது ..
..
திடீரென ஒரு இரவில் பணமதிப்பிழப்பு   செய்தபோது  இந்தியாவை காக்கவந்த தெய்வம் ரேஞ்சுக்கு புகழ்ந்தவர்கள்.. அன்று மோடியின் உடல்மொழியை கண்டிருப்பார்கள் இன்று மோடியின் முகத்தை காணவேண்டும் .. கையேறு நிலையில் இந்தியாவை நிறுத்திவிட்டு மத கலவரத்தை மதவெறியை ஊட்டினால் எல்லாம் மறந்து போவார்களென எண்ணியது வீண்போனது .. பொதுத்துறை ஒவ்வொன்றாக விற்க தொடங்கியிருக்கிறார்.. அறுபதாண்டுகள் காங்கிரஸ் என்ன செய்தது என கேட்டு வீரவசனம் பேசியவர் காங்கிரஸ் கொண்டுவந்த நாட்டின் பெருமைமிகு பொதுநிறுவனங்களை கூறுபோடுகிறார் .. பாஜக அரசால் ஒரு பெருந்திட்டமோ பெரிய பொது நிறுவனமோ மக்களுக்காக செய்திருக்கவில்லை.. இருப்பதையும் தாரை வார்க்கிறார் .. கிழக்கிந்திய கம்பெனியை விரட்ட கடைசியில் விடுதலைப் போரை சந்திக்கவேண்டியிருந்தது இப்போது இரண்டாம் விடுதலைப்போருக்கு நாம் தயாராக வேண்டியிருக்கிறது..
..
"நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்"
என்றான் வள்ளுவன்
ஆம்..
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்..
..
நாடுகெடும்
..
ஆலஞ்சியார்

Sunday, January 5, 2020

காட்டிமிராண்டிகள்

உண்மையில் யார் பயங்கரவாதிகள் கலவரகாரர்கள் தீவிரவாதிகள் .. குலைநடுங்குகிறது பல்கலைகழக வளாகத்தில் புகுந்து முகமூடியோடு பேராசிரியரை மாணவர்களை தாக்குதல் நடத்துகிறார்கள் கிரிமினல்கள் அரசின் கடைக்கண் பார்வை இருப்பதால் எதை செய்தாலும் யாரும் கேட்கபடமாட்டோம் சுதந்திரமாய் திரியலாம் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம்  ABVP மாணவர் அமைப்பு தான் இதை செய்திருப்பதாக இந்து நாளிதழ் கூட எழுதுகிறது .. மாற்று கருத்தோ சிந்தனையோ கூடாது என்ற சிந்தனை மிக ஆபத்தானது வன்முறை என்ற ஆயுதம் இருபுறமும் கூர்மிக்க கத்தியை போன்றது.. இதை உணராவிட்டால் தூண்டிவிட்டவர்கள் இருக்குமிடமே தெரியாமல் போவார்கள் சாபமல்ல வரலாறு அப்படிதான் நிகழ்த்திகாட்டியிருக்கிறது 
..
என்ன செய்துக்கொண்டிருக்கிறது காவல்துறை 
எங்கும் அடாவடி ரகளை .. பொய்பிரச்சாரம் அறிவுநிறையாளர்களை கொலை செய்தல் நீதிபதிகளை மிரட்டுதல் ..பணிந்தால் பதவி இல்லையெனில் பிணம் .. ஊடகங்களை மிரட்டி சார்பு செய்திகளை மட்டுமே வெளியிட நிர்பந்தம் இளைஞர்களை மூளைச்சலை செய்து மதவெறியையூட்டி கைகளில் ஆயுதங்களோடு அலைய விட்டு குளிர்காய்கிற பாசிச கூட்டம் 
இந்தியாவையே ஒருவித பதட்டத்தோடு ..நாளை என்ன நடக்குமென தெரியாமல் ரோட்டில் நடக்க கூட அஞ்சுகிற சூழலை உருவாக்கி புதிய இந்தியா என பெயரிட்டிருக்கிறார்கள் ..  மிசா போன்ற அவசரகாலகட்டத்தில் கூட இப்படி மக்கள் அஞ்சியதில்லை கல்விநிலையங்கள் பயங்கரவாதிகளின் பிடியில் இல்லை ஆனால் இன்று மக்கள் இந்த ஆட்சியாளர்களை கண்டு
 அஞ்சமடைகிறார்கள் .. கொடூரமான செயல்களை தூண்டி வேடிக்கை பார்க்கிறது ..நாங்கள் 87% விழுக்காடு எதைவேண்டுமானாலும் செய்வோமென அமைச்சரே பேசுகிறார் அவரை பதவியில் நீடிக்க அருகதையில்லை என சொல்லமுடியவில்லை செய்துகொண்ட பதவிபிரமாண உறுதிமொழியை மீறியிருக்கிறாரென நீக்க ஆளுநருக்கு அதிகாரமிருக்கிறது ஆனால் ஆளுநரே பெண்பித்தனாய் பதவி மோகத்தில் திரிபவராய்
மாட்டிமூளையாய் இருப்பதுதான் உச்சகட்ட கொடுமை ..
காட்டுமிராண்டிகள் கையில் நாடு ..
..
மூகமூடி குண்டர்கள் எப்படி வந்தார்கள் யார் அவர்கள் என அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியும் ஆனால் மௌனமாய் கடந்து போவார்கள் வலதுசாரி சிந்தனையாளர்கள் என்ற போர்வையில் நடமாடும் சங்கிகள் வாய்திறக்கமாட்டார்கள் .. "குஜராத் மாடல் " என்று சொன்னதன் முழு பொருள் இப்போது புரிய தொடங்கியிருக்கிறது இன்று டெல்லியில் தானே என்று அசட்டை செய்தால் நாளை நாடுமுழுவதும் பரவும் ..
அபாயம் எச்சரிக்கை .. மதவெறி கொண்டு அலைபவர்களிடம் மனிதத்தை எதிர்பார்க்க முடியாது .. விசசெடியை மருத்திட்டு அழிக்க முடியாது வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் 
ஒன்றுபடு 
ஒற்றுமையாய் பாசிசத்தை வேரரு ..
பாசிச பாஜகவை அதிகாரத்திலிருந்து இறக்கும் வரை போராடு ..இடைவிடாது போராடு ..
#BAN_ABVP_BAN_RSS
..
ஆலஞ்சியார்

Thursday, January 2, 2020

அதிமுக அரசு

தமிழக அரசு விகடன் நிருபர்கள் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை  வழங்கவேண்டுமென செய்தி சேகரித்து வெளியிட்டதற்காக வழக்கு பதிவு செய்ததை கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் செய்திருக்கிறார்கள்
தமிழ் நாடு முழுவதும் அசாதாரணமான சூழல் காணப்படுகிறது மத்திய பா ஜ க அரசு என்ன செய்ய விரும்புகிறதோ அதை செய்து விட எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசை பயன்படுத்துவது வெளிப்படையாக தெரிகிறது  
CAA NRC சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் மீது அடக்கு முறை சட்டத்தை ஏவி ஜாமீனில் வெளியே வர வாய்ப்பே இல்லாத அளவுக்கு மீக மோசமான சட்டபிரிவுகளில் வழக்கை பதிவு செய்கின்றது தமிழக அரசு..
தங்கள் மீதுள்ள வழக்குகளில் இருந்து விடுபட விசாரணையின்றி தப்பித்துக்கொள்ளலாம்  என மிரட்டி பணிய வைத்து .. மறுத்தால் கலைத்து விடுவோம் என மிரட்டி 
தனது கொள்கை சார்ந்த விடயங்கள் தமிழ் நாட்டில்  அமல்படுத்தி வருகிறது மத்திய அரசு.. வன்முறையாக பேசிய நயினார் மீதோ வெளிப்படைாக மிரட்டல்விடுக்கிற எச்.ராசா மீதோ
எந்த வழக்கும் பதிவதில்லை மாறாக நெல்லை கண்ணன் பேசினால் விரைந்து வழக்கு பதிவு செய்கிறது அதிமுகவையோ பாஜகவையோ  எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடினாலோ  விமர்சித்து பேசினாலோ உடனே கைது வழக்கு என்று அடக்குமுறையை நடைமுறைபடுத்துகிறது 
கோலம் போட்ட பெண்களை கூட கைது செய்கிற அவலம் .. அவர்களை குடும்ப பெண்கள் அல்ல என்று அமைச்சராக இருக்கிறவரே பேசுகிறார் .. பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதாக பொறுப்புள்ள காவல்துறை கதைக்கிறது ..
ஆர்எஸ்எஸை சேர்ந்தவர்களை அதிமுகவில் உட்புகுத்தியதின் விளைவை இன்று அந்த கட்சி சந்திக்கிறது 
அதிமுகவின் இறுதி காலம் எழுதபட்டுவருவதை 
அக்கட்சி தொண்டர்களே உணர தொடங்கியிருக்கிறார்கள்
..
கொள்கை தெளிவின்றி எரிச்சலும் வெறுப்பும் தான் புறக்கணிக்கபடுகிறோமென்ற எண்ணத்திலும் 
காழ்ப்புணர்ச்சியில் எம்ஜிஆரால் 
தொடங்கபட்ட அதிமுக இன்றும் கொள்கையற்ற சுயநலமிக்க அடிமைகளால் தன் கடைசிநிலையை அடைய போகிறது பாஜகவிற்கு பயந்து
தனது சுய நலம் சார்ந்த ஊழல் வழக்குகளில் இருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்து வருகின்ற எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசும் அமைச்சர்களையும்  மக்கள் முழுவதுமாக புறக்கணிப்பார்கள் .. வார்டு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றிபெற வக்கற்ற எச்.ராசா போன்றவர்கள் மிரட்டுகிற நிலையில் இந்த அரசு நீடித்தால் 
அதிமுகவின் எதிர்காலம் பாமகவைவிட மோசமான நிலைக்கு வந்துவிடும் ..
.. 
ஆலஞ்சியார்