Thursday, January 4, 2024

பெண்கள் கைகளிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுங்கள்..பெரியார்
அதோடு நிற்கவில்லை உங்கள் ஆண் குழந்தைகளை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுஙகள் அதற்காக வசதி உங்களூரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்க வையுங்கள் என்றார்..
..
பெரியார் வழிதோன்றல்கள் பெண்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள்..  முதலில் எட்டாவது வரை படி திருமண நிதி தருகிறேன்.. பிறகு 12 வது வரை படி .. கல்லூரிக்கு வா கட்டணமில்லா கல்வி தருகிறேன் என்றவர்கள் இதோ மாதாமாதம் ₹1000 கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கதொகை என விரிவுபடுத்தி  பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்தார்கள் .. பெரியாரின் நேரடி சீடன் கலைஞர் எனும் பேரருளாளனின் சிந்தையில் செயலில் நடந்ததுதான்  இவையெல்லாம்..இன்று பெண் குழந்தைகள் பெரியளவில் பட்டம் பெற காரணம்,தமிழ்நாடு கல்வியில் முதன்மை மாநில திகழ காரணம் திராவிடத்தின் ஆட்சி..
.. 
உண்மையில் இன்று பெரியாருக்கு ஜே என கத்தியிருக்க வேண்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன் .. அவர் சுயமரியாதையோடு வலம் வர காரணமானவர் திராவிட ஆசான் பெரியார் தான்.. இல்லையெனில் வடமாநிலங்களை போல கட்டிவைத்திருப்பார்கள்.. தெருவில் நடமாட விடமாட்டார்கள் .. தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்தை மானத்தை மரியாதையை பெற்று தந்திருக்கிறது அதற்கு முழுமுதல் காரணம் தந்தை பெரியார் ..
..
இன்றைய பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாண்பமை இந்திய ஒன்றிய பிரதமர் கலந்துக்கொணடு தமிழ் நாட்டின் பெண்கல்வி புரட்சியை கண்டிருப்பார்.. இதில் குறிப்பிடத்தக்க விடயம் இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பட்டம் பெற்றார்கள் அவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தனர்.. இங்கே கட்டுபாடுகள் என்ற பெயரில் மத துவேசம் இல்லை அவரவர் கோட்பாடுகளை பின்பற்றலாம் அதற்கு இடைஞ்சல் தருவது அரசின் வேலையில்லை..
..
குறிப்பாக முஸ்லிம் சமுகத்தில் பெண்களின் கல்வி பல்வேறு காரணங்களை காட்டி அடிப்படைவாதிகளால் மறைமுக தடை செய்தும் கணிசமான அளவில் பெண்குழந்தைகள் உயர்கல்வி பெறுவது நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.. எல்லா சமூகங்களிலும் பெண்கல்வி குறித்த தாழ்வுநிலை இருந்தாலும் அதையெல்லாம் மீறி பெண் குழந்தைகள் உயர்கல்வியை நோக்கி வர தொடங்கியிருப்பதற்கு திராவிட அரசுகளின் பங்கு கணிசமானது .. இதெல்லாம் தெரிந்தும் சிலர் திராவிடம் என்ன செய்தது என சொரிந்துக் கொள்கிறார்கள்..
..
பெண்களைப் பற்றி 
"நிற்கையில் நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத்தைப் போல" .. பாரதிதாசன் சொல்வார்.. 
..
பெண்ணே!
உயர பற உலகம் உனது
ஆலஞ்சியார் 

செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

No comments:

Post a Comment