Saturday, September 30, 2023

வழிநெடுக பார்க்கிறேன் உன்

அமைதி அர்த்தங்கள் பொதிந்ததாய் 

ஆரவாரமற்ற மொழியில் கதைக்கிறது.. உன் விழிகளில் பெரு வெளிச்சம் தமிழகத்தின் சுடரொளியாய் ஜொலிக்கிறது..  எதையும் பகுத்தாயும் தெளிவு ஆசானை நினைவுபடுத்துகிறது ..

..

எத்தனை சதிகள், தொடர் இடையூறுகள்.. பாசிசத்தின் சூழ்ச்சிகள் , கூட இருப்பவரின் சனாதன சேட்டைகள், அதிகாரம் வந்தவுடன் தான் என்ற அகந்தையில் திரியும் அற்பர்கள் ..ஊடகம் என்ற பெயரில் உமிழும் வதந்திகள், பூச்சாண்டி காட்டும் ஒன்றிய ஏவல்கள் 

இவையனைத்தும் உன் அழுத்தமான அமைதி முன் அடிப்பட்டு போகிறது..

..

உன் வெற்றிடத்தை நீயே செதுக்கியதென்பதை அறியாதோர் புலம்புகிறார்கள்.. உன் அடுத்த அடி எதுவென யோசிப்பதற்குள் நீ சதுரம் கட்டுகிறார.. 

உன் நிழலை கண்டாலே பதறுகிறது பகைவர் கூட்டம் உன் செயல்கள் மக்களை அடையும் ஒவ்வொரு நொடியும் எதிரிகளின் விலா எலும்பு ஒடிகிறது.. எனக்கு உன் எதிரிகளை கண்டு அச்சமில்லை எதை நீ உன் பீச்சாங்கையில் டீல் செய்வாய்..

..

உன் கூட இருப்பவர் நீ அதிகாரம் தந்து அழகுபார்த்தவர்கள் உன்னால் நியமனம் செய்யபட்டவரகள் செய்யும் அழிச்சாட்டியம் ஆரவாரம் உன் அமைதி முன் அகங்காரமாய் நிற்கிறது ..

பொறுப்புணராதவர்களின் செயல்கள் கழகத்தின் கொள்கையை கேள்வியாக்குகிறது..  தலித் என்பதற்காக நிற்கவைக்கும் குறியீடுகள் பாசிசத்தின் நிழலை காட்டுகிறது எவனும் உயர்ந்தவனில்லை எவனுக்கும் தாழ்ந்தவனில்லை என்ற கோட்பாடு சிதைகிறது தலைவா..

..

பொறுப்பென்பது எதுவென்று தெரியாதவர்களை அகற்றி நிறுத்தி திராவிடத்தை உணர்ந்த, சித்தாந்த தெளிவும் அறிவும் பெற்றவர்களை முன்னிறுத்த வேண்டும்.. 

திமுகவில் ஊடுறுவிற்கும் சனாதனவாதிகளை பதவிக்காக எதையும் செய்யும் பித்தர்கள் இனங்கண்டு "களையெடுத்தல்" அவசியம் 

..

நல்லதை விதைத்தால் அறுவடையின மகிழ்ச்சி வரும்.. நாம் தீய "களை"களையும் கூடவே வளர்ப்பது தீங்கு தரும் 

..

ஆலஞசியார்



Friday, September 15, 2023

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை..
தமிழ்நாடே திருவிழாக் கொண்டாட்டம் போல் மகிழ்வில்.. பெண்களுக்கான இந்த உரிமைத் தொகை சுயசார்பு தொடக்கத்தை தரும் ..
சின்ன சின்ன தேவைகளுக்கு யாரையும் சார்ந்திராது கம்பீரமாய் நிற்கலாம், சிலர் வழக்கம் போல் எரிச்சலடைவதும் கிடைக்காத அதிருப்தில் அதிமுககாரனுக்குதான் கிடைக்கிறதென புழுக்கம் அடைவதும், எப்படியும் தர போவதில்லை என்றவர்கள் சாத்தியமானது கண்டு கலக்கம் அடைந்திருப்பதும் திட்டத்தின் வெற்றியை காட்டுகிறது..
..
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இந்திய ஒன்றியத்தின் வழிகாட்டும் தலைவராக ,அரசியலில் ஒரு தலைவன் எப்படி அதிகாரத்தை கையாள்கிறார், மக்களுக்கு தேவைகளை எப்படி சரிசெய்து வழங்குகிறார் என்பதை உற்று கவனிக்கிறது.. கொஞ்சமும் சஞ்சலமில்லாமல் என்னால் கூற முடியும் எம் தலைவரை கலைஞரை விட ஸ்டாலினை வியந்து
பாரக்கிறது இந்திய ஒன்றியம்..  எதிரிகள் கைபிசைந்து நிற்கிறார்கள்.. காலை உணவுத் திட்டம் பீதியை தந்தது, இன்றோ உறைந்து நிற்கிறார்கள்.. கிடைக்காதவர்கள் வாக்கு திமுகவிற்கு கிடைக்காதென தப்புதப்பாய் பேசி ஆறுதலடைகிறார்கள்.. தகுதியுள்ளோர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் கிடைக்கும் 
எதிலாவது குறை கூற முடியாதா என எண்ணுவோர் வேறுபாதையில் செல்லலாம்..
..
இனி மாதாமாதம் பணம் வரும் பெண்கள் சேமிப்பில் சேருவார்கள் தங்களுக்கான,தன் குடும்பத்திற்கான பொருட்களை வாங்கலாம் அவசர தேவைகளுக்கு கைமாத்திற்கு அலைய வேண்டியதில்லை.. அவசர தேவைகளுக்கு ஆண்களின் கைகளை எதிர்ப்பார்க்க தேவையில்லை.. தன் மருந்து செலவிற்கும் பேரக்குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் உதவும் 
 சுயசார்பு மட்டுமல்ல சுயமரியாதையையும் கலைஞர் மகளிர் உரிமை தொகை தரும்.. 
..
கட்டணமில்லா பயணம்,காலை உணவுத்திடடம், கலைஞர் மகளிர் உரிமை தொகை என வரலாறு படைக்கிறார்.. 
பிற மாநிலங்கள் இதுபோன்ற திட்டங்களைப் பற்றி சிந்திக்கவே பல ஆண்டுகள் ஆகும் .. 
..
இந்தியாவின் தலைசிறந்த முதலமைச்சராக மக்களின் நிலையை உணர்ந்து குறிப்பாக பெண்களின் பொருளாதார ,மற்றும் கல்வி நிலை உயர்வே மாநிலத்தின் வளர்ச்சியை காட்டும் என்ற யதார்த்தத்தை புரிந்த தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..
..
தமிழ்நாட்டின் தாய்மார்களின் பிள்ளையாய், சகோதரனாய்,அப்பனாய் நம் தலைவர் ஸ்டாலின் நிற்கிறார்..
Thank You Stalin Sir...
நன்றி C M Sir...
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
சனாதனம் பற்றிக்கூட ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் பேசி மக்கள் கவனத்தை திசை திருப்ப பார்க்கிறார்கள் பாஜகவின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்திற்கு நாம் இடமளித்துவிட கூடாது மாண்பமை தமிழ்நாடு முதலமைச்சர் ..
எத்தனை தீர்ககமான சிந்தனை அரசியலில் மிகத் தெளிவாக தன் கொள்கைகளை வரையறுத்து பயணிப்பவர்களால் மட்டுமே பகைவரின் ஒவ்வொரு செயலையும் சரியாக கணிக்க முடியும் 
..
அறுபதாண்டு பொதுவாழ்வு திராவிடச் சித்தாந்தத்தை சரியாக 
உள்வாங்கி எதற்காக இந்த இயக்கம் தொடங்கபட்டதோ அதிலிருந்து பின்வாங்காமல் அதே நேரம் பகைவரின் சூழ்ச்சி அறிந்து படையோட்டம் நடத்தமுடியும்.. நம்மை அறியாமல் ஒரே விடயத்தில் உழன்று கொண்டிருந்தார் எதிரிகள் வேறென்றை நடத்திடுவார்கள்.. ஆனால் நம் தலைவர் திறமையும் தெளிவும்,துணிவும் கொண்டவர் .. 
எதிரிகள் அதனால் தான் இந்திய துணைக்கண்டத்தில் இவரை மட்டுமே தொடர்ந்து கவனித்து வருகிறாரகள் .. 
..
பாசிசவாதிகளுக்கு திராவிட இயக்கங்களில் தொடர்ந்து கடுமையான எதிரிகள் வருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை அரச இயந்திரத்தை ஆளுநரைக் கொண்டு முடக்க நினைக்கும் போதெல்லாம் வெளிச்சம் போட்டுகாட்டி முகத்திரையை கிழிக்கிறார்.. 2024 ல் வீழ்த்தபடுவோம் என்றறிந்து எதையாவது பிரச்சனையை பெரிதாக்கி காய் நகர்த்த முடியுமா என பார்க்கும் போது நடுமுதுகை உடைத்தைவிடுகிறார் நம் தலைவர்
..
கலைஞரோடு தீர்ந்தது என்றிருந்தவர்கள் ஸ்டாலின் திமிர்க் கொண்டு எழுந்த போது கலங்கி நின்றார்கள்.. இதோ உதயமாய் புதிய ஒளி சனாதனத்தை சுட்டரிக்க
 வருவது கண்டு புறவழி சாதனையாளர்கள் புரண்டு அழுகிறார்கள்.. புரிந்துக் கொள்ளுங்கள் எங்கள் இனப் பகைவர்களே.. 
திராவிடம் 
தன்னைதானே உயிர்ப்பிக்க கொள்ளும் .. புதிய தலைமுறையின் பாதுகாவலனை தயார் செய்யும்.. 
தன் இனத்திற்கான தலைவனை உருவாக்கி செம்மைபடுத்தி பகை முன் நிறுத்தும் ..
எதிரிகளே உங்கள் குலைநடுங்க எம் குலம் காக்க வரிசையாய் தலைவர்களை தயார் செய்துக் கொண்டே இருக்கும் ..
..
இது இயக்கம்..
இயங்கிக் கொண்டேதானிருக்கும்
..
ஆலஞ்சியார்

 



Monday, September 4, 2023

வருங்கால திராவிடத் தலைவனை பகைவர்கள் இனங்கண்டுக் கொண்டார்கள்.. ஒவ்வொரு முறையும் காலம் நமக்கான தலைவனை அடையாளம் காட்டுகிறது.. எனக்கு பழைய காட்சிகள் நிழலாடுகிறது தஞ்சையில் கலைஞரிடம் ஒருமுறை அடுத்த தலைமுறைக்கான தலைவனை அடையாளம் காட்ட வேண்டாமா என துடுக்குத்தனமாய் கேட்டு வைக்க 'காலம் தீர்மானிக்கும்' என்றார் எத்தனை எளிதாய் புரிதலோடு பதில் தந்து புன்னகை புரிந்தார்..
ஆம் நம் பகைவர்கள் நம்மை விட தெளிவாக இருக்கிறார்கள்..
..
சனாதன எதிர்ப்பு மாநாடு இளைய திராவிடத் தலைவனை இந்திய ஒன்றியத்திற்கு அடையாளம் காட்டியிருக்கிறது.. பாஜக தலைவர்கள் வரிசைகட்டுகிறார்கள்.. சனாதனத்தை ஒழிப்போம் என்றதை இந்துக்களை ஒழிப்போமென்கிறாரென வழக்கம் போல் பொய்யை சுமந்து வருகிறார்கள்.. சனாதனம் சமத்துவத்திறகு எதிரானது சமூகநீதிக்கு எதிரானது ஏற்றதாழ்வற்ற நிலைக்கு எதிரானது .. 
வழக்கம் போல பார்ப்பனர்கள் இந்துத்துவ கைக்கலிகள் ஓலமிடுகிறார்கள்.. 
அதிலிருந்தே உதயநிதி சரியான பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் 
..
உதயநிதி தலைக்கு ₹10 கோடியாம் இவன் தாத்தன் தலையை சீவினால் ₹1  கோடி பரிசுமழை என்றார்கள் என் தலையை நானே சீவுவதில்லை என நகைச்சுவையோடு கடந்து போனார் கலைஞர் ..  தந்தை பெரியார்  செத்து  போக வேண்டி பிரம்ம ஹத்தி யாகம் செய்தார்கள் 
யாகம் செய்த
40  சாமியார்களும்   செத்து  போன பிறகு  தான் பெரியார்  94 வயசுல மறைந்தார்.. 
..
சனாதனம் என்பது பார்பனீய மதம் அதைதான் இந்து மதமாக்கினார்கள் இதோ எச் ராசா சனாதனவாதிகளுக்கு அவிட்டம் வாழ்த்துகள் சொல்வதிலிருந்து சனாதனம் பார்ப்பனியத்தை/ பார்ப்பனர்களை உயர்த்தி பிடிக்க இவர்கள் உருவாக்கியது என புரியும்.. சனாதனம் கருத்தியல் ரீதியாக பதிலளிக்க முடியாமல் கொலைவாளை  உருவும்.. ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் தரையில் அமர்த்துவது தான் பார்ப்பனீயம் சொல்லிதந்த சனாதனம் ..
..
சனாதனத்தை எதிர்ப்பதென்பது கடவுள் மறுப்பு அல்ல கடவுளின் பெயரில் செய்யும் அநீதியை எதிர்ப்பது.. மூடநம்பிக்கை என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான செயல்களை எதிர்ப்பது, தீட்டான பெண்கள் வெளியே வந்தால் லோகம் கெட்டுவிடும் ,வேலைக்கு போனால் விபச்சாரம் பெருகும் என்ற ஜகத்குருவின் கருத்தியலைதான் சனாதனம் என்ற பெயரில் அடக்கிவைப்பதைதான் எதிர்க்கிறார்.. அனைவரும் அர்ச்சகர்களாகலாம் என்றதை எதிர்ப்பதற்கு பெயர் தான் சனாதனம் .. அதைதான் ஒழிக்கபடவேண்டும் என்றார் உதயநிதி 
..
சனாதன எதிர்ப்பில் தான் சமநீதி அடங்கியிருக்கிறது.. அனைவரையும் சமமாக நடத்தப்படவேண்டும், தொட்டால் தீட்டு பார்த்தாலே பாவம் என்பதற்கு எதிராகத்தான் தமிழ்நாடு தொடர்ந்து முழங்கி வருகிறது ..
பெரியார் தொட்டு அதை தான் திராவிட இயக்கம் செய்கிறது
 இனியும் தொடர்ந்து சம நீதி சமூகநீதி பேசும்..
வாழ்த்துகள் உதய்
Udhayanidhi Stalin 
..
ஆலஞ்சியார்
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Saturday, September 2, 2023

கவிதை 
சொல் என்றார்..
தமிழில்..
என்றார்
தமிழே 
கவிதைதானென்றேன்
..
மயங்கி நிற்கிறேன்
உன் அழகில் 
நீ ..
தரும் 
அறிவின் வெளிச்சம்
நான் செல்லும்
பாதையெங்கும்
வழிகாட்டுகிறதே..
..
பழமை பேசலாம் என்றால்
"சங்கம்" தருகிறாய்..
புதுமையெனில்
பராசக்தி தருகிறாய்..
(கலைஞரின் பராசக்தி)
..
பறக்கிறேன்
இறைக்கையாகிறாய்.
படர்கிறேன்..
மரமாய் ..
எனை.. 
வளைத்துக்கொள்கிறாய்..
..
காதல் சொல்ல
காமம் சொல்ல
மலர்ந்ததை
மலராததை
மொட்டை..
மயக்கும் விதத்தை
மயங்கும் வித்தையை
தந்து செல்கிறாய்....
..
மடமை கொளுத்தி
சாதி
மதத்தை வீழ்த்தி..
மானுடம் உடுத்தி..
மண் பெருமை பேசி
மகிழ்வாய் 
கதைக்கிறேன் 
மயக்கம் தருகிறாய்..
..
கோபம் கொள்கிறேன்.
கொள்கை பேசுகிறேன்
சிலநேரம்..
கொந்தளிக்கிறேன்..
வளைந்து.. எனக்கு 
வழங்குகிறாய்..
..
தீயாய்.. 
தென்றலாய் 
சிலநேரம் புயலாய்..
எனை சூழ்ந்துநிற்கிறாய்
பேச்சில் மூச்சில்
என் சுவாசத்தில் 
என் துடிப்பில்..  
எல்லாம் நீயே..
என் தமிழே..
..
ஆலஞ்சியார்
வயல்வெளிகளிலும் முள்காடுகளிலும் அடுப்படிகளிலும் பெண்களை வேலைவாங்கி, உனக்கு வராது தேவையில்லை ஏன் படிப்பு, ஆணுக்கு நிகராக முடியுமா என காலங்காலமாய் அடைத்துவைக்கபட்ட பெண்களுக்காக ஒரு குரல் ஓங்கி உழைத்தது.. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு பெண்கள் படித்துவிட்டு வேலைக்கு போனால் லோகம் கெட்டுவிடும் வேலைக்கு போகும் பெண்களை விபசசாரிகளென என பெரியவா/ ஜகத்குருக்களெல்லாம் முழங்கிய காலத்தில், நீ வா படி விமானம் ஓட்ட வேண்டாமா சந்திரமணடலத்துக்கு போகவேணடாமா என்றது ஒரு குரல்.. அந்த கிழவனின் குரல் சமுகத்திற்கு அதிர்வை ஏற்படுத்தியது .. 
..
பெண்கள் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த கிழவன் உங்கள் வீடடில் ஆண்குழந்தையை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள் உள்ளூரில் அதற்கான வசதியில்லென்றால் வெளியூர் சென்று கூலிவேலைப் பார்த்தாவது பெண்களை படிக்க வையுங்கள் என்றது அந்த குரல்
ஆம் அந்த பெரியாரின் குரல் .. பெண்கள் முன்னேற படிப்பு அவசியம் என்றவர் பேராசான் பெரியார் 
..
பள்ளிபடிப்போடு பெண்களை நிறுத்தியது கண்டு  ஒரு தலைவன் மனோன்மணியம் பல்கலைக்கழகம் தந்தான் .. மாவட்டம் தோறும் கல்லூரிகளை தந்து அதை விரிவுபடுத்தி தாலுக்கா தோறும் கல்லூரி, மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி, பொறியியல் என தந்தான்.. பெண்களுக்கு கட்டணமில்லா கல்வி என்றான் படிக்க வா எல்லா கதவுகளும் திறக்கும்.. பெண்களுக்கு முன்னுரிமை தந்து 
உந்துவிசையானான் .. அந்த பேரருளாளனுக்கு மற்றொரு பெயருண்டு கலைஞர் கருணாநிதி 
..
அன்று கிழவன் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா என்ற கேள்விக்கு விடை இதோ.. எங்கள் தமிழ் நாட்டுப்பெண்கள் விண்வெளியில் கோலோச்சுகிறாரகள்.. முடுக்கிவிட நினைத்தது ஆரியம் .. 
முயன்று முன்னேறு என்றது திராவிடம்.. சக்தி என சாமியாக்கியது ஆரியம் 
உன் சக்தியை காட்டி வெற்றிக்கொடி நாட்டு என்றது திராவிடம்..
மதம் சாதி எனச் சொல்லி சக மனிதனைக் கொல்ல கத்தியை தீட்டென்றது ஆரியம் உன்னை உலகமே திரும்பிபார்க்க உன் புத்தியை தீட்டென்றது திராவிடம்.. மடமையில் உன்னை அழுத்தி பள்ளத்தில் தள்ளியது ஆரியம்..  கைக்கொடுத்து உயரத்தில் ஏற்றி அழகுப்பார்ப்பது திராவிடம்
.. 
திராவிடம்
அறிவை மரியாதையை
மானமுள்ள வாழ்வை தரும்..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
தினமலருக்கு கண்டனம் ..
இன்றல்ல பன்நெடுங்காலமாய் நெஞ்சில் வஞசத்தோடுதான் அவர்கள் .. நம் பிள்ளைகள் கல்வியில் உயரத்தை தொடுவதை எரிச்சலோடுதான் காண்கிறார்கள் தமக்கு மட்டுமே அறிவு உண்டென்று பேசி திரிந்தவர்கள் யார் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றோமோ அவனே நம் முன்னில் உச்சத்தை தொடுகிறான் என்றவுடன் கோவம் கொப்பளிக்கிறது.. 
..
எப்பாடுபட்டாயினும் கல்விகற்க வா நாஙகளிருக்கிறோம் என திராவிடத்தின் தலைவர்கள் கட்டணமில்லா கல்வி, பேருந்தில் கடடணமில்லை பசியோடு வந்தாலும் பசியாற்றி கற்பிப்போம் வா உன் திறமையால் உயரு.. எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாதே.. யார் தடுத்தாலும் திராவிடம் துணை நிற்கும் என்றவுடன் பார்ப்பனீயம் பதறுகிறது .. 
..
இதோ சூத்திரர்கள் வானில் கோலோச்சுகிறார்கள் நம்பியைப்போல காட்டி கொடுக்காமல் படித்துவிட்டு அமெரிக்க சென்று ஊதியம்பாரக்காமல் நாட்டிற்கு உழைக்கிறார்கள்.. என்ன இது என கால் நக்கும் கூட்டம் கதறுகிறது.. பாசிசத்தின் நிழலில் நின்று கூத்தாடியவர்கள் இன்று  I.N.D.I.A வை கண்டு அஞ்சுகிறார்கள்.. இனி விரட்ட படவேண்டிய கூட்டம்.. இங்கே தலைதூக்கவே முடியாதவாறு ஆழ புதைத்திடுவோம்..
..