Thursday, April 6, 2023

ஆளுநர் ..
திரும்பவும் சர்ச்சைக்குரியவிதத்தில் பேசி நானும் இருக்கிறேன் என ஞாபகபடுத்துகிறார் .. தமிழ்நாட்டில் ஆளும் அரசிற்கெதிரான நிலைபாட்டை தொடர்ந்து செய்துவரும் ஆளுநர் ஜனநாயக சக்திகள் இணைந்து எதிர்க்கவேண்டும் .. சட்டமன்றத்திலேயே நேருக்கெதிரே பேசி ஓடவிட்டும் இன்னும் அடங்காத ஆணவம் , இனியும் பொறுப்பதற்கில்லை விரைந்து தெளிவான முடிவெடுக்கவேண்டியது அவசியம் 
..
பாஜக நாடளுமன்றத்தை எதிர்கட்சிகளை சந்திக்க திராணியற்று நிதிநிலை அறிக்கையை விவாதமின்றி நிறைவேற்றி கூட்டதொடரையே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாகிவிட்டது .. 56 இன்ச் மெலிந்து போனது .. ஊழல் செய்ய போட்டி போடுவது முடியாமல் போனதென பிரதமர் சொல்கிறார் ஆம் யாருமே ஊழல் செய்யவிடாமல் ஒட்டுமொத்தமாக பாஜகவே ஊழல் செய்கிறது .. மாபெரும் ஜனநாயக சபையில் "பொய்" ஊழல் எல்லாம் தடைசெய்யபட்ட சொற்கள் பேசமுடியாது .. ஊழலை ஒழிப்பேன் என்பதன் பொருள் இதுதான் போலும் .. இவர்கள் அனுப்பும் ஆளுநர்கள் சனாதனத்தை பின்பற்றும் மதவெறியர்கள்.. பேச்சு செயலும் பொது சமூகத்திற்கு கேடாகதான் அமையும் .. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது எரிகிறதாம் .. மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் ஆளுநர் வெகுமக்களின் உணர்வை மதிக்காதவரை இனியும் வைத்திருப்பது நியாயமில்லை .. பண முதலாளிகளிடம் கையூட்டு பெற்றவனைப்போல பேசுவது அழகல்ல
..
மசோதாக்கள் நிறுத்திவைப்பதென்பது நிராகரித்ததாக பொருளாம் .. அரசியல் அமைப்பு தந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதும்,  ஆளுநருக்கு தரும் நிதியை ஆர்எஸ்எஸ் கிளை அமைப்பிற்கு தருவதும் எந்கவகை நியாயம் .. ஆளுநருக்கென்ற அதிகாரவரம்பை சீரமைக்கவேண்டியதும் அதற்கு மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டிய காலம் நெருங்கிவிட்டது ..  ஆளுநர் பதவி தேவையில்லை..,  மக்களால் தேர்ந்தெடுக்க அரசை செயல்படவிடாமல் முட்டுகட்டை போடுவதும் .. நாக்பூரின் சொல்கேட்கும் கிளிப்பிள்ளையாய், பார்ப்பன/சனாதன/பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் அரசிற்கு இடைஞ்சல் தருவதும் மட்டுமே  பிரதான வேலையாக செய்கிறார்கள் "தண்டசோறுகள் "
..
பொறுப்பற்ற பேச்சு, சட்டம் அறியாமல் உளறல், மக்களை இழிபடுத்தும், போராட்ட வடிவத்தை கேவலபடுத்தும் ஆளுநரை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும் .. 
அநீதிக்கெதிரான, மக்கள் வாழ்வாதாரம் கேள்விகுறியாவதை எதிர்த்து போராடியதை வெளிநாட்டு நிதியில் நடத்தபட்டதென ஆளுநர் சொன்னதற்கு ஆதாரத்தை தரவேண்டும் .. 
..
திறக்கபடாத கதவுகளில், சாதித்தே பழக்கபட்டவர்களுக்கு எளியவர்களின்
 "உயிர்வலி" போராட்டம் கொச்சையாக தான் தெரியும் .. தமிழ்நாடு முதலமைச்சர் தன் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் .. வழக்கம் போல் அதிமுக ஜால்ரா அடிக்கும் .. ஜனநாயக சக்திகள்/கட்சிகள் ஒருங்கிணைந்து ஆளுநருக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும் 
..
ஆட்டுக்கு தாடி எதற்கு ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment