வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி தமழ்நாடு அரசு இந்திய சாதிய அமைப்பு கொடூரத்தை மிக எளிமையாக விளக்கியிருக்கிறது ..
எந்த மதத்திற்கு மாறினாலும் பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு தொடரவேண்டும் என்ற தீர்மானம் இனி விவாதபொருளாகி நிறைய பேசபடும்..
..
இதை முன்மொழிந்த தமிழ்நாடு முதலமைச்சர் இந்த சபையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்திருப்பதிலிருந்தே சரியானபாதையில் செல்கிறோம் தீர்மானம் சரியானதென தெரிகிறதென சொல்லி இந்த சாதீய அமைப்பை எதற்காக கட்டிக்கொண்டு அழுகிறது பாஜக என்பதை விளக்கியிருக்கிறார் ..
எங்களின் அடிமையாகவே இருந்தால் மட்டுமே,சலுகையை பெறலாம் என்பதையே இதுகாட்டுகிறது .. இந்த மக்கள் "மதம் " மாறினாலும் பெரியளவில் மாற்றங்களை பெற முடிவதில்லை அவர்கள் அங்கேயும் இதே நிலையில் தான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை
..
பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு இந்துமதத்திலிருந்து மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடரவேண்டுமென அறிய ஓய்வுபெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கபட்டது ஏழு மாதங்கள் ஆன நிலையில் தமிழ்நாடு அரசின் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது (கமிஷனின் ஆயுட்காலம் இரண்டாடுகள்)..
இங்கே மற்றொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும் இந்திய இடஒதுக்கீடுகளில் ST, OBC பிரிவுகளில் மதம் தடையாக இல்லை ஆனால் SC யில் மட்டும் இந்து, பௌத்தம், ஜெயின் தவிர பிற மதத்தை சேர்ந்தவர்களுக்கு இடமில்லை .. ST,OBC ல் இந்த பாகுபாடு இல்லை.. ஆனால் SC க்கு மட்டுமே உண்டு ..
..
மதம் மாறியதால் அவர்கள் நிலை மாறிவிடும் என்பது யதார்த்ததில் இல்லை .. தலித் கிருஸ்துவர்களென்றே கருதபடுகிறார்கள் .. இங்கே கேள்வியே பௌத்தம் ஜெயின் மதத்திற்கு மாறினால் இடஒதுக்கீட்டை தொடரலாம் என்பதும் கிருஸ்துவம் முஸ்லீமாக மாறினால் தேவையில்லை என்பது தான் .. இந்துவாக இருந்து அடக்குமுறைக்காளானவர் பௌத்தம் மாறினால் அவர் தொடர்ந்து பட்டியலில் தொடரலாம் என்பதும் விவாதிக்கபட வேண்டியவை .. சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் வலியுறுத்தியிருக்கிறார் .. எத்தனை விழுக்காடு இருக்கின்றீர்களோ அவ்வளவு பெற்றுக்கொள்ளுங்கள் (விகிதாச்சாரிய) இடஒதுக்கீடென்பதே 100% விழுக்காட்டை கொண்டதாக இருக்கவேண்டும் .. பார்பனர்களுக்கும் அவர்களுக்குரிய 3% தரலாம்.
..
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு 10% இதர சிறுபான்மையினருக்கு 5% என்பதும் இங்கே கவனிக்கபடவேண்டியவை .. 64.5% விழுக்காடு வழங்கபடவேண்டும் என பரிந்துரைத்திருக்கிறார் .. நாம் இதை ஏற்கனவே 69% ஆக தமிழ்நாட்டில் தருகிறோம். எதுஎப்படியோ சரியான நேரத்தில் சமூகநீதியை தொடர்ந்து வலியுறுத்தி வரும் திராவிடமாடல் தலைவனின் கருத்து இந்திய ஒன்றிய அரசின் ஏகாந்தத்தை சிதைக்கும் என்பதில் கருத்துவேறில்லை ..
Chief Minister of Tamil Nadu
M. K. Stalin 🔥
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment