..
திடீர் அரசியல்வாதிகள் , நவீன தேசபிமானிகள், தம்மை தவிர மற்றவர்களை தேசவிரோதிகளாக நினைப்பவர்கள், தமிழ்தேசியம் பேசும் சிறுவர்கள், அரசியலறியாத
அறிவு குருடர்கள் உணர்வை தூண்டி பசியாறும் கேவலமானவர்கள், இவர்களெல்லாம் உழைத்து வாழ விரும்புவதில்லை.. சீமான் தொடங்கி அண்ணாமலை போன்ற அரைகுறைகள் வீட்டுவாடகை கைசெலவு கூட நண்பர்களிடம் கையேந்தும் இவர்கள் ..
உண்மையில் எதையாவது எதிர்பார்த்துதான் எவனும் செலவு செய்வான் எனும் உண்மை அறியாமலா இருப்பார்கள்
..
இவர்கள் உண்மையில்
யாரோ ஒருவரின் இயக்கத்தில் இயங்கும் இயந்திரங்கள்.. அவ்வளவுதான் .. பொய் புளுகு புரட்டு இவைதான் மூலதனம்
.. முன் சொன்னதை மாற்றி பேசுவதும், இதனால் அவமானம் வந்தாலும் துடைத்துபோட்டுவிட்டு காசுக்காக கண்டதையும் திண்ணும் களிசடைகள் ..
..
ஊருக்கு உபதேசம் செய்யும் நவீன அரிசந்திரர்கள் .. வாய் திறந்தால் பொய்தான் .. அது கூட சோறுபோடுகிறது .. சோறு மட்டும் தானா ..?
தமிழ்நாட்டின் அரசியலில் தரந்தாழ்ந்துபோனதே ..
அறிவுசார் பெருமக்கள், கருத்துமாறுபடினும்,கடுஞ்சொல் பேச நேரிடினும் , அறந்தவறாத நெறியோடும் குறைந்தபட்சமாயினும் நேர்மையோடும் அரசியல் செய்தார்கள் .. பெரும் தேசபக்தர்கள், இனமொழி காவலர்களும் ஒடுக்கபட்டவனை உயரத்தில் ஏற்றிட ஓயாதுழைத்தவர்களும் கண்ட தமிழ்நாடு .. இடையிடையே சாயபூச்சுகளில் களையிழந்தாலும் அரசியல் பண்பாட்டை தவறவிட்டதில்லை .. அரசியல் சூழ்ச்சிகள் கண்ணியம் தவறியதில்லை ..இடையிடையே பொய் தலையெடுத்தாலும் அது அவிழ்ந்துவிழும் சடைமுடியாய் தள்ளிவிட்டது தமிழ்நாடு .. ஆனால் இப்போது பொய்யர்களும் எது அரசியல் என அறியாத மூடர்களும் நம்ப முடியாத கதை சொல்லும் கிறுக்கர்களும் .. இறந்தவனின் உடலை தின்று வீங்கி தெறித்து நிற்கும் கயமைகளும், நாட்டிற்கு கேடு ..
..
தமிழ்நாடு கேடுகெட்டவர்களால் சூழபட்டிருக்கிறது .. இந்த சிறியவலையிலிருந்து மீளவேண்டும் .. அறிவுகொண்டு இவர்களின் கயவாளித்தனத்தை தோலுரிப்போம்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment