நேரடியான சாதிய வன்மம் தவிர வேறென்ன இருக்கமுடியும் ..
போடா நாயே என்றழைக்கும் சில்லறைபயலை கேள்வி கேட்க முடியாதவர்கள் .. உன்னை யார் அழைத்ததென கேள்வி கேட்டபவரிடம் எதிர்கேள்வி எழுப்ப முடியாதவர்கள் வா போ என அழைக்கும் மரம் வெட்டும் தமிழ்க்குடியோடு எதிர்வினையாற்ற முடியாதவர்கள்
திருமாவிடம் மட்டும் கேட்பதேன்..?
..
திருமாவோடு நிறைய கருத்து முரண் இருந்தாலும் அவர் சனாதனத்தின் எதிர்ப்பில் கடுமையாக இருப்பதை மறுக்கமுடியாது..பிற பட்டியலின தலைவர்கள் வாலாட்டும் போது இவர் மட்டும்
வளைந்து கொடுக்காமல் இருப்பது வலதுசாரிகளுக்கும், நடுநிலை என்ற பிம்பத்தில் பிழைப்பு நடத்துவோருக்கும் பாசிச சக்திகளுக்கு தூக்கத்தை கெடுப்பதாக உள்ளது
..
பட்டியலின தலைவர்கள் வெகு இலகுவாக விலைபேச முடியும் என்ற நம்பிக்கையை பொய்யாக்கியவர் .. ராம்விலாஸ் பஸ்வான் கிருஷ்ணசாமி என பலரை அதிகாரம், பணம் மிரட்டல் என பல்வேறு வழிகளில் கைக்குள் ஆக்கியவர்கள் திருமாவிடம் தோற்று நிற்கிறார்கள்..
எட்டி நின்றவர்கள் படித்தார்கள் பட்டம் பெற்றார்கள் முனைவராய் நிற்கிறார்கள் என்பது இவர்களின் சனாதன மூளையை களங்கடிக்கிறது .. போடா நாயே, ஆண்டி இன்டியன் என்ற போதெல்லாம் வராத கோபம் கைநீட்டி பேசுவதால் வரும் என்றால்
கைநீட்டிதான் பேசுவோம் ..
கை நீட்டி பேசாதே என்பது அழுகிய பீடை குரல் .. மூளையை மழுங்கடிக்கும் சாதியின் குரல்
பாசிச அடிமையின் குரல் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment