சஹர்..
இஸ்லாமிய கிராமங்களில் நோன்பு இரவுகளில் பக்கீர் வருகைகள் மிக மிக குறைந்தவரும் காலத்தில் வழுத்தூரில் பக்கீர்கள் சஹர் நேரத்தின் "துயில் எழுப்புதல்"
செய்வது மதுரமான நிகழ்வாகிறது.. இது தேவைதானா நவீன வசதிகள் உண்டே, நள்ளிரவுநேரத்தில் அமைதியை கெடுக்க "தப்பொலி" ஓசை தேவைதானா என சில நவீன சித்தாந்திகள் கேட்க கூடும்,..
மெல்ல அழிந்துவரும் கலைவடிவங்களில் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று ..
..
இப்போதெல்லாம் பக்கீர்களை காண்பதறிதாய் போய்விட்டது .. பக்கீர் என்பதன் பொருள் கூட இன்றைய பக்கீர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் வேதனையான விடயம் ..
..
பக்கீர் எனும் பகீீீர் எனும் மூலச்சொல் (பாரசீகம்) வந்தது தன் எல்லா தேவைகளுக்காக இறைவனை இறைஞ்சுகிற தன்மை அது ஆன்மீக தேவையாகவும் உலகளாவிய தேவையாகவோ இருக்கலாம் என்பதிலிருந்தே அவர்கள் "துறவிகள் " அல்ல என பொருள் கொள்ளலாம் ..
..
தமிழகத்தில் நாடோடிகள் (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) நூலில் அ. வசந்தா அவர்கள் எழுதிய ‘பக்கீர்’ கட்டுரையில்
பக்கீர் என்பவர் தன்னிடத்தில் யாதொரு சொத்தில்லாமலும், யாதொரு தொழில் செய்யக் கூட்டாமலிருப்பவனாகவும் அவனிடத்தில் ஒரு நாளுக்குப் போதுமான உணவும் முழு உடுப்பும் இருந்தால் அவன் பக்கீரல்ல” என்பது பொது வழக்கு.. பொருளாதாரத்தில் வசதி படைத்தவர்கள் பக்கீரல்லர் என்பதையும், எவ்வித வருமானமும் இல்லாமல் வாழ்பவர்களே பக்கீர் என்பதையும் இதன்வழி அறியலாம்” .. என்கிறார்
..
பக்கீர்கள் யாசகம் பெறுபவர்கள் அல்ல அவர்களுக்கென்று பாரம்பரிய பெருமிதங்கள் உண்டு ..
இஸ்லாமிய ஞான இலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும், பரிச்சியமும் கொண்டவர்கள். தொன்மையான இசைக்கருவிகளை இசைக்கக் கற்றிருப்பார்கள். பார்வையில், பேச்சில், கனிவு, நன்னடத்தை, பற்றற்றத் தன்மை, இசையில், இறைப்புகழில் தோய்ந்து விடுதல் நாடோடிக்குணம் அவர்களின் இயல்பு இவையெல்லாம் ஒருகாலகட்டத்தில் இஸ்லாமிய சமூக மலர்ச்சியில் தேவையற்றதாக அல்லது இஸ்லாம் எடுத்தியம்பாததென பேச்சு வர தொடங்கியதிலிருந்து எல்லாம் மாறிப்போனது
..
சூபித்துவத்தை ஒருபுறமும் இறைநேசத்தை மறுபுறமும் கொண்டவர்கள் மனிதகுலநேசத்தை கொண்டு எளிமை பரந்த நோக்கு சமய உணர்வு கொண்டவர்கள் ஆனால் காலபோக்கில் ஏக இறைவனுக்கு மாறுபடுவதாக சொல்லி இவர்களை இஸ்லாமிய சமூகத்தின் "நவீனர்கள்" மெல்ல புறக்கணிக்க தொடங்கினார்கள்
இவர்களின் உடை இஸ்லாமிய பொது சமூகத்திலிருந்து மாறுபட்டு பச்சை /வெள்ளை தலைபாகை கண்டமாலை பாசிமணி ஜிப்பா என மாறுபடுவதும் நாடோடி வாழ்வியலை கொண்டதும் இவர்கள் இஸ்லாமிய சமூகத்திலிருந்து ஒடுக்கபட காரணங்களில் ஒன்றாகியது
..
இன்றைக்கு மிகவும் புறக்கணிக்கபட்டவர்களாக பக்கீர்கள்
இருக்கிறார்கள் பழைய மரபுகள் புதிய வழிதடங்களில் பயணிக்க முடியாமல் வாழ்வாதார நெருக்கடியால் பிற தொழில்களுக்கு சென்றுவிட்டார்கள் .. அர்ப்பணிப்போடு கலைநயமிக்க இறைநேசபாடல்களில் ஒலித்து சமயநெறிகளை பின்பற்றிவந்த சமூகம் இஸ்லாமிய சமூகத்தாலேயே தேவையில்லாத நிலைக்கு ஆளாகி பக்கீர்கள் வரவும் குறைந்து போய்விட்டது ..
..
வழுத்தூர் தொன்மைகளை கைவிடாமல் காத்துநிற்பதில் பெருமிதம் தோன்றுகிறது .. இது நம்பிக்கையை எல்லாம் மீறி நல்ல கலைவடிவ நாடோடி தென்றல் வீசுவதை ரசிக்கவும் போற்றவும் துணை நிற்கவும் வேண்டியது கடமை ..
எல்லோரும் பக்கீர் ஆகிவிட முடியாது .. 14 நாட்கள் தவமிருந்து தலை முதல் பாதம் வரை ரோமங்களை நீக்கி இறைந்தவரை போல சடங்குகள் செய்து கபனிட்டு அடக்க செய்யவேண்டும் .. சிறு துவாரத்தில் காற்று புக சில மணிதுளிகள் பீர்மார்களும் பக்கீர்களும் பைத் பாடி மீண்டும் தோண்டி எடுத்து அவரை பக்கீர் ஆக்குவார்கள் .. இப்போதெல்லாம் "அடக்கம் " செய்யும் சடங்கு தவிர்க்கபடுகிறதெனும் பக்கீராக சில வரையறைகள் உண்டு .. இஸ்லாம் ஏற்கிறதா என்ற கேள்வியும் இவர்கள் வாழ்வில் பெரும் நெருக்கடியைதந்ததென்றாலும் தமிழ்நாட்டில் பக்கீர்கள் வரவும் பெருக்கவும் பெருமளவில் குறைந்ததென்பதை மறுக்க முடியாது ..
..
மிகசிறந்த கலையோடு கூடிய வாழ்வியலை வாழ்ந்தவர்கள், நெறியோடும் புகழோடும் நல்ல குரலவளத்தோடும் ஞான பெருக்கோடும் வாழ்ந்த சமூகம்
பக்கீர் சமூகம் .. இனி வரும்காலங்களில் ...?
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment