வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை சட்டமன்றம் நிறைவேற்றியிருக்கிறது .. ஆளுநர் விவாததித்திற்கு அப்பாற்பட்டவரல்ல என்ற தீர்மானம் 144 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறது பாஜகவின் 2 வாக்குகள் எதிராக பதிவாகியிருக்கிறது. வழக்கம் போல் அதிமுக வெளிநடப்பு செய்து "விஸ்வாசமாய்" நடந்து "காட்டியும்"கொடுப்போம் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்..
..
ஆளுநர் நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனத்திற்காளாவதும், சனாதனத்தை தூக்கிக்கொண்டு அரசியல் சட்டமாண்பை சீர்குலைப்பதும், தொடர்ந்து மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசிற்கெதிராக செயல்படுவதுமாக ஆர்.என்.ரவி செயல்படுகிறார்.. பதிவிக்கேற்ற தகுதியும் கண்ணியமுமற்ற இவரை குடியரசு தலைவர் திரும்ப பெற வேண்டும்
..
நாள்தோறும் ஒரு கூட்டம் நாள்தோறும் ஒரு விமர்சனம் என ராஜ்பவனை அரசியல்பவனாக மாற்றி வருகிறார் .. வகுப்புவாத எண்ணம் கொண்டோரின் ஊதுகுழலாக செயல்படுவதாக மாண்பமை முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானத்தை கொண்டு வந்து பேசியது வரலாற்றில் இடம் பெறும் .. விடுதலை போராட்ட வீரர்கள் படகாட்சியில் காந்தி நேருவை புறக்கணிக்கிறார் .. காந்தி நேரு இல்லாத சுதந்திர போராட்டமா.. யார் அப்பன் வீட்டு பணம் பேசாமல் ரவி பாஜகவில் சேர்ந்துவிடலாமென அவை முன்னவர் துரைமுருகன் பேசியிருக்கிறார் .. பாஜக தவிர்த்து அனைத்துக்கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து எதிர்ப்பை சொல்லி தீர்மானத்தில் பேசியிருப்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது ..
..
ராஜ்பவனில் குடியிருக்கும் உரிமை ஒருவருக்கு உண்டென்றால் அது மாண்பமை முதலமைச்சருக்குதான்
இருக்கிறதென சிந்தனை செல்வனின் கூற்றை புறந்தள்ள முடியாது அதே போல் ஆளுநரின் நிதியை சரிபார்க்கவேண்டும் .. உதவி திட்டங்கள் நலத்திட்டங்களுக்கு செல்லும் நிதி எங்கே செல்கிறதென "கணக்கு" கேட்பதும் அவசியம் .. எதையும் இனி "அளந்தே" படியளக்கவேண்டும்
..
கவர்னரின் செயல் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது .. ஸ்டெர்லைட் ஆலை விவாகரத்தில் அவர் மீது மானநஷ்ட் ஈடு வழக்கு தொடர ஆவண செய்யவேண்டும் .. சென்னாரெட்டிக்கு நடந்ததைப்போல செய்ய எங்களின் அரசியல் அறம் இடம்தரவில்லை .. "அட்சய பாத்திரா" எனச் சொல்லி பெருந்தொகை வேறு வழியில் சென்றிருப்பதாத நிதியமைச்சர் .பி.டி.ஆர் சொல்வதிலிருந்து ஆளுநர் ரவியின் முகம் தோலுரிக்கபட்டிருக்கிறது .. இந்த சட்டமன்ற அமர்வு பெரும் விவாதத்திற்கு பொருளாகியிருக்கிறது
..
தேவையில்லா பதவியில் இருந்துக்கொண்டு தேவையில்லாததை பேசினால் தேவையில்லாமல் வாங்கிகட்டிக்கொள்ள வேண்டி வரும் ..
..
வரும்காலங்களில் ஆளுநர் இல்லாமலேயே சபையை நடத்த ஆயத்தமாக வேண்டியதும் .. கடும் அழுத்தம் தந்து ஆளுநர் பதவியை "இல்லாதாக்குவதும்" அவசிய அவசர தேவையாகிறது ..
ஆட்டுக்கெதற்கு தாடி
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment