Monday, April 24, 2023

ராசாமணி என்ன மன்னிடுச்சுய்யா 
என்ற தலைவனின் வழிவந்த இயக்கமிது சாதாரண தொண்டனின் குரலுக்கும் இங்கே மதிப்பும் மரியாதையும் உண்டு தவறை சுட்டிகாட்டும் தைரியமும் அதை ஏற்கும் மனோபலமும் பெற்ற தலைவரும் இயக்கத்தின் மிகப்பெரிய பலம் 
 .. 
12 மணி நேர வேலை சட்டவடிவு நிறுத்திவைக்கபடுகிறது .. அனைத்துக்கட்சியினர் மற்றும் தொழிற்சங்களின் கோரிக்கையை ஏற்று இந்த மக்கள் அரசு நிறைவேற்றபட்ட சட்டத்தை நிறுத்திவைத்தது .. மக்களுக்காகதான் அரசு என்று தமிழ்நாடு முதலமைச்சர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார் 
நன்றி!
..
இடறுவது இயல்பு ..
தவறு என அறிந்து உடன் மக்கள் கருத்தையொட்டி திருத்திக்கொள்வதும் அரசியலில் காணக்கிடைக்காதது .. தன் தொண்டனை திட்டிவிட்டோமென எண்ணி வருந்தி அவரை அழைத்து மன்னிச்சுடுய்யா என்ற மிகப்பெரிய ஜனநாயகவாதி கலைஞரை தலைவராக பெற்ற இயக்கம் இது .. இன்றைய பன்முக பரவலாக்கலில் 12 மணிநேர வேலை ஏறக்குறைய எல்லா இடங்களிலும் சட்ட அங்கீகாரமில்லாமல் செயல்படுத்தபடுவதும் உழைப்பாளிகளின் வியர்வை சுரண்டபடுவதும், பணிசுமை தொழிலாளவர்க்கத்தின் இயலாமையை பயன்படுத்துவதும் சாதாரணமாகிவிட்ட நிலையில் அதை சட்டமாக்கவேண்டுமென்ற முடிவு .. அதனால் உழைப்பு சுரண்டல் தடுக்கபடும் என்றிருந்தும், விருப்பமிருந்தால் பணி செய்யலாமென்றிருந்தும் வெகு மக்களும், தொழிலாளவர்க்கமும் எதிர்க்கிறார்கள் என்றவுடன் அதை நிறுத்திவைத்து ஜனநாயகத்தின் மாண்பை காத்திருக்கிறார் முதல்வர் ..
..
வீம்படியாக கொண்டுவந்த சட்டத்தை நடப்பிலாக்கியே தீருவோம் என கடுமைகாட்டாமல் கனிவோடு பரிசீலினை செய்து மக்கள் மனதில் உயர்ந்துநிற்கிறார் .. தொழிலதிபர்களின் நிர்பந்தத்தை இதோ பாருங்கள் கொண்டுவந்த சட்டத்தை
எம் மக்கள் ஏற்கவில்லை என ராஜதந்திரத்தோடு காய்நகர்த்தியிருக்கிறார்..  மிக சிறந்த ஆட்சியாளராக ஸ்டாலின் மிளிர்கிறார் 
..
பெரியார் அண்ணா கலைஞர் வழியில் முனைப்போடு செயல்படும் அரசு சட்ட முன்வடிவை உறுதியோடு கொண்டுவருகிறதோ அதோ உறுதியோடு  மக்களின் மாற்றுகருத்து வந்தால் அதை ஆராய்ந்து சீர்தூக்கி பார்த்து நிறுத்திவைக்கவும் தயங்காது என தலைவர் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார் ..
"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு" .. 
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும் ..
..
தி.மு.கழகம் ஆட்டுமந்தை கூட்டமல்ல  இந்த பக்கம் போவோம் என்றால் ஏன் போகவேண்டும், எதற்காக போகவேண்டும் என தம்பிமார்கள் கேட்காமல் போகமாட்டார்கள் என்றார் பேரறிஞர்  அண்ணா .. அப்படிபட்ட ஜனநாயக இயக்கம் தி.மு.கழகம்  தவறை சுட்டிகாட்டவும் தவறென்றால் நிறுத்திவைக்கவும் 
தொண்டனாலும் தலைவனாலும் முடியும் .. இந்திய ஒன்றியம் கண்ட மிகச்சிறந்த ஜனநாயக இயக்கம் 
திராவிட முன்னேற்ற கழகம் 
தொண்டனாய் பெரும் மகிழ்வு கொள்கிறேன் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment