வேங்கை வயல் ..
உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது .. ஏன் முன்பே இது குறித்து எழுதவில்லையென நண்பர்கள் கேட்டனர் .. ஆரம்பத்திலிருந்தே இதில் அதிக அக்கறைகாட்டுவோர் திமுக அரசை குறைச் சொல்லவேண்டுமென்ற சிறுமதிகாரர்களாக இருந்தார்கள் என்பதும் இதன் பின்னில் யார் இருக்கிறார்கள் என்பதை முழு விசாரணையிலேயே தெரியவரும் என்பதால் இது குறித்து எதுவும் எழுதவில்லை ..
..
ஆதிக்க சாதியின் கொடூரசெயல் இது என சிலரை போல எண்ணமும் வந்தது .. குடி தண்ணீரில் மலத்தை கலக்கிறவன் மனிதனாகவே இருக்க அருகதையற்றவன்.. ஆனால் இதற்கு பின்னால் சாதிய வெறி இருக்கும் என்பதில் இருகருத்துகள் வந்தன.. பட்டியலின மக்களின் மீதான வன்மம்/சாதிவெறி குறைந்துவிட்டதாகவோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் கோரதாண்டவம் தொடர்ந்து பட்டியிலின மக்கள் மீது காணபடுவதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது ..
கைநீட்டி பேசாதே என பொதுவெளியில் பேசுகிறநிலைதான் இன்றுமிருக்கிறதென்பது கவலைதரும் விடயம்
..
சாதீய தலைவர்களை "தமிழ்க்குடி" என விளித்து பழகிய சமூகம் .. தமிழ் இனம் என்பதே மதத்தில் சாதியில் தேடும் அறியாமையை இப்போதும் கொண்டுநடக்கும் கொடுமை, தேசியமென்ற பெயரில் DNA டெஸ்ட் எடுக்கும் கேவலம் நிறைந்த காலத்தில் மிக கொடுமையான நிகழ்வு நடந்திருப்பதை கண்டும்காணாமல் போகமுடியாது .. ஆனால் அறிந்தோ அறியாமலோ பாசிசசக்திகளின் வளையில் சாதிய சக்திகள் விழுந்துகிடப்பதும் குறிப்பாக பட்டியிலின சமூகம் வீழ்ந்துகிடப்பதும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க காரணியாகிறது .. எதிலாவது அரசியல் செய்திட வேண்டும் என துடிக்கும் சக்திகளுக்கு சிறிய சம்பவமே போதும் ஆனால் இதுபோன்ற கொடூர நிகழ்வு நடந்தும் அதிகம் மௌனமாக இருப்பதிலேயே நம் சந்தேகம் ஊர்ஜிதமாகிறது
..
விசாரணை சரியான பாதையில் செல்லும் போது மல பரிசோதனைக்கு சிலர் வர மறுப்பது ஏன் எங்கள் மீதே குற்றசாட்டை சொல்லவா /சுமத்தவா என்பதில் தான் ஏதோ தப்பு நடந்திருப்பதும் சில சக்திகளின் ஏற்பாடோ என்ற சந்தேகம் வலுக்கிறது.. மலத்தில் DNA சரிவராதென கதிர் போன்றோர் கதறுவது ஏன் .. மற்றொரு சமூகத்தின் மீது பழி போட தடையாக இருக்கிறதா..? போட்ட திட்டம் வெளியே தெரிந்துவிடுமென சிலர் அஞ்சுகிறார்களா .. தவறு செய்யவில்லையெனில் பரிசோதனைக்கு அஞ்சுவதேன்
..
யார் செய்திருந்தாலும் அவர்களை சாதிய கூட்டுக்குள் அடைத்திடாமல் மனிதனாக வாழ அருகதையற்றவனாக கருதவேண்டும் .. எவராக இருந்தாலும் சாதி மதத்திற்கு பின்னால் ஒளிந்துக்கொள்ள சம்பந்தபட்டவர்கள் அனுமதிக்ககூடாது .. தோழர் திருமா சொன்னதைப்போல விசாரணை நீதமாக நடக்கும் திமுகஅரசின் மீது நம்பிக்கை இருக்கிறதென்றார் ..
ஆம்
மானுடமற்ற இந்த இழிபிறவிகளை அடையாளம் கண்டு பொதுசமூகத்தின் முன் முகத்திரையை கிழித்தெறிவோம்
சாதிசமயமற்ற சமுதாயம் படைப்போம் .. சாதி கலவரம் செய்ய நினைக்கும் பாசிசத்தை வேரறுப்போம் ..
..
ஆலஞ்சியார்