Tuesday, January 31, 2023

தொட்டுபார் ..
ஈழத்தமிழர்களிடம் பிச்சையெடுத்தும் திங்கும் உனக்கே இவ்வளவு கொழுப்பென்றால் தமிழுணர்வு மேலிடும் எமக்கு எவ்வளவு இருக்கும் .. 
யாரையோ திருப்திபடுத்த கலைஞரின் பேனாவை உடைப்பேன் என்கிறாய் .. யார் நீ 
பிள்ளைப்பிடி பிரபாகரனை ஒருமுறை தூரமிருந்து பார்த்துவிட்டுவந்து கதையளப்பதைப்போல இங்கே எதையாவது பேசி திரிந்தால் நடமாடமுடியாமல் போகும் ..
நாகரீக அரசியலும் தெரியும் உன்னைப்போல கேவலமான இழிபிறவிகளை எப்படி கையாள்வதென்றும் தெரியும் .. 
..
தூக்கிபிடித்தால் கொடி அதையே மாற்றிபிடித்தால் அடி விழும் .. நாங்கள் செதுக்கபட்டவர்கள், செம்மையானவர்கள் என்பதாலேயே எதை பேசினாலும் வாய்மூடி மௌனமாய் கடந்து போவோமென எண்ணாதே ..
தீக்குள் கைவிட்டால் சுடும் .. இது பெருந்தீ சுட்டெரித்து சாம்பலாக்கிவிடும் எச்சரிக்கை ..
யாரிடம் காசுவாங்கிகொண்டு கதைக்கிறாய் என தெரியும் உனக்கு பிச்சை போடுபவனைக்கும் சேர்த்தே உதைவிழும் ஜாக்கிரதை .. 
..
காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வாய் என தெரியும் .. நீ முடிந்தால் தொட்டுபார் 
இந்த மண்ணை வடிவாக்கியவனின் பேனா,
வாழ்விழந்து நின்றவர்களுக்கு வழிகாட்டிய பேனா ..
ஒடுக்கபட்டோருக்கு அரணாய் நின்ற பேனா ..
இந்திய அரசியலை எத்திசையில் பயணிக்க  வேண்டுமென திசைகாட்டி நின்ற பேனா..
80 ஆண்டு பொதுவாழ்வில் அரசியல் இலக்கணம் வடித்த பேனா ..
தமிழாய்ந்த தமிழ்க்குடி மக்களுக்கு சங்கத்தமிழை எளிதாக்கிய பேனா 
தமிழ்சமூகத்தின் மேம்பாட்டிற்காக 
மொழிவளத்தை காப்பதற்காக உழைத்த பேனா .. செம்மொழி அடைமொழியை உறுதிபடுத்திய பேனா .. அதை உடைப்பேன் என்கிறாய் ..
..
கலைஞரின் பேனா தலை கவிழ்ந்தபோதெல்லாம் தமிழனின் தலை நிமிர்ந்தது .. 
உன்னைப்போல பொய்யும் புரட்டும் பேசி புலம்பெயர் தமிழர் காசில் வயிறு வளர்க்கும்  நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துவிட்டாய் 
இன்றைய உன் வளர்ச்சியிலும் கலைஞர் எனும் பேரருளாளனின் 
பெரும் கிருபை உண்டு மறந்துவிடாதே  .
மறுத்து பேச வாய்ப்பு தந்தும் எல்லை மீறி பேசினால் நாவடக்கபடும் ..
மலர் பறிக்காது மாவீரர் கரங்கள் 
..
ஆலஞ்சியார்

Monday, January 30, 2023

ராகுல்..
இந்திய ஒற்றுமை பயணம் வெற்றியா ..?  ஆனால் அழுத்தமான செய்தியை சொன்னது .. மக்கள் தங்களை இப்பயணத்தில் இணைத்துக்கொண்டார்கள் .. கன்னியாகுமரியில் தொடங்கி கஷ்மீர் வரை இந்த நடைபயணம் நல்லதொரு வழிகாட்டியை இனங்காட்டியது .. 
..
பாஜக தலைவர் அத்வானியின் ரத யாத்திரை அங்கங்கே மத வெறுப்பையும் கலவரத்தையும் தீப்பொறியையும் கொடூரக் கொலைகளையும் தந்து இளைஞர்களை மதத்தின்பால் வெறிக்கொண்டு சக மனிதனை கொன்றும் விரட்டியடித்தும் இந்த தேசத்தை படுகுழியில் தள்ளியது ஆனால் ராகுலில் பயணம் அன்பை தந்து அனைவரையும் அரவணைக்கும் பல்வேறு இனம் மொழிகளின் பண்பைப் பறைச்சாற்றி இம் மண்ணில் இன்னமும் மனிதம் மரித்துவிடவில்லையென நம்பிக்கையின் வேர்களில் ஈரத்தை தந்தது 
..
இந்த பயணத்தின் வெற்றி என்பது மக்களின் கைகளில் இருக்கிறது .. 
சாதியை மதத்தை பணத்தை பார்த்து வாக்களிக்காமல் இந்த நாட்டின் மீண்டுமொரு விடுதலை போராக எண்ணி தன்னலம்பாராமல் ராகுல் கரங்களை இறுக பற்றிக்கொள்ளவேண்டும்.. சின்ன சின்ன கசப்புகள் கடந்தகால தவறுகள் காங்கிரஸில் ஊடுறுவியிருக்கும் பாசிச சக்திகள் இவையெல்லாம் கடந்து இன்றைய தேவையை அதிலும் அவசரத்தின் நிலைகருதி பின்துணைக்கவேண்டும்,..
.. 
காங்கிரஸ் தோற்பதென்பது இந்தியாவின் சாமானியனின் தோல்வி .. இதோ எட்டாண்டில் இந்திய மக்கள் சொல்லண்ணாதுயரம் அடைகிறார்கள் .. தங்களின் இருப்பே கேள்விகுறியாகியிருக்கிறது .. மூளை கூட சுமையாக கருதும் முட்டாள்களால் நாடு வெந்துகிடக்கிறது .. மனிதநேயம் இழந்து, தனிநபர் வெறுப்பும் .. நாட்டின் சொத்துகள் சூறையாடுவதும், குறிப்பிட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக விரல்விட்டு எண்ணும் சிலரின் பெருவளர்ச்சிக்காக மக்கள் வரிப்பணத்தையும்,,சொத்தைையும் தாரைவார்ப்பதும் பாஜக ஆட்சிக்கு வந்ததலிருந்து நடக்கிறது .. இனியும் மிச்சமிருப்பதை இழக்காமலும் இந்தியாவின் கனிமவளம் கொள்ளையடிக்கபடாமல் காக்கவும் மதநல்லிணக்கமும்,சமூக முன்னேற்றமும், கல்வியில் கசடுகளை புகுத்தாமல், புராணபுரட்டுகளை திணித்து மூளை மழுங்கடிக்காமல் அறிவியல் துணைக்கொண்டு நாட்டின் வளர்ச்சியை எட்டவும்  காங்கிரஸ் பேரியக்கம் தேவை .. ராகுல் இன்றைய மிக முக்கியதேவைகளில் ஒருவராகிறார் ..
..
மரண வியாபாரிகளின் கைகளிலிருந்து நாட்டை மீட்க இந்த பயணம் உதவும், உதவ வேண்டும் .. இரக்கமற்ற கொடுங்கோலர்கள், எதை உண்ணவேண்டும் உடுத்தவேண்டும் என மக்களை கொல்லும் மகாபாதகர்கள் தோற்க வேண்டியது காலத்தின் அவசியம் ..
இந்திய இறையாண்மைக்கெதிராக கயவர்கள் தேசபக்தி எனும் பெருங்கூச்சலிடுகிறார்கள் .. கொள்ளையடிப்பதும் , அதை நியாயபடுத்த மதத்தின் பின்னால் ஒளிந்துக்கொள்வதும், எதிர்ப்பு வரும் போது அண்டை நாட்டால் ஆபத்தென திரிப்பதும் இந்து இஸ்லாமிய மக்களிடையே விரோதத்தை வளர்ப்பதும் எட்டாண்டுகளாய் கண்டு  அலுத்துவிட்டது .. இனிய நல்லகாற்றை சுவாசிப்போம் 
நல்லவர்கள் கையில் நாடு சென்றாலே வரும் தலைமுறையேனும் சாதிமதவெறியெனும் சாக்கடையில் உருளாமல் அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடாமல் இணைந்து வாழ்ந்து இந்திய ஒன்றியத்தின் இயல்பை காப்போம் 
பன்முகதன்மையே நமது நாடு ..
நல்ல தலைவன் வருகிறான் பற்றிக்கொள்ளுங்கள் 
..
ஆலஞ்சியார்

Monday, January 16, 2023

எம்ஜிஆர் பிறந்த தினம்.. 
ஜனவரி17..
..
எம்ஜிஆரை நல்ல கலைஞனாகவோ அல்லது சிறந்த அரசியல் ஆளுமையாகவோ என்னால் கருத முடியவில்லை .. சினிமா எனும் நிழற்கூடம் கற்பித்திருந்த மதிமயக்கும் மாயவலை என்போன்ற இளைஞர்களை வெகுவாக வழிகெடுத்ததென்பது உண்மை.. கவர்ச்சியும் அழகும் நிஜமென்று நம்பியதன் விளைவு அரசியலில் மிக பெரிய கேட்டை தமிழகம் கண்டது அதன் தொடர்ச்சியை இப்போதும் அனுபவிக்கிறோம்,..
..
இன்றைய தினம் அவரை புகழ்ந்து போலித்தனமாக எழுத இயலவில்லை.. இன்றைய தமிழர்களின் சங்கடங்களுக்கு காரணியாக இருந்தவர் எந்த தொலைநோக்குமில்லாது ..மனிதர்ளை ஏழைகளாக வைத்திருக்கவேண்டுமென்று நினைத்தவர்.. சுயசிந்தனையற்றவர்களாக சினிமாத்தனத்திலேயே  தமிழ்மக்களை மாயவலையிலேயே வைத்திருந்தவர்..
திராவிடர்களை, தமிழர்களை ஆரியர்களின் கைகளுக்குள் மீண்டும் கொண்டுசேர்த்தவர்.. இவர்களின் கைபாவையாகவே கடைசிவரை இருந்தார்.. பாசிசத்தின் பரிவும் கனிவும் இவரைப்பற்றிய பிம்பத்தை ஊதிபெரிதாக்கின
திராவிடத்தை வீழ்த்த பயன்படுவாரென்று கணக்கிட்டே இவரை உயர்த்திபிடித்தார்கள் 
இன்றைக்கு பொருளாதார அளவுகோலில் இடஒதுக்கீடு மத்திய அரசால் கொண்டுவரபட்டிருக்கிறதே .. அதை முதன்முதலில் இவரை கொண்டு சமூகநீதி பேசும் மாநிலத்தில் எந்த கொள்கைக்காக திராவிட இயக்கம் தோன்றியதோ அந்த இயக்க பின்னணியில் இருந்த வந்த எம்ஜிஆரை கொண்டே நடைமுறைப்படுத்த ஆர்எஸ்எஸ் துணிந்தது அதற்கு எம்ஜிஆர் துணைபோனார்
இந்தியாவிலேயே முதன்முதலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதி  ஏழைகளுக்கு இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார்.. அதன் விளைவு
அப்போது நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்கள் தான் அவரால் வெல்லமுடிந்தது ..
இன்று அறியவகை ஏழைக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியிருக்கிறார்களே அதற்கு முன்னோடி தான் இந்த சாயபூச்சு எம்ஜிஆர்..
..
யார் இந்த எம்ஜிஆர்..
அவரின் மறுபக்கத்தை மிக சுவாரஸ்மாக ரசிக்கலாம்.. வெளிப்புற தோற்றம் அழகால் ஆனது ஆனால் உட்புறமோ..
வேறெங்கும் விடைதேட தேவையில்லை.. 
திரு.ஜேப்பியார்  சொன்ன விடயம் ஒன்றே போதும் எம்ஜிஆர் என்னிடம் திரு.சோபன்பாபு கஸ்டடியில் இருக்கிறார் அவரை அழைத்துவரவேண்டுமென பணித்தார் நான் தான் அவரை மிரட்டி அழைத்து ஒரு இரவு என்னோடு வைத்திருந்துவிட்டு பிறகு பொன்மன செம்மலிடம் ..? ஒப்படைத்தேன் என வெளிப்படையாகவே சொன்னார்
ஜெயலலிதாவை குடும்ப வாழ்விற்குள் செல்லவிடாமல் அழுத்தம் தந்து கடைசிவரை ஜெயித்தவர் மகோரா..
..
நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தவுடன் கடைசிவரை காங்கிரஸை கைவிடாமலேயே அவர்களின் பாட்டுக்கு ஆடினார்...இந்திராவின் சாவும் அவரது நோவும் கடைசிவரை கைகொடுத்தது..  மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர.. அப்போது கூட சிறந்த திட்டங்களை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தவில்லை..
தமிழகத்தின் ஒரளவு நாகரீக அரசியல் செய்திருந்தாலும் காழ்புணர்வு அரசியல் வர காரணமாக இருந்தவர்.. கலைஞரோடு யாராவது சந்தித்தாலே கட்டம் கட்டி விலக்கிவைப்பார் இதற்காகவே கலைஞரை சந்திப்பதையே தவிர்த்தார்கள் .. சீமானின் மாமியார் மதுரையில் கலைஞருக்கு கட்அவுட் வைத்து வரவேற்றதும் ..உடனே காளிமுத்துவை விலக்கி வைத்தார் .. அவரை புகழ்ந்தவர்களுக்கு இதயக்கனியாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.
..
அரசியலில் அவரது பயணம் விமர்சனத்திற்கு உரியதென்றாலும் சினிமா நடிகனாக மிகப்பெரிய வெற்றியை தன்னிடம் மட்டுமே வைத்திருந்தவர் தமிழ்சினிமா ரசிகனின் மனநிலையை அறிந்து செயல்பட்டவர் எம்ஜிஆர் பார்முலா இன்றுவரை வெற்றிபெறுகிறதே அதிலிருந்தே மறைக்கமுடியாத சினிமாகலைஞராக நூற்றாண்டுகள் தாண்டியும் பேசபடுகிறார் எம்ஜிஆர் பார்மூலா வெற்றியை தருகிறது இன்னும் சிலகாலங்களில் அரசியலில் மறைக்கபட்டதைப்போல சினிமாவிலும் இவர் பெயர் மறக்கபடலாம் .... 
அரசியலில் இவர் பெயரை அதிமுககாரனே மறந்து நாளாகிறது .. காரணம் கொள்கையால் இணைந்தவர்கள் இல்லை சாயபூச்சில் மெய்மறந்து நின்றவர்கள் ..
ஏனெனில் அந்தி போனால் அரிதாரம் போகும்..
..
 நல்ல நடிகனா சிறந்த நடிகனா என்பதைவிட  #வெற்றி_நடிகர் என்று அழைக்கலாம்
தமிழ்சினிமா வரலாற்றை யாரை மறுத்து மறந்து எழுதினாலும் மகோரா எனும் எம்ஜிஆரை மறுத்தோ/மறந்தோ எழுதிவிடமுடியாது..
ஒருகாலத்தில் 
#தமிழ்சினிமாரசிகனின்_இதயக்கனி...
..
ஆலஞ்சியார்

Thursday, January 12, 2023

ஆளுநர் ..
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கவும் குடியரசு தலைவரின் பிரதிநிதியாக பணிபுரியவும் நியமிக்கபட்டவர் .. அவர் அரசியல் செய்வதும் அவர் சார்ந்த கொள்கைகளைையோ, சித்தாந்தத்தையோ அரசின் மீது திணப்பதற்கோ கருத்துச் சொல்வதற்கோ உரிமை இல்லாதவர் .. மக்களின் பெரும் நம்பிக்கையோடு அரசமைக்கும் தலைவரை அவர் எதைச்சொல்லி வாக்கு கேட்டாரோ அதை செயல்படுத்தவிடாமல் தடுப்பதும் ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை வெளிபடுத்துவதும், அரசியற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலங்தாழ்த்துவதும் அவரின் பதவிக்கு அழகல்ல..
..
ஆட்டுக்கு தாடி எதற்கு என்பதிலே உறுதியாக இருந்தாலும் ஆளுநர் குடியரசு தலைவரால் நியமிக்கபட்டவர் அந்த பதவி தேவையில்லை என்ற எமது கருத்தில் முழுமையாக உறுதியாக நின்றாலும் அந்த பதவி இருக்கும் வரை அதற்கான மரியாதையை தருவதில் இம்மியளவும் குறையாமல் செயல்படும் தளபதி தலைமையிலான அரசு .. தொடர்ந்து ஆளுநரின் செயல்பாடுகள் பாசிச சித்தாந்தத்தை கொண்டதாகவும் திராவிடம் என்ற சொல்லே அவருக்கு எரிச்சல் தருவதாகவும் இருப்பது கண்டுகூடாக அவரின் உடல்மொழி மற்றும் செயலில் தெரிகிறது ..
..
இன்று அவர் நடந்துக்கொண்ட விதம் அரசியல் அமைப்புக்கு களங்கம் விளைப்பதோடு, மரபுகளை மீறியதாகவும் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது .. அவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்போ கொள்கை, கோட்பாடே இந்த திராவிட அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு செய்வது அநாகரீக செயல் ..
..
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை கொண்டு தொடர்ந்து அழுத்தம்,தருவதும் அரசிற்கு இடையூறு செய்வதும், ஏதேனும் காரணம் கிடைக்காதா என ஏங்குவதும் ஆட்சி பொறுப்பிற்கு வர புறவழி ஏற்படாதா என ஏங்குவதும் தொடர்ந்து ஜனநாயக மரபுகளை தகர்த்து வருவதும் இந்திய ஒன்றியத்தின் மாண்பை குலைப்பதாக உள்ளது .. பன்முகத்தன்மையை மாற்ற ஒரே சித்தாந்ததம்,செயல்திட்டமென தங்களின் எண்ணங்கள் ஈடேற முடியாமல் தடையாக இருக்கும் "திராவிடம்" என்ற சொல் அவர்களை தூங்கவிடாமல் செய்கிறது ..
..
பாசிசவாதிகளே பிற்போக்குதனமாக ஏதேனும் செய்யலாமென நினைக்கும் போதெல்லாம் அறிவுக்கொண்டு ஒரு சமூகம் அதை சுக்குநூறாக்குவதை கண்டு புலம்புகிறீர்கள்..இந்த மண் பெரியாரை முழுவதுமாக உள்வாங்கிய மண் .. பெருந்தலைவர், பேரறிஞர் பேரருளாளன் கலைஞர் இவர்களால் பண்படுத்தபட்ட மண், இவர்கள் பெயரை கேட்டாலே பதறுகிறீர்கள் .. என்னதான் மனப்பால் குடித்தாலும் உங்கள் எண்ணம் இந்த திராவிட மண்ணில் ஈடேறாது ..
..
தேர்ந்தெடுக்கபட்ட அரசிற்கு குடைச்சல் கொடுக்கும் ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும் .. ஆளுநர் மாளிகைக்கு அருகில் தான் விமானநிலையம் உள்ளது .. 
இந்திய ஒன்றிய அரசே
தேசிய கீதத்தை கூட மதிக்காத ஆளுநரை திரும்ப பெறு!..
..
தமிழ்நாடு மாபெரும் தலைவன் கையில் பாதுகாப்பாய் இருக்கிறது 
"திராவிட மாடல் " எமது கொள்கை பயணத்தின் செயல்திட்டம் .. இங்கே சமூகநீதியும், சமூக நல்லிணக்கமும், சுயமரியாதையும்,எல்லோருக்கும் எல்லாம் என்பதும், அடுக்குள் இல்லாத சமநிலையோடு அனைவரையும் மதித்து, அரவணைத்து சமமாக நடத்தி செல்வதே எமது சித்தாம்தத்தின் அடிநாளம் ..
புரிகிறதா ஆளுநர் ரவி அவர்களே 
..
ஆளுநர் உரையை அவை குறிப்பிலிருந்து நீக்கி "புதியவரலாறு" படைத்தார் முதலமைச்சர் தளபதியார்
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
..
தளபதி படையே.. இனி..
தமிழ்நாட்டை ஆளும் ..
Stalin is More Dangerous than Karunanithi 
..
ஆலஞ்சியார்

Monday, January 9, 2023

பச்சை முத்து ..
காவி முத்தாய் இன்று பிதற்றினார்,
புதிய தலைமுறை நிருபர்  கேள்வியில் பதிலளிக்க முடியாமல் திணறி கடைசியில் ரூம்க்கு வா ஆதாரத்தை தருகிறேன் என கூறி பின் வாக்குவாதமாகியது 
 அண்ணாமலையின் பதற்றம் 
வெளிப்படையாக தெரிகிறது .. 
எதையாவது சொல்லி கடைசியில் முழிபிதுங்குவதும், தொடர்ந்து கமலாலயம் காமஆலயமாய் காட்சிபடுத்தபடுவதும், சிலரை மிரட்டியும் பணியவைத்தும் அவர்கள் அந்தரங்க விடயங்களை படமாக்கி பணியவைப்பதுமாக 
அரசியலில் கழிவு நாற்றமெடுக்கும் நிலை  இதுவரை தமிழகம் கண்டிராதது ..
..
அதை தொடர்ந்து நிருபர் புதிய தலைமுறையிலிருந்து நீக்கபட்டு, அதன் உரிமையாளர் பச்சை முத்து 
அண்ணாமலை புகழ்ந்து  அவருக்கு அனைத்து வரலாறும் அத்துபடி என சரண்டரான நிகழ்வு  எந்தளவு மிரட்டல் நடந்திருப்பதை சொல்கிறது  ஊடகத்துறையில் ஒரு களங்கமாய் புதியதலைமுறை வரலாற்றில் பதிவாகும்.. ஊடக சுதந்திரம் என்பது மிரட்டலுக்கு பணிந்து போவதல்ல.. அவசரநிலை காலத்தில் கூட அஞ்சாமல் ஊடகங்கள் உண்மையின் பக்கம் நின்றன .. ஜனநாயகத்தின் தூணாய் தாங்கிநின்றது.. இன்று தங்கள் சொத்தை பாதுகாப்பதிலும், கல்வி கொள்ளையிலிருந்தும், வருமானவரிகஞ்சியும், பாஜகவின் காலை நக்க கூட இந்த பச்சைமுத்து தயங்கமாட்டார் .. 
..
தமிழகத்தில் பாஜக வளர தொடங்குவது ஆபத்தானதென்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் போதும், பொய் பித்தலாட்டம் காமலீலைகள் தனிநபரின் உரிமைகளில் தலையிடுவது மிரட்டுவது, சாதிமத மோதல்களை உருவாக்க துடிப்பது எப்பாடுபட்டாயினும் எதை சொல்லியாகினும் நல்லாட்சிக்கு களங்கம் கற்பிக்க முடியாதயென தொடர்ந்து பொய்செய்திகளை பரப்புவது .. நிருபர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வக்கின்றி திமுகவை கேட்பாயா ஸ்டாலினிடம் கேட்கமுடியுமா என மடைமாற்ற முயற்சிப்பது .. 20000 புத்தகம் படித்தவன், 
என  தொடர்ந்து பொய்யுரைத்தும், எதையாவது உளறியும்,  நாகரீகமற்ற முறையில் தனியாக வா என மிரட்டியும் 
ஆகசிறந்த கழிசடையாய் பாஜக தலைவர் வலம் வருகிறார் 
இவரைதான் பச்சைமுத்து சிறந்த தலைவர் என புகழ்ந்து தங்கள் நிறுவனத்தின் பணிபுரிந்த நிருபரை வீட்டுக்கனுப்பியிருக்கிறார்..
..
பாரிவேந்தர் பச்சைமுத்து எனும் பரம அயோக்கியர் அண்ணாமலைக்கு சான்றிதழ் தருகிறார் .. பணம் பயம் ரெய்டு என்னவெல்லாம் பேசவைக்கிறது 
பாஜக தமிழகத்தில் பாலியல்ஜல்சா கட்சியாக மக்கள் தெரிந்துக்கொண்டார்கள் .. அந்த கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையென காய்த்தரி , லட்சுமி என விலகுகிறார்கள் அவர்கள் சொல்லும் அண்ணாமலை தலைமையில் கட்சியில் பெண்களுக்கு  பாதுகாப்பு இல்லை ..  பச்சை முத்து பயப்படுவதிலும் காரியமில்லாமல் இல்லை அவரின் வீடியோக்கள் சில கசிந்ததும் இன்னும் சில அண்ணாமலை வசம் இருப்பதாக சொல்லபடுகிறது .. 
மொத்தத்தில்  பாஜக ரௌடிகள், பாலியல் சேவை செய்வோர், பெண்பித்தர்கள், ஊழல் செய்வோர், வருமான வரிக்கஞ்சுவோர் என கயவர்களின் கூடாரமாக இருக்கிறது .. 
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி என்றார் பெரியார் .. இவர்களின் ஆயுதமும் அதுதான் "தேசபக்தி 🤣.. 
..
ஆலஞ்சியார்

Wednesday, January 4, 2023

திராவிடத் தென்றல் கனிமொழி..
உச்சத்தில் குரலில்லை எனினும் உயர்ந்துநிற்கும் கருத்து.. அநீதி கண்டு கூட்டணி தர்மம் பாராமல் நாடாளுமன்றத்தில் குரல் உயர்த்தி "என்னபண்ணுறீங்க" என கேட்கும் துணிவு அதே நபர் (ரங்கராஜன் மா.கம்யூ)சென்னை வந்திறங்கியவுடன் அரணாக நின்று அனுப்பிவைத்த தெளிவு .. கொண்ட கொள்கையில் உறுதி தான் நாத்திகர் தானென தந்தையின் இறுதி சடங்கில் கூட கடைசி வரை உறுதியாய் நின்ற பேரழகு .. நாடாளுமன்றத்தின் மேலவையில் இவர் ஆற்றிய அரிய பணிக்காக சிறந்த "நாடாளுமன்றவாதி" யாக தேர்வாகியும்.. மக்களின் துணையோடு நின்று களம் கண்டு வென்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் அதுதான் மக்களின் நன்மதிப்பை பெற்ற ஜனநாயக பாதை என தேர்வாகி சென்று இன்றும் அறச்சீற்றத்தோடு ஆரியபகையின் "சிம்மசொப்பனமாய்" திகழும் 
மானமிகு.கனிமொழி கருணாநிதிக்கு 
#அகவை_தின வாழ்த்துகள் ..
..
பாசிசம் தன் கொடூரபற்களால் கனிமொழி அரசியல் வாழ்வை சிதைக்க எண்ணி 2ஜி வழக்கில் சிக்கவைத்து அதன் மூலம் பெற்ற தந்தையை மடக்கலாமென மனப்பால் குடித்து .. திராவிட இயக்கத்தின் முடிவுரையை எழுதிவிடலாமென கங்கணம் கட்டி செயல்பட்ட ஆர்எஸ்எஸ் கும்பல் அதற்கு துணையாய் ஊடகங்கள் வாயில் வராத பெருந்தொகையை கற்பனையாய் சொல்லி உச்சநீதியும் தன்னை கேட்காமல் பிணை வழங்க கூடாதென தன் குடுமியை ஆட்ட சுற்றி பெருஞ்சுவர் எழுப்பியதை போல தனிமையில் வருத்தி பணிய வைக்காலாமென்ற சிறையிட்டும் .. அறம் வெல்லும் என்ற "அப்பனின்" சொல் காதுகளில் ரீங்காரமிட 
நேர்மை உண்மை என்று தோற்காது என்ற நம்பிக்கையில் துணிவோடு வழக்கை சந்தித்து 
வென்று தன் தந்தை முன் நாம "ஜெயிட்டோம்பா "
என குழந்தையின் குதூகலத்தோடு நின்றவர் .. 
..
மிக தெளிவாக தன் பலமறிந்து தன் தலைவரோடு கரம்கோர்த்து நின்று பகைவெல்லும் ஆளுமை 
மகளிர் அணியில் புதியதொரு தொடக்கத்தை பெருமளவில் பங்கேற்க செய்து பெண்களின் பங்கை உறுதி செய்தவர் "திராவிட இயக்க வரலாற்றில் பெண்கள் " பங்கு அளப்பரியது இன்றும் மிளிர காரணியாய் இருப்பவர் .. கழகத்தின் துணைப் பொது செயலாளராக உயர்ந்து நிற்கிறார்.
..
தன்னை சந்திப்பவர்களிடம் கனிவோடு கலந்துரையாடும் "தன்மை ".. வருபவர்கள் கருத்தை அமைதியாக கேட்டு ஆவண செய்யும் மக்கள்பணி .. கட்சிகளை கடந்து யார் வேண்டுமானாலும் சந்திக்க கோரிக்கைகளை வைக்க அதன் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து கேட்டு அறிந்து ஆலோசனை வழங்கும் நேர்மை மிகு அரசியல் பயணம் ..
..
கவிஞர் கதாசிரியர் இலக்கியவாதி பேச்சாளர் சிறந்த நாடாளுமன்ற செயல்வீரர் .. மகளிர்படையின் தலைவர், துணைப் பொதுச் செயலாளர்,
பெரியாரின் பெயர்த்தி என பன்முக ஆளுமையாய் திகழும் பேரன்பு கனிமொழிக்கு 
என் வாழ்த்துகள் ..
நீண்டு சிறந்து மகிழ்ந்து வாழ்க!..
..
ஆலஞ்சியார்
வெள்ளம்ஜி ஹாஜாமைதீன் அண்ணன் ..
பழகுவதற்கு இனியவர் 
பாசமிகு அண்ணன் ..
என் ஆசான் ..
போய்விட்டீர்களா ..
..
என் பள்ளிகாலங்களில் 
கட்டுரைப் போட்டி,பேச்சு போட்டி என்றால் அண்ணனிடம் தான் போய் நிற்பேன் .. மிக அழகாக சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் விதமாய் எழுதி தருவார் .. அதை படித்து மனபாடம் செய்து பேசியும், எழுதியும் பரிசுகள் பல பெற்றிருக்கிறேன் .. எழுத்தின் மீது ஈர்ப்பு வர காரணமாக இருந்தவர் .. எந்த தலைப்பை தந்தாலும் ருசிகரமாய் நமக்கு தருவார் ..
போய்விட்டீர்களா ..
..
அண்ணன் அரசியலில் என் நேரெதிர் .. சிலநேரம் கடும் வாக்குவாதம் செய்திருக்கிறேன் .. எம்ஜிஆரை தொடர்ந்து ஜெயலலிதாவின் அதிமுகவில் இருந்தவர் .. நிறைய உயரங்களுக்கு வர தகுதியானவர் ஏனோ வாய்ப்புகள் வரவில்லை.. சிலநேரம் நீங்கள் இருக்கவேண்டிய இடம் இதுவல்ல என பேசியிருக்கிறேன் .. நேரெதிர் அரசியலில் இருந்தாலும் எப்போதும் அன்போடு மன்சூர் என அழைக்கும் வாஞ்சை அழுக்கற்ற மனம் .. ஒருமுறை அமைச்சர் துரைகண்ணு அவர்களோடு  இல்லம் வந்து "நோன்பு திறக்கும் நிகழ்ச்சி"க்காக அழைக்க வந்தார் ..  திருமாவேலன் எழுதிய "பெரியார்" புத்தகத்தை அமைச்சருக்கு தந்தது நினைவில் இனிக்கிறது 
..
பள்ளிகூடம் , பள்ளிவாசல் நிர்வாகம், விவசாயம், அரசியல்,
என பன்முகத்தன்மை கொண்ட முழுமனிதர் .. கடுஞ்சொல் சொல்லாத இனிமையாக கதைப்பது எப்படியென இவரிடம் கற்றுக்கொள்ளலாம் .. பல்வேறு திறமைகள் இருந்தும் பகட்டுகாட்டாத பெரியமனிதர் .. 
என் மீது பாசம் கொண்ட அண்ணன் வெள்ளம்ஜி ஹாஜாமைதீன் மறைந்துவிட்டார் என செய்தி அறிந்து அதிர்ந்துபோனேன் ..
..
இளைப்பாருங்கள் ஆசானே 
..
ஆலஞ்சியார்


..
வழுத்தூரின் இன்னொரு முகம் 
இன்று மறைந்தது ..
கா.இ.ப. முகம்மது அலி ..
"பங்களா" வீட்டில் பிறந்து ஊர் ஜமாத் தலைவராக 40 ஆண்டுகளுக்கு மேல் பள்ளிவாசல் நிர்வாகத்தை தன் வசம் வைத்திருந்தவர் ..  (பாலிய முஸ்லிம் சங்கம்) சௌகத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளியின் நீண்டநாள் தாளாளராக இருந்தவர் 
இவ்விரண்டும்  சாதாரண விடயமாக கடந்து போய்விட முடியாது..
..
நிறை குறைகளோடுதான் மனிதனின் வாழ்வு .. அதிலும் பொதுவாழ்வு என வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.. நாலாபுறமும் "நல்லவர்களின்" வசவுகள் கேட்கவேண்டும் .. அதையெல்லாம் மீறி தொடர்ந்து தலைவராக நீடித்தவர் .. அவர் விலகியதற்கு பின் என்ற கேள்வி 
ஆயிரம் "பொருள்" பொருந்தியது 
தனக்கு பிறகு எவரும்  வரகூடாதென்ற நினைப்பே இன்றைய வழுத்தூர் நிர்வாக அவலத்திற்கு சாட்சி 
..
தாளாளராக ஏறக்குறைய 50 ஆண்டுகள் .. பெரும் பயணம் .. நீண்டநாள் பா.மு.ச தலைவர்  பள்ளிதாளாளர் ..
பள்ளியில் பவளவிழாவில் G.K. மூப்பனார் அழைத்த போது ஏன் திமுக கல்வி அமைச்சரை அழைத்திருக்கலாமே என வாதம் செய்திருக்கிறேன் .. அப்போதைய பா.மு.ச செயலாளர் G.S. என்றழைக்கபட்ட சேக்அலாவுதீன் அவர்கள் என்னை அழைத்து நீண்டநேரம் பேசியது நினைவிருக்கிறது .. பவளவிழா அன்று நல்ல "காய்ச்சல்" ஆனால்  விழாவிற்கு வந்திருந்தவனை அழைத்து  அன்பு தலைவருக்கு (G.K.M)  என்  அன்புதம்பி மாலையிடுவார் என என்னை  (எங்களால்  மாமா என அன்போடு அழைக்கபடும் ஜாபர்சாதிக் அவர்கள்)அழைத்து  கௌரவம் செய்த நிகழ்வும் மறக்க முடியாதது 
இப்போதும் தாளாளராக தான் தொடர்ந்தார் .. உடல்நலியுற்றிருந்தபோது
வெள்ளம்ஜி ஹஜாமைதீன் அண்ணன் பொறுப்பேற்றிருந்தார் என அறிந்தேன் அவரும் மறைந்துவிட்டார்..
இனி வரும் காலங்களில் யார் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது .. 
..
வழுத்தூர் நல்ல கல்விமான்களை, அறிஞர்களை, புத்திஜீவிகளை தந்திருக்கிறது .. நல்ல சிந்தனை கொண்டவர்கள், நல்லதை விரும்பும் ஊருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்க்கும் சிகாமணிகள் வரவேண்டும் ..
பார்ப்போம் காலம் என்ன பதிலை தருகிறதென்று ..
..
தாளாளர் KEP முகம்மது அலி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்கிறேன் ..
இளைப்பாருங்கள் எங்கள் தாளாளரே..
..
ஆலஞ்சியார்

Tuesday, January 3, 2023

அரசியல் ..
பொதுவாழ்வில் எதிர் கருத்தை விமர்சிப்பதும் தன் நிலைபாட்டை சரியென சொல்வதும், சரியோ தவறோ எதுவாகினும் எதிர்ப்பதும் ஆதரிப்பதும், மாறி மாறி கடுமையாக விமர்சித்தபோதும் எல்லை மீறாமல் நடந்ததெல்லாம் அதுவொரு காலம் என  சொல்லவேண்டியிருக்கிறது ..
..
மிக மோசமான பேசுவதும் தனிநபரை கேவலபடுத்துவதும், அவர்கள் குடும்பத்தை, உறவுகளை கொச்சைபடுத்துவதும் முன்பே இருந்தாலும் அது அதிகமாக திராவிட இயக்கத்தலைவர்களை குறிவைத்து பேசபட்டதும்,  வயதான கிழவன் திருமணம் செய்தான் என்றும், அறிவுக்கொண்டு வாதிடமுடியாத போது வேசிமகன் என நஞ்சை கக்கியதும் பார்த்தது தான் .. அந்த காலத்திலேயே ஓடுமேய்ந்த வீட்டில் 
பேங்கில் பங்கு வைத்திருந்த, 21 வயதில் சில ஆயிரங்களை சம்பாதித்தவர்,  திருட்டு ரயில் வந்ததாக குடிபோதையில் உளறியதை இன்று வரை சில அரைவேக்காடுகள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் அதையெல்லாம் புறங்கையில் தள்ளிவிட்டு நாம் மக்கள் நலனுக்காக தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக அனைவரும் சமமாக நடத்தபடவேண்டுமென பெருங்கிழவன் வகுத்த தந்த பாதையில் செல்கிறோம் 
..
நம் எதிரிகள் "கௌரவ"மானவர்களாக இல்லை என்பது "கடினமாக" தான் இருக்கிறது .. அதிமுக எனும் சாயபூச்சு மெல்ல பொழிவிழப்பதும் அந்த இடத்தை பாசிசம் விழுங்க பார்ப்பதும் கண்கூடாக தெரிகிறது.. மறைமுகமாக காங்கிரஸில் இருந்த மதவாதிகள் தங்களின் நிஜத்தில் களமிறங்கியதும் "முனகல்" அதிகமாகிவிட்டது ..  முன்பு  கொஞ்சம் மறைமுகமாக நளினம் பாடியவர்கள் இன்று பட்டவர்த்தமாய் கொஞ்சி திரிகிறார்கள் ..
..
பெண்களை முன்னிலைபடுத்தவோ, தங்களைவிட ,உயரத்தில் கொண்டுவரவோ, மதத்தின் பெயரில் இழிவு சாபம் லோகம் கெட்டுவிடும் என பம்மாத்து பேசியவர்கள் இன்று புரியும் லீலைகள் பார்க்கவும் கேட்கவும் செய்வதுதான் பாசிச பாஜகவின் வளர்ச்சி.. தொடர்ந்து பெண்களை போதைக்கு பயன்படுத்தும் பழைய சனாதன லீலைகளை இன்று படபிடிப்போடு நடத்தி "பேருவகை" கொள்கிறார்கள் .. கட்சியிலிருந்து வெளியேறிய "நடனமங்கை " என்னிடமுள்ள ஒளிப்பதிவு ஒலிப்பதிவுகளை காவலிடம் கொடுக்க போவதாக சொல்கிறார் ..
தனிநபரின் உல்லாசங்கள் பொதுவெளியில் பேசுபொருளாக வேண்டுமா.. அவர்களின் லீலைகளை வைத்து மிரட்டுவது கண்டிக்கபடவேண்டுமே தவிர அனைவரின் பார்வைக்கு அல்ல..
தனித்தனியே இங்கு யாரும் யோக்கியன் இல்லை என்ற சொல் நினைவிற்கு வருகிறது ..
..
இதுவல்ல அரசியல் .. பேசுங்கள் உங்கள் சித்தாந்தத்தை, கருத்தியலை கொள்கைகளை, நம்பிக்கைகளை .. அதை எதிர்க்கவும் மறு கருத்தை சொல்லவும் அறிவுபூர்வமாக வாதிடவும் தயார் .. அதற்குமுன் ஒழுக்கமான அரசியலை பயிலுங்கள்  கழிசடைகளோடு களமிறங்குவது எமக்கு அழுக்கு ..
பிரம்மனாய் நின்று மகளுக்கு தாலிகட்டும்  மனநலபிறழ்களோடு என்ன இருக்கிறது கதைப்பதற்கு 
..
அறிவோடு   பகுத்தறிவோடு, கடும் உழைப்பும்  நேர்மையும் நெறியோடும் மக்கள் செல்வாக்கோடு சரியானதை அறிவேற்பதை சொல்லி 
கழகம் கண்டவர்கள்/காண்பவர்கள் நாங்கள்,..  ஆனால் நீங்களோ
மதம், சாதி, புராணம்,பொய் புரட்டு, மூடவழக்கம், அறிவிற்கொவ்வா பழங்கதைகள் என பேசிதிரிபவர்கள்
 முட்டாள்களே கொஞ்சமேனும் சிந்தியுங்கள் ..
உங்கள் ஆசாபாசலீலைகள் தமிழகத்தின் பெயரை கெடுக்கிறது .. தனிநபரின் விருப்புவெறுப்புகளை பட்டியலிட்டு உங்கள் தரத்தை சொல்லிவிட்டீர்கள் .. மக்கள் முகம் சுளிக்கிறார்கள் ..
மதம் மனிதனை மடையனாக்கும், பொய்யும் புரட்டும் ஆசையும் மலிவான செயல்களும் நீங்கள் யாரென்பதை உணர்த்தும் .. 
..
ஆலஞ்சியார்