Thursday, December 22, 2022

காவி..
இந்த நிறத்திற்கென்று ஒருமரியாதை இருந்தது ஒருகாலம் .. தன்னை முழுமையாக எளிமைபடுத்தி லௌகீக ( உலகப்பற்று) வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு, ஞானம் தேடி கரைந்து, பசி கோவம்,அடக்கி மெய்ஞனை தேடும் தவம் அது .. இறைஞ்சி வாழும், தேவையறியாது வாழ்வில் போக்கில் அழுக்கோடு திரிந்தாலும் உள அழுக்ககற்றி உடல் மெலிந்து 
உலகாசபாசங்களை விட்டொழிந்து கருணையாய் நிற்பது 
..
காவிகள் சிலரை கண்டாலே புன்முறுவலோடும் தன்னை தாழ்த்தியும் வரவேற்று மகிழ்ந்த காலமுண்டு.. ஆனால் உழைப்பதற்கஞ்சி, குடும்பபாரத்தை விட்டொழித்து 
காடு மலையென கடந்தேறி பொய்ஞானம் பேசி கிடைத்தவரை லாபம் என "வாழ" தொடங்கியதில் தான் "காவி" எனும் சொல்  செருக்காகிப்போனது ..
..
காவி 
மதத்தின் அடையாளமாய் மாறி அது அரசியலாய் போனதால் 
லாபம் கொழிக்க நல்ல வாய்ப்பென சிலர் காவிக்குள் அடைக்கலமாகினர்.. அது அரசின் அங்கீகாரமானதும்  வாழவே தகுதியற்றதுகளின் பாதையாய் ஆனது காவி .. கொள்ளையடி, சிலைகடத்து, கொலை கூட செய் ஆனால் காவியின் நிழலில் நில் .. நீதியே தலைவணங்கும் 
..
காவி அணிந்து கலவரம் செய் ..
பிற மதத்தவரை மாட்டின் பெயரைச் சொல்லி கொல், கர்ப்பிணியை வன்புணர்வு கொள், பிறமதத்தின் நம்பிக்கையை தலையிட்டு கலாச்சாரம் சீரழிவதாக சொல்,  காக்க காவி உண்டு .. 
..
மதம் வழிபாடும் வணக்கத்திற்கே தவிர 
அடுத்தவரை இம்சிக்க அல்ல..
நீ நம்பும் கோட்பாட்டில் உறுதியாய் இரு .. அது அடுத்தவர் நம்பிக்கையில் தலையிடுவதல்ல
இணக்கமாய் வாழ தான் எல்லா சமயங்களும் சொல்கின்றன.. சிலர் சுய உயர,தாங்கள் தான் மேல் என அடுக்குகளை அமைத்து அதை திரும்ப திரும்ப சொல்லி மூளையை மழுங்கடித்ததால் .. தான் தாழ்வானவன் எனச் சொல்லும் போது கூட தன்னை விட தாழே ஒருத்தன் இருக்கிறானென மீசை முறுக்கி நிற்கும் அவலம் .. 
காவிகள் மிக அழகாய் அடுக்கிய பொய் பிம்பங்கள் அறிவைக்கொண்டு வெல்லும் நாள் வெகுவிரைவில் வரும்.. அதற்கு கல்வி ஒன்றே தெளிவு தரும் ..
..
காவி மட்டுமல்ல .. மதத்தின் நிறங்கள் ஆபத்தானவை .. அறிவை மழுங்க செய்யும் ஆயுதம், 
மெல்ல கொல்லும்,மனதை மலடாக்கும், கடிவாளமிடும்,  அதை விட்டொழி..
..
ஞானமெனும் வெளிச்சத்தில் உலகை காண் .. அது வாழ்வின் யதார்த்ததை சொல்லும்.. எளிமையையும், பிறருக்கு உதவும் மனமும், வறியவரை கண்டால் வாடுதலும்,.உயர்வில் செருக்கின்றி வாழுதலும், நன்னெறி,நற்செயலும் நாவினிக்க மொழிதலும் நன்னடக்தையும் வாழ்வின் அறம் ..
எத்தனை நாள் வாழ்வாய்..
வாழும் வரை மதம் தலைக்கேறாமல் வாழ்வோம் இனிதாய் ..
..
நிறங்கள் அழகு ..
அது .. 
அடுத்தவரை காயபடுத்தாதவரை..
..
ஆலஞ்சியார்

Sunday, December 18, 2022

எங்கள் இனமானமே..
கொள்கை குன்றே ..
திராவிடத் "தரு"வே 
..
உன் நிழல் கூட 
எமக்கு பகுத்தறிவை போதித்தது 
எக்காலத்தலும்,
எக்காரணம் கொண்டும்,
எந்நிலையிலும் 
தடமாறாத உன் பயணம் 
கொள்கை உறுதியை கற்றுதந்தது
..
கலைஞரின் இடதே ..
எங்களின் இதயமே ..
உன் கண்ணசைவை 
கலைஞர் புரிந்துக்கொள்வார் 
கலைஞரின் விழி பேசும் மொழி
உனையன்றி யாரறிவார்..
நட்பென்றால் 
என்னவென்று 
வாழ்ந்துகாட்டி 
இலக்கணம் படைத்தீர் 
கலைஞர் மறைந்த தினம் 
கோபாலபுரத்திலிருந்து 
வெளியேறி 
திரும்பிநின்று 
வீட்டை ஒருமுறை பார்த்தீரே
அதில் 
எழுபதாண்டு அரசியலில்
எண்ணற்ற முடிச்சை அவிழ்க்க
தீட்டிய திட்டமெல்லாம் 
கண்முன் வந்துபோயின 
..
பேராசிரியரே 
உம் வழிதனை 
சிரமேற்று நடத்த
பெரும்கூட்டம் உண்டு..
உன் அரசியல் தெளிவை 
பாடாமாய் கொண்டு 
பட்டைகிளப்பி பெரும்படையோட்டம் நடத்தி 
பகைமுடிப்போமென என
உன் நூற்றாண்டில் 
உறுதியேற்போம் 
..
#பேராசிரியர்..
எங்கள் இனமானம்..
கலைஞரின் 
மற்றொரு முகம்..
நட்பிற்க்கோர் இலக்கணம்
..
#நவில்தொறும் நூல் நயம்போலும்.
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு.

படிக்க படிக்க இன்பம் தரும் நூல் போல பழக  பழக  இன்பம் தரக்கூடியது பண்புடையார் நட்பு
..
#பேராசிரியருக்கு_பிறந்தநாள்
19/12/1922..
அகவை 101
ஆர்ப்பரிக்காத
அமைதிக்கடல்
ஆழ்கடல்..
அமைதியான 
ஆழ்கடலில்தான் 
முத்து கிடைக்கும்..
..
சுயமரியாதை சுடரொளி
திராவிட இயக்க சங்கநாதம்
கொள்கையில் உறுதி..
கலைஞரின் சுருதி..
..
எங்கள் இனமானம்..
எங்கள் இனஉணர்வு...
எங்கள் பேராசிரியர்..
..
ஆலஞ்சியார்

#Perasiriyar101
#பேராசிரியர்101



Tuesday, December 13, 2022

உதயநிதியின் நல்வரவு ..
..
சிலர் ஏன் அவசரம் என  அக்கறையோடு கேட்பதைப்போல அங்கலாய்கிறார்கள் .. சிலர் நல்லநேரம் பார்த்து பதவியேற்கிறார் .. சிலர் நாங்கள் அப்போதே சொன்னோமே குடும்ப அரசியல்.. சிலர் பதைபதைப்பதும் சிலர் விமர்சிப்பதைப்போல பேசி ஏதோ ஜனநாயகத்தை காக்கவந்தவர்கள் போல கூப்பாடு போடுவதும் ஊடகங்கங்களிலும், வலைதளங்களிலும் காண முடிகிறது .. உண்மையில் இவர்கள் வெகு சிலரே .. ஜனநாயகத்தை வேரறுக்கவந்தவர்கள், அடிமைத்தனமும், பாசாங்கும், பழிகுணமும் கொண்டவர்கள் .. இவர்களை பீச்சாங்கையால் தள்ளிவிட்டு நாம் நம் வேலையை செய்வோம் ..
..
நீண்டநாள் காத்திராமல் சட்டென்று முடிவெடுத்த முதலமைச்சருக்கு நன்றி .. ஐம்பதாண்டுகள் காத்திருந்தாலும் இவர்களின் எரிச்சலும் பகையும் கூப்பாடு குறைந்துவிட போவதில்லை .. 
சரியான நேரத்தில் அமைச்சராக்குவதும் அதிகமதிகம் கற்றுக்கொள்ளவும், மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு பயிற்சியாகவும் அமையும் .. சிலரின் பொறாமைகளை கணக்கில் கொள்ள தேவையில்லை ..
..
உதய்  தன் 45 வயதில் அமைச்சராகிறார் தன் தாத்தன் 44 வயதில் அமைச்சரானதைப்போல அதைப்போல் கடும் உழைப்பு தேவை .. சுற்றியிருக்கும் கையடிகளை கவனமாக கையாண்டு தூர நிறுத்தவேண்டும், "சின்னவர் " என புகழ்பாடும் "துதி"களிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் .. இவர்களின் கைதட்டல்கள் பதவிக்காகவே என்பதை உணரவேண்டும் .. இன்னமும் கடுமையாய் உழைத்து அப்பன் பெயரை காப்பது மட்டுமல்ல அப்பனை மிஞ்சி உழைக்கிறான் என பெயரெடுத்தால் வரலாறு பேசும் 
..
நல்ல நேரம் பார்த்து பதவியேற்கிறார் என்பவர்களுக்கு தேய்பிறையில் அல்லவா என கேட்கமுடியும் .. சமீபத்திய பேட்டிய மிகத் தெளிவாக கடவுள் என்ற கேள்விக்கு இல்லை  என சொன்னவர் .. ஏற்கனவே ஒரு பேட்டியில் என் தாயாருக்கு பக்தி உண்டு எனக்கோ என் இணையர் கிருத்திகாவிற்கோ கடவுள் பக்தி இல்லை என்றவர் அவரை தான் நல்ல நேரத்தில் பதவியேற்பதாக சுமந்துகள் சுமக்கிறார்கள் .. நம்பிக்கை என்பது  அவரவர் விருப்பம் .. அவரின் மக்கள்பணி எப்படிபட்டதென்பதை சேப்பாக்கம் மக்கள் சொல்கிறார்கள் .. பொதுவாக தமிழக மக்களின் மனயோட்டமும் உதய் வருவதை வரவேற்பதாகவே இருக்கிறது 
..
தமிழகத்தின் நம்பிக்கை ஒளியாய் திகழ்கிறார்.. பாசிசம் பலமுனை தாக்குதலை நடத்தும் வேளையில் நாகரீகமற்ற எதிராளிகள், வீண் வதந்ததிகளை பரப்பும் விலைப்போன ஊடகங்கள்,  அதிமுகவைப்போல திமுகவையும் வருங்காலத்தில் சிதலடைய செய்ய காத்திருக்கும் வேளையில் திமுகவின் எதிர்காலமென்பது தமிழர்களின் நலனும் தமிழ்நாட்டின் தன்மானமும் சேர்ந்தது  என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்
..
வாரிசு என கதறுபவர்கள் யாரென்று பார்த்தாலே புரியும் நமக்கு .. ராஜகோபால் (ராஜாஜி) தன் மகனை C.R.நரசிம்மனை   கிருஷ்ணகிரி எம்பி ஆக்கியபோது பேஷ் பேஷ் என்ற கூட்டம் தான் ..
அவர்கள் நோக்கம் எப்படியேனும் திமுகவை அகற்றவேண்டும் .. திமுக கட்சிதான்  நமக்கு இடையூறாக இருக்கிறது .. எந்த  திட்டம் கொண்டுவந்தாலும் வழக்கு தொடுத்தோ போராட்டம் மூலம் நடக்கவிடாமல் செய்கிறது.. அதிமுகபோல அடக்கியாள முடியவில்லை என பாசிச பார்பனீய கும்பல் முழிக்கிறது ..
..
திராவிடத்தின் தேவை இன்னமும் இந்த மண்ணுக்கு அவசியம் என்பதால் திமுகவை அடுத்தகட்டத்திற்கும் தயார் செய்யவேண்டுமென்பதால் பகுத்தறிவோடு செயல்படும் இளைஞரை இப்போதிலிருந்தே தயார் செய்வது திராவிட இயக்கத்தின் கடமை .. 
இந்த மண்ணில் சமூகநீதியும், சமத்துவமும்,சமநீதியும் நிலைத்திட முதலமைச்சரின் அடுத்த நகர்வை தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரித்து அரவணைக்கும் 
நல்வரவாகட்டும்..
WELCOME  Udhayanidhi Stalin 

நன்றி! 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
ஆலஞ்சியார்
பெண் என்றால் அடக்க ஒடுக்கமா இருக்கணும் என்கிற பொது புத்தி 
மேயரின் புட்போர்ட் பயணத்தை கிண்டல் செய்கிறது .. யாரும் அக்கறையோடு சொன்னதாக தெரியவில்லை .. மேயரின் தொடர் உழைப்பை,உறங்காமல் ஒவ்வொரு நொடியும் மாநகராட்சியின் பணிகளை முடுக்கிவிட்டு தானும் கொட்டும் மழையிலும் வீசும் காற்றிலும் களத்தில் பணியாற்றியதை பாராட்ட மனமில்லாதோர் "கரிசனம்"படுகிறார்கள் .. புயலை வைத்து அரசியலை செய்யலாம் தண்ணீர் தேங்கி நிற்கும் பழி சுமத்தலாம் என்ற நினைப்பில் இருந்தவர்கள் மாநகராட்சியின் "கீளின் "கண்டு சிலருக்கு ஆதங்கம் .. 
..
சின்ன பெண்ணை மேயராக்கியிருக்கிறார் என்றார்கள்.. அனுபவமில்லாதவர் சரியாக பேச தெரியவில்லை என்றவர்களுக்கு சிறிய தவறை பெரிதாக்கிறீர்கள், எட்டுவருடமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்காத மோடியை ஏன் கேள்வி கேட்க  பயப்படுகிறாரென , அதைப்பற்றி கேட்கவோ எழுதவோ துணிவில்லையென திருப்பி  அடித்த துணிவு கண்டு
"குறை ஒன்றுமில்லை " என்பதால் தொங்கியதை பெரிதுபடுத்துகிறார்கள் ..  
..
முதல்வர் வாகனம் சென்றவுடன் பின் தொடர்ந்து செல்வதில் காலதாமதம் ஆகலாம் என்பதால் அதிலேயே பயணம் செய்திருக்கிறார் .. அவரது பணியில் சுணக்கமோ தவறோ இருந்தால் விமர்சனம் செய்யுங்கள் அதை விடுத்து மேயர் தொங்கலாமா, என்றெல்லாம் அணை கட்டாதீர்கள் .. 
மக்கள் பணி என வந்துவிட்டால் எங்களின் செயல் விரைந்து நடக்கும் .. ஒரு உதாரணம் போது பொது மருத்துமனையில் தீ விபத்து அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து காரைவிட்டு இறங்கியவுடன் ஓடுவார் .. அதுதான் தன்னிடம் கொடுக்கபட்ட பணியை சிறப்பாக செய்யவேண்டும் .. முதல்வர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் மாநகர மக்களின் அன்பை பெறவேண்டும் 
"வேறொன்றும் அறியேன்" என செயல்படும் 
"இரும்புமங்கை" Real Iron Lady மேயர் 
PriyaRajan DMK 
..
வேறேதுமிருந்தால் வாருங்கள் கதைப்போம் 
..
ஆலஞ்சியார்

Thursday, December 8, 2022

பாஜகவின் வெற்றியும் தோல்வியும் ..
..
நடந்து முடிந்த தேர்தல் சில உண்மைகளையும், சில கசப்பான செய்திகளையும் தருகிறது .. வீழ்த்த முடியாததென்று எதுவுமில்லை என்ற யதார்த்ததை எதிர்கட்சிகள் உணரவேண்டுமென சொல்கிறது ..
..
குஜராத் தேர்தல் நாட்டின் பிரதமரே 20 நாட்கள் அங்கேயே தங்கி தேர்தல் பணிகளை செய்ததும், தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்பை கூட தள்ளிவைத்து 16 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை அறிவிக்கும் வரை காத்திருந்ததும் வாக்குபதிவின் போது மக்களை வாக்களிக்கவிடாமல் அவர்களே வாக்குபதிவு செய்ததும், சில இடங்களில் குறிப்பாக சிறுபான்மையினர் மிரட்டபட்டதும் 
ஒருவழியாக வெற்றியை தந்திருக்கிறது .. வெற்றியை "பனியாக்கள்" நலனுக்காக இதை கூட  செய்யவில்லையென்றால் எப்படி..?  இத்தனை ஆண்டு தொடர் வெற்றியை மக்கள் தருகிறார்கள் என்றால் மக்கள் நம்பிக்கையில் இருக்கவேண்டும் அல்லது கல்வியறிவில் மிகவும் பின் தங்கியிருக்கவேண்டும் .. முதலாளிகளின் நலனில் அக்கறை கொண்ட அரசை அடிமை தொழிலாளிகள் ஆதரிக்கதான் செய்வார்கள் ..
..
காங்கிரஸ் வியூகம் இமாச்சலத்தை போல சரியாக வகுக்கபடவில்லை.. 2017 ல் காங்கிரஸ் துளிர்த்தெழுந்தது கண்டு பாஜக காங்கிரஸில் செல்வாக்குள்ள தலைவர்களை தன்பக்கம் இழுத்து மீண்டும் அவர்களுக்கே சீட் கொடுத்தது அமைச்சராக்கபடுவீர்கள் என்ற வாக்குறுதியும் தரப்பட்டு சிலர் மாறினார்கள் .. பெரும் தொகையை இரு குஜராத் முதலாளிகளிடமிருந்து பெற்று வாரி இறைக்கபட்டது .. மோடி மான பிரச்சனை என  அதிகாரிகள் பவ்யத்தோடு தங்களாலான "கடமை" யை செய்தார்கள் ..  அதிகாரிகள் "சாத்திய" விசுவாச படையல் ..
..
இமாச்சலமும் இடைத்தேர்தல்களும் சில சமிஞ்சைகளை தந்திருக்கிறது .. உங்கள் பிரதமர் கனவை துறந்துவிட்டு விரும்பியோ விருப்பமில்லாமலோ காங்கிரஸை அரவணைத்தே ஆகவேண்டும் .. ஒன்று கூடி இழுத்தால் பாஜகவை தூர எறிந்துவிடலாம் .. தேசநலன் பற்றி துளியேனும் அக்கறையிருந்தால், ஆர்எஸ்எஸ் யாருக்காக செயல்படுகிறது .. பாஜக குறிப்பிட்ட சமூகத்திற்காக பெரும்பான்மை மக்களை சுரண்டுவதும் வாழ்வாதாரத்தை கல்வியை வேலைவாய்ப்பை சுரண்டுவதும் சனாதனத்தை உயர்த்தி பிடித்து மடையர்களாக வைத்திருக்க நினைப்பதும் அறிந்து பாஜக அப்புறபடுத்தபடவேண்டிய "சக்தி" என்பதை உணர்ந்து  தங்களின் கனவுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பாஜகவை அதிகாரத்திலிருந்து கீழிறக்க வேண்டும் 
..
முடியாததன்று எதிவுமில்லை என்பதை இந்த தேர்தல் உணர்த்தியிருக்கிறது .. ஒற்றுமை, தொலைநோக்கு, தேசநலன், ஒருமைபாடு, எல்லாருக்கும் எல்லாம், சமநீதி, அவரவர் நம்பிக்கைக்கு பாதுகாப்பு மீது அக்கறைக் கொண்ட ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து நின்றால் பாஜகவை வெல்லலாம்..
ராகுல் அரசியல் செய்ய பழக வேண்டும் குஜராத் பாலம்  விழுந்ததை எடுத்துச் செல்வதில் கூட அக்கறைகாட்டாதவர் ..
பலர் மரணத்தில் அரசியல் செய்யவிரும்பவில்லை என்றால், கேட்க சுகமாக இருக்கும் ஆனால் பாஜகவின் தோல்வியை, அவர்களை ஊழலை வெளிகொணரவேண்டியது அவசியத்தை மறந்தார்
..
கலைஞர் சிறிய விடயத்தை கூட பேசு பொருளாக்குவார் ..
ஒருமுறை கப்பல் பேர ஊழல் என்றார் கலைஞர் உடனே எம்ஜிஆர் வாங்காத கப்பலுக்கு ஊழலா என்ற போது .. கலைஞர் கவிதை நடையில் பதில் தந்தார் ..

நீங்கள் அன்றாடம் பார்த்து மகிழும் திரைபடத்தின் மூலமே விளக்கம் தர எண்ணுகிறேன்
தன்னந்தனியாக 
ஒரு அழகி 
தாமரை முகத்தால் 
தனியே சென்றிடுவாள் 
அவரை சில முரடர்கள் வழிமறித்து கற்பை சூறையாட முனைவார்கள் 
அப்போது மரத்திலிருந்தோ, மதில் சுவற்றிலிருந்தே கதாநாயகன் பொத்தென குதிப்பான் 
பின்னர் என்ன நடக்கும் 
முரடன் ஒருவனுக்கு கால் உடையும் ஒருவனுக்கு கை உடையும்
பின் கதாநாயகியை அழைத்துச் செல்வான் 
அப்போது அடிபட்ட முரடர்கள் 
ஏனப்பா "கதாநாயகரே" 
நாங்கள் தான் அந்த பெண்ணின் 
கற்பை சூறையாடவில்லையே
ஏனப்பா அடித்தாய் என கேட்டால்  எப்படி நகைச்சுவையாக இருக்குமோ அப்படிதான் வாங்காத கப்பலுக்கு பேரமா என்பது என்பார்
கப்பல் வாங்குவதற்கு முன்தானே பேரம் பேசமுடியும் என்பதை அழகாக விளக்குவார்.. 
எதை அரசியல் செய்யவேண்டும் எப்போதும் எதிலும் ஆளும்கட்சிக்கு குடைசல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் .. மேம்போக்கான அரசியல் எடுபடாது .. அரசியல்கட்சி நடத்துகிறோம் அரசியல் தானே செய்யவேண்டும் ..
..
ராகுல் கலைஞரை படிக்கவேண்டும் .. இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது .. துரோகிகளை இனங்கண்டு கட்டம்கட்டவேண்டும் .. ஒற்றை கருத்துடைய  எதிர்கட்சிகளை அரவணைத்து விட்டுகொடுத்து சாதி,மதவெறிகளை விலக்கி நல்லதொரு விடியலை தர  தொடர்ந்து முயற்சித்தால்  விடியும் பாஜக கதை முடியும் ..
முடியாததென்று எதுவுமில்லை
..
ஆலஞ்சியார்

Wednesday, December 7, 2022

ஆர்எஸ்எஸும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பின்னே உவைசியும் 
..
ஆர்எஸ்எஸின் கள்ளகுழந்தைகள் 
மக்களிடம் மதிப்பிழக்கிற போது 
வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸிற்கு போகாமல் மடைமாற்றுவதும், பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க உதவுவதும் மட்டுமே அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை அதை தெளிவாக சரியாக செய்கிறார்கள் .. பஞ்சாப்பில் காங்கிரஸுக்கு காரியம் செய்ய சிந்துவை களமிறக்கிய போதே சீக்கியர்கள் பாஜகவை ஆதரிக்கமாட்டார்கள் என அறிந்து ஆம்ஆத்மிக்கு ஊடக வெளிச்சம் தந்தார்கள் .. டெல்லி பெருநகரம் கைவிட்டு போகும் என அறிந்து காங்கிரஸ் வரகூடாதென்பதில்  பாஜகவைவிட காங்கிரஸில் இருக்கும் பார்ப்பன சங்கிகள் அதிகம் கவலைக் கொள்வதும் கவனமாக இருப்பதும் வெளிப்படையாகவே தெரிந்தும் காங்கிரஸ் தலைமை களைந்தெறிய தயங்குவதுதான் வியப்படைய வைக்கிறது ..
..
காங்கிரஸ் தனிநபர் செல்வாக்கோடு மீண்டும் பழைய நிலைக்கு வருவது மிக கடினம் .. ராகுலின் "யாத்திரை" மக்களின் செல்வாக்கை வாக்குகளாக்க முடியாமல் பிரித்தாளும் சூழ்ச்சியை காங்கிரஸ் "கிழங்கள்" செய்துக் கொண்டிருக்கிறது .. சிறுபான்மையினரின் இயல்பாகவே வரும் பாஜக எதிர்ப்பை தனியாக பிரித்து பொது எதிர்ப்பிலிருந்து தனித்து காட்ட நினைத்து ஒவ்வொருமுறையும் பாஜகவிற்கு வழிவிடுவதும் இஸ்லாமியர்களை பொது சமூகத்திலிருந்து தனிமைபடுத்த தன்னாலான முயற்சியை தொடர்ந்து செய்துவருகிறார் .. கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்க காரணமாக இருந்தவர் இப்போதும் அதே பணியை குஜராத்திலும் செய்கிறார் உவைசி எனும் கோடாரி
..
கெஜ்ரிவால் செல்லப்பிள்ளை என்றால் உவைசி கள்ளப்பிள்ளை 
உவைசி மட்டுமல்ல நிறைய இஸ்லாமிய அமைப்புகளும் (குறிப்பாக SDPI  போன்ற ) இதையே தான் செய்கிறது இவர்கள் முஸ்லிம்களுக்கு உதவிபுரியவில்லை மாறாக கெடுதலை தெரிந்தே செய்கிறார்கள் .. இதோடு மாநிலத்திற்கு மாநிலம் பல்வேறு பிரிவுகள் தலைமை, மற்றும் புகழுக்காக வேரில் வெந்நீரை ஊற்றுகிற செயலை கொஞ்சமும் நெஞ்சில் சஞ்சலமில்லாமல் செய்கிறார்கள் 
இவர்கள் இருக்கிறவரை ஆர்எஸ்எஸையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவை அசைக்கமுடியாது 
..
நல்வாய்ப்பாய் தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளம், ஆந்திரத்தில் மக்கள் மதவெறிக்காளாமால் புரிந்து நிற்கிறார்கள் இங்கேயும் குறிப்பாக தமிழ்நாட்டில் நிறைய உவைசிகள் சமுதாயத்தின் சாபகேடாய் நின்றாலும்  தெளிவோடு மக்கள் இவர்களை பிச்சாங்கையால் புறந்தள்ளுகிறார்கள் ..
நிறைய சாதீய அமைப்புகளும் அதிலும் குறிப்பாய் பட்டியலின சங்கிகளும், பணம் புகழுக்காக ஈசலைப்போல வந்து விழுகிறவர்களும் பெருக்கெடுத்தாலும் சூரியனின் பெருநெருப்பில் பொசுங்கி போகிறார்கள் 
..
நாடு எங்கே போகிறது .. தன்னலம் பாராமல் உழைப்பவர்களை விட கார்ப்பரேட் சேவகர்களை கொண்டாடுகிறது .. மதம் தலையின் கிரீடமென நம்பி வடவர்கள் சிந்திக்கும் திறனற்று நிற்பது, சாதிய சனாதர்ம கோட்பாட்டை எதிர்க்க துணிவற்று மடமையில் ஊறி, புராண புரட்டுகளை நம்பி நாட்டை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறார்கள் .. பொதுவுடமை பேசும் சிவப்புகள் இரத்ததிற்கு பிறகு காவியை பூசிதான் தொடங்கியது.. மக்கள் விழிப்படைந்து சகாக்களை புறக்கணிக்க தொடங்கியவுடன்  கெஜ்ரிவாலையும் உவைசிகளையும் வைத்து  "சூது" செய்கிறார்கள் 
..
இந்திய ஒன்றியத்திற்கு இப்போதைய தேவை பல்வேறு கட்சிகளின் ஒருங்கிணைப்பும் நல்ல தலைமையும் ..  எதிர் அணியினர் கருத்துவேறுபாடுகளை களைந்து, புற்றீசல்போல் வளர்ந்து வரும் உவைசிகளையும் கெஜ்ரிவால் போன்ற கள்ளக்குழந்தைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு, தங்களின் பிரதமர் ஆசைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ராகுல் காந்தியை (காங்கிரஸை) முன்னிறுத்தி நாட்டில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் .. இதைதான் போன தேர்தலிலேயே 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் சொன்னார் .. 
இப்போதாவது விழிந்தெழுங்கள்
..
ஆலஞ்சியார்

Saturday, December 3, 2022

ஆர்.எஸ்.பாரதி 
திமுகவின் அமைப்பு செயலாளர்
சில தினங்களுக்கு முன்பு அ.ஜின்னா நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும் போது தன்னுடைய நீண்டகால பயணத்தையும் நீண்டநாள் காத்திருந்ததையும் தான் அறிமுகபடுத்தியவரெல்லாம் எம்.பி எம்எல்ஏ என வந்துவிட்டதை சொல்லி திமுகவில் புதிதாக வந்தவர்கள் ஜொலிப்பதாக கதைத்திருக்கிறார்..
..
ஆர்‍.எஸ்.பாரதிக்கு எதிர்கருத்துகூற விமர்சன செய்ய முழுதகுதியிருக்கிறது ..ஏன் திமுக உறுப்பினர்கள் கூட தன் கருத்தை கூற உரிமை உள்ளது .. எல்லாமட்டத்திலும் பயணிக்கும் யாவரும் கருத்திடலாம் எதிர்க்கலாம் ஆனால் அதை எப்போது எங்கனம் செய்யவேண்டுமென அறிதல் வேண்டும் .. பொதுவெளியில் பேசுவதால் எதிரிகளுக்கு அவுலோடு சக்கரையையும் கலந்து கொடுத்ததைப்போல வேகமாக பரப்புகிறார்கள் .. முதலில் அவர் பேசியது முழுவதையும் வெளியிடாமல் சிலதை மட்டும் வேகமாக எடுத்துச் செல்வதிலிருந்தே நோக்கம் நமக்கு புரிகிறது ..
அப்படி தவறாக எதுவும் பேசவில்லை .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தில் தேர்தலை மைய்யபடுத்தி களம்காண வேண்டிய கட்சி சிலநேரம் சிலரை முன்னிறுத்துவதும் சிலருக்கு வாய்ப்பை காலதாமதபடுத்துவதும் இயல்பு .. அவரே பலமுறை லிஸ்டில் பெயர் இருக்கும் வாய்ப்பு தள்ளிபோகும் என்கிறார் .. கலைஞரே ஜின்னாவிற்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என ஆதங்கபட்டதாகவும் சொல்வதிலிருந்தே தலைவரின்  ஆசையை கூட திமுக காலந்தாழ்த்தும் என்கிற உண்மை திமுக எத்தகைய ஜனநாயகதன்மை கொண்ட இயக்கம் என்பதை உறுதி செய்கிறது 
..
ஆர்.எஸ்.பாரதிக்கு 
1986ல் தன் 39 வயதில் நகர்மன்ற தலைவர்.
அதன்பின்  தொடர்ந்து மூன்று முறை நகர் மன்ற தலைவர்..  நீண்டநாள் அமைப்பு செயலாளர் எம்.பி என பலபதவிகளை வகித்தவர் வகித்துக்கொண்டிருப்பவர் .. அவரின் பேச்சு வைரலாக காரணம் என்ன .. மிக எதார்த்தமாக திமுகவில் நிறைய பேர் காத்திருப்பதை சொல்கிறார் .. தலைவரே காத்திருப்போருக்கு வாய்ப்புகள் வழங்கபடுமென சொன்னதுதான் .. புதிதாக வந்தவர்கள் என்ற சொற்சொடரையே ஏற்பதற்கில்லை ஏற்கனவே திமுகவில் இருந்தவர்கள்தான் பாதை மாறியவர்கள் திரும்ப வந்தாலும் எல்லோருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை சிலரை தேவை கருதி அவர்களின் ஊழைப்பு வெற்றி வாய்ப்பை மற்றும் பிரதான காரணங்களை கருத்தில் கொண்டு தலைவர் முடிவெடுக்கிறாரெனில் அதில "அர்த்தம்" இருக்கும் ..
..
மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு ஏதோ திமுக மட்டும்தான் வாய்ப்பை தருவதைப்போல பிம்பத்தை கட்டமைக்கிறார்கள் .. எம்ஜிஆர் ஜெயலலிதா வாய்ப்பை வழங்கியபோது வாய்பொத்தி இருந்தவர்கள் இன்று பாரதி பேசியவுடன் பார்த்தாயா அமைப்பு செயலாளரே பேசிவிட்டார் இருப்பவனுக்கு மரியாதை இல்லை என கூச்சலிடுகிறார்கள் 
..
திமுக பாரதிகளும் மணிகளும் ஆறுமுகங்களும், பெரியசாமிகளும் பெரியண்ணன்களும் தங்கபாண்டியர்களும், நிறைந்த பெருங்கூட்டம் .. எம்ஜிஆருக்கு சீட்டா  என இரவு கதவை தட்டி அண்ணாவிடமே கேட்ட கல்லூரி மாணவர் பாரதி .. எம்ஜிஆர் சமாதிக்கெல்லாம் என்னால் வரமுடியாதென கடைசிவர வரமறுத்த மணிகள் உண்டு .. பொதுக்குழுவிலேயே குரல் உயர்த்தி பேசும் ஆறுமுகங்களும், முரட்டுபக்தர்களும்,கழகத்தை விட்டு போனால் வீட்டில் மாட்டியிருக்கும்  புகைப்படத்தை வெளியே எறியும் தங்கங்களும் கொண்ட இயக்கம் .. பதவி வரும் போகும் என இடுப்பு வேட்டி இறுக கட்டும் மானமறவர்கள் நிறைந்த கட்சி .. தலைவருக்கு யாரை எப்போது எங்கே நிறுத்த வேண்டுமென தெரியும் .. வாய்ப்புகள் மறுக்கபடவில்லை காலதாழ்த்துகிறது அவ்வளவுதான்
..
திமுக மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் .. வாய்ப்பு கிடைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல சிலருக்கு நல்வாய்ப்பாய் அது சீக்கிரம் கிடைத்திருக்கும் கோடிக்கணக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இயக்கத்தில் தகுதியுள்ளோர் ஏராளம்  ஒவ்வொரு தொண்டனும் தகுதியுடையவன் .. 
தொண்டனின் பலமே திமுக கொள்கை உறுதியோடு செயல்படும் பெரும்படை கொண்ட கூட்டம் திமுக.. கலகம் மூட்டலாம் என்ற சிலரின் எண்ணம் ஈடேறாது
..
ஆலஞ்சியார் 

Thursday, December 1, 2022

இனப் பகைவர்கள் அரசியல் எதிரிகள் வஞ்சக சூழ்ச்சியால் வலை விரிக்க முயற்சிக்கின்றனர் 
பகை வென்று பணி தொடர அணிவகுப்போம்.. கொள்கையும் சாதனைகளும் நமக்கு வாளும் கேடயமும் ஆகும், அதை குக்கிராமம் வரை கொண்டு  சேர்க்கவேண்டும் 
மாண்பமை முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் பொய் பிரச்சாரங்களிலும் ஈடுபடுகிறார்கள் .. நாகரீகமற்ற உரையாடல்கள் பேசவே நா கூசும் மொழிநடையில் கொஞ்சம் கூட வெட்கபடாமல் பேசுகிறார்கள் .. எதிலும் உண்மை இல்லை என்றாலும் சிலமணிநேரத்தில் அது அவிழ்ந்துவிடுமென அறிந்தும் அம்மணமாய் நிற்க வருமென தெரிந்தும் அதுவரை பரபரப்பை தருமே என விசமத்தை பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள் 
இனப் பகைவர் வலையில் சிக்குகிறவர்கள், சுயமிழந்தவர்கள்  
..
சோம்பேறிகள்  குற்றபின்னணி கொண்டவர்கள் சமூகத்தால் வெறுக்கபடுபவர்கள், கொலை கொள்ளை ரகளை என முத்திரையோடு திரியும் ஆபத்தானவர்கள் .. அடுத்தவரை ஏமாற்றி பிழைக்கும் எத்தர்கள் 
"சூது" தர்மமென்போர், புரட்டை புராணமென மெச்சுவோர், மதத்தை சாதியை தலையில் ஏற்றி வெறிகொண்டலையும் மூடர்கள்  உறவின்முறையை கூட கேவலமாக்கும் கயவர்கள் மொத்தத்தில் ஆபத்தான, அருவருக்கதக்கவர்களின் கூடாரமது ..
..
நம் தலைவர் மிக தெளிவாக பகைவர்கள் வஞ்சகவலை விரிக்கிறார்கள் சிலர் அதில் விழகூடும், நம் கொள்கைகளை சாதனைகளை ஊர் ஊராய் எடுத்துசென்று மக்களிடையே விளக்கிட வேண்டும் .. வரும் ஆபத்தை முன்கூட்டியே  எச்சரிப்பதும் தடுப்பதும் நம்கடமையென சொல்வதில் இருந்தே நம் கடமையை அவசியத்தை உணர்த்தும் அதேவேளை அலட்சியமாக இருந்துவிட கூடாதென அறிவுறுத்தியிருக்கிறார் ..
..
இந்திய ஒன்றியம் கையாளாகாதவர்களின் கையில் சிக்கி சீரழிகிறது .. மதவெறியை மக்கள் மூளையில் ஏற்றி சாதீய உணர்வைவூட்டி சனாதனத்தை கையிலேந்தி காட்டுதர்பார் நடத்துகிறது .. இதோ ஒரு சான்று 
வயதானோர் மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை நிறுத்தியதில் ₹1500 கோடி மிச்சம் என தகவல் அறியும் உரிமை சட்டம் சொல்கிறது .. எவ்வளவு அட்டூழியமான செயல் .. இதுதான் பாசிசம்.. இவர்கள் கார்ப்பரேட்டுகளின் கடனை தள்ளுபடி செய்ய மக்களின் வயிற்றில் அடிப்பார்கள்.. மக்களை சுரண்டி மக்களின் பொதுசொத்துகளை தனியாருக்கு தார்வார்த்து கேட்டால் பரம்பரை சொத்தையா விற்றேன் என்பார்கள் ஆபத்தான இவர்களின் ஆட்டத்திற்கு முடிவுகட்ட ஸ்டாலின் தேவைபடுகிறார் ..
..
பாஜகவில் நாகரீக அரசியல் இல்லை என்பது மட்டுமல்ல கூச்சமே இல்லாமல் தெரிந்தே பொய்யை சொல்வதையும் அரசியல் பாலபாடமே தெரியாதவன் கூட மூத்த அரசியல் தலைவர்களை கேவலமாக பேசுவதையோ ,கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் அவர்களின் தவறுகளை அவரின் படுகேவலமான, உண்மைக்கு புறப்பான செயல்களை மூடிமறைப்பதுமாக ஜனநாயகத்தின்  நான்காவது தூண் ஊடகம் செயல்படுவதை பார்க்கும் போது  அவசரகாலத்தில் ஊர்ந்து கிடந்தீர்கள் என்ற அத்வானியின் குரல் ஞாபகம் வருகிறது இப்போது வீழ்ந்து வணங்குகிறார்கள் .. ஊடக அறமற்று போய்விற்றது .. சில ஊடகங்கள்  காழ்ப்புணர்ச்சியை கக்கினாலும் சிலநேரம் நேர்மையாக இருப்பதாக காட்டிக்கொண்டிருந்தது இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது ..கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் ஊடகங்கள்.. சமூகவலைதளங்களை கூட விலைபேசும்,கட்டுபடுத்தும் அயோக்கியத்தனம்  இவையனைத்தையும் தாண்டி ஜனநாயகம் மலருமென நம்புகிறோமே அதில் தான் இந்திய அரசியலின் நம்பிக்கை இருக்கிறது 
..
மக்கள் தன்னெழுச்சியாய் பாசிச ஆட்சியாளர்கள்,மதவெறி கூட்டத்தின் மீது கோபமும் வரும் வரை இந்த பாசிச கோமாளிகளின் கூத்து தொடரதான் செய்யும் ..  இந்திய மக்கள் வெகுண்டெழுந்து  புதியதொரு ஜனநாயக பாதையை சமைக்கும் .. அதன் தொடக்கம் தெற்கிலிருந்தே தொடங்கும்..
திராவிடம் அதை செய்யும் ஏனெனில் மக்களை சமமாக மதிக்கும் பண்பும், சமநீதியாய் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் பசித்தவனுக்கு முதலில் கிடைப்பதே நீதி பின்தங்கியவர்களை படிகளில் ஏற்றுவதே திராவிட கருத்தியல் இதுவே இன்றைய இந்தியாவிற்கு தேவை .. 
பின்நோக்கி பொய்பேசி புரட்டுகளால் தேசத்தை இழுத்துசெல்பவர்களை விரட்டி 
பகுத்தறிவோடு சமூகத்தின் அடித்தளமக்களையும் அணைத்து அழைத்துச்செல்லும் திராவிடமே இன்றைய தேவை ..
அனைவருக்கும்கல்வி வேலைவாய்ப்பு சமமாக  கிடைத்திட சமச்சீரான கல்வியை தந்த திராவிடமே இந்தியாவிற்கு இன்றைய தேவை .. கொடுவாளும் தோக்கும், அல்ல தீர்வு கல்வி அறிவும் பகுத்துண்டு வாழும் பண்பு , வேற்றுமையில்  ஒற்றுமையுமே இன்றைய தேவை ..
திராவிட சித்தாந்தமே அதற்கான தீர்வு ..
..
ஆலஞ்சியார்