Saturday, November 27, 2021


அன்பின்,  
தமிழ்நாடு முதலமைச்சர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு 
கனிவோடு ஒரு மடல் 
..
இந்த கடிதம் சாமானியனின் எதிர்பார்ப்பும், கவலையும் அடங்கியது .. திராவிடச் சித்தாந்தத்தால் கவரபட்டு 
பெரியாரை அண்ணாவை கொண்டாடி, மானமிகு கலைஞரை கண்டும் படித்தும் வந்ததின் பலனாய், சமூக அக்கறையோடு எழுதுகிறேன் ..
..
சிறைவாசிகள் விடுதலை..
நீண்டகாலம் சிறையில் தங்கள் இளமையை தொலைத்துவிட்டு வாழ்வின் இனிமைகளை எல்லாம் சட்டென்ற உணர்ச்சி மிகுதியில் இழந்துவிட்டு குடும்பம் தன்னை நம்பியிருப்பவர்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் சதியில் விழுகிறோமென அறியாமல்,  நீண்ட சிறைவாசத்தை அனுபவிப்பவர்கள் .. சிறைதண்டனை என்பதே அவர்கள் தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இனியேனும் சமுதாயத்தில் நல்லமுறையில் வாழவேண்டும் என்ற பயிற்சியாக அமைதலே அதன் நோக்கம் ..
..
பல்வேறு வழக்குகளில் சிறைதண்டனை பெற்றவர்கள் "அண்ணா" பிறந்தநாளில் விடுதலை செய்வதை நாம் வரவேற்றிருக்கிறோம்.. சிறைவாசிகள் விடுவிப்பதில் மதம் தடையாக இருப்பதும் மதகலவரங்களில் மதமோதலில்
மத வன்முறையில் ஈடுபடுபவர்களை விடுவிப்பதற்கு தடையாக இருப்பதாக சொல்வதை நாகரீக சமுகம் ஏற்காது .. குற்றம் எதுவாகினும் நீண்ட தண்டனைக்காலம் என்பது அநீதி ..
இந்திய நீதி சமத்துவதானதாக இ்ல்லை என்ற குற்றசாட்டும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்கள் சிறைதண்டனையை "தீவிரவாதம்" என்ற பெயரிலும் இறையாண்மைக்கு எதிராக சித்தரிப்பிலும் தொடர்ந்து அநீதி இழைக்கபடுவதும் .. அதற்கு சாட்சியாக பல்வேறு வழக்குகளில் நீதிபதிகளே வாய்மொழியில் உறுதிபடுத்தியதும் நாடறிந்து.. நீதிபதிகளை மிரட்டிய சம்பவங்களும் அதை மீறி நிலைநாட்ட முற்பட்டவர்கள் கொல்லபட்டதும் வரலாற்றில் கருப்பு பக்கங்களாக மாறியதல்லாம் அறிவீர்கள்
..
விசாரணை கைதியாக நீண்ட சிறைவாசம் என்பது அநீதி . ஒரு சமூகம் தொடர்ந்து "குற்றபின்னணி" யாக சித்தரிக்கபடுவதும், பொது சமூகத்தின் முன் "தீவிரவாதிகள்"
என புத்தியில் ஏற்றிவைத்திருப்பதின் பின்னின் அரசும் அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் சினிமாவும் 
பெரும்பங்காற்றி இஸ்லாமிய 
சமூகத்தை கூண்டில் ஏற்றி நிறுத்தியிருக்கிறது ..
தொடர்ந்து இஸ்லாமிய சமூகம் அச்சுறுத்தபடுவதும் அதை அரசியலாக்கி பாசிசம் வளர்வதும் தொடர் கதையாகிறது.. 
..
சமூக வலைதளங்களில் தொடர்விவாதங்கள் இச்சமூகம் தொடர்ந்து அதிகாரத்தால் அழுத்தபடுவதை பதிவு செய்து வந்திருக்கிறது ..
நீண்ட சிறைவாசிகள் அதிலும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்த விழிப்புணர்வு பொது சமூகத்திலும், நீதிபரிபாலன சபையிலும் வந்திருப்பதும், சமூகஆர்வலர்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீதான வன்மம் நிறைந்த செயல்திட்டங்களை கண்டிப்பதோடு ஒருதலைபட்சமாக செயல்படும் அரசஅதிகாரத்தையும் கேள்வி கேட்க தொடங்கியிருப்பது சற்று ஆசுவாசம்படுத்துகிறது ..
..
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து நிறைய பேச தொடங்கியிருப்பதே நல்லமுன்னேற்றம் .. அதிமுக ஆட்சியில் இந்தளவு சமூகம் அக்கறைகாட்டதற்கு அவர்களின் பாதையும் போக்கும் அறிந்ததும், அதிமுக மீதான அவநம்பிக்கையின்மையும்தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்பார்ப்பு அதிகமாகிறது ..
..
மதத்தை முன்னுறுத்தி விடுதலை கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் 20, 30 ஆண்டுகள் சிறையில் கழிப்பவனை மனிதாபிமானம் கொண்டு விடுதலை செய்திட வேண்டும் .. என்ன குற்றம் எதற்காக என்பதை தாண்டி கருணையோடு பரிசிலிக்க வேண்டும் .. தண்டனைகாலம் தாண்டி சிறைவாசம் என்பது அநீதி .. எல்லோருக்கும் நீதி சமவாய்ப்பில் சமஉரிமையோடு வழங்குவதுதான் "செங்கோன்மை"க்கு அழகு ..
நிறைய நம்பிக்கையோடு எதிர்நோக்கும் ஒரு சமூகம் .. நிறைய அழுத்தபட்டு அநீதியோடு அழுதுநிற்கும் அவர்கள் குடும்பங்கள்.. குடும்பத்தின் வருவாய் இழந்து 20 ஆண்டுகள் சட்டபோராட்டம் என வாழ்வின் சுகங்களை இழந்து கடைசி நம்பிக்கையோடு நிற்போரை கருணையோடு 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் விடுதலை செய்வாரென இஸ்லாமிய சமுதாயம் "பெரும்நம்பிக்கையோடு" காத்திருக்கிறது .. விடுதலையில் ஏற்படும் சட்டச்சிக்கலை தவிர்க்க இஸ்லாமிய சமுதாய தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்யலாம் .. திமுகவின் மீதும் தங்கள் மீதும் இஸ்லாமிய சமூகம் தரும் அழுத்தம் #நம்மவர் என்ற உரிமையில் ஏற்படுவதென்பதை அறிவோம் .. தொல்.திருமா சொன்னதை போல விடுதலை பெறும் தகுதிபட்டியலில் "மதம்" தடையாக இருப்பதை முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு களைய முன்வரவேண்டும்.. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யபடுவார்கள் என தேர்தல் அறிக்கையில் சொன்னதை நினைவூட்டுகிறோம்.. இப்போது நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல.. கொடூர குற்றம் புரிந்தவன் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தால் எஞ்சிய காலத்தை நல்லமுறையில் வாழ தான் ஆசைபடுவான் என்பதை முதல்வர் ஸ்டாலின் கருத்தில் கொள்ளாதது கவலையளிக்கிறது என்ற  விமர்சனம் உண்டு..
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது முதல்வர் அவர்களே
இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறையும் அன்பு கொண்டவர்..
அவர்கள் படும் துயரம்,சந்திக்கும் இன்னல்கள் எல்லாம் 
மற்ற ஆட்சியாளர்களை விட 
அறிவீர்கள்.. நீண்ட சட்ட போராட்டங்களும், விசாரணை கைதியென்ற பெயரில் சிறைகூட்டில் நிற்பவர்களை கருணைக்கொண்டு விடுதலை செய்யுங்கள் .. பொது சமூகம் கூட கைதட்டி வரவேற்கும்..
முஸ்லிம் கைதிகள் விடுதலையில் உள்ள சட்டசிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை வேண்டும்
எல்லா சமூககங்களும் இந்த அரசின் மீது கொண்டுள்ள நல்லெண்ணம் கெடாதவாறு விரைந்து நடவடிக்கையை எடுங்கள்..
..
யாருக்காகவோ விடுதலையை கேள்விக்குறியாக்கினால் பாதையில் தடுமாற்றம் என வரலாறு பேசும் ..  
நிரம்ப எதிர்பார்ப்போடு இஸ்லாமிய சமூகம் நிற்கிறது  என்பதை எடுத்து சொல்லும் கடமை எமக்குண்டு ..
..
அன்புடன்
திராவிடன்
ஆலஞ்சியார்

Sunday, November 21, 2021

இனி பாமக தலைமையில் தான் கூட்டணி .. 
எந்தகட்சியுடனும் கூட்டணி சேராது..

கடைசி நேரத்துல அய்யா யார்கிட்டயாவது போயிடுவார்னு நீ நெனச்சா,  நீ இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம் மருத்துவர். ராமதாஸ்..
பாவம் பாமக தொண்டர்கள் 
பார் உள்ளளவும்  என்றெல்லாம் பழந்தமிழ் பேசி கதை பழையதானது .. இப்போது கூட அதிமுக தயவில் தானே அன்புமணி எம்பியாக இருக்கிறார்.. ஒரு தீர்க்கமான முடிவெடுத்தபிறகு அதிமுக தயவில் வந்த பதவியை ராஜினாமா செய்து ராமதாஸ் சொல்லும் மானமுள்ளவராக நமக்கு காட்சி தருவார் ..
..
பேச்சில் நேர்மையில்லை அடிக்கடி மாறிமாறி சவாரி செய்ததை தளபதி நாசுக்காக கழட்டிவிட தனியாக என கோஷம் எழுப்பி மாற்றம் முன்னேற்றமென சொல்லி கடைசியில் அங்கும் இங்கும் கடைவிரிக்க மீண்டும் தளபதி கண்டுக்கொள்ளாமல் கடைசியில் மீண்டும் தனித்து என்கிறார்கள்.. வன்னிய பெருசமூகம் இவர்களை நம்புவதை விடுத்து வெகுகாலமாகிவிட்டது .. கட்சியில் ஊரக நிர்வாகத்திற்கு கூட ஆள் கிடைக்கவில்லையென ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ..
..
சமூகநீதி பேசுபவராக தன்னை அடையாளபடுத்தி நின்றவர் சாதிய குறியீட்டை சுமந்து சறுக்கிய வரலாறு அறிவோம் .. தன் மகனை முன்னிறுத்தி அரசியலை கையிலெடுத்ததும் ஏற்கனவே செய்த சத்தியத்தை ஊடகங்களும் வெகுஜனங்களும் ஞாபகம்படுத்த சரிவு தொடங்கியது .. சின்ன சின்ன விடயங்களுக்கு இளைஞர்களை தூண்டி வழிகேட்டில் நிறுத்தும் அரசியலை தவிர வேறெதும் ஆக்கபூர்வ செயல்பாடுகள் இல்லை .. வன்னிய இளைஞர்கள் கல்வி வேலைவாய்ப்பை உருவாக்கவோ அதற்கான கட்டமைப்பை செய்யவோ முயற்சிக்கவில்லை ..அரிவாளை தூக்கி வா நம் சாதியை குறை சொல்லிவிட்டான் என உணர்ச்சி விளிம்பில் நிறுத்தி புகழ்தேடும் கயமையை விட்டொழிக்கவேண்டும் .. 
..
ஒரு திரைப்படம் பேச வந்த கருத்தை உள்வாங்காமல் தன் சாதியை கேவலபடுத்திவிட்டான் என கம்பு சுத்துவது ..வன்னிய இளைஞர்களை தியேட்டரை கொளுத்துவோம் 5 பேர்தான் பாதுகாப்பிற்கு நாங்கள் ஆயிரம் பேர் திரண்டால் என பேசவைப்பது நீண்டகாலம் அரசியல் களத்தில் நிற்கும் ராமதாஸ் அய்யாவிற்கு அழகல்ல.. படத்தின் உள்நோக்கம் ஏதுவுமில்லை என தெளிவுபடுத்திய பிறகு அன்புமணி தேவர்படத்தை வைத்தால் சும்மா இருப்பார்களா என சாதி மோதலை உருவாக்க நினைப்பது அரசியல் அறிவிலித்தனம் .. தமிழக மக்கள் தெளிவானவர்கள் சாதி அடையாளத்தை மத அடையாளத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற நற்றறிவு உடையவர்கள் .. இயக்குநர் உள்நோக்கமில்லை வருடத்தை குறிக்கமட்டுமே பயன்படுத்தியதாகவும்
யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக சொல்கிறார்
அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்கிறார்...இதை இத்தோடு முடித்து  நல்ல அரசியலை. முன்னெடுப்போம் ..
"ஜெய்பீம் " நிறைய விவாதங்களை கருத்துருவாக்கங்களை அரசின் அலட்சியத்தை அதிகாரவர்க்கத்தின் திமிரை பேச வைத்திருக்கிறது.. இதுபோல் நிறைய படங்கள் உலகதரத்தில்  உருவாக்கபடவேண்டும்
..
தமிழ் சினிமா இப்போதுதான் சாமானியர்கள் கையில் வந்து நல்ல திரைகாவியங்கள் வருகிறது மக்கள் பிரச்சனைகள் 
மண்சார்ந்த வலிகள் பேசபடுகின்றன ..
உலக தரத்திற்கென இது என புளுகியவர்கள் கூட இப்போது உலக தரத்திற்கு தமிழர்கள் திரைபடத்தை தருகிறார்கள் என்றவுடன் எரிச்சலடைய செய்திருப்பதே தமிழனின் கலைபடைப்பின் வெற்றி .. 
ஜெய்பீம் 
..
ஆலஞ்சியார்

Friday, November 19, 2021

சர்வாதிகாரம் பணிந்தது ..
வேளாண் சட்டத்தை திரும்ப பெற 600 பேர்கள் பலி கொடுக்க வேண்டியிருந்தது.. ஆளும் அரசு மக்களின் குரல் கேட்க நீண்ட போராட்டம் தேவையிருந்தது இது இன்னுமொரு சுதந்திர போர் .. உழவனை கார் ஏற்றி கொன்று இறுமாப்பாப்போடு இருந்தவர்கள் .. உ.பி.தேர்தல் வருவதை கவனித்தில் கொண்டு திரும்ப பெற்றிருக்கிறார்கள் ..
உயிர்நீத்த உழவர்களுக்கு வீரவணக்கம்..
..
மோடி அரசு இந்திய ஒன்றியத்தின் சாபம்.. அதீத பெரும்பான்மை வன்மத்தை கையிலெடுக்க தூண்டியது.. அமைச்சர்கள் முதல் அடிபொடிகள் வரை அகங்காரத்தில் பேசினார்கள் இப்போதும் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற குரலின் தொனி நமக்கு நிறைய உணர்த்தும் .. ஒரே நாடு ஒரே கொள்கை என்பதெல்லாம் ஒன்றியத்தை சிதறடிக்கும்  .. ஆணவக்காரர்கள் கற்று தேர்வதில்லை என்பார் கலைஞர் காலம் நமக்கு நல்ல பாடத்தை உணர்த்தி ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துங்களென சொல்கிறது .. யார் பெரியவன் அதிகார ஆசை மதமும் சாதியும் தலையில் ஏற்றி வெறித்தனத்தை வேற்றுமையை விதைத்து நம்மால் எதையும் சாதிக்க முடியாதென்பதை நாம் உணரவேண்டும்.. பதவி நல்வாய்ப்பு மக்களுக்கு பணி செய்ய என்று எண்ணி செயல்படுபவனே சிறந்த தலைவனாய் காலம் கடந்தும் வரலாற்றில் பேசபடும் 
..
தேர்தல் 
ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதம் அதனால் தான் ஆட்சியாளர்கள் பிடிவாதமாக செயல்படுத்தும் மக்கள் விரோத செயல்களை  மறுபரிசிலினை செய்கிறார்கள்.. மக்கள் தங்கள் வலிமையை உணராமல் போனால் மோடியை போன்றவர்களும் பாசிசவாதிகளும் தான் ஆட்சியாளர்களாக வருவார்கள்.. தங்களின் பலத்தை வலிமையை உணர்ந்து மதம் ,சாதி, தற்பெருமை, புகழ் பதவி பணம் என அற்பங்களுக்கு துணைபோகாமல் வழங்கிநிற்காமல், வெறிகொள்ளாமல் நல்லவர்களை நாட்டை நல்வழியில் ஆள்பவர்களை  அதிகாரத்தை சேவை செய்ய மக்கள் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பாக கருதுபவர்களை கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்பவர்களை மக்களின் மீது பேரன்பு கொண்டவர்களை நாடும் மக்களும் தேர்வு செய்தால் இந்திய ஒன்றியத்தை கண்டு உலகே வியக்கும்..
மக்களிடம் செல் மக்களிடம் பழகு மக்களிடமே கற்றுக்கொள் என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இலக்கணத்தை உணரவேண்டும்.. மக்கள் காப்பாளன் காவலன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு 
இந்திய ஒன்றியத்திற்கு எடுத்துகாட்டாய் விளங்கும் தவைவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. 
அவரின் சிந்தனை செயல் எல்லாம் மக்களின் மீதான அக்கறையின் வெளிபாடாய் இருக்கிறது ஒரு உதாரணம் சாலை விபத்துகளில் 48 மணி நேர சிகிச்சையை அரசே ஏற்கும் என்பது சிறந்த எடுத்துகாட்டு மக்கள் அதிகாரம் தந்தது இதற்காகதான் .. 
இந்திய ஒன்றியம் கணக்கில் கொள்ளபடவேண்டிய தலைவர் 
ஸ்டாலின் 
..
காலம் சிறந்த ஆசான்..
..
ஆலஞ்சியார் 

Sunday, November 14, 2021

நான் ஆய்வுக்கு வருவது தெரிந்தே மழை நீர் அகற்றம் ..
எடப்பாடி.. 
தண்ணீரை இறைக்காதீர்கள் கமல் வந்து பார்த்துவிட்டு போகும் வரை தண்ணீரில் நிற்கட்டும் ..
போட்டோ ஷூட் நடத்தி மழைநீர் இன்ப சுற்றுலா .. 
மேம்பாலங்களே மழைநீர் தேங்க காரணம் ..
பாவம் எதிர்கட்சிகள் ..
..
துரித செயல்பாடு இந்திய ஒன்றியத்தில் இப்படியொரு முதல்வர் இதுவரை பார்த்ததில்லையென பெருமிதம் கொள்கிறார்கள்.. மக்கள் நம் முதல்வர் நிச்சயம் இடறுகளை களைவார் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ஆம் ஒளிப்பதிவாளர்
பி.சி ஸ்ரீராம் முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் ஆம் வெகுமக்களின் குரலும் அதுதான் ..
..
ஒரு ஆட்சியாளர் மக்களோடு தொடர்புடையவனாக மக்களோடு இரண்டற கலந்தவனாக கைநீட்டி அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு  செவிசாய்ப்பவனாக இருக்கவேண்டும்.. முன்பெல்லாம் ஆட்சியாளர்களை சுற்றி துதிபாடிகள் இருப்பார்கள் மக்களின் குரல் மகேசன் காதுகளில் விழாதவாறு புகழோசை காதை கிழிக்கும் .. வெற்று மனிதனின் ஆதங்கம் அழுகுரல் மன்னவன் காதுகளில் விழாமலே போகும் .. ஆனால் இப்போது சன்னகுரலில் அழைத்தாலும் தனியொருவராய் கைநீட்டி  அழைத்தாலும் தலைவர் காரை நிறுத்தி காதுகொடுக்கிறார் .. 
சாமானியர்கள் குரல் கேட்டு அவர்கள் குறை தீர்க்கிறார் ..
..
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாதவாறு தலைவரின் செயல்பாடுகள் இரண்டே நாளில் இயல்புநிலை திரும்பியது மாநகராட்சி  நன்றி என பகைவர்கள் கூட வேறு வழியின்றி புகழ்கிறார்..கொரோனா தடுப்பில் முன்னிலை மாநிலமாய் நிறுத்தி நிம்மதி பெருமூச்சுவிட வைத்தார் .. அடிமைகள் உயிர்வளி (ஆக்சிஸன்) கூட கையிருப்பு இல்லாமல் வைத்த நிலையில் போர்காலமென அதிகாரிகளை தன்னார்வலர்களை துரிதபடுத்தி மெச்சும்நிலையில் நம்மை கொண்டுவந்து சேர்த்தார்..
நடிகர் பார்த்திபன் எதிர்க்கட்சிகளுக்கு வேலை தருவதே இல்லை என்கிறார் .. இரண்டுநாள் கழித்து வந்து பார்த்தால் ரோட்டில் தண்ணீரில்லை நான் வருவது தெரிந்து நீரை இறைத்துவிட்டார்களென புழுவை போல முண்டுகிறார்
..
எதிர்க்கட்சிகள் எதேதோ சொல்கிறார்கள் எதையும் காதில் வாங்குவதில்லை காழ்ப்புணர்ச்சியும் பொய்யும் எதையாவது பேசி உள்ளேன் அய்யா என பிலிம்காட்டுவதையும் கண்டுக்கொள்ளாமல் .. எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்  ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் முதல்வர் ..
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோம்
..
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்..
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்..
..
ஆம் மக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்
எங்கள் முதல்வர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்

Wednesday, November 10, 2021

ஜெய் பீம் படம் பார்த்துவிட்டு 9 கேள்விகளை வன்னியர் சமூக தலைவராக  தன்னை கருதிகொண்டு அன்புமணி எழுப்புகிறார் .. நாட்காட்டியில் குறியீடு இருக்கிறது குரு பெயரை பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார்.. இயக்குனர் யதேச்சையாக நடந்ததென கூறி நாட்காட்டி குறியீட்டை மாற்றிவிட்டார் .. குருமூர்த்தி பெயர் எப்படி வரலாம் என யாரோ கேட்கவேண்டியதை கேட்பதாக தோன்றவில்லையா .. அல்லது யாரோ சொல்லி செய்கிறாரா..
..
இவர் சமூகநீதி பற்றியெல்லாம் பாடமெடுத்தாலும் சாதிவெறி தவிர வேறொன்றும் இல்லை .. சாதிவெறியை தூண்டிவிடுவதும் சூர்யா படம் தியேட்டரில் வந்தால் நடப்பதே வேறு என்று மிரட்டுவதும் முன்பே கண்டதுதான் .. இம்முறையும் அதே குரல் ஒலிக்கிறது .. 
அந்த படத்தில் பேசபட்ட விடயம் குறித்து இந்த சமூகம் எப்படி நடந்துகொண்டது குறைந்தபட்ச மனிதம் கூட இல்லாத சமூகமாய் மாறிபோனதேன் வர்ணகோட்பாட்டில் நம்மை அடைத்து கீழ்சாதியென பேசவைப்பது யார் என கோபம் வராமல் சாதியை பிடித்துக்கொண்டு தொங்கினால் கீழே விழ நேரிடும் இம்முறை பலமாக அடிவிழும்..
..
அதே படத்தில் பஞ்சாயத்து தலைவர் ஓட்டுக்காக கண்ட கண்ட சாதிகாரன் காலில் விழவேண்டியிருக்கு இதுலே இவனுக காலில வேற விழணுமா என்ற கேட்பதை ஆண்ட பரம்பரையென பேசி திரியும் எவனும் கோவபடவோ கேட்கவோ இல்லை.. அதெல்லாம் கண்ணில் படாது .. கதை, கரு, சொல்லவந்த விடயம், கதையின் திரை போக்கு காட்சிபடுத்தல் என எல்லா நிலையிலும் மிக குறைவான குறைகளோடு ஒரு திரைப்படம் .. இதுவரை தமிழ் சினிமாவில் அதிகம் பாராட்டுபெற்ற படங்களின் படவரிசையில் இடம்பெறுவதை சகிக்க முடியாத சக்திகள் கதறுகின்றன 
..
பாண்டே ஐயர் பாத்திரம் தேவையில்லாமல் திணிக்கபட்டிருப்பதாக பதறுவதும் நீங்கள் சொல்றதுனாலேதான் தப்பா போறோனோ என சந்தேகம் வருது என்ற வசனம் பெரியாரை ஞாபகபடுத்தியிருக்கும்.. பெரியார் வெளியூர் சென்றிருந்தபோது விடுதலை செய்தி வெளியிடும் பொறுப்பை வீரமணியை பார்த்துகொள்ள சொன்னபோது  அதெல்லாம் சரிய்யா தலையங்கம் எப்படி எழுதறது என்றார் பெரியார் தி இந்து பத்திரிக்கை என்ன செய்தி வருதுன்னு பாரு அதற்கு எதிரா எழுது என்றார் .. பாப்பான் எது செய்றானோ அதற்கு எதிராகவே செய் என்று பொருள்  
..
ஜெய் பீம் ஏற்படுத்திய தாக்கத்தை  சகித்துக்கொள்ள முடியவில்லை.. ருத்ரதாண்டவத்தில் கஞ்சா விற்கும் சிறுவன் அம்பேத்கர் டிசர்ட் போட்டிருந்தானே அப்போது யாரும் எங்கள் சாதியை கேவலபடுத்தியதாக கூச்சல் போடவில்லை .. திரைப்படைப்பை கலைநோக்கோடும் சமூக அக்கறையோடும் சொல்லபட்ட கருத்தை மட்டுமே அலசி ஆய்ந்து அது எந்தளவு மக்கள் மனதில் தாக்கத்தை வலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணரவேண்டும் ..
எல்லா சாதியிலும் மதத்திலும் அயோக்கியர்கள் திருடர்கள் கேடுகெட்டவர்கள் இருக்கிறார்கள் .. சமுகத்தின் இளைஞர்கள் அறம் போதித்து நல்வழியில் செல்ல அறிவுறுத்தாமல் திரையரங்குகளில் படம் வந்தால் கலவரம் செய்வோம் என மிரட்டுவதும் குடிசைகளை கொளுத்தியும் பஸ் கண்ணாடியை உடைத்தும் ரயில் மறியல் செய்தும் வழிகெடுக்கும் நீங்கள் அறிவுரை சொல்ல அருகதையற்றவர் 
..
சாதி அரசியலை தவிர வேறெதும் அப்பனுக்கும் மகனுக்கும் தெரியாதென்பது தமிழக மக்கள் அறிவார்கள்.. வன்னிய பெருமக்களே புறக்கணிக்க தொடங்கிவிட்டார்கள் இனியேனும் சமதர்ம சமூகநீதி பேசி பொதுவாழ்வில் உழைக்க வாருங்கள் ..நாடாளுமன்றத்தில் கூட இத்தனை கேள்விகள் கேட்டிருக்கமாட்டீர் ..
மதவெறியை தூண்டி இளைஞர்களை வழிகேடர்களாக மாற்றும் போக்கை இனியேனும் கைவிடுங்கள் 
..
ஆலஞ்சியார்

Sunday, November 7, 2021

"முறை செய்து காக்கும் இறை"
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.. என்றான் வள்ளுவன் ..
முதல்வர் தானே களத்திற்கு வருகிறார் இரண்டு அமைச்சர்கள் தலைமை செயலர்  காவல்துறைத்தலைவர் மாநகராட்சி ஆணையர் என பாதிக்கபட்ட இடங்களை பார்வையிடுகிறார்..
..
15 IAS அதிகாரிகள் களபணி,கண்காணிப்பு என போர்காலம் என கருதி பணிசெய்ய உத்தரவிடுகிறார் .. பேரிடர் காலமென கருதி கரம்கோர்த்து செயல்பட உடன்பிறப்புகளுக்கு சொல்கிறார் .. மூன்றுநாட்கள் வெளியூரிலிருந்து யாரும் சென்னைக்கு வராதீர்கள் என கேட்டுகொள்கிறார் ..
..
எழுபதை நெருங்கும் வயது .. இளைஞரைப்போல மழைவெள்ளத்தை நேரில் கண்டு களத்தில் தான் உண்மை தெரியும் அதிகாரிகளை பணிசெய்ய சொல்லிவிட்டு வீட்டிலேயே முடங்கவில்லை .. வான்வழியே மக்களை காணவில்லை .. கரம் பற்றி நானிருக்கிறேன் என நம்பிக்கையூட்டுகிறார்.. முதல்வரே களத்தில் என்றவுடன் அதிகாரிகள் செயல்கள் வேகமெடுக்கும் ..
தமிழக அரசின் அதிகாரிகளுக்கும் தமது அமைச்சர் களுக்கும்  கோட்டையிலிருந்து உத்தரவிடவில்லை.. தாமே முன்னின்று களப்பணியாற்றி விரைவுபடுத்துவதெல்லாம் 
தலைசிறந்த தலைமைப்பண்பு ..
..
விளிம்புநிலை மக்களின் குரலில் நம்பிக்கையை வரவழைப்பது .. அப்பா நிலம் கொடுத்தார் மகன் பட்டா கொடுத்தார் என எளியமக்களின் மகிழ்ச்சி மன்னவனுக்கு மக்கள் தரும் நற்சான்று..  ஒரு நல்ல தலைவன் கிடைத்திருக்கிறார் .. கொண்டாடவிட்டாலும் தூற்றாதீர்கள் .. "வருணபகவான் கோபம் " என நீங்கள் நம்பும் கடவுளை கேவலபடுத்தாதீர்.  இயற்கையின் முன் யாரும் தாழ்ந்தே போகவேண்டும் கோபம் சீற்றம் சிங்காரம் என இயற்கை நம்மை மகிழ்விக்கும் காக்கும் அழிக்கும் என்பதை உணருங்கள் .. இயற்கையை மீறிய நம் செயல்கள் அத்துமீறல்கள் நீர்தேங்க வழியிடமில்லாமல் வழிந்தோட நீர்தடமில்லாமல்  ஆக்ரமித்தது நாமே அதை சரிசெய்வோம் .. கடந்த ஆட்சியில் ₹900 கோடி ஒதுக்கி நீர் வழிதடங்களை தூர்வாரவும் கால்வாய்களை சுத்தபடுத்தவும்,செய்ததாய் கணக்கு காட்டிய கயவர்களை நீதிமுன் நிறுத்தவேண்டும் ..
..
இடரும் துயரும் சூழும் நேரத்தில் நம்மோடு இருக்கிறார் நமக்கான தலைவர்..
நல்ல நம்பிக்கை தந்திருக்கிறார் .. கடந்து போவோம் மீள்வோம் ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் இருக்க பயமேன்..
..
#தாயுமானவர்_ஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்


Wednesday, November 3, 2021

ஒரு படம் ..
மனதை உலுக்கி தூங்கவிடாமல் செய்யுமா.. விளிம்புநிலை மக்கள் அதிலும் "இருளர்கள்" இருப்பிடம் கூட இல்லாத நாடோடிகள் என அறிய படும் பூர்வகுடிகள் பற்றிய படம் .. சிறிது பிசகினாலும் டாக்மன்ட்ரி வாசம் அடிக்கும் மிக நேர்த்தியாக செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ..
..
முதல் காட்சியே இருளர்கள் ஒட்டர்களின் வாழ்வை ..யாரும் கேட்க ஆளில்லாத சமூகம் .. மற்ற சாதிகள் பெயர் சொன்னவுடன் விடுதலை செய்வதிலிருந்தே எத்தகைய கொடூரமனபடைத்தவர்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் நாம் என தலைகுனிய வேண்டும் .. சாதாரண லாக்கப் மரணம் என கடந்துவிடமுடியாதவாறு நம்மை உலுக்குகிறது .. இருளர் மக்கள் பிரகாஷ்ராஜிடம் சொல்லும் காட்சிகளும் அதிலும் அந்த பெண் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லும் போது அவரது உடல்மொழியும், பெண்கள் மீதான வன்கொடுமை என தப்பித்துக்கொள்ள முடியாமல் நம்மை கிழித்து எறிகிறது .. 
..
ஆதிக்கசாதி திமிரை இடையிடையே சொன்னாலும் சில காட்சிகளே என்றாலும் செவிட்டில் அறைந்தது .. அதிலும் நீங்க சொல்லும் போது தான் ("நூல் பிடிச்சாமாதிரி" )  சந்தேகம் வருது என்பது நூறுபக்க வசனத்திற்கு சமம் ..தெளிவான திரைக்கதை இரண்டே முக்கால்மணி நேரம் இமைமூடாமல் இருக்கையில் இறுத்தியதைபோல நகரவிடவில்லை .. படம் முடியும் போது நெஞ்சம் கனத்தது ..
..
இந்த நேரத்தில் பேராசிரியர் கல்யாணி அவர்களை நாம் போற்றவேண்டும் .. தன் வாழ்நாள் முழுவதும் இருளர்களுக்காக வாழ்ந்து வருபவர் .. 
நடிகர் சூர்யா,லிஜோமோல், மணிகண்டன் 
என இப்படத்தில் நடித்தவர்களை
இயக்குனர் சரியாக பயன்படுத்தியிருக்கிறார் மிகையில்லாத நடிப்பு ..
தலைப்பை சிலர் விமர்சிக்கிறார்கள் இதைவிட நல்ல தலைப்பை வைக்கமுடியாது .. ஒடுக்கபட்டமக்களுக்காகவே வாழ்ந்த மனிதர் அம்பேத்கர்..
பொய் வழக்குகளில் ,விசாரணை கைதியாக வாழ்நாளை முழுவதும் சிறையில் வாழும் எளியவர்கள் .. இவர்களையெல்லாம் எப்போது விடுவிக்க போகிறோம் .. சமூக அக்கறையோடு இன்னமும் நிறைய கதவுகள் திறக்கபடவேண்டும்.. 
..
சிறந்த படைப்பு சமூக அக்கறையோடு அழுத்தமான திரையில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியிருக்கிறார்.. 
இப்போது தான் தமிழ்சினிமா வெற்றிமாறன், பா.ரஞ்சித்,மாரி செல்வராஜ்  த.செ.ஞானவேல் 
என மண்ணை நேசிக்கிறவர்கள் மண்ணை சார்ந்தவர்கள் கையில் வந்து "நல்ல படங்கள்" வர தொடங்கியிருக்கிறது .. 
இது கூட ஒருவகை "விடுதலை " தான் 
மணிகளும் சந்தர்களையும் நம்மை அறியாமலேயே கொண்டாடி வந்திருக்கிறோம் .. நம்மை பற்றிய கவலைகள் நமது வாழ்வியல் சிக்கல்கள் நம் மீது சுமத்தபடும் சுமைகள் , நம்முடைய இழப்புகள், மறுக்கபடும் உரிமைகள் இவையெல்லாம் பேச நம்மை சார்ந்தவர்கள் மட்டுமே முன்வருவார்கள் 
..
த.செ.ஞானவேல் கைகொடுங்கள் ..
..
ஆலஞ்சியார்

Monday, November 1, 2021


வன்னியருக்கான 10.5% விழுக்காடு உள்இடஒதுக்கீட்டை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தரவுகள் பெறபடாமலேயே தந்த இடஒதுக்கீடென தெளிவுபடுத்தியிருக்கிறது ..
ராமதாஸ்  இந்த இடஒதுக்கீடு ரத்தாகும் என அறிவார்.. அவருக்கு வன்னியருக்கு இடஒதுக்கீடு முக்கியமல்ல பாமக கட்சியும் தன் மகனும் காணாமல் போவார்களோ என்ற அச்சம் தேர்தல் நெருங்க சில மணிநேரம் இருக்கும் போது சட்டமன்றத்தில் விவாதிக்கபடாமலேயே அவசரகதியில் அள்ளிதெளித்த கோலமாய் வந்தது தேர்தல் வெற்றிக்காக இருந்ததை கோட்டைவிட்ட கதையாக போனது ..
..
இஸ்லாமியர் உள்ஒதுக்கீடு இல்லையா என வினவுகிறார்.. ஆந்திரத்தில் அவசரமாக கொண்டுவரபட்ட இஸ்லாமியர் உள்இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது .. பிற்படுத்தபட்டோர் ஆணயத்தின் பரிந்துரையில்லை என கூறியதை கவனமாக ஆய்ந்து கலைஞர் பெருமகன் .. முதலில் பிற்படுத்தபட்டோர் ஆணையத்தின் கருத்தை கேட்டு ஏழு விழுக்காடு முஸ்லிம்களுக்கு அவர்களுக்கு 3.5% விழுக்காடு தரலாம் ..சிறுபான்மையினருக்கு 7.5% விழுக்காடுக்குள் இருக்கவேண்டும் என்ற பரிந்துரையை ஏற்று ஜெயின் சமூகத்திற்கு 0.5% விழுக்காட்டை கிருஸ்துவர்களுக்கு 3.5% என பகிர்ந்தளித்தார் .. அவசரகோலத்தில் செய்யவில்லை .. அதை போலதான் அருந்ததியர் உள்ஒதுக்கீடும் அமைந்தது .. இவையெல்லாம் ராமதாஸ் அறிவார்.. ஆனால் அவருக்கு அரசியல் செய்ய நிலைநிறுப்பை உறுதிசெய்ய அவசரமாக இடஒதுக்கீடு அறிவிப்பு தேவைபட்டது ..
..
நீண்டகால கோரிக்கை இன்னும் பிற சமூகத்தை இணைத்து கலைஞர் 20% விழுக்காடு தந்தார் அதில் அதிகம் பலன்பெற்றதென்னவோ வன்னியர்கள் தான்.. வன்னிய இடஒதுக்கீட்டை அறிவித்த போது ராமதாஸ் பேசியதை நினைத்து பார்க்கவேண்டும் .. அதெல்லாம் மறந்திருப்பார் அரசியலுக்காக எதையும் செய்வார்.. அவர் பெற்றதாயை கூட கீழ்தரமாக பேசி அரசியல் செய்பவர் ..
.. 
கலைஞருக்கு தெரியும் தனியாக கேட்டால் சிக்கல் வரும் தடைகள் வரும் பிற சமூகம் பாதிக்கபடும் அவர்கள் வழக்கு தொடுப்பார்கள் .. என்பதை அறிந்து கலைஞர் தந்தார் .. 
வன்னிய இடஒதுக்கீடு தந்த கலைஞரையே தூற்றியவர் இந்த ராமதாஸ் .. தன்னால் தான் கிடைத்தது என்று கட்டமைக்கமுயன்று அப்பனும் பிள்ளையும் அழுது ஆர்பார்ட்டம் செய்ததெல்லாம் வீண்போனது .. 
..
திட்டமிடாமல் சரியான அணுகுமுறையில்லாமல் தரகுகள் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடப்பாடி செய்தது அறிவிலிகளின் கூத்தாய் போனது .. ஸ்டாலின் மீட்டுதரவேண்டும் என்கிறார் .. நிச்சயம் நடக்கும் அது #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செய்ததாய் இருக்கும் ..
..
நல்லோர் கையில் நாடு 
நலமே பயக்கும்..
..
ஆலஞ்சியார்