அன்பின்,
தமிழ்நாடு முதலமைச்சர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
கனிவோடு ஒரு மடல்
..
இந்த கடிதம் சாமானியனின் எதிர்பார்ப்பும், கவலையும் அடங்கியது .. திராவிடச் சித்தாந்தத்தால் கவரபட்டு
பெரியாரை அண்ணாவை கொண்டாடி, மானமிகு கலைஞரை கண்டும் படித்தும் வந்ததின் பலனாய், சமூக அக்கறையோடு எழுதுகிறேன் ..
..
சிறைவாசிகள் விடுதலை..நீண்டகாலம் சிறையில் தங்கள் இளமையை தொலைத்துவிட்டு வாழ்வின் இனிமைகளை எல்லாம் சட்டென்ற உணர்ச்சி மிகுதியில் இழந்துவிட்டு குடும்பம் தன்னை நம்பியிருப்பவர்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் சதியில் விழுகிறோமென அறியாமல், நீண்ட சிறைவாசத்தை அனுபவிப்பவர்கள் .. சிறைதண்டனை என்பதே அவர்கள் தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இனியேனும் சமுதாயத்தில் நல்லமுறையில் வாழவேண்டும் என்ற பயிற்சியாக அமைதலே அதன் நோக்கம் ..
..
பல்வேறு வழக்குகளில் சிறைதண்டனை பெற்றவர்கள் "அண்ணா" பிறந்தநாளில் விடுதலை செய்வதை நாம் வரவேற்றிருக்கிறோம்.. சிறைவாசிகள் விடுவிப்பதில் மதம் தடையாக இருப்பதும் மதகலவரங்களில் மதமோதலில்
மத வன்முறையில் ஈடுபடுபவர்களை விடுவிப்பதற்கு தடையாக இருப்பதாக சொல்வதை நாகரீக சமுகம் ஏற்காது .. குற்றம் எதுவாகினும் நீண்ட தண்டனைக்காலம் என்பது அநீதி ..
இந்திய நீதி சமத்துவதானதாக இ்ல்லை என்ற குற்றசாட்டும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்கள் சிறைதண்டனையை "தீவிரவாதம்" என்ற பெயரிலும் இறையாண்மைக்கு எதிராக சித்தரிப்பிலும் தொடர்ந்து அநீதி இழைக்கபடுவதும் .. அதற்கு சாட்சியாக பல்வேறு வழக்குகளில் நீதிபதிகளே வாய்மொழியில் உறுதிபடுத்தியதும் நாடறிந்து.. நீதிபதிகளை மிரட்டிய சம்பவங்களும் அதை மீறி நிலைநாட்ட முற்பட்டவர்கள் கொல்லபட்டதும் வரலாற்றில் கருப்பு பக்கங்களாக மாறியதல்லாம் அறிவீர்கள்
..
விசாரணை கைதியாக நீண்ட சிறைவாசம் என்பது அநீதி . ஒரு சமூகம் தொடர்ந்து "குற்றபின்னணி" யாக சித்தரிக்கபடுவதும், பொது சமூகத்தின் முன் "தீவிரவாதிகள்"
என புத்தியில் ஏற்றிவைத்திருப்பதின் பின்னின் அரசும் அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் சினிமாவும்
பெரும்பங்காற்றி இஸ்லாமிய
சமூகத்தை கூண்டில் ஏற்றி நிறுத்தியிருக்கிறது ..
தொடர்ந்து இஸ்லாமிய சமூகம் அச்சுறுத்தபடுவதும் அதை அரசியலாக்கி பாசிசம் வளர்வதும் தொடர் கதையாகிறது..
..
சமூக வலைதளங்களில் தொடர்விவாதங்கள் இச்சமூகம் தொடர்ந்து அதிகாரத்தால் அழுத்தபடுவதை பதிவு செய்து வந்திருக்கிறது ..
நீண்ட சிறைவாசிகள் அதிலும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்த விழிப்புணர்வு பொது சமூகத்திலும், நீதிபரிபாலன சபையிலும் வந்திருப்பதும், சமூகஆர்வலர்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீதான வன்மம் நிறைந்த செயல்திட்டங்களை கண்டிப்பதோடு ஒருதலைபட்சமாக செயல்படும் அரசஅதிகாரத்தையும் கேள்வி கேட்க தொடங்கியிருப்பது சற்று ஆசுவாசம்படுத்துகிறது ..
..
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து நிறைய பேச தொடங்கியிருப்பதே நல்லமுன்னேற்றம் .. அதிமுக ஆட்சியில் இந்தளவு சமூகம் அக்கறைகாட்டதற்கு அவர்களின் பாதையும் போக்கும் அறிந்ததும், அதிமுக மீதான அவநம்பிக்கையின்மையும்தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்பார்ப்பு அதிகமாகிறது ..
..
மதத்தை முன்னுறுத்தி விடுதலை கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் 20, 30 ஆண்டுகள் சிறையில் கழிப்பவனை மனிதாபிமானம் கொண்டு விடுதலை செய்திட வேண்டும் .. என்ன குற்றம் எதற்காக என்பதை தாண்டி கருணையோடு பரிசிலிக்க வேண்டும் .. தண்டனைகாலம் தாண்டி சிறைவாசம் என்பது அநீதி .. எல்லோருக்கும் நீதி சமவாய்ப்பில் சமஉரிமையோடு வழங்குவதுதான் "செங்கோன்மை"க்கு அழகு ..
நிறைய நம்பிக்கையோடு எதிர்நோக்கும் ஒரு சமூகம் .. நிறைய அழுத்தபட்டு அநீதியோடு அழுதுநிற்கும் அவர்கள் குடும்பங்கள்.. குடும்பத்தின் வருவாய் இழந்து 20 ஆண்டுகள் சட்டபோராட்டம் என வாழ்வின் சுகங்களை இழந்து கடைசி நம்பிக்கையோடு நிற்போரை கருணையோடு
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் விடுதலை செய்வாரென இஸ்லாமிய சமுதாயம் "பெரும்நம்பிக்கையோடு" காத்திருக்கிறது .. விடுதலையில் ஏற்படும் சட்டச்சிக்கலை தவிர்க்க இஸ்லாமிய சமுதாய தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்யலாம் .. திமுகவின் மீதும் தங்கள் மீதும் இஸ்லாமிய சமூகம் தரும் அழுத்தம் #நம்மவர் என்ற உரிமையில் ஏற்படுவதென்பதை அறிவோம் .. தொல்.திருமா சொன்னதை போல விடுதலை பெறும் தகுதிபட்டியலில் "மதம்" தடையாக இருப்பதை முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு களைய முன்வரவேண்டும்.. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யபடுவார்கள் என தேர்தல் அறிக்கையில் சொன்னதை நினைவூட்டுகிறோம்.. இப்போது நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல.. கொடூர குற்றம் புரிந்தவன் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தால் எஞ்சிய காலத்தை நல்லமுறையில் வாழ தான் ஆசைபடுவான் என்பதை முதல்வர் ஸ்டாலின் கருத்தில் கொள்ளாதது கவலையளிக்கிறது என்ற விமர்சனம் உண்டு..
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது முதல்வர் அவர்களே
இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறையும் அன்பு கொண்டவர்..
அவர்கள் படும் துயரம்,சந்திக்கும் இன்னல்கள் எல்லாம்
மற்ற ஆட்சியாளர்களை விட
அறிவீர்கள்.. நீண்ட சட்ட போராட்டங்களும், விசாரணை கைதியென்ற பெயரில் சிறைகூட்டில் நிற்பவர்களை கருணைக்கொண்டு விடுதலை செய்யுங்கள் .. பொது சமூகம் கூட கைதட்டி வரவேற்கும்..
முஸ்லிம் கைதிகள் விடுதலையில் உள்ள சட்டசிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை வேண்டும்
எல்லா சமூககங்களும் இந்த அரசின் மீது கொண்டுள்ள நல்லெண்ணம் கெடாதவாறு விரைந்து நடவடிக்கையை எடுங்கள்..
..
யாருக்காகவோ விடுதலையை கேள்விக்குறியாக்கினால் பாதையில் தடுமாற்றம் என வரலாறு பேசும் ..
நிரம்ப எதிர்பார்ப்போடு இஸ்லாமிய சமூகம் நிற்கிறது என்பதை எடுத்து சொல்லும் கடமை எமக்குண்டு ..
..
அன்புடன்
திராவிடன்
ஆலஞ்சியார்