Sunday, July 31, 2016

இரு பெரும் ஆளுமைகள்

#இருபெரும்_ஆளுமைகள்.. தமிழக அரசியல் வரலாற்றில் நிறையபேர் வந்தார்கள் சிறந்தார்கள்.. ஆனால் வாழும் காலமெல்லாம் வரலாறாய் திகழ்ந்தவர்கள் தங்களை சுற்றியே அரசியலை இயங்க செய்தவர்கள் .. நிறையபேரை நாம் நினைவில் கொள்கிறோம் வாழந்தபோதும் வாழ்கின்ற போதும்..சிலர்மட்டும் இந்த சமூகசார் சிந்தனையோடு செயல்பட்டிருக்கிறார்கள்.. எதிரிகளையும் அவர்களின் அரசியலையும் மதித்திருக்கிறார்கள்..கடுமையாக எதிர்த்தபோதும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை எப்போதும் தந்ததில்லை மாறாக நட்பு பாராட்டியே வந்திருக்கிறார்கள்.. #பெரியார்_கலைஞர்.. .. நிறைய காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.. திரு.கல்கி அவர்களின் மகள் திருமணத்திற்கு பெரியார் அழைக்கப்பட்டிருந்தார் கடவுள் மறுப்பாளரான பெரியார் திருமண சடங்குகளெல்லாம் முடிந்த பிறகுதான் அங்கு சென்றார்.. குறிப்பாக வைணவ குடும்பங்களில் மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள் பிராமண குடும்பங்களில் நடக்கும் நல் நிகழ்வுகளில் சிலரை அனுமதிக்க மாட்டார்கள் இப்போது கூட சோ வீட்டு திருமணத்திற்கு ஜெயலலிதாவை அழைத்தபோதும் திருமண சடங்களில் கலந்துக்கொள்ளவில்லை.. சுபகாரியங்களில் திருமணமாகதவர்கள் வருவதைகூட விரும்பமாட்டார்கள்.. கல்கி வீட்டுதிருமணத்திற்கு சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு பெரியார் செல்கிறார் மணமக்களை ஆசீர்வதிக்கும்படி கல்கி சொல்கிறார் குங்குமத்தை கொண்டுவரச்சொல்லி மணப்பெண்ணின் நெற்றியில் இட்டு வாழ்த்துகிறார்.. கல்கியின் உதவியாளர் இந்த நிகழ்வை கல்கியிலே வெளியிட்டு பெரியாரின் இரட்டைவேடம் என தலைப்பிடலாம் என்கிறார்.. கல்கி சொன்னார் #பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியானவர் நமக்காக வந்தார் நம்மை நம்கலாச்சாரத்தை நம் நம்பிக்கையை மதிக்கவேண்டுமென்பதற்காக குங்குமம் இட்டார் என சொன்னார்.. இதைதான் கலைஞர் அவர்களிடமும் காணலாம்.. தங்களை தொடர்ந்து எதிர்த்து வருபவர்களை கூட அவர்கள் சுப நிகழ்வுகளுக்கு போய் வாழ்த்திவிட்டுதான் வருவார்.. ஒருவரின் அரசியல் வரலாற்றில் தனிமனித கசப்புணர்வை கொள்ளாமல் அரசியல் நடத்தியவர்கள் நிறையபேர்களுண்டு ஆனால்.. வன்மத்தை நெஞ்சில் கொண்டு அரசியல் செய்பவர்களை எம்ஜிஆருக்கு பிறகே காண முடிந்தது... .. #இப்போதெல்லாம்கழிவுகள்_வரலாறாகிறது.. .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment