Sunday, July 31, 2016
திமுக திறமையாளர்களின் களஞ்சியம்
திமுக ..
பாராளுமன்றத்தில் திருச்சி சிவா
மாண்பிமை பாதுகாப்பு அமைச்சரை சபைக்கு வரவழைத்து விளக்கம் அளிக்கவைத்தார்..
திமுககாரர்கள் சபையின் நெறி அறிந்தவர்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் தங்களின் பணியை செவ்வனே செய்பவர்கள்..
சிவா என்றில்லை திமுகவினரின் செயல்பாடுகள் ஜனநாயகரீதியாகவும் அதேபோல் கம்பீரமாகவும் நேர்மையாகவும் உரிமைகளை விட்டுக்கொடுக்காமலும் இருக்கும்..
..
ஒருமுறை மேல்சபை தலைவர் சங்கர்தயாள் சர்மாவைப்பற்றி தரக்குறைவாக பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது
சபையின் கவனத்திற்கு வந்தபோது திமுக கடுமையான கண்டனத்தை பதிவு செய்யவேண்டுமென கலைஞர் அறிவுறுத்தியிருந்தார்.. அப்போது பேசிய வைகோ சபைக்கு வரவழைத்து கண்டனத்தை பதிவு செய்யவேண்டுமென்றார் அப்போது குறிக்கிட்ட சர்மா அவர்கள் இதை பெரிதுப்படுத்த வேண்டாமென்றார் .. அப்போது பேசிய வைகோ சர்மா என்கிற தனிநபரைப்பற்றியல்ல எங்கள் அவையின் தலைவரை அவமதித்தவர் சபைக்கு வரவேண்டுமன்று வரவழைத்து மன்னிப்பு கேட்கவைத்த வரலாறு உண்டு
..
மற்றொரு சுவாரஸ்யம்... அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆரைப்பற்றி ஓரிசா காங்கிரஸ் எம்பி கிண்டலடித்து பேசினார் உடனே திமுக எம்பிகள் எங்கள் மாநிலத்தின் முதல்வரை கிண்டலடித்து பேசியதை திரும்ப பெறவேண்டுமென கடுமையாக வாதிட்டு திரும்பபெற/ வருத்தம் தெரிக்க வைத்தனர்.. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அதிமுகவினரே அமைதியாக இருக்கிறார்கள் நீங்கள் ஏன் பெரிதுப்படுத்துகிறீர்கள் என்றபோது பேசிய மாறன் எங்கள் மாநிலத்தின் முதல்வர் அவர் என்றார்.. அவரோடான அரசியல் என்பது வேறு உரிமை என்பது வேறு என்றார்..
..
இதெல்லாம் குடித்துவிட்டு கும்மாளம் போடும் அறிவிலிகளுக்கோ அம்மா ரயில்விடவேண்டுமென்று சொல்லும் சிறுப்பிள்ளைகளுக்கோ தெரியவாய்ப்பில்லை..
காரணம் தெளிவில்லாதவர்கள் அதைவிட தகுதியில்லாதவர்களை அனுப்பி வைத்தால் கேன்டீன் மசாலாதோசை சாப்பிட்டுவிட்டு கண்ணயரதான் முடியும்..
..
#திமுக_திறமையின்களஞ்சியம்
Storehouse of talent..DMK..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment