Sunday, July 31, 2016

சபை நாகரீகம்

சபாநாயகர் தனபால் பொய் சொல்கிறார் அவர்வகிக்கும் பதவிக்கு அழகல்ல #தளபதிஸ்டாலின்.. தனபாலை சொல்லி குற்றமில்லை நேற்றையதினம் சட்டமன்றத்தில் அவர் பேசியது கண்டு எங்கே தன் ஜாதியை துணைக்கழைப்பாரோ என அஞ்சினேன் பாவம் பகடையாக பயன்படுத்தபடுவது அப்பட்டமாக தெரிகிறது. தனபால் சுதந்திரமாக செயல்படமுடியாது காரணம் அவருக்கு அந்த அதிகாரமில்லை அவரது தலைமை அவரை சுயமாக சிந்தித்து செயல்பட அனுமதிக்காது .. .. சபாநாயகராக இருந்தவர்கள் பல்வேறு சமயங்கள் பலரும் ஆளும்கட்சிக்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறார்கள் இக்கட்டான சூழலில் அரசை காத்திருக்கிறார்கள் ஆனால் இப்போது தொடர்ந்து எதிரிகட்சியினரை அவர்கள் அவையில்லாத போது விமர்சிப்பது நகைப்பது என தொடர்ந்து சபையை கேலிகூத்தாக்கியதில் பெரும் பங்கு ஜெயலலிதாவையும் தனபாலையுமே சேரும்.. .. ஜெயலலிதா சபைக்கே வருவதில்லை இனி .. முதல்வர் இல்லாத சபையில் திமுக பங்கேற்க போவதில்லை என முடிவெடுக்கவேண்டும்.. சபாநாயகர் பொய்யுரைக்கிறார் என்கிறார் .. எப்போது அதிமுகவினர் உண்மையை பேசியிருக்கிறார்கள் அதிமுக தலைமை முதல் கடைதொண்டன் வரை பொய்யில்தானே காலம்தள்ளுகிறார்கள்.. .. பொய்யில் பிறந்து பொய்யிலேயே வளர்ந்தவரின் விசுவாசமானவரிடம் ஜனநாயகத்தை எதிர்ப்பார்பது அறீவீனம்.. இனி சபைக்குள்ளேயே இருந்து சபையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் மிக கடுமையான வார்த்தைகள் வந்தாலும் சபையை ஸ்தம்பிக்க செய்திட வேண்டும் ..சபை நடத்தவிடாமல் செய்தால்தான் (பாராளுமன்றத்தைப்போல) விடிவுபிறக்கும்.. .. கலைஞர் ஆட்சியில் ஜெயலலிதாவையோ எம்ஜிஆரையோ தரகுறைவாக விமர்சித்ததில்லை ஆனால் ஜெயலலிதா வந்தபிறகுதான் தனிநபர் தாக்குதல் சபையில் அதிகமாக கேட்க தொடங்கியது.. காரணம் ஜெயலலிதா வந்த பாரம்பர்யம் அப்படி.. .. #தனபால்_தடுமாறுவதுதெளிவாய்தெரிகிறது .. ஆலஞ்சி.மன்சூர்..

No comments:

Post a Comment