Sunday, July 31, 2016
சாதி இரண்டொழிய ...
சாதியை ஒழிக்கமுடியாது குருமூர்த்தி
முடியாது சரி அதை ஏன் வன்மம் கொண்டு வளர்த்தெடுக்கிறீர்.. எப்போது வந்தது சாதி ஆரியர் வருகைக்கு பிறகு தானே குருமூர்த்தி தொழில் செய்தவனை அவன் தொழில் கொண்டு பிரித்து அதில் வர்ணம் பூசியது உங்கள் கூட்டம்தானே தாழ்வான இடம் தேடி ஆடுமேய்க்க வந்தவர்கள் அரசர்களின் பலவீனத்தை சரியாக பயன்படுத்தி ஆளுமைக்கு வந்ததாகதானே வரலாறு சொல்கிறது..
..
சமதர்மம் வேண்டுமென்பதற்காகதானே ஏற்றதாழ்வில்லாத சமுதாயத்தை கட்டமைக்கதானே ஆன்றோர்களும் அறிவின் சான்றோர்களும் காலகாலமாய் பாடுபடுகிறார்கள் .. பெரியார் போன்ற தொலைநோக்கு சிந்தனையாளர்கள் செம்மைப்படுத்திய மண்ணில் இடைசாதிக்காரனை கொம்புசீவி மதத்தின் ஜாதியின் வெறியை ஊட்டி வளர்த்தெடுக்கிறீர்களே..ஏன்..
..
உங்கள் நோக்கம் இதுதான் ஜாதியை மதத்தை வளர்த்தெடுத்தால் தான் அவர்களுக்குள் குழப்பத்தை வெறியை உண்டுசெய்தால்தான் தொடர்ந்து அதிகாரபீடத்தில் அமர்ந்து இவர்களை ஆட்டிப்படைக்கலாம்.. தமிழனை சாதிமதத்திற்குள் அடைத்தால்தான் குளிர்காயலாம் என நினைப்பது புரியாமல் இல்லை..
..
என்னதான் நீங்கள் ஆரியகூத்தாடினாலும்..
இங்கே நாங்கள் காரியத்தில் கண்ணாய் இருப்போம்..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment