Sunday, July 31, 2016
கொஞ்சம் காதல் பேசுவோம்..
#கொஞ்சம்காதல்பேசுவோம்
*************************
மறக்கத்தான் நினைக்கிறேன்
மரிக்கொழுந்தே..
.
ஆண்டுகள் போனாலும்
ஆழ்மனதில் உன்நிழல்
ஆற்றுப்படுகையில் கைகோர்த்து
அலைந்த காலமெல்லாம்
அசைப்போட்டு பார்க்கிறேன்
இன்னும் நீ..
எங்கோ என்னுள்
ஒளிந்து நிற்கிறாய்..
..
மழைகாலப்பொழுதில்
மரத்தடியில்
இலை சிந்தும் நீரில்
தோள்சாய்ந்து..நீ
கதைத்தெல்லாம்,
இன்னும் என்காதுகளில
ரீங்காரமாய் இசைக்குதடி..
..
அரும்புமீசையை
நீ..வருடியபடி
ஆசையாய் நீ பார்த்தபார்வை
அலைபாயவிட்டு
அமுதமாய் நீ..
தந்ததெல்லாம்
காமத்தில் இல்லை
நானறிவேன்..
..
மறக்கத்தான் நினைக்கிறேன்
மரிக்கொழுந்தே
மரித்து மக்கி
மண்ணாகிப்போகும் வரை
மண்புழுவாய்
மனதை புரட்டிப்போடுதடி..
உன்
உருட்டும் விழிபேசிய
கொஞ்சும் காதல்..
..
மறக்கவில்லை
மரிக்கொழுந்தே
மரிக்கும்வரை..
என்
மனம் பேசும்.
நீயே..
என் காதலென்று..
..
ஆலஞ்சி.மன்சூர்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment