Friday, February 12, 2021

ஜெயலலிதா ஆளுமையா..?

"நீங்கள் வழக்குப் போடாமல் இருந்தால் ஜெயலலிதா இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுகதான். அதுவே விசாரணை ஆணையத்தின் தீர்ப்பாக இருக்கும்".. 
அமைச்சர் ஆர் பி உதயகுமார் .. 
தி இந்து தமிழ் இதழில்..
..
உண்மையில் இவர்களை எண்ணி கவலை கொள்ளவேண்டியிருக்கிறது .. தமிழகம் எவ்வளவு சிறந்த மனிதர்களை பொதுவாழ்வில் தந்திருக்கிறது கொள்கை முரணெனினும் தங்கள் ஆளுமைகளை நிரூபிக்க தவறியதில்லை ..ஜனநாயக பண்புகளோடு மாற்றான் தோட்டத்து மலரிலும் வாசம் உண்டென்பதை உணர்ந்தவர்கள் .. அரசியல் சூழ்ச்சி சதுரங்கம் என ஆடிதீர்த்தாலும் எதிரணியை குறைவாய் மதிப்பிட்டதில்லை மூதறிஞரென்றும் பேரறிஞரென்றும் காலம் புகழ்ந்தது .. அரசியல் அறிந்தவர்களாக அறம் தெரிந்தவர்களாக ..அரசியல் பகை தாண்டி துளியும் கயமையற்ற நட்போடு பழகியவர்கள் .. எதிரெதிர் களமெனினும் கடுமையான கருத்து மோதல் எனினும் எதிராளர்களை குறைத்து மதிப்பிட்டதில்லை..  தங்கள் கொள்கை எதுவென்று அறிந்து செயல்பட்டார்கள் .. 
ஜனநாயகத்திற்கு தீங்கென்ற போது, தமிழ் சமூகத்திற்கு கேடுவருமெனில் ஒருமித்து நின்றார்கள் 
நல்ல தலைவர்களை அமைச்சர்களாக கண்ட தமிழகம் 
இன்று அரைகுறைகளை அறிவிலிகளை தந்து அவமானத்தில் கூனிகுறுகி நிற்கிறது ..
..
"கூவத்தூரில் ஊத்தி கொடுத்தவன் தானே அவன்"என நிதானத்தில் பேசுகிறார் சட்ட அமைச்சர் .. ஊழலில் கொழுத்தவர்கள் சுகமேறி கூட்டிவந்தவரை கழுத்தறுத்து உழைத்து முன்னேறியதாய் புழுகுகிறார்கள் .. அண்ணாவிற்கு அப்புறம் அதிகம் படித்தவர் ..கடைசியாக படித்த புத்தகம் எதுவென்றால் வீட்டில் இருக்கிறதென்கிறார் .. ஒருவர் திருக்குறளை எழுதிய ஔவையார் .. பலூனை உடைத்துவிளையாடும் கிறுக்குப்பிள்ளை ..  தெர்மாகூல் போட்டு அணை நீரை மூடிய அறிவொழுகும் அமைச்சர் .. தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என அதிகாரமில்லாத முதல்வர் .. வடநாட்டு தலைவர்கள் காலில் விழுந்து முதுகெழும்பு உடைந்த ஆன்மையற்ற பன்னீர்கள் .. ஒருத்தர் கூடவா கொஞ்சம் அறிவோடு பேசி பார்த்ததில்லை .. என்ன கொடுமை .. காசிற்காக சாதிக்காக மதத்திற்காக  வாக்கை விற்றால் இந்த இழிநிலைதான் நேரிடும் ..
..
எதிர்கருத்தாளர்களெனிலும்  காமராஜர் பக்தவச்சலம் 
ராஜாஜி சி.எஸ்,.. ஆர்.வி,..அனந்தநாயகி.. மடைமாறிய 
இரா.செழியன்,..நாவலர்.. சம்பத் ..என அடுக்கிக்கொண்டே போகலாம் ..நல்ல சிந்தனையாளர்களாய் வலம் வந்தார்கள் பேரறிஞர் அண்ணா, பேரருளாளன் கலைஞர் ..பேராசிரியர் தொடங்கி இன்றைய இளம் தலைவர்கள் வரை தங்கள் தனித்திறமையை பறைசாற்றி தமிழகம் நல்விதைகளை தரும் கழனி என பெயர் தந்தார்கள் ..ஆனால் மகோரா எனும் மடையனின் மோகமுள் குத்த தொடங்கி காலம் அறிவில் விரிசல் விழுந்தநிலைக்கு போனது .. சட்டபைக்கு வரவே அஞ்சியதும் ..
எதிர்க்கட்சித்தலைவர் கலைஞரை சந்தித்தாலே கட்டம் கட்டி ஒதுக்கிவைத்ததும் .. கருத்தை எதிர்கொள்ள பயத்து ஒளிந்ததும் நடந்தது.. பொய்யும் புரட்டும் பேசி பேசி அதையே நம்பவைக்க ஒரு கூட்டம் தொடர்ந்து கூச்சலிட்டு திராவிடத்தின் ஆட்சி வந்தால் எங்கே நமது அதிகாரம் பறிபோகுமென்று பார்பன ஊடகங்கள் திமுகவை ஊழல்கட்சியென சொல்லி கடைசிவரை நிருபிக்க முடியாமல் போனது ..ஆனாலும் ஊழலில் தண்டனைபெற்றாலும் அதற்கும் துணை போவொமென ஆரிய கூட்டம் தொடர்ந்து இந்த கூமுட்டைகளை கைபாவையாக்கி ஆட்சி செலுத்துகிறது .. ஜெயலலிதா எனும் பயந்தாகொள்ளியை சிங்கபெண் என ஊடகபிம்பம் அமைத்து கடைசிவரை காப்பாற்றியதும் .. அவரை தொழ வைத்து அடிமைகளாய் பொறுக்கி அமைச்சராக்கியதும் இந்நிலைக்கு காரணம் ..
..
வழக்கை சந்திக்க பயந்து தொடர்ந்து வாய்தா வாங்கி 
வழக்கை இவர்தான் விசாரிக்கவேண்டுமென்றெல்லாம் அடம்பிடித்து .. கடைசியில் நீதியின் பிடி இறுகியபோது..
சப்தநாடியும் அடங்கி அழுதபடி நான் நோயாளி கருணை காட்டுங்கள் என்று நீதிமன்றத்தில் கெஞ்சியவர் தான் .. அரசு பதவியை முறைகேடாய் பயன்படுத்தி கொள்ளையடித்து ஆடாதஆட்டமெல்லாம் ஆடி எனை எதிர்ப்பதற்கு யாருமில்லை என ஆணவத்தோடு பேசி தன் கட்சிகாரனை சுயமரியாதையற்ற கழுதையாக எண்ணி,அதிகார திமிரில் பாசிசபார்பன காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்தான் ஜெயலலிதா.. விதைத்ததுதான் விளையும் 
என அறியாமல் போனார்..  ஆளுமை வீரமங்கை சிங்கப்பெண் என்பதெல்லாம் கட்டிசமைத்தது .. அடாவடி ஆளுமையாகாது எதிர்கொள்ள அஞ்சுதல்  வீரமாகாது ..
..
தீதும் நன்றும் பிறர்தர வாரா..
..
ஆலஞ்சியார்

Tuesday, February 9, 2021

கனிமொழி கருணாநிதி

கனிமொழி கருணாநிதி
மிக சிறந்த களப்பணியாளராக,களமறிந்து படையோட்டம் நடத்தும் போர்வீரராக,தலைமைக்கு வலுசேர்க்கும் முதன்மை தொண்டராக மிகசரியான நேரத்தில் சரியாக செயல்படும் மகளிரணி தலைவி ..
உண்மையில் பெண்கள் மத்தியில் திமுகவின் தேவையை கொண்டு சேர்த்ததில் வெற்றிபெற்றிருக்கிறார் .. தலைவர் தளபதிக்கு வலுசேர்க்க பெரிய முயற்சியை மிக சாதாரணமாக செய்துக்கொண்டிருக்கிறார் ..
..
பெண்கள் வரும் தேர்தலில் பெரும்பங்கு  வகிப்பார்கள்
மிகப்பெரியளவில் மாற்றத்தை பெண்களின் வாக்குகளே தீர்மானிக்கும் .. இந்த அரசின் கையாலாகாதத்தனத்தால் பெரும் பாதிப்படைந்தவர்கள் பெண்கள் .. தன் பிள்ளைகளின் வேலைவாய்ப்பு மறுக்கபட்டு யாரோ வடஇந்தியர் சொகுசாக வந்தமற வழிவகுத்த பன்னீர் .. தன் குழந்தையின் கவ்விக்கு வேட்டுவைத்த பழனியும் ..கொஞ்சம் கொஞ்சமாக கலாச்சாரப்படையெடுப்பை கண்டுக்கொள்ளாமல் விட்டு நாட்டை நாசமாக்கிய நயவஞ்சகர்கள் மேல் சினங்கொண்டிருக்கிறார்கள் .. முக்கிய தேவைக்கான அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாங்கமுடியாததாக இருக்கிறது .. தமிழகத்தை சுரண்டும் பனியா கூட்டத்திற்கு வெண்சாமரம் வீசும் 
இந்த கேடுகெட்டவர்கள்மீது கடும் கோபத்தோடு இருக்கிறார்கள் ..  பொய்யும் பித்தலாட்டமும் சொன்னதை செய்யாமல் ஏமாற்றுவதும் தங்கள் உரிமைகளை பலிகொடுப்பதும் தங்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிய அடிமைக்கூட்டத்தை விரட்டியடிக்க நேரம் பார்த்து காத்திருப்பது அவர்களிஅ கண்களில் தெரிகிறது ..
..
கனிமொழியை தங்கள் வீட்டு இளையமகள், சகோதரி, அக்கா,அத்தை, பிரியமான தோழி என பார்க்கிறார்கள் ..பெருவெள்ளத்திலும் புன்னகையோடு கரம் கோர்த்து நிற்கிறார்கள் ..எளிதில் கவர்ந்துவிடும் இயற்கையைப்போல நேசிக்கிறார்கள் தங்களில் ஒருத்தியாய் எண்ணி மகிழ்கிறார்கள் ..அண்ணனுக்கு பரிவட்டம் கட்ட தங்கையின் படையோட்டம் கண்டு மகிழ்கிறார்கள் தமிழினத்தின் மீது படிந்த பாசிசத்தை கறையை கழுவ .. மானத்தோடு வாழ்ந்த சமூகத்தை மீட்டெடுக்க, சுயநலத்திற்காக மண்டியிட்ட கொடியவர்களால் இழந்த மானத்தை வென்றெடுக்க சரியான நேரத்தில் கிடைத்த நல்வாய்ப்பாய் திமுகவை பார்க்கிறார்கள் .. நல்லதொரு விடியலுக்காக தமிழகம் காத்திருப்பது அவர்கள் கண்களில் தெரிகிறது ..
..
நாட்டை மட்டுமல்ல வீட்டை நாசமாக்கும் கயவர்களை 
ஊரை கொள்ளையடித்து உலையில் போடுவோரை தியாகசெம்மல்களாக பேசும் பெரும் கொள்ளைக்கூட்டத்தை ஒன்றிணைந்து கொள்ளையடிக்க வழியுண்டா என காத்துநிற்கும் கள்ளபேர்வழிகளை தமிழக அரசியலிலிருந்தே அப்புறபடுத்த மக்கள் எழுச்சியோடு தயாராகயிருக்கிறார்கள் ..
அறம் வெல்லும் ..
..
ஆலஞ்சியார்

Monday, February 8, 2021

சசிகலா சிறையிலுிருந்து திரும்பினா்..

சிறைச் சென்று திரும்புகிறவர்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சி அடைந்துகிடப்பார்கள் சசிகலா படைசூழ கொள்ளையடித்ததை கொண்டாடிக்கொண்டே வருகிறார்.. தமிழக ஊடகங்கள் அதை தொடர் நிகழ்வாக்கி தமிழகத்தின் அவமானமாய் நிற்கிறது.. எந்தவொரு ஊடகமும் சன்டிவி உட்பட எதற்காக ஜெயிலுக்கு போனார் யாரோடு சேர்ந்து கொள்ளையடித்து நீதிமன்றம் தண்டித்தது என பேச மறுப்பது அறம் தவறிய செயல் .. சசிகலா என்ற தனி மனுஷியோடு நமக்கு விரோதமோ பகையோ இல்லை
இன்னும் சொல்லபோனால் அடிமுட்டாள்களை (ஜெயலலிதா உட்பட) வைத்து பொம்மலாட்டம் ஆடிய அவரை நாம் கூர்ந்து கவனிக்கதான் வேண்டும் .. ஒரு பெண்ணாய் சராசரி குடும்ப சூழலை மறந்து ஜெயலலிதா என்ற பிம்பத்தை உயர்த்தி எழுப்பி அதில் தான் யாருமறியாமல் சிம்மாசனமிட்டு அமர்ந்து நடத்தி ..ஆட்சி ..சட்டம் கூட ஒன்றும் புடுங்கமுடியாதவாறு அதிகாரம் செலுத்திய விதம் அந்த பெண்மணியின் தனி குணத்தை காட்டுகிறது ..
..
ஆனால் சசிகலாவை புனிதராக்கவும் அதிமுகவை மீண்டும் உயிர்பிக்கவும் சிலர் படாதபாடுபடுவது அப்பட்டமாக தெரிகிறது .. திராவிடத்தின் ஆட்சி மீண்டும் வந்தால் இப்போதுபோல் கொழிக்கமுடியாதென பாசிச கூட்டம் தெளிவாக அறிந்துவைத்துத்திருக்கிறது .. சல்லி சல்லியாக அதிமுக போவது கூட ஒருவகையில் இழப்புதான் அந்த இடத்தை காங்கிரஸால் நிரம்ப முடியாதவாறு பிய்த்தெறிந்துவிட்டது பாசிசம் .. தங்கள் சிலிப்பர்களை ஒவ்வொன்றாக இறங்கி காங்கிரஸ் எழாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறது ..
சாமானியர்களிடம் காங்கிரஸின் அதிகாரம் செல்லாதவரை .. பார்பனீய, ஜமீன் வாசம் மாறாதவரை கடினம் தான் அதுவரையேனும் அதிமுக ஊயிர்ப்போடு இருக்கவேண்டிய அவசியம் அதிகாரமற்ற நிலையிலேனும் எதிர்கட்சியாக அதிமுக இருப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது பாஜகவை காலூன்ற விடாமல் தடுப்பதற்கான உக்தியாக கருத்தில் கொள்வோம்..
..
சசிகலாவின் வரவு பழனிசாமி பன்னீர் வகையறாகளுக்கு பீதியை தந்திருக்கிறதென்பது அவர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது .. A1 ஜெயலலிதா நினைவிடம் மூடபட்டதும் அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்பில் கொண்டுவரபட்டதும் கடைசியில் சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றபட்டதில் பயம் தெரிகிறது .. காரணம் இவர்கள் யாருமே மக்கள் தலைவர்களாகவோ அல்லது கட்சியை ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றவர்களோ அல்ல .. இன்றைக்கு எதையாவது பேசி சமாளிக்கிறவர்கள் தான் முதலில் மண்டியிடுவார்கள் ..ஏனெனில் அதிமுகவின் வரலாறு அதுதான் .. பொதுவாழ்வில் இருப்பவர்களின் பொழுதுபோக்கு என தரம் குறைந்து விமர்சித்த காளிமுத்து காலடியில் விழவில்லையா.. இன்றைக்கு அதிமுகவில் இருப்பவர்கள் ஏறக்குறைய எல்லோருமே  ஜெயலலிதாவை மிக கடுமையாக நாகூச பேசியவர்கள் தான் .. பணமும் பதவியும் விழ காலும் கிடைத்தால் போதும் .. தண்டனை பெற்றவர் தியாகியென பேசுவார்கள் ஊர் பணத்தை கொள்ளையடித்தவரென பேசுவோர்.. 
..

மிக மோசமான அரசியல் நிகழ்வுகளை தரங்கெட்ட மனிதர்களை, பொய்யர்களை, புறம்பேசி திரிவோரை
நாம் பெற்றிருக்கிறோம் 
கொள்ளையடித்தாலும் கொண்டாடும் மனநிலையை
உருவாக்கியிருக்கிறார்கள் .. மீண்டும் நல்லதொரு அரசியல்.. கருத்தியலோடும் கொள்கையோடு அறநெறி மாறாத நல்ல தலைவர்களை இனங்கண்டு ஆட்சியை தருவோம்.   இந்த கேடுகெட்டவர்களால் தமிழகம் இழிவை சுமக்கிறது .. வெட்கிதலைகுனியும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது இதற்கு நாமும் ஒரு காரணம் .. 
பணம் தந்தால் யாருக்கும் வாக்களிப்போமென்ற மனநிலை மாறவேண்டும் .. யார் வந்தால் தமிழகம் மானத்தோடும் சுயமரியாதையோடும் புகழோடும் இந்திய ஒன்றிய சமூகத்தில் நிற்கும் என அறிந்து 
வரும் தேர்தலில் வாக்களிப்போம் ..
திருடர்கள் விழா எடுக்கிறார்கள் நான்காண்டு சிறைத்தண்டனையை தியாகமென புகழ்கிறார்கள் ..
ஊடகம் சீரழிந்து அறமிழந்து நிற்கிறது ..
இனியேனும்
நல்லதை விதைப்போம்..
..
ஆலஞ்சியார்

Saturday, February 6, 2021

சசிகலா கொள்ளைக்காரியெனில் ஜெயலலிதா..?

சிலநேரம் பேசும் போது உண்மை தன்னால வரும் ..
சி.வி சண்முகம் பேசும் போது ஊரை அடித்து கொள்ளையடித்த வழக்கில் சசிகலா நான்காண்டு சிறைபெற்றவர் என்கிறார் .. அதே வழக்கில் ஜெயலலிதாவும் சிறை தண்டனைபெற்றாரே என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் நடையை கட்டினார் ..
(அவைத்தலைவர் மதுசூதனன் செத்தவங்களைப்பற்றி பேசுறீயே நாளைக்கு நீ செத்தாலும் என சாபமெல்லாம் விட்டார்..)
என்ன சொல்ல வருகிறார் சி.வி.சண்முகம்  ஊழல் செய்தவர் என்பதால் சசிகலாவை சேர்க்க முடியாதென்கிறாரா..
அப்படியெனில் தண்டனை பெற்று ஜாமீனில் இருந்த காலகட்டத்தில் சின்னம்மாவை அம்மா ஆக்காமல் விடமாட்டோம் என்றதெல்லாம் சும்மாவா..
..
சசிகலா திருடி என்கிறார் ஆனால் ₹10 கோடி அபதாரம் கட்டிய சசிகலா திருடியெனில் அதே வழக்கில் ₹100 கோடி அபதாரம் விதித்த ஜெயலலிதா மகா திருடி என்பாரா..?  இவர்கள் உண்மையில் சசிகலாவை எதிர்ப்பது ஏன் இதுவரை அடித்த கொள்ளையில் பங்கு கேட்பார் என்பதாலா .. அல்லது எங்கே இதுவரை காலில் விழாமல் இருந்தது மீண்டும் வளைய வேண்டுமே என்ற பயமா.. சசிகலாவை திருடி என ஊடகம் முன்பு வாய்திறந்தவர் ஒருஉண்மையை அவரை அறியாமலே சொல்லிவிட்டு செல்கிறார் ஜெயலலிதா மகா திருடி அவருக்கு எதற்காக மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் அவரும் தண்டிக்கபடவேண்டியவர் இறந்துபோனதால் புனிதராகிவிட முடியாது .. மறைந்தாலும் திருடியை திருடரென்றே அழைக்க வேண்டும் என சொல்லாமல் உளறிவைக்கிறார் ..உள்ளே போனதும் சிலநேரம் உண்மையை பேசவைக்கும் என்பார்கள் .. சி.வி.சண்முகம் உண்மையைதான் பேசியிருக்கிறார்..
..
சசிகலா அடிப்படை உறுப்பினர் இல்லையென்று பேசிபார்த்தார்கள் .. பிறகு ஏன் ஒவ்வொருவராக காலில் விழுந்து அதிமுகவின் செயலாளராக வேண்டுமென அழுது கெஞ்சினீர்கள் என்ற போது பதிலை காணோம் இப்போது அவர் செயலாளரல்ல என உச்சநீதிமன்றம் வழக்கை காரணம் காட்டுகிறார்கள்  வழக்கு முடித்துவைக்கபடவில்லை ..நாளை சசிகலா வந்தால் முதல் ஆளாய் நிற்பார் நீங்கள் சொல்லுங்கள் என்ற ஜெயகுமார் .. உண்மையில் இவர்களுக்கு பயம் பற்றிக் கொண்டிருப்பது இந்த பேட்டியில் தெரிகிறது .. சசிகலா தேர்தல் முடியும் வரை காத்திருப்பார் தேர்தலில் படுதோல்வி இவர்களை சசிகலா காலில் விழவைக்கும் இப்போதே எழு மாவட்ட செயலாளர்கள் தொடர்புக்கு வெளியே என செய்திகள் வருகிறது ..பேரணிக்கு தடை கேட்டு டிஜிபியை சந்திக்கிறார்கள் ஆட்சி அதிகாரம் கையில் இல்லையென்பதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு..
..
கை காய்வதற்குள் இலை போட்டவரை கழுத்தறுக்கும் பாதகர்கள் இவர்கள் .. நாளை ஜெயலலிதாவையும் வசைபாடுவார்கள் .. நம்பிக்கை துரோகிகள் மாறி மாறி பேசி திரியும் மகா கேவலமானவர்கள் .. கூட இருந்து கொள்ளையடித்த போது இனித்தது கொள்ளையடித்ததில் பங்கை கொண்டுபோய் சசிகலா காலில் கொட்டியபோது இவர் மகா கொள்ளைக்காரி என தெரியாமல் போனது ..இப்போது சசியை திருடி என சேர்த்து குரல் கொடுக்கிறார்கள் .. உண்மைதான் மகா கொள்ளைக்காரி தான் ஆனால் அதே அளவுகோலை ஜெயலலிதா மீதும் வைத்திருக்க வேண்டும் ஜெயலலிதாவை புனிதராக்கி கூட்டுக் கொள்ளைக்கு துணை போன அமைச்சர்பெருமக்கள்..? இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பதால் தூய்மையாகி விடுவார்களா ..
..
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழுஅளவில் விசாரணை செய்யபடவேண்டும  இன்றைக்கு கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் அவர்களின் உறவினர்கள் என பெரும் கூட்டம் சிறைக்கு செல்லும் காலம் வரும் ..அந்த கூட்டத்தில் இன்று முகமூடிகொண்டிருந்தவர்களும் இருப்பார்கள் .. கூட்டு கொள்ளைகூட்டத்தின் தலைவி வருகிறார் ..கொள்ளையடித்தில் கூட இருந்த கொள்ளையர்கள் பதறுகிறார்கள் .. 
திருடர்கள் ஜாக்கிரதை
..
ஆலஞ்சியார்

Friday, February 5, 2021

முஸ்லிம்கள்

நபிகள் தன் வாழ்நாளில் பொய் பேசியதில்லை 
வாக்குறுதி மாறியதில்லை,#தனக்குதுன்பம்இழைத்தவர்களைபழிவாங்கியதில்லை, ஏழைகள் அனாதைகளுக்காக இரக்கமட்டார் கோபம் பொறாமை பேராசை புறம்பேசுதல் கூடாதென்றார் ..
கலைஞர் கருணாநிதி..
..
இறைதூதர் நபிகளைப் பற்றி கல்யாணராமன் கக்கிய விசம் பெரும் கண்டனத்திற்குரியது தண்டனைக்குரியது இது போன்ற செயல்களை ஆர்எஸ்எஸ் சித்தாந்திகள் மிக எளிதாக செய்து உணர்ச்சியை தூண்டி ஒரு கலவரத்தை நடத்திட முடியுமா என நினைப்பார்கள் காந்தியை கொன்ற கோட்சே கூட இஸ்மாயில் என பச்சை குத்தி பெரும் கலவரத்தை நடத்த திட்டமிட்டிருந்தது பெரியார் வானொலியில் கதைத்து தடுக்கபட்டது .. உத்தமரை கொன்றது உதாரி பாப்பான் என முரசொலி தலைப்பு செய்தியை வெளியிட்டது .. முஸ்லிம்களை கலவரகாரர்களாக மாற்ற தொடர்ந்து சங்கிகள் முயற்சித்து ஒவ்வொருமுறையும் தோற்றுக்கொண்டிரு்கிறார்கள் ஆனாலும் இது தொடர்கிறது ..
..
இதுபோன்ற ஆசாமிகளுக்காக போராட தேவையில்லை இவன் இல்லையென்றால் மற்றொருவனை ஆர்எஸ்எஸ் உருவாக்கும் நாம் செய்யவேண்டியது சட்டத்தின் முன் நிறுத்துவதும் தொடர் நடவடிக்கை மூலம் தண்டனை பெற்று தருவதும் தான் .. நபிகள் மீது பேரன்பு கொண்ட சமூகம் உயிரின் மேலாய் மதிக்கிறது என்பதெல்லாம் சரி அதற்காக கல்யாணராமனை உயரத்திற்கு கொண்டு செல்ல காரணியாக தேவையில்லை ..
வெட்டுவேன் தலையை எடுப்பேன் என பேதுவதால் பயனி்ல்லை .. சமூகம் இளைஞர்களை நல்வழிபடுத்த கல்வியில் வேலைவாய்ப்பில் தனக்கான அங்கீகாரத்கை பெற அரசியலில் பங்காற்ற ஜனநாயக முறையில் முயற்சிக்க வேண்டும் உச்சசுருதியில் பேசுகிறவன் தலைவன் என்கிற நிலையை மாற்றி தனித்தன்மையோ கூடிய அனைவரையும் ஒருங்கிணைக்கும் தலைவனை கண்டெத்தினால் ஒழிய சமூகம் மேம்பாடடைய முடியாது ..
..
சுஹைல் பின் அம்ரு என்கிற கவிஞன்  நபிகளாருக்கு எதிராக அவதூறுகளை பரப்பிக்கொண்டிருந்தான்..அரபுலகம் கவிஞர்களை கொண்டாடிய காலம் அது.. (கவிஞர்கள் பொய்யர்கள் என்று பிறகுதான் குர்ஆன் வசனம் வந்தது )..
வெகுண்டெழுந்த உமர் அவர்கள் உத்தரவிடுங்கள் அவன் கீழ்பற்களை உடைத்துவிடுகிறேன் என்ற போது ..நாளை மறுமையில் என் முகத்தை இறைவன் சிதைத்துவிடுவானே என பதிலளித்தார் நபிகள் பெருமகன்.. 
யாரையும் சிறிதளவில் கூட பழிவாங்க முயற்சித்ததில்லை .. நபிகளை இழிவாக பேசிவிட்டான் என்பதால் இரத்தம் கொதிக்கிறது என்ன நீ இப்படி பேசுகிறாய் என நினைத்தாலும் கவலையில்லை 
முஸ்லிம்கள் அரசியலில் தெளிவு பெறாதவரை இதுபோன்ற சற்றென்று உணர்ச்சியை தூண்டுகிற செயல்களை செய்துக்கொண்டே இருப்பார்கள் 
.. 
ஆளுக்கொரு கட்சி ஆளுக்கு இரண்டு இடங்களை வெவ்வேறு எதிரெதிர் அணிகளில் பெற்று அவரை இவரும் இவரும் அவரும் இகழ்ந்து பேசி கடைசியில் இரண்டும் போய் பிரதிநிதிகள் அற்ற சமூகமாய் நிற்கும் அவலம் .. யார் சரியானவர் என்பதில் கூட தெளிவற்ற சுயநலம் கண்ணை மறைக்கிற அவலம் .. தொடர்ந்து இத்தனை காலம் இருந்தோம் என்ன பயன் என எதிர்கேள்வி கேட்பதும் இஸ்லாமிய இயக்கங்கள் பிரித்ததுயாரென புலம்புவதும் என்ன செய்துவிட்டதென கைபிசைந்து நிற்பதை தவிர்த்து ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளாதவரை தொடரும் .. கல்வியை தாருங்கள் அரசு வேலைகளில் பணியமர்த்த முயற்சி செய்யுங்கள் வெளிநாடு மோகத்தை விரட்டிவிட்டு உள்நாட்டில் தொழில் தொடங்க முயலுங்கள்.. உயர்பதவிகளை அடைவதற்கு இப்போதிலிருந்து உங்கள் குழந்தைகளை தயார் செய்யுங்கள் ..
உயர்படிப்புகள், ஆய்வுகளுக்கு குழந்கைகளை ஊக்கபடுத்துங்கள்
கண்டவனும் கண்டதை பேசி திரிந்தால் செவிகொடுக்காதீர்கள் .. வணக்கம் வழிபாடு மார்க்கம் கோட்பாடுகளை உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துக்கொள்ளுங்கள். பொது அரசியலை வாருங்கள்அரசியல் பயிலுங்கள் செயல்படுங்கள் இவையனைத்திறேகும் முன்பாக ஒற்றை தலைமையை கண்டெத்துங்கள் ..
..
ஆலஞ்சியார்

Saturday, January 30, 2021

நம்ம ஸ்டாலின்

#உங்கள்தொகுதியில்ஸ்டாலின்
முதல்நாளிலேயே கண்களில் கனவுகளோடும் கைகளில் மனுக்களோடும் பெருந்திரளாய் மக்கள் .. 
உங்கள் நம்பிக்கையை காப்பேன் என்கிறார். #தலைவர்_தளபதி_ஸ்டாலின்
.. 
நல்ல தொடக்கம் மக்களின் விழிகளில் ஏக்கமும் வருங்காலத்தை இந்த பாசிசத்தின் அடிமைகளை விட்டால் நாசமாக்கிவிடுவார்கள் என்ற அச்சமும் தெரிகிறது ..கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சு தரும் வேலையை அதிமுக அரசு செய்துவருவதை காண்கிறார்கள் ..மிக மோசமான காலத்தில் தமிழகம் நிற்கிறது.. தனக்கு வாய்பளித்தவரையே கழுத்தறுக்கும் கொடுஞ்செயலை கொஞ்சமும் சஞ்சலமின்றி செய்கிற பழனியும் .. தன்னை முன்னிறுத்தியவரை காட்டிகொடுத்தும் கழுத்தறுத்தும் பகைவரோடு கைகோர்த்து சப்தமில்லாமல் வேட்டுவைக்கும் பன்னீரும் ..பதவி பணம் பயம் இவை மூன்றும் கண்ணை மறைத்து தமிழக நலன்களை காவு கொடுக்கும் நயவஞ்சகூட்டம் ..இதை 
இனியும் அனுமதித்தால் நாடு சுடுகாடாய் போகும் ..பொய்யும் பித்தலாட்டமும் ஆயுதமாய் கொண்டு ஆட்சி நடத்துகிற அறிவிலிக்கூட்டம் தமிழர்கள் வாழ்வை நாசமாக்கி .. கல்வி வேலைவாய்ப்பில் பிற மாநிலத்தவர் தடையின்றி நுழைய வழிவகுத்து தமிழ் இளைஞர்களின் எதிர்காலத்தை சூன்யமாக்கும் கயமையை கலக்கமின்றி செய்யும் கயவர்களை விரட்டிட வேண்டுமென்ற பெரும் கனவோடு வருகிறார்கள் 
..
நல்லதை தேர்வு செய்து விதைக்காமல் போனதால் விதைத்தது சொத்தையாகி போனதால் ..  இனி அந்த தவறை செய்வதில்லை என்ற உறுதியோடு திமுகவை நோக்கி வருகிறார்கள் .. தமிழகம் முழுவதும் பெரும் எழுச்சி காணபடுகிறது .. மக்கள் பேராதரவோடு திமுக அறியணை ஏறும்  என்பதை எதிரிகள் உணர்ந்திருக்கிறார்கள் ..அதனால் தான் கண்டதையும் பேசி திரிகிறார்கள் மத கலவரத்தை சாதிவெறியையூட்டி திசை திருப்பலாமென்ற நப்பாசையில் தமிழகம் மண் அள்ளி போட்டுவிட்டது .. அதனால் தான் தனிநபர் தாக்குதலை தரம் குறைந்து பேச தொடங்கியிருக்கிறார்கள் .. அவர்களின் இயலாமை கோபம் செல்லுமிடமெல்லாம் செருப்படி தரும் தமிழ் சமூகம் எழவே முடியாதவாறு புதைத்திருக்கிறார்களே என்ற ஆற்றாமை அவர்களை வரம்புமீறி பேசவைக்கிறது .. பாஜகவில் உள்ளவர்கள் எல்லாம் களவாணிகளும் தெளிவற்றவர்களும் கோழைகளும் முகவரியில்லாதவர்களும் தான் .. கொள்கையில்லாத மதவெறி ஏறிய மூடர்கள் .. பொய்யும் பணமும் அவர்களின் மூலதனம்.. அதிகாரத்திற்கு வருவதற்காக எதையும் #எதையும் செய்ய துணிவார்கள் .. திறக்கபடாத கதவுகளும் மடிக்கபடாத விரிப்புகளும் கூட ஆயுதமாக்க தயங்காதவர்கள் அவர்கள் புத்தி அதில் தான் போய் சேரும் .. நன்னெறி அரசியல் அறியாத முண்டங்கள் ..
#மானமிகு_கனிமொழி அவர்களை, மானங்கெட்ட கழிவறையில் கருவான அலசல்கள் பேசுவதிலிருந்தே அவர்களின் தரமும் நோக்கமும் புரியும்.. கருத்துக்களோடு மோத வக்கற்ற சவலைகள்.. திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றவுடன் இவர்களின் விரக்தி கழிவுகளாக வருகிறது .. கழிவுகளோடும் பொய்கதைகளோடும் அரசியல் செய்கிற கூட்டம் அது ..
..
நாம் நம் பயணத்தில் தெளிவாக இருப்போம் .. நல்லதைச் செய்வோம் நாடு நமது மக்களின் துயர்துடைக்கும் கரங்களாய் இருப்போம் ..வீணர்கள் விவரகேடுகள் விலைபோகும் பேதைகள் மானமறியா கோழைகள் கலாச்சாரத்தை பண்பாட்டை சிதைத்தேனும் சுயநலத்தோடு சுகமாக வாழ நினைக்கும் அற்பர்களை விரட்டுவோம் .. ஸ்டாலின் எனும் மகத்தான தலைவரை காலம் நமக்கு காட்டியிருக்கிறது அவரது கரத்தை பலமாக பற்றிக்கொள்வோம்.. நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கையோடு .. 
உங்களின் கோரிக்கைகள் எதிர்ப்பார்ப்புகள் எல்லாம் நிச்சயம் செய்து தருவார் கலைஞரின் மகன் .. கனிவோடும் கரிசனத்தோடும் தோள்கொடுக்கும் தோழனாய்.. உங்கள் வீட்டுப்பிள்ளையாய்..  நல்லதை எண்ணும் நெறிதவறா அரசியலை முன்னெடுக்கும் 
ஒய்வறியா உழைப்பாளி தளபதி அவர்கள் ..நம்
கவலைகள் எல்லாம் தீரும் .. 
உதயசூரியன் உதிக்கும் 
இருள் நீங்கும்....
..
#நம்மோடு_ஸ்டாலின் 
..
ஆலஞ்சியார்

Tuesday, July 7, 2020

ஊடகம்

ஏன் கதற வேண்டும் ..
பத்திரிக்கை செய்தித்துறையில் #அவர்கள் மட்டுமே ஆண்டுவந்தது தகரும்போது வரும் இயல்பான கோபம் அதைகூட தைரியமாய் சொல்வதற்கு வக்கற்று மாரி மதன்களை களம் இறக்குகிறார்கள் ..நேர்மையாக நெஞ்சுயர்த்தி பேசுவது பண்டே
பழகமில்லாத ஆரிய கூட்டம் #குணசேகரன்களை கண்டால் பதறி அழுகிறார்கள் ..
ஊடகங்களின் அவாள்களின் ஆதிக்கம் இப்போதும் முழுமையாக குறைந்திடவில்லை எனினும் நம்மவர்களின் வளர்ச்சி எரிச்சலை தருகிறது.. 
தொலைக்காட்சி ஊடகத்தின் தேவையை  முழுமையாக புரிந்துக்கொண்ட முதல் தமிழன் மாறன் .. சன்டிவியின் வளர்ச்சியும் அதன் வேகமும் பதறவைத்தது இத்தனைக்கும் அது ஒரு கட்சியின் டிவியாக தான் இருந்தது .. மாறன் மறைவிற்க்கு பிறகு மல்லிகாக்கள் கையில் வந்ததும் தன் நிறத்தை மாற்றியது ஆனாலும் நாம் கலங்கவில்லை வீரபாண்டியன்களை உருவாக்கி வைத்திருந்தோம்..தொலைக்காட்சி ஊடகம் பரிணாம வளர்ச்சியடைந்த போது நிறைய செய்தி ஊடகங்கள் நம்மவர்களால் கையாளபடுதலால் அவர்கள் கோபபடுவது இயல்புதானே..
..
நம் வீட்டு பிள்ளைகள் செய்தியாளராக, செய்தி ஆசிரியராக,செய்தி நிறுவனத்தை நிர்வகிப்பவராக வந்ததும் பொறுக்கமுடியாமல் புலம்பகிறார்கள் அதிலும் இரவல் குரலில் ..
இந்த நிலைக்கு திராவிடம் முக்கிய காரணம் 
நம் பிள்ளைகளை குலக்கல்விக்கு விடாமல் 
கல்வி தந்தது முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணத்தை ரத்து செய்தது நீ விரும்புகிற துறையில் உன் திறமையை காட்ட களம் அமைத்து தந்தது ..  ஆனாலும் திமுகவை விமர்சித்துதான் பெரும்பாலான ஊடகங்கள் ஆனால் திமுக கதறவில்லை,பதறவில்லை தன் கடமையை செவ்வனே செய்கிறது.. ஆனால் மோடியை  பாஜகவை,சனாதனத்தை பிராமணத்தை விமர்சிக்கும் போது
அவர்களுக்கு உதறல் வருகிறது.. 
..
என்ன சொல்ல வருகிறார்கள் 
ஊடகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படவேண்டுமென்றா.. பாசிசத்திற்கு வால்பிடிக்கவேண்டுமா.. இவர்கள் செய்யும் அலுச்சாட்டியங்களை கண்டுக்கொள்ளாமல் கைதட்டவேண்டுமா .. மோடியையும் பாஜகவையும் பார்பனீயத்தையும் கொண்டாட வேண்டுமா.. ஊடகத்தின் குரல்வளையை நெறித்து ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜனநாயக மூச்சை நிறுத்தவேண்டுமா.. இவையெல்லாம் இங்கே நடத்திடமுடியாது 
சனாதனத்திற்கெதிரான திராவிட மண்ணில் கொஞ்சம் புளிக்கும்.. பெரியாரின் உழைப்பு திராவிட இயக்கம் பலனால் நேடிய கல்வியால் சமூகநீதியை பேசுவதை தொடர்ந்து எவ்வளவு முயற்சித்தும் பொய்யை பரப்பியும் கலவரத்தை தூண்டியும் மதவெறியை சாதிவெறியை நடத்தியும் அவர்களால் இறுதியில் வெற்றிபெற முடியாமல் போவதற்கு சிறதேனும்,காரணிகளில் இன்றைய முதல்தலைமுறை ஊடகவியலாளர்கள் ..
பின்னே கோபம் வரத்தானே செய்யும். 
..
இவர்கள் குற்றம்சாட்டும் ஊடகவியலாளர்கள் 
நேர்மையோடு நடக்கவில்லைதான் .. எதையும் அறநெறியோடு அணுகவில்லைதான் இன்னும்,சொல்லபோனால் திமுகவின் வெற்றியை தடுப்பதில் தடைபோடுவதில் 
முனைப்போடு செயல்பட்டவர்கள் தான் ஆனாலும் அவர்கள் மீது பாசிசவாதிகளின் வன்மம் நிறைந்த குற்றச்சாட்டை பழியை அவர்கள் மீது எரியும் தனலை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கமுடியாது ஏனெனில் இவர்கள் நம் பிள்ளைகள் 
இவர்களை உயரத்தில் ஏற்றதான் திராவிடம் பாடுபட்டது இனியும் தொடர்ந்து உழைக்கும்..
..
ஆலஞ்சியார்