Thursday, February 6, 2025

சீமான் ..
ஆரம்பம் தொட்டே நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பதுதான்..
பொய்யன் .. விடுதலைப்புலித்தலைவனை கண்ட நொடி முதல் இவனின் செயல்களை கண்டும் கணாதிருந்தவர்கள் இன்று கைதேசப்படுகிறார்கள்..  ஒரு புகைப்படம் ஒராயிரம் கதைச்சொல்லி தமிழ் சமூகத்தை மலடாக்கியிருக்கிறது.. கத்தி பேசினால் சொல்வது உண்மையென நம்பியவர்களை கண்டு "நகை" தோன்றுகிறது.. 
..
இன்னமும் இவன் பின்னால் நிற்பவர்கள் போதை தெரியாத பேதைகள்.. பெரியாரை தொட்டவுடன் அடி நாலாபக்கமும் விழ பெரியாரை விட "பெரியவா" வை நம்பியிருந்தால் தமிழகம் முன்னேறியிருக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.. இடையில் பேரறிஞர் எச்.ராசா என்ற புகழ்மாலை வேறு.. சீமானனை நம்பி நிற்கிறார்கள் நிலை தான் பரிதாபம்.. சீமான் தெளிவாக யாரால் உருவாக்கபட்டாரோ அவர்களுக்காக வெளிப்படையாக உழைப்பதை சொல்லியிருப்பது நல்லது..
..
சீமான் தமிழ் சமூகத்தின் விஷம்.. நல்லொழுக்க அரசியலில் இவன் ஒரு கழிசடை.. அரசியலை தனி நபர் விமர்சனத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொய்யாய் பேசி திரிவதும் மறுப்போ அல்லது எதிர்வினையோ வந்தால் அப்படிதான் நான் ஒரு பைத்தியக்காரன்  என சொல்லி சிரிப்பதும் தமிழ் நாடு அரசியலில் களங்கமாய் நிற்கிறான்.. 
பெரியாரை மட்டுமல்ல  இவன் எல்லோரையும் வசைபாடுவதும், வாய்க்கு வந்ததை சொல்லி மடைமாற்றுவதும் அரசியல் வேசித்தனம்.. 
..
தமிழ் சமூகம் இவனை இப்போதாவது இனங்கண்டதே.. பொதுவாழ்வில் ஒழுக்கமில்லாத பாசிசத்தின் வளர்ப்பில் வந்த நாய் எஜமானின் சொல் கேட்டு அதிகம் குலைக்கிறது .. வெறிப்பிடித்த நாயை பட்டியில் அடைக்கவேண்டும்.. தமிழ் தேசியம் பேசுகிறவர்களை காலம் சரியான முறையில்  போதிக்கிறது ..முன்பு 
மா.பொ.சி ஆதித்தனார் என சிலர் வந்தார்கள் ஆனால் அவர்களுக்கு திராவிடம் கருணைக் காட்டியது ஆனால் இந்த கயவனை காலம் கொடூரமாய் தாக்கும்..
..
கனிமொழியும் அருள்மொழியும் கர்ப்பப்பையை அறுத்தெறிந்து விட்டார்களா என கேட்கிறான் மூடன்.. 1930ல் பெரியார் பேசியபோது கருத்தடை என்ற ஒன்றில்லை அப்போது குழந்தைகள் பெறுபவது மட்டுமே பெண்கள் வேலை என்றிருந்தது.. மாமியாரும்,மருமகளும் கர்ப்பமாக இருப்பதெல்லாம் சாதாரணமாக நடந்தது.  அப்போதுதான் பெரியார் பெண்களை குழந்தை பெறும் மிஷினாக பார்க்கிறார்கள் கர்ப்பப்பையை அகற்றக் கொள்ள பெண்கள் முன்வர வேண்டும் என்றார்  இப்போது பெண்கள் தெளிவாக இருக்கிறார்கள் தேவையென்றால் பெற்றுக்கொள்ளவும்  வேண்டாமென்றால் தள்ளிப் போடவும் தடைசெய்துக் கொள்ளவும் அவர்களுக்கு தெரியும்.. சீமான்  (வாயை)வாடகைக்கு விடாமல் இருக்கவும்
..
இன்று 
இந்த மண்ணில் எல்லோருக்கும் எல்லாம்  எல்லோரும் சமம் ஏற்றதாழ்வற்ற சமூகம் தழைக்க சமூகநீதி நிலைபெற திராவிட சித்தாந்தமே சரியென புரிதல் வரும்..  
..
கந்தனா சிக்கந்தரா என பாஜக பெரும் பாடுபடுகிறது.. ஆனால் பாருங்க மக்கள் தெளிவாக கந்தனோ கர்த்தரோ கந்தரோ எல்லாம் ஒன்றுதான
 இங்கே உங்கள் மதவெறி வேலைக்காதெனபுரிய வைக்கிறார்கள்.. ஒருபக்கம் சீமான் உவேசாவை விட யார் தமிழன் என்கிறான்  ஆனால் உ.வே.சா வின் மறுபக்கம் அறியாதவன்.. என்னதான் கத்தினாலும் இங்கே அண்ணன் தம்பியாய் அழகுற வாழும் மக்கள் தெளிவுமிக்கவர்கள்.. பக்தி பழமாக நிற்பவை கூட பெரியாரை நேசிக்கிறார்  அது தெரியாமல்தான் பாசிச சக்திகள் பதறுகிறார்கள்.. பல்வேறு வழிகளில் பல்வேறு நபர்களை முன்னிறுத்தி பார்க்கிறார்கள் கடைசயில்
அரிதாரம் கலைந்து அசிங்கபட்டுபோகிறார்கள்.. திரும்பவும் சொல்கிறோம் இது பெரியார் மண்.. இங்கே தமிழிசையின் கூச்சல்களோ,  அண்ணாமலையின் உளறல்களோ சீமானின் உருட்டுகளோ சினிமாக்காரனின் நடிப்போ செல்லாது போகும்.. கேளிக்கைகளுக்கும் பொதுபோக்கிற்கும் பயன்படுமே தவிர மக்களின் தெளிவும் முன் அடிப்பட்டு போகும்.. 
ஆய்ந்தறியும் தெளிவும் புரிதலும் உள்ள தமிழ்நாடு வீணர்களை இடது கையால் புறந்தள்ளும் இது பெரியார் செப்பனிட்ட மண்.. 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment