Saturday, September 21, 2019
கீழடி
#கீழடி..
..
கீழடி சொல்லும் சேதி இதுதான்
தமிழன் எந்த மதங்களையும் கடவுள்களையும் தூக்கி சுமக்கவில்லை.. 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக வாழ்வியலுக்கு சொந்தகாரன் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியதும் தெரிகிறது .. தமிழன் வரலாறு மிக தொன்மைவாய்ந்தது அவன் பேசிய மொழியே முதல்மொழியாக இருக்ககூடும் மொழி வழக்கம் வருவதற்கு முன்பு சைகை ஒலியெழுப்பல் சில நூற்றாண்டு பின்னோட்டு இருந்திக்கவேண்டும்
கீழடியில் வெளிவரும் உண்மை இந்திய கலாச்சாரம் இந்து கலாச்சாரமென்பதென்லாம் பொய் என்பதை உணர்த்தியிருக்கிறது .. தமிழனின் வரலாறு என்பது
"புராணங்களை" போல கட்டிசமைத்ததல்ல என்பது தெளிவாகிறது ..
..
கீழடி மற்றொரு விடயத்தை நமக்கு சொல்கிறது இந்திய துணைகண்டத்தில் முதல் நாகரீக வாழ்வை வாழ்ந்தவன் என்பதும் ஆரிய வரவிற்கு முன்பே
செமையா வாழ்ந்தவன் என்பது சாதி பேதம் வர்ணகோட்பாடு மதம் என எதுவுமில்லாத இயற்கையை போற்றி வாழ்ந்ததும் தெளிவாகிறது ..
கீழடி சொல்லும் மற்றொரு சேதி திராவிட சித்தாந்தம் சொல்லும் சாதி மதம் எல்லாம் கட்டுகதைகள் மனிதனை பிரித்து தங்களை முன்னிலை படுத்த ஆரியர்கள் செய்த சதி என்பதும் புலனாகும் ..எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள் சதுரங்கக் காய்கள், பகடைக் காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.. மண் பானை, கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி) , தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன..
மதம் சார்ந்து கடவுள் சிலைகளோ குறியீடுகளோ கிடைக்கவில்லை .. இதிலிருந்தே தமிழ்குடியின் தொன்மை விளங்கும் மதம் சார்ந்தில்லை என்பதும் புரியும்..
..
இந்த மாதம் 30ந்தேதி
ஐந்தாம் அகழாய்வு நிறைவு பெறுகிறது.. இன்னும் நிறைய தகவல்கள் வெளிவரலாம் வேகவேகமாக ஆய்வுபணிகளை முடிக்க நினைக்கிறது அரசு தமிழனின் பெருமையை யாராலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.. தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்
ஒருவிடயத்தை சொல்கிறார் நாம் 10% விழுக்காடு தான் ஆய்வு செய்திருக்கிறேன் 110 ஏக்கரில் 10 ஏக்கர்தான் அதுவும் 10 அடி தான் ஆய்வு செய்திருக்கும் இன்னும் ஆழபடுத்தினால் இன்னும் நிறைய கிடைக்கலாம் என்கிறார் ஆம் இன்னும் தமிழர்களின் நாகரீக வரலாற்றைப்பற்றிய தரவுகள் கிடைக்கும் அரசு தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டும் ..
..
#கீழடி_எமது_தாய்மடி ..
..
ஆலஞ்சியார்
Friday, September 20, 2019
திமுக..
திமுக போராட்ட அறிவிப்பிற்கு பின் அமித்ஷாவே விளக்கமளிக்க நேர்ந்ததை மறைக்க திமுகவின் மீதும் தலைவர் தளபதி மீதும் பயத்தின் காரணமாக
பின்மாறியதாக பிரச்சாரம் செய்கின்றன ..
நாட்டின் உள்துறை அமைச்சர் பயத்தின் காரணமாக விளக்கம் தந்ததாக ஏன் விவாதம் நடத்தவில்லை
ஊடகங்களில் வலதுசாரிகள் என்ற போர்வையில்
பாஜக ஆதரவு "நடுநிலைகள்" திமுக பயந்து நடுங்கியதாக உளறுகின்றன வேறெந்த கட்சியை சொல்லியிருந்தாலாவது நம்புவார்கள் ..
போராட்டம் என்றாலே மஞ்சள்பையில் சட்டை வேட்டியை எடுத்துக்கொண்டு தயாராக செல்கிற கூட்டத்தை பார்த்து பயந்துவிட்டதாக சொல்வது நகைப்பிற்குரியது ..
..
மிசாவிற்கு அஞ்சாதவர் ..அடுக்குமுறை உச்சத்தில் இருந்தபோதே கொஞ்சமும் நடுக்கமின்றி இருந்தவர் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய போது வருமானவரித்துறை ரெய்டு வந்தபோது நடைபயிற்சி சென்றிருந்த தலைவர் வீடுவந்ததும் உதயநிதியை அழைத்துக்கொண்டு வரித்துறை அலுவலகம் சென்று HAMMER வாகனத்தை வெளியில் நிறுத்தியிருக்கிறேன் .. நான் இல்லாதபோது வீட்டிற்கு அதிகாரிகள் வந்ததாக சொன்னார்கள் உங்கள் விசாரணை முடிந்து வாகனத்தை கொண்டுவந்தால் போதும்
என்று நெஞ்சுயர்த்தி சொன்னவர் ..
பயமென்பது எங்கள் அகராதிலேயே இல்லையென அறியாதவர்கள் இல்லை ஆனாலும் இவர்கள் நோக்கம் அமித்ஷாவின் முகம் கருத்துப்போனதை அறியாமல் செய்யவேண்டுமென்பதே..
..
திமுகவின் மீது வீண்பழியை சுமத்தவதென்பது தொடர்ந்து பாசிசவாதிகளால் அவர்கள் அடிமைகளால் செய்துவருவதுதான் எம்ஜிஆர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து குற்றசாட்டுகளும் பழிகளையும் கண்டுவருகிறோம் ஒவ்வொன்று மீண்டு பழி துடைத்து "தங்கமாய்" மிளிர்கிறோம்,.. இதோ இப்போது ராமதாஸ் திமுக மீது கொலைப்பழி சுமத்தி அரசியல் செய்கிறார் குருவின் குடும்பத்தாரிடம் கேட்டால் இவரின் நிஜம் தெரியும் .. தன் மகனுக்காக அரசியல் எந்தநிலைக்கும் தாழ்ந்து சுயமரியாதை இழந்து நிற்கும் அவலநிலையிலும் தற்போதைய "எஜமானுக்காக " வாலாட்டுகிறார்..
..
நிறைய பார்த்தாயிற்று வீண்பழிகள் ஊழல்குற்றசாட்டுகள் மிரட்டல்கள் எல்லாவற்றையும் நீதிமன்றம் மூலம் வென்று இதோடு முடிந்தது திமுக சகாப்தம் என்றவர்களுக்கு எழுந்துநின்று துணிவிருக்கிறதா என கேட்கும் ஆற்றல் எமது இயக்கத்திற்கும் தலைவர்களுக்கு உண்டு .. பகுத்தறிவு வழியில் அறிவின் துணைக்கொண்டு ஆற்றல் மிகு தலைமையில் இந்த இயக்கம் செயல்படும் .. சலசலப்பிற்கெல்லாம் அஞ்சுவதில்லை "யாம்"
தமிழர்களின் தேவை ஆம்
தமிழ் மண்ணின் தமிழர்களின் கவசம் திமுக
..
ஆலஞ்சியார்
Wednesday, September 11, 2019
எடப்பாடி
திமுக தடுப்பணைகளை கட்டியதுண்டா என சேக்கிழார் புகழ் எடப்பாடி கேள்வி கேட்கிறார் .. ஊர்பெயரை கூட உச்சரிக்க தெரியாமல் ஊர்ச்சுற்றி வந்தவர் .. அறியாமை தவறில்லை
அறிந்துக்கொள்ள முயற்சி செய்யாமை தான் தவறு .. ஒரு பேட்டியில் அண்ணாவிற்கு பிறகு நான் தான் அதிக புத்தங்களை படித்தவன் என்று சொன்னவர் இந்த எடப்பாடி..
உண்மையில் கேவலமாக இருக்கிறது முட்டாள்கள் கூட்டத்திடம் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறோம்.. ஒட்டுமொத்த கூட்டமும் மடையர்களாக இருந்தால் என்ன செய்வது வெள்ளை அறிக்கை கேட்டால் மஞ்சள் அறிக்கை கூட தருவோம் என அறிவிலி ஒன்று உளறுகிறது .. எதற்காக வெளிநாடு பயணமென்று அவருக்காவது தெரியுமா என்றால் இல்லை ..
..
தலித் பிணம் எடுத்துச்செல்ல தடுக்கபட்டு வேலூர் பாலத்தில் கீழிறக்கபட்ட சம்பவத்தை தாமாக முன் வந்து உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ததது .. அந்த வழக்கில் தமிழக அரசு தலித்களுக்கு தனி சுடுகாடு ஏற்படுத்தபடுமென அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது .. இந்த கேடுகெட்டவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும் .. எதை செய்கிறோம் எதை சொல்கிறோமென்ற அறிவுகூட இல்லை கடும்கண்டனத்தை பதிவு செய்வோம் ..
..
அரசியலில் கொஞ்சம் கூட தெளிவோ அறிவோ இல்லாதவர்கள் முன்பிருந்த ஆட்சியாளர்கள் செய்த நலத்திட்டங்கள் மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தபட்ட விபரங்களை அரசு அதிகாரியிடம் கேட்டு அறிக்கையோ பேட்டியோ தரலாம் கலைஞர் ஆட்சியில் 42 தடுப்பணைகள் கட்டபட்டிருக்கிறது அதுமட்டுமல்ல நீர்வளம் பற்றிய அறிவும் தெளிவும் நீர்மேலாண்மை பற்றிய அனுபவமும் தமிழக ஆட்சியாளர்களிடையே கலைஞரைப்போல தெளிவும் ஞானமும் வேறு எவருக்குமிருந்ததில்லை என்பதுதான் உண்மை ..
எதையாவது சொல்லி வைப்போம் ஊடகங்கள் கேள்வி கேட்கவா போகிறதென்று நினைக்கிறார் எடப்பாடி
..
உண்மையில் தமிழகம் கண்ட கேடுகெட்ட ஆட்சி
துளி கூட அரசியல் தெளிவற்ற, அறமற்றவர்களிடம் சிக்கி சீரழிகிறது
கால சக்கரம் சுழலும் போது எழவே முடியாதவாறு புதைந்து போவார்கள் ..
தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள் இந்த கோமாளிகள் ..
..
சிரிப்பாய் சிரிக்கிறது ..
..
ஆலஞ்சியார்
Tuesday, September 10, 2019
திராவிடமே தேவை
பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக கேரளாவின் கண்ணன் கோபிநாத்,தமிழ் நாட்டின் சசிகாந்த் செந்தில்,அருணாச்சல பிரதேச கோஷ் மிட்டல்,நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்ங் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும். ஐ ஏ எஸ் அதிகாரிகள் ..
இந்த பட்டியல் நீள கூடும் அரசுதுறையில் அதிகாரமிக்க பதவிகளில் மூன்று விழுக்காடு அத்துமீறி மூக்கை நுழைப்பதும் அதிகார மையம் நாக்பூரை சுற்றி இயங்குவதால் மீறபடுகிற மரபுகள் சட்டங்கள் எல்லாம் மநுவின் பார்வையில் சரியாகும் என்பதால் நேர்மையான அதிகாரிகள் விலக தொடங்கியிருக்கிறார்கள் ..
..
நீதிமன்ற செயல்பாடுகளில் பாசிசம் அத்துமீறி நீதியை வளைத்தொடிக்கிறது .. மிரட்டுகிறது தொடர் இடைஞ்சலை தந்து தானாகவே பதவி விலக வைப்பதன் மூலம் தங்கள் இனத்தவர் அல்லது தங்களுக்கு வேண்டபட்டவர் ,தலையாட்டுகிற பொம்மைகளை கொண்டு நிரப்பப்படலாம் ..
உயர்நீதிமன்ற நீதிபதியே தாமாக பதவி விலகும் அவலம் .. எத்தகைய மனஅழுத்தம் வெறுப்பு பயம் இருந்திருந்தால் விலகி இருப்பார் என்பது புரிகிறது .. முற்போக்காளர்கள் ,துறைசார்ந்த வல்லுநர்கள்,மண்ணை நேசிக்கிற மனிதநேயமிக்கவர்கள், வேட்டையாட படுவது இந்த ஆட்சியின் அவலத்தை படம்பிடித்துகாட்டுகிறது ..
..
36 வது நாளாக கஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை தந்தை மகனை பார்க்க மகளை பெற்றோரை பார்க்க உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டியிருக்கிறது .. ஜனநாயகம் கொடூரம் .. மிருகபலத்தோடு ஆட்சியாளர்கள் செயல்படும்போது ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கபடுவது இயல்பு ..மிக சிறந்த ஜனநாயகவாதிகள் மட்டுமே பொறுப்புணர்ந்து செயல்படுவர் அதை பாசிசத்திடம் எதிர்ப்பார்க்கமுடியாது .. பொருளாதார மந்தநிலைக்கு ப.சி யை காரணம் காட்டி ஒளியலாமென்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள் .. ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு OLA uber நிறுவனம் வந்ததுதான் காரணம் என்ற அறிவார்ந்த நிதியமைச்சரை பெற்றது நமது பாக்கியம் ..
..
இன்னும் நிறைய சோதனைகள் வரும்.. அதற்குள் நமக்கு பழகிவிடும் சொற்ப பணத்திற்கு வாக்கை விற்று யாராண்டால் என்ன என்று நாம் கடந்து போவோம் ..
நாளைய தலைமுறைக்கு மண்ணை கூட நஞ்சாக்கிவிட்டு நமக்கென்ன என்று இருப்போம்.. வாக்குபதிவு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் பாசிசபிடியில் ..
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் ..
மக்களே இந்த ஜனநாயக கேடுகளை கண்டு சிவந்தெழ வேண்டும் ஜனநாயகத்தின் வேர்களில் இன்னமும் ஈரமிருக்கிறது .. இந்த நாட்டிற்கு பெரியாரிய மொழியே தேவை ..
அதுமட்டுமே சரியான நீதியை சமநீதியை சமூகநீதியை தரும்.. ஒருங்கிணைந்த இந்தியாவின் இன்றைய தேவை பெரியார் ..
திராவிட சித்தாந்தம் அதுவே ஒருமுகபடுத்தும் உயர்விற்கு வழிவகுக்கும் ஏற்றதாழ்வுகளை களையும் சுயமரியாதையை கற்பிக்கும் ..
..
ஆலஞ்சியார்
Friday, September 6, 2019
மதம் தவிர்ப்போம்
இந்த படம் நிறைய கதைக்கிறது ..
நம்பிக்கை பயம் தெய்வபக்தி சாஸ்திரம் அதெல்லாம் ஒரு இழவுமில்லை .. கொண்டாடி தீர்க்க ஒரு பண்டிகை அவ்வளவுதான் ..
இந்த பண்டிகை என்றில்லை எல்லா மத விழாக்களும் பண்டிகைகளும் மூடத்தனத்தில் என்பதை மக்கள் அறிவார்கள் ஆனாலும் கொண்டாட ஒரு விழா அவ்வளவுதான் ஆனால் இதை வைத்து மதவெறியர்களும் மதத்தை வைத்து பிழைப்போரும் அரசியல்வாதிகளும்
மதத்தின் பெயரில் கலகமூட்டுவோரும் தங்கள் நிலைநிறுப்பை தக்கவைக்க மக்களிடையே மதத்தின் மீதான பார்வையை கூர் தீட்டுகிறார்கள் ..
..
தனிமனித வாழ்வில் பண்டிகைகள் மகிழ்ச்சி தருவதை விடுத்து பொருளாதார ரீதியாகவும்
மதத்தின் பெயரிலும் அழுத்தத்தை தந்து வழிகேட்டில் நிறுத்துகிறது.. எந்த மத பண்டிகையும் மனிதனுக்கு பயனுள்ளதாக அமைந்ததே இல்லை அவனை மூடத்தின் வாயில் நிறுத்தி வெறியேற்றுகிறதே தவிர வேறெதுவும் சாதிக்கவில்லை வேறு பயனுமில்லை .. ஆனால் மண்சார்ந்த விழாக்கள் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் விழாக்கள் இனத்தின் மொழியின் பண்பாட்டின் மேன்மையை உணர்த்துவதோடு இன மொழி மத வேறுபாடுகளை கலைந்து மனிதனுக்கு நேசிக்க கற்று தருகிறது .. ஆனால் எல்லா மத விழாக்கள் பண்டிகைகள் மனிதனை சிந்திக்க விடாமல் ஒருவித பயம்/பக்தியில் நிறுத்தி கடைசியில் அவனே சடங்குகளை மீறுகிற நிலைக்கு அல்லது அவனுக்கு சௌகரியத்திற்கு ஏற்றாற்ப்போல் மாற்றிக்கொள்ள/ மாறிக்கொள்ள வழிவகுக்கிறது இதிலிருந்தே நம்பிக்கை என்பது பொய் என சொல்லலாம் அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்பதை உணரலாம்
..
இனம் மொழி மண் சார்ந்த விழாக்கள் (பொங்கல் போன்ற விழாக்கள்) சகோதரத்துவத்தை நன்றியோடு வாழ வேண்டுமென்பதை உழைப்பவனை நேசிக்க வேண்டுமென்பதை விடுமுறையை பயனுள்ளதாக்க கலாச்சார மேடைகள் கூத்துகள் என பழங்கதைகளை பேசி மண்ணின் பெருமையை பறைச்சாற்றி நல்வாழ்வு வாழ போதிக்கிறது .. வெறிச்செயல் இல்லை பகையோடு திரியவில்லை அடுத்தவரை அடைக்கியாள சொல்லவில்லை .. பிரித்து பேசி வர்ணம் பூசவில்லை சாதிமதமில்லை .. இயற்கையோடு வாழ்ந்த வாழ்வை.. வாழும்நெறியை உணர்த்துகிறது ..
ஆனால் மதசாயம் பூசபடும் எந்த நிகழ்வும் விழாவும் பண்டிகைகளும், உண்மையில் வேற்றுமையை பகையை வளர்க்கிறது ..
பணேபாட்டை போதிக்கவில்லை..
..
மதம் தவிர்த்து மனிதம் சமைப்போம்
..
ஆலஞ்சியார்
Wednesday, September 4, 2019
ஆசிரியர்
ஆசிரியர் தினம்..
..
நிறைய பேரை எழுத வேண்டி வரும்
ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே மூவாயிரம் வார்த்தைகளை தன் தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறது..
..
தாயே சிறந்த ஆசான்..
..
என் தாயார்..
எளிமையான வாழ்வு வாழ்ந்த பெருமகள்..
தமிழ் மீது தனிபற்று கொண்ட பெருமாட்டி..
சீறாபுராணமும் முஹையத்தீன் மாலையும்,
நூறுமசலாவும்,.. ராகத்தோடு..
பாடி ஓதும்.. #ஓதுவார்..
தமிழ் மீது எனக்கு பற்றுவர காரணமானவர்களின் முதலாமர்..
..
தமிழாசான்..
ம.க maka
ம.கலியபெருமாள்.. திராவிடம் பேசிய தமிழாசான் எனக்கு முரசொலியை அறிமுகப்படுத்திய புலவர்..
பெருமைக்குரிய தமிழ்பற்றாளர்..
கொஞ்சம் பெரியாரையும் பேசுவார் நிறைய கலைஞரை...
..
அ.அப்துல்காசீம்..
நான் படித்த பள்ளியின் தலைமையாசிரியர்..
சீறாபுராணம் இவர் நடத்தினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்..
கம்பனை இளங்கோவை இவர் பாடி கேட்டால்
அமுதம் தேவையில்லை..
அத்தனை அழகாய் தொடுத்து எடுத்தியம்பியவரை நான் கண்டதில்லை..
..
கலைஞர்..
தமிழ் உரை வீச்சு..
தமிழால் எளிதில் எதிரை வீழ்த்திவிட முடியும்
என்ற சூசமத்தை சொன்னவர்..
தொல்காப்பியத்தை இத்தனை எளிதாய்
யாரும் தரவில்லை.. தமிழால்எல்லாம் முடியும் என்பதை இவரின் எழுத்துச்சொல்லும்..
புதிய முயற்சியை புதிய உத்வேகத்தை இவரின் எழுத்தும் பேச்சும் சொல்லும்..
..
மற்ற மூவரும் உடனிருந்து என்னை செப்பனிட்டவர்கள்..
ஆனால் கலைஞர்
என் கட்டவிரலை காணிக்கை கேட்காத துரோணர்..
..
ச.செல்லபெருமாள் அய்யா
உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக காப்பாளர் .. கருத்து சுரங்கம் தகவல் களஞ்சியம்
பெரியாரிய பாதையில் பயணிக்கும் என்னை இழுத்துவந்து களம் அமைத்து தந்தவர் .. உடனிருந்து இயக்கும் பேராற்றல் ..
..
சிலம்பாட்ட குரு ஹபீபுல்லாஷா.. மிக நேரித்தியாக சிலம்பமாட சொல்லிதந்தவர் ..
என் ஆட்டத்தில் குறைகளை கண்டு களைந்து செம்மைபடுத்திய "வாழக்காய்" வியாபாரி.. புனிதமென்று எதுவுமில்லை எல்லாம் மாயை என்ற வழிப்போக்கன் ..
இப்படி..நிறைய பேர்..
வழிநநெடுகிலும் ஏதோ ஒன்றை கற்று கொடுத்தே இருக்கிறார்கள்..
அறிவில் சிறியது பெரியது என்று எதுவுமில்லை..
எல்லாம் அறிவு..
ஒவ்வொரு செயலும் ..
ஒவ்வோரு மனிதனும் ..ஏதோ ஒன்றை கற்றுக்கொடுத்து கொண்டேதான் இருக்கிறார்கள்..
#வாழ்வின்_வழிநெடுக
..
#ஆசான்கள்..
..
ஆலஞ்சியார்
Sunday, September 1, 2019
கவர்னர் தமிழிசை
பாரம்பரிய காங்கிரஸ் குடும்ப பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று மாநிலத் தலைவர் வரை உயர்ந்து ..விடாது துரத்திய கேலிகளையும் கிண்டல்களையும் தன் பலமாக்கி உரத்து நின்றவர்.. தமிழின எதிரிகளின் பக்கம் நிற்கிறாரே என்ற வருத்தம் தவிர அவரை கோபித்துகிகொள்ள ஒன்றுமில்லை .. பொதுவாழ்வில் பெண்கள் பங்கேற்பது பயணிப்பதென்பது இப்போதும் ஒருவித இடைஞ்சல் தரும் பொதுசமூகத்தில் விடாபிடியாக இயங்கியவர் .. அபத்தமானாலும் தொடர்ந்து தன் நிலைநிறுப்பை உறுதிசெய்துக்கொண்டே இருந்தவர் ..அவரின் உடல்மொழியை உயரத்தை கூட சமூகம் கேலிசெய்த போதும் அதை ஒருபொருட்டாகவே கருதாமல் தொடர்ந்து களப்பணியாற்றியவர் ..
..
கொள்கைப்பிழை அரசியல் அறியாமை வீம்புக்கென்றே ஏதையாவது சொல்லிவைப்பது என தான் சார்ந்த கூட்டத்தின் உண்மை முகத்தை தோலுரிக்க பயன்பட்டார் .. அங்கே அறிவுடையோருக்கு வேலையில்லை அபத்தங்களுக்கும் அர்த்தமற்றவர்களுக்கும் மத விசுவாசிகளுக்கும்/வெறியர்களுக்கும், பாசிசத்தை தூக்கிபிடித்து நிற்போருக்கும் சனாதனவாதிகளுக்கும் தான் பாஜக என்றறிந்தும் தொடர்ந்து பயணித்து தலைவர் பதவிவரை வந்து இப்போது தெலுங்கானா கவர்னராகியிருக்கிறார் .. பாஜகவின் பார்பனர் பிரிவு (பாஜக என்றாலே பார்பனர்கள் தான்)
தொடர்ந்து தொல்லை தந்தபோதும் எஸ்.வி சேகர் போன்ற கூமுட்டைகள் வெளிப்படையாக எதிர்த்துநின்ற போதும் விசு போன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே விமர்சித்தபோதும் அஞ்சாமல் அவர்களை கதறவிட்ட திராவிடச்சி..
உண்மையில் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவரை பெரிதாக எதிரியாக கருதியதே இல்லை.. மாறாக மௌனமான புன்னகையோடு கடந்துச்சென்றார்கள் .. கடுமையாக விமர்சிப்பதாக நினைத்து அபத்தம் காட்டிநின்றபோதும் பெரிதாக யாரும் எதிர்வினையாற்றியதில்லை ..
..
பெண்கள் பொதுவாழ்விற்கு வருவதே மிக அரிதான செயலாக இன்றைக்கும் காணபடுகிறது அப்படி வரும் பெண்களை கருத்தியல் ரீதியாக எதிர்க்க நேரிடிணும் களத்தில் கடுமையாக எதிர்க்கிறபோதும் கொண்டாட வேண்டும் அதனால் தான் ஆசிரியர் "அன்புமகள்" மாநில ஆளுநராக பதியேற்பது மகிழ்ச்சியளிக்கிறதென்று சொல்கிறார்.. தி.மு.க தலைவர் தளபதியும் தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தியிருக்கிறார்.. கொள்கை வேறெனினும் பாசிசத்தில் நிழலில் நின்று கதைக்கிறாரெனினும், இந்த மண்ணின் மக்களின் வெறுப்பை கொண்டவர்களின் அடியொற்றியே பயணிக்கிறாரெனினும் .. அரசியலின் தெளிவின்மையும் எதையாவது சொல்லி தொலைக்க வேண்டியிருக்கிறதென அறிந்தும் அவரை யாரும் பகையோடு பார்த்ததில்லை..
தான் ஏற்றுக்கொண்ட கொள்கை கட்சிக்கு விசுவாசமாகவே செயல்ப்பட்டார்.. மிகவும் ஒடுக்கபட்ட இனத்திலிருந்து வந்து
பார்பனர்களின் கடுமையான எதிர்பபையும் மீறி தலைவராக வலம்வந்தவர் .. இன்று தெலுங்கானா ஆளுநராகிறார் ..
வாழ்த்துவோம் ..இந்த தமிழச்சியை..
முதல் தமிழ்ப் பெண் ஆளுநர் தமிழிசை
வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)