Sunday, July 28, 2024

" தம்பி , ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன்  நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். 

எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்டமாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது. இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம்.
ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம்.

எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் - அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை!

எட்டிப் போடா சூத்திரப் பயலே! - என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்!

கிட்டே வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்!

படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்!

மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! - என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்

     -அறிஞர் அண்ணா ,( 9 - 10 - 1955 , திராவிடநாடு )


Saturday, July 27, 2024

அநாகரீகம் அதற்கு மறு பெயர் ராமதாஸ்.. 
அரசியலை பிடித்த சீழ்.. அப்பட்டமான சாதிவெறி தன் சமூக மக்களே ஏற்கவில்லையென்ற கோவம்,  எதை பேசுகிறோம் என்று தெரியாமல் தன் இயலாமையை காட்டிக் கொண்டார் .. 
அரசியல் மேடைகளில் விமர்சனம் செய்வது வேறு அதில் கூட குறைந்தபட்ச கண்ணியம் வேண்டும் .. 
..
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை ஒருமையில் பேசுவதும் சாதீய வன்மத்தோடு கதைப்பது அவரின் அரசியல் வாழ்வின் முடிவை சொல்கிறது.. மாறி மாறி சவாரி செய்த குதிரையின் கால் நரம்பை அறுத்ததில் பெரும் பங்கு ஸ்டாலினுக்கு உண்டு..  நின்ற ஏழு இடங்களிலும் தனி கவனம் செலுத்தி தோற்கடித்து பாமகவின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்.. அதன் பிறகு துரைமுருகன் போன்ற "சாதி"தூதுவர்களை கொண்டு எவ்வளவு முயற்சித்தும் சேரவிடாமல் தடுத்ததில் "ஸ்டாலின்"எனும் அரசியல் "தந்திரி"யின் செயல் இன்றைய கதறிலில் தெரிகிறது
..
தொடர்ந்து அன்புமணியின் உடல்மொழியும் பேச்சும் ஏதோ இவர்கள் தான் எல்லாம் தெரிந்தவர்கள் என்ற போக்கை இடதுகையால் ஒதுக்கும் ஸ்டாலின் அனுபவம் அவர்களுக்கு இயல்பாகவே கோபத்தை வரவழைக்கிறது.. மகனை,மருமகளை தோற்கடித்த செயல் தன் சமுதாய மக்கள் இத்தனை காலமாகியும் நம்ப மறுப்பதும் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் தலைக்கேறியதின் விளைவு ராமதாஸின் பேச்சில் தெரிந்தது..
..
திராவிட அரசியலை வீழ்த்துவதாக சொன்னவர்கள் வீழ்ந்த வரலாற்று தொடர்கிறது.. மதம்,சாதி,சமயம்,இவையெல்லாம் பொது அரசியல் கைக் கொடுக்காது காரணம் எல்லாவறறையும் கேட்கும் அறிவும்,அதில் ஆழ்ந்து யோசிக்கும் திறனும் சரியானதை தேர்வு செய்யும் சாமானிய அறிவும் பெற்றவர்கள் தமிழர்கள்..  ராமதாஸ் போன்ற அற்பர்களை இனங்கண்டு புறக்கணிப்பார்கள்.. சில இடங்களில் பாசம் மேலிடலாம் ஆனால் ஓட்டுமொத்தமாக தோல்வியைதான் பரிசளிப்பார்கள் 
..
தன் வளர்ச்சிக்காக சமுதாயத்தை அடகுவைத்து பணம் பதவி என அலைந்தவர் இன்று புறக்கணிக்கப்படும் போது எங்கே தன் மகனின் அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடுமோ என்ற பதற்றமும் வயது மூப்பும் ராமதாஸின் சொல்லில் தெரிகிறது ..  திருமாவுக்கு இருந்த அரசியல் தெளிவு ராமதாஸிற்கும் அன்புமணிக்கும் இல்லை.. அது பாமகவின் அடித்தளத்தை அசைக்க தொடங்கிவிட்டது ..
..
தனியாக நிற்போமென வசனம் பேசி கடைசியில் திராவிடக்கட்சிகளிடத்தில் மண்டியிட்டதும் திமுக இனி பாமகவை அண்டவிடுவதில் என்ற உறுதிபாடும் கடைசியில் பாஜகவுடனான சேர்க்கை கரை சேரமுடியாதென்ற உண்மையும் உரைக்கிற போது உளறல் அதிகமாகிறது.. சாதி வன்மங்கொண்டு பேசியதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது ராமதாஸின் அரசியல் வாழ்வு இனி..? 
..
பெற்ற தாயை கூட அசிங்கபடுத்தியவன் அரசியல் இருப்பதே அசிங்கம் என மக்கள் முடிவெடுத்துவிட்டதுதான் தொடர் தோல்விகள் .. ராமதாசும் அன்புமணியும் அரசியலில் இருந்து துடைத்தெறியப்பட வேண்டியவர்கள் .. காலம் மௌனமாய் பதில் சொல்லும்,செய்யும்.. 
 ..
ஆலஞ்சியார்

Sunday, July 21, 2024


தலித் அரசியல்..
நவீன தலித் போராளிகளுக்கு? பெரியாரை கொண்டாடுவதில் மிகப்பெரிய சங்கடம் தெரிகிறது.. அயோத்திதாசர் அம்பேத்கர் போன்ற "தாழ்த்தப்பட்டோரின்" குரல் எடுபடாமல்  போகும் என்ற அச்சத்தில் பெரியாரை விமர்சிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. உண்மையில் பெரியாரால் தான் சமூக இடைவெளி ஓரளவு குறைந்ததும் ஒடுக்கப்பட்ட சமூக மேம்பாடு கணிசமானளவு மெச்சபட்டதும் திராவிட இயக்கங்கள் அதிகாரத்தை அடைந்த பிறகுதான் என்பதை உணரவில்லை..
..
அயோத்திதாசரால் முடியாததை, எங்கள் பிள்ளைகளை நான்காவது வரையாவது படிக்க அனுமதியுங்கள் என்று கேட்டும் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் இன்றைய தலைமுறை அறியாதது..  வடமாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கல்வியறிவு கிடைத்த நேரத்தில் இங்கே தமிழ்நாட்டில் திராவிடம் செயல்படுத்த தொடங்கிவிட்டது.. இவர்களுக்கு பெரியார் மீது என்ன கோபம்..? இங்கே சாதிய தலைவர்கள் தலையெடுக்க முடியாமல் அப்படி அமைப்பென்று தொடங்கினால் கூட குறுகிய வட்டத்தை தாண்டி செயல்பட முடியாமல் பெரியாரின் "கைத்தடி" தலையில் தட்டி உட்காரவைக்கிறது.. 
..
சென்னையில் பழைய ரௌடி வெட்டிக் கொல்லப்படுகிறார் ..
அது அரசியல் கொலையல்ல என்பதை காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது.. ரௌடிகள் அரசியல் கட்சியில் அடைக்கலமாவதும் தன் சாதியை முன்னிறுத்தி தன்னை பாதுகாத்துக் கொள்ள தடுப்பாட்டம் ஆடுவதும், தன்னை தன் சமூகத்தின் தலைவனாக காட்டி இளைஞர்களை வழிகெடுப்பதும் குறிப்பிட்ட காலளவுவரை கைகொடுக்கும் தெளிவு வருகிற போது குப்பையில் வீசிவிடும்..
பழைய பகை கருவறுக்க தொடங்கும் போது தடுத்து நிறுத்த அரசு தவறிவிட்டதாக கூப்பாடு போடுவது எந்தவகையான நியாயம்..  தலித் அரசியலை சிலர் அடிதடி கட்டப்பஞ்சாயத்து ரௌடியிசம் என குறுகிய வட்டத்திற்குள் அடைக்க நினைக்கிறார்கள்.. 
..
சென்னையில் எங்களை மீறி யாரும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது அரசியல் புரிதல் இல்லாமை என கடந்து போக முடியாது பாசிசத்தின் பெரும் சதியின் ஒருபகுதியாக கணக்கில் கொள்ள வேண்டும் .. ரௌடிகளுக்கு புரிகிற பாஷையில் காவல்துறை பேச தொடங்கியதும் பதறுவது வெளிப்படையாக  தெரிகிறது.. தலித் இளைஞர் கல்வி வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்ததிருப்பது திராவிடத்தால் வந்தது என்பதை பொறுத்துக்கொள்ள முடியாத பேதைகள் எதையாவது உளறுவதை சகிக்க முடியவில்லை..
..
சாதியை கையிலெடுத்து அரசியல் செய்த ராமதாஸ்,கிருஷ்ணசாமி ஜான்பாண்டியன் போன்றவர்கள் கரையேற முடியாமல் தவிக்கிறார்களே அதற்கு காரணம் இந்தமண் பண்பட்டு தெளிவோடு இருப்பதே காரணம்.. சாதி மதம் மொழியரசியல் இங்கே எடுபடாது.. காரணம் ஒவ்வொரு ஏதோவொருவகையில் திராவிடத்தால் பலனடைந்து இருப்பதும் பெரியாரெனும் மாமனிதனின் கடுமையான உழைப்பும் அறிஞர் அண்ணா,கலைஞர் ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களும் மிகப்பெரிய காரணிகள்.. நீதிக்கட்சி காலத்தலிருந்து அநீதி ஏறபட்டதாக சொல்கிறார்.. உண்மையில் நீதிக்கட்சி காலத்தில்தான் (1921) பள்ளிக்கூடங்களில் சமமாக அமரவைத்தால் மட்டுமே "பாடசாலை" தொடங்க அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
அதற்கு தனியாக அமரவைக்கிறோம் என சிலர் கேட்டபோதும் மறுத்து தாழ்த்தப்பட்ட மாணவர்களும் சமமாக அமரவைக்கும் முடிவில் உறுதியாக இருந்தது நீதிக்கட்சி..
..
இவர்கள் எதிர்க்க வேண்டியதும் கேள்விகேட்க வேண்டியதும் பார்ப்பன பாசிச சிந்தனைக்கெதிராக தானே தவிர
திராவிடத்திற்கு எதிராகல்ல.. திராவிடத்திற்கு, தந்தை பெரியாருக்கு நன்றி பாராட்டவிட்டாலும் வசவுகளை கக்காமல் இருந்தால் போதும்.. 
யாரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக, அவர்கள் எந்த பிரிவினருக்கான இருந்தாலும் ஏன் பார்ப்பனர்களாக இருந்தாலும் குரல் கொடுக்கும் அதுதான் பெரியாரின் வழிவந்த  திராவிடம் செய்வது செய்துக்கொண்டிருப்பது செய்ய போவது..
..
எல்லா தலித் தலைவர்களும் பாஜகவின் செலலப்பிள்ளையாகிவிட்ட பிறகும் திருமா மட்டும் பெரியாரையும் சேர்த்துபிடித்து அரசியல் செய்கிறாரே என்ற கோபம் நவீன தலித் பிம்பங்களின் பேச்சில் தெரிகிறது.. என்னதான் கதறினாலும் உங்கள் எண்ணம் ஈடேறாது.. திமுகன்னா பயப்படுறீங்களா நாங்கள் அடிமை அல்ல
என கேட்க தெரிந்தவருக்கு பாஜகவின் சித்தாந்தப்படி  (வர்ணாசிரமம்) அடிமைகளைப் போல மோசமான நடத்தப்டடதை இன்னமும் வட மாநிலங்களில் நடத்தபடுவதை கேட்க துணிவிருக்கிறதா.. 
மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்ற கோட்பாட்டில் இயங்குகிற இயக்கத்தை கேள்வி கேட்கும் முன் மூளையில் படிந்திருந்தும் பாசிச அடிமை சிந்தனையை கழுவிவிட்டு பேசவும் 
ரௌடி கொல்லப்டடதற்கு எதற்காக குரல் கொடுக்கவேண்டும் ..  கொலை குறித்து விசாரணை நடந்துக்கொண்டிருக்கிறது.. கொலையாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணை சரியான பாதையில் செல்கிறது பிறகு ஏன் பதட்டம் ? .. இந்த வழக்கில் குற்றவாளிகள் தலித்களாக இருப்பதால் அந்த சமூக மக்களுக்காக எதிராக மற்றவர் பேசவில்லையே அதிலிருந்தே தெரிகிறது கொலையாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் .. 
..
முதலில்
அரசியல் பயிலுங்கள்..
..
ஆலஞ்சியார்

Saturday, July 13, 2024

ராமதாஸ் தன் மகனை, மருமகளை,நிறுத்தி தோல்விக்கண்டவர் தன் பெயர்த்தியையும் நிறுத்தி வரலாற்று சாதனை நிகழ்த்திய இருக்கலாம்.. 
"விக்கிறவாண்டியா" என "கொப்பளித்தார்" சௌமியா  இல்லை துரத்துகிற"வாண்டி" என்பதை புரிந்திருப்பார்.. 
சாதிவெறியூட்டும் செயல் தமிழகத்தில் எடுபடாது.. "ராமதாஸ் வகையாறா"வின்  எண்ணம் ஈடேறாது என்பதை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்..
..
தமிழக மக்கள் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  எனும் மகத்தான தலைவனின் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.. நயவஞ்சகர்கள்,நம்பிக்கை துரோகிகள் சுயநலவிஷமிகள் தானெனும் கர்வம் கொண்டவர்கள்,தனக்கே எல்லாம் தெரியுமென்பவர்கள் அகந்தையில் அலைபவர்கள் இவர்களெல்லாம் எககாலத்தும் "குணம்பிடிக்க"மாட்டார்கள் என்பதை இந்த தேர்தல் களம் உணர்த்தியிருக்கிறது .. "புலிகள்ஆதரவு" என்ற பழைய பல்லவியை கையிலெடுத்து தமிழ்நாட்டை கூறுபோட நினைக்கும் கூறுகெட்டவர்களை "கட்டிவச்சகாசு"கூட கிடைக்காமல் கதறவிட்டிருக்கிறார்கள்.. தமிழ்நாடு கண்ட மாபெரும் தலைவனை "சண்டாளன்" என கொக்கரித்தவர்கள் இன்று நோட்டாவை மிஞ்சவே தடுமாறுகிறார்கள்..  
..
தமிழ் தமிழர் என கதைத்து இங்கே இலங்கை அரசியலை பேசி திரிந்தால் யாழ்பாணம் மொழியில் சொல்லவேண்டுமெனில்  "பிள்ளைப்பிடி"யனின் கதிதான் இங்கே நிகழும், காலம் வலிமையானது.. இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சியின் 80%விழுக்காடு நீங்கள் சொல்லும் சண்டாளன் சமைத்தது..அதை உண்டு உணர்ந்து,உயர்ந்துவிட்டு இன்று பாசிசத்தின் கிளிப்பேச்சை செப்புகிறீர்.. அரசியல் என்பது எதிர்கருத்தும் விமர்சனமும் கொள்கை வேறுபாடும் கொண்டதுதான்.. ஆனால் எல்லை மீறிய காழ்ப்புணர்ச்சியும் விசமேறிய வாரத்தைகளும் உங்கள் நிழல் கூட வெறுக்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்..
..
தமிழ்நாட்டு மக்கள் மிக நாகரீகமாக பாடமெடுக்கிறார்கள் திரும்ப திரும்ப அதே வழியில் பயணித்தால் இருக்குமிடமே தெரியாமல் அழித்துவிடுவார்கள்.. சாதி மத,மொழியரசியலில் விடுத்து நலனரசியலில் கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்க்கட்சியாக வலம் வர முடியும் ..
ஏனெனில் சிலநேரம் காலம் கொடூரமாய் பழிதீர்க்கும் கரையேற முடியாமல் செய்துவிடும் .. 
..
விக்ரவாண்டியில் "சனநாயக" கடமையாற்றிய அனைவருக்கும் நன்றி 
முத்துவேல்கருணாநிதிஸ்டாலினுக்கு வாழ்த்துகள்
..
ஆலஞ்சியார்

Friday, July 12, 2024

நான் யார்..
தெரிந்தால் சொல்லுங்களேன்..
போகும் பாதையெல்லாம் 
பொய்களால் விளைந்திருக்க
போகுமிடம் தெரியாமல் 
தவிக்கிறேன்...
போய் சேர நேரமாகும் ..
அதுவரை ..
வந்ததை பற்றி தெரிந்துக்கொள்ள ஆசை..
..
நான்யாரென நானறியேன்..
நஞ்சுண்டு வந்தவனா  
நஞ்சை கக்க வந்தவனா..
வழிநெடுக வினை விதைக்க வந்தவனா..
பூச்செண்டு தொடுத்து 
மயக்கும் வித்தையறிந்தவனா..
சொல்லில் சுவை கூட்டி 
சொல்லவந்ததை உன் மூளையில் ஏற்றி 
மழுங்கடிக்க வந்தவனா..
பேராசை பிடித்து பித்தனாய்..
எல்லாம் எனக்கென்று..
எல்லாம் எனக்காதென்று..
விடாமல் பொறுக்கும் எச்சனா..
அடுத்தவர் உரிமையை அபகரித்து
அலங்கோலபடுத்தி ..
சிரித்துமகிழ்ந்து சீரழிக்க வந்தவனா..
எல்லாம் அறிவேனென்று எகத்தாளம்பேசி
ஏனெயர் சிந்தனையில் சிறுமைபட்டவனா..
நானறியேன்.. நான்யாரென்று
..
பொய்யும் புரட்டும் 
புகழ்ச்சியும் போதையும்
நீடித்திருக்காது..
வஞ்சனை கொண்ட நெஞ்சம் வாழாது..
நெஞ்சில் கசடும்.. 
நேர்மையில் பிறளும்..
அடுத்தவனை கெடுத்து வாழும் வாழ்வும்..
வக்கனையாய் சூது செய்து வீழ்த்தினாலும்
அறமே  வெல்லும் இனிதாய் இறுதியில்
பண்பில் உயர்ந்தோர் சொல்லில்
பெரியவர் தம் செயலில்
பகட்டில்லா வாழ்வில்
பக்கத்து மனிதனை நேசித்தலில்
முகம் பார்த்து.. 
குலம்பார்த்து 
ஈயாத மனதில்..
யாரென்ற அகந்தை கொள்ளாத நெஞ்சில்
வாழ்கிறேனா.. நான்..
..
இதுவரை..
சூழ்ச்சியால் யாரையும் வீழ்த்தியதில்லை 
யாசிப்பவனை .. 
முற்றத்திலிருந்து விரட்டியதில்லை..
கை கவளம் சோறாயினும் ..
பசியென்று வந்தவனுக்கு தராமல் விட்டதில்லை
அடுத்தவர் உரிமையை அபகரித்ததில்லை
பங்காளியோடு பகைமை பாராட்டியதில்லை
பக்கத்துவீட்டுகாரனின் காற்றை நான்  சுவாசித்ததில்லை 
பகட்டுகாட்டி பெருமை கொண்டதில்லை
இல்லையென்ற போதும் யாரிடமும் யாசித்ததில்லை..
பேராசை கொண்டு அலைந்ததில்லை..
புகழுக்கஞ்சி போர்வைக்குள் அடைந்ததுண்டு
அதிகம் பேசாமல் ..
தனிமையில் திரிந்ததுண்டு..
ஆன்றோர் சொல்லாயினும் அறமில்லையேல் 
சினம் கொண்டதுண்டு..
இனம் மொழி கலையென்றால் 
இருப்பதையும் இழப்பதுண்டு..

யார் நான்..
..
பிழைக்கதெரியாதவன் 
அகம்பாவத்தில் அலைகிறான் 
வாழதெரியாதவன்.. 
வக்கற்றவன்..
அதிகம் பேசும் கழனி பானை ..
திமிரால் அழிந்தவன் ..
வளைந்து நெளிந்து..
விட்டுகொடுக்க தெரியாது..
அடிப்படையையே தகர்க்கிறவன்..
புதுமை.. பேசும் பைத்தியம்..
நாத்திகன்.. 
இன்னும் இன்னும் 
நிறைய சொன்னார்கள்..
உண்மையில் நான்..
யார்..
யாமறியேன் ..
..
ஆலஞ்சியார்
"தோக்கு தூக்கியவன் தோக்கால் சாவான்" 
இதில் சாதியோ  மதமோ வருவதில்லை .. விதைத்தது தான் அறுவடை செய்ய முடியும் "அவரையை" விதைத்தால் துவரை வருமா என்ன.. கட்டபஞ்சாயத்து மிரட்டல் ஆள் பலம் இவைகளை வைத்துக் கொண்டு அரசியல் போர்வையில் ஒளிந்துக் கொண்டாலும் ஒரு நாள் காட்சிகள் மாறும்.. 
..
நாட்டாமைத்தனம், கட்ட பஞசாயத்து இவை மட்டுமே அரசியல் நுழைவதற்கான வழி/ தகுதி என சிலர் எண்ணுவதும்,  தன் சமூக மக்களை மூளைச்சலவை செய்து அவர்களுக்கு சில நன்மைகளை செய்துவிட்டு அவர்கள் "நெருப்பில்" குளிர்காய்வதும் நீண்ட நாள் பலன் தராது என்பதை காலம் நமக்கு பாடம் புகட்டிக் கொண்டே இருக்கிறது.. தமிழ்நாட்டில் மெச்சும்படியான சமூக அக்கறையுடன் கூடிய நிலை இருப்பதை சிலரால்/சிலதால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. தனி நபர் பகை எப்படி ஒரு சமூகத்தின் மீதான கோபமாகும்.. எல்ல
 சமூகத்திலும் வெறுக்கதக்கவைகளும் வேண்டாதவைகளும் இருக்கதான் செய்யும் அதற்காக அந்தந்த சமூகங்களை குறைகூற முடியாது..
..
திராவிடம் தலித்களுக்கு எதிரானதைப் போல சித்தரிக்க முயல்கிறாரகள் .. உண்மையில் திராவிடம் தான் இன்றைய நல்ல நிலைக்கு காரணம் .. அம்பேத்கர் "தோற்ற" இடத்தில் வென்று காட்டியது திராவிட அரசியல்.. இன்னமும் வட மாநிலங்களில் தலித்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்.. இந்தியாவின் முதல் குடிமகனாக இருந்தாலும் "எல்லை"வரைதான் .. 
இங்கே தான் நாட்டிலேயே முதன்முறையாக அம்பேத்கர் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டது பிறந்த மண்ணில் கூட முடியாமல் போனதை செய்து காட்டியது.. 
..
மதம்,சாதியம்,தீவிரவாதம் இவையெல்லாம் தேசியம்/போராளி,கோட்பாடு என்ற பெயரில் ஒளிந்துக் கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.. அரசியலமைப்பு தந்த,  தருகின்ற 
வரையறைக்குள் நின்று களமாடுங்கள் ,சனநாயகம் தந்திருக்கின்ற வரம்புக்குள் உங்கள் குரல்/செயல் ஓங்கி ஒலிக்கட்டும்.. முதலில் அரசியல் தெளிவும் புரிதலும் சமத்துவ மேன்மையும் வேண்டும்.. தமிழ்நாட்டில் திராவிடம் தவிர்த்த "தலித்" அரசியல் என்பது பாசிசத்தின் மற்றொரு வடிவம் அவவளவுதான்
..
ரௌடிகளுக்கு புரிகிற "பாஷையில்" சொல்வோமென ஆணையர் சொல்வதிலிருந்தே பாரபட்சமற்ற செயல்பாடு இருக்கும் என்பதை புரிந்துக்கொள்ளலாம்.. வீணாக "இரைச்சல்" போடாமல் அரசியல் செய்கிறேன் என்ற பெயரில் கண்டதையும் பேசாமல் இருந்தால் போதும்.. 
தமிழ் நாட்டில் தான் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையும் பேச முடியும்..எதற்கும் எல்லை உண்டு அதற்குள் நின்று ஆடவும் ..
..
ஆலஞ்சியார் 
   

Tuesday, July 2, 2024

"வாள்" தூக்கி நின்னாப்பாரு!!
..
இனி ரட்சையில்லை.. Narendra Modi 
மோடி எனும் மாய பிம்பம் தகர்ந்து விழுந்ததை நாடே கண்டது.. உண்மையில் வாய்ஜாலம் நீண்டநாள் காக்காதென மோடி உணர்ந்த தருணம் .. Rahul Gandhi 
ராகுலை விளையாட்டுப் பிள்ளையென கருதி கேலிச் செய்தவர் ஆடிய ஆட்டம் கண்டு குலை நடுங்கி போய் நின்றதை வெகு மக்கள் ரசித்தார்கள்..
..
ராகுலின் உரையை நீக்கியதிலிருந்தே அவர்களின் பயம் தெரிகிறது.. இந்துக்களை புண்படுத்தியதாக சித்தரித்ததை இந்துக்களே ரசிக்கவில்லை..
பாஜகவை மோடியோ ஆர்எஸ்எஸ் மட்டுமே இந்து சமூகம் இல்லையென ஆணியடித்தார் ..அங்குதான் ராகுலின் போர்க்குணம் பெரும் பாய்ச்சல் கண்டு  சங்பரிவார்கள் அலற தொடங்கின.. biological born இல்லையென்றவரை அவர் ஆயுதம் கொண்டே சொருகிய விதம் தனக்கு ஆக்ரோஷம் மட்டுமல்ல நையாண்டியும் வருமென ராகுலின் சுவை கூடிய பேச்சு உணர்த்துகிறது.. கடவுளை கேட்டுதான் பணமதிப்பிழப்பு செய்தீர்களா என்றார்
போகிற போக்கில் சபாநாயகருக்கு குட்டு வைத்து நீதமாக நடந்துக் கொள்ளுங்கள் வளைந்து நெளியாதீர்கள் என்றது இதுவரை சபை கண்டிராத ஒன்று..
 ..
பத்து வருடங்கள் எதிர்க்கட்சியே இல்லாமல் கண்டதை உளறியும் தோன்றியதை நடத்தியும் பழகியவர் சரியான எதிரியை இப்போதுதான் பார்க்கிறார்.. நாடாளுமன்றத்திலிருந்து பாதியில் வெளியேறியது அவர் பதட்டமடைந்ததை வெளிச்சம் போட்டு காட்டியது ..  Mahua Moitra - মহুয়া মৈত্র  மஹூவாவும் ஆண்டிமுத்து ராசா
A Raja  சலங்கைக்  கட்டி ஆட நாடாளுமன்றம் எதிர்க்கட்சிகளின் "ஆட்சியில்" இருந்தது.. நான் வரகூடாதென்று நினைத்து இரண்டுமுறை தொகுதிக்கு வந்தீர்கள் உள்ளதில் 68 போனதென மஹூவா கிண்டலடித்தார் முஸ்லிம் மதரசா மட்டன் என ,M வரிசையில் பேச தெரிந்தவருக்கு மணிப்பூர் மட்டும் மறந்து போனது..
கடவுளாகவே இருந்துவிட்டு போங்கள் அதற்கான தகுதியில்லையே என ராசா சிலம்பமாட நாடாளுமன்றமே ஜனநாயமாகானது.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றியதெல்லாம் இனி நடக்காது என பிரதமர் மோடிக்கு புரிந்தது..
..
பிரதமரின் பதிலுரை  டீச்சரிடம் ஸ்கூல் பையன் "குறை"யைப்போல் இருந்தது .. 
ராகுலை குழந்தைதனமாக பேசுவதாகச் சொன்னவர் கிள்ளுறான் மாஸ்டர் என்பதைப்போல சபாநாயகரிடம் புகார் தருகிறார்.. நேற்று காப்பாற்றுங்கள் என அமித்சா கெஞ்சியதைப் போல.. உண்மையில் பிரதமர் தடுமாறுவதும் காங்கிரஸ் ஆட்சியை,குறைக்கூறி பிழைக்க நினைப்பதும் பொய்யான வாக்குறுதி தந்து எதிர்க்கட்சிகள் வெற்றிப் பெற்றதாக அதிலும் சில பெண்கள் ஏமாந்து வாக்களித்தாலும் கூறுவது அவரது அறியாமையை, பலவீனத்தை தகுதியின்மையை பொறுப்பின்மையை காட்டுகிறது .. உண்மையில் பலவீனமானவராக தெரிகிறார்
..
பாஜகவிற்கு புரிந்திருக்கிறது அதனால் தான் NDA கூட்டத்தில் ராகுலைப் போல நடந்துக்கொள்ளாதீர்கள் என்கிறார்.. 56இன்ச் என பெருமை பேசி மார்த்தட்டியவர் கூனிகுறுகி நின்றதை நாடு மெல்லிய புன்னகையில் கடந்தது..
 இனி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் தான்தோன்றித்தனம் இருக்காது பெரும்பான்மை இல்லாமல் இரு கட்சிகளில் தயவில் ஐந்தாண்டுகள் காலம் தள்ள வேண்டும் .. மோடியின் முகம் வாட தொடங்கியிருக்கிறது
 இனி சனநாயகம் "பூக்கும்"
..
ஆலஞ்சியார்